Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டனில் தொப்பியை பிரட்டிப் போட்ட றிசாத் பதியுதீன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் தொப்பியை பிரட்டிப் போட்ட றிசாத் பதியுதீன்

வில்பத்து காடழிப்பு என்றவுடன் உங்கள் பெயர் சேர்த்து உச்சரிக்கப் படுகின்றதே. காரணம் என்ற கேள்வி, கடந்த மார்ச் 12 ம் திகதி லண்டன் வந்திருந்த அமைச்சர் றிசாத் பதியுதீன் கேள்வி கேட்கப் பட்டது.

கேட்டவர்கள் London BBC சிங்கள சேவையினர்.

அமைச்சர் சொன்ன பதில். காடழித்து, நானோ, முஸ்லீம் மக்களோ அல்ல. மாறாக அரச அதிகாரிகள் அந்த காடுகளைக் அழித்தார்கள். அவர்கள் தான் அதற்காண பொறுப்புக்கு கூற வேண்டியவர்கள். நானோ, இடம் பெயர்ந்த முஸ்லீம் மக்களோ அல்ல என்று சொல்லப் போக, அந்த துறை சார்ந்த அதிகாரிகள் அரண்டு போய், கோபத்தில் இருக்கிறார்கள்.

அவர்கள் சார்பில் குரல் தந்த ருக்ஸான் ஜெயவர்த்தன என்னும்  Wildlife Nature Protection Society of Sri Lanka (WNPS) அமைப்பின் உயர் அதிகாரி இது குறித்து தெரிவிக்கையில், அமைச்சர் மிக நீண்ட காலமாக அமைச்சராக இருக்கிறார்.

மகிந்த அரசிலும், இப்போது மைத்திரி அரசிலும் அமைச்சராக இருப்பதால், இவர் உயர் அரச உத்தரவொன்றினை தான் செயல் படுத்துவதாகவும், ஒத்துழைக்காத அதிகாரிகள் அதற்க்கான பிரச்சனைகளை எதிர் நோக்க வேண்டி இருக்கும் என்று அதிகாரிகளை (பயமுறுத்தி) பணிய வைத்து, இந்த காடழிப்பினை நடாத்த வைத்துள்ளார்.

இந்த வகையில் அழிக்கப் பட்டு, துப்பரவு செய்யப்பட்டு தயாரான காணிகள், இடம் பெயர்ந்த முஸ்லீம் மக்களுக்கு அல்ல, அமைச்சர் தயாராக வைத்திருந்த அவரது ஆட்களுக்கு (முஸ்லீம் கள் தான் ) பங்கிட தயாராக இருந்தது என்பதும் அதிகாரிகளுக்கு தெரிந்திருந்தது என்றும் சொல்கிறார்.

அந்த காணிகள் அமைச்சர் சொல்வது போல், இடம் பெயர்ந்த முஸ்லிகளுக்கு சொந்தமானவையாக ஒரு போதும் இருந்ததில்லை. 22 வருட இடம் பெயர்வால் வளரக் கூடிய பத்தைகளுக்கும் மற்றும் சிறு மரங்களுக்கும், அடர் காட்டு மரங்களுக்கும் வித்தியாசம் உண்டு.  

அரசாங்கத்தினால் பாதுகாகாக்கப்பட வேண்டிய பிரதேசமாக அறிவிக்கப் பட்ட இந்த வில்பத்து  அடர் காடுகளில் வெட்டப்பட்ட பெரும் மரங்களுக்கு என்ன நடந்தது, அந்த முதிர் மரங்களின் பலகைகள் எவ்வாறு இரகசியமாக மறைந்தன, அதற்கு யார் பொறுப்பு என பல கேள்விகள் எழுப்புகின்றார் அவர்.

அதிகாரிகள் மீது, பெரும் அழுத்தத்தினைப் பிரயோகித்து, காடழிப்பினை நடாத்தி, துப்பரவு செய்யப்படட காணிகள், மீள்குடியேற்றதுக்கு அல்ல, புதிய குடியேற்றதுக்கு தான் என்பதை அதிகாரிகள் அறிந்திருந்தார்கள் எனினும் ஒன்றுமே செய்ய முடியாத சொல்வதை செய்யும் நிலையில், இருந்தார்கள்.

Centre for Environmental Justice (CEJ) அமைப்பின் நிறைவேற்று அதிகாரியான, ஹேமந்த விதானகே, முஸ்லீம் மக்கள் காடழித்தலில் ஈடுபடவில்லை என்பது உண்மை தான். ஏனெனில், அவர்கள் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு இருப்பார்கள். 

உண்மை என்னவெனில், இந்த காணிகளை, 'மீள்குடியேற்றதுக்கு' என விடுவித்து காடழிப்புக்கு, அதை தடுக்க வேண்டிய அதே அதிகாரிகளை வைத்தே, அவர்கள் மீது பெரும் அழுத்தத்தினை பிரயோகித்து செய்வித்தவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் தான் என்கிறார் அவர்.

அமைச்சர் தனது கைகளைக் அவ்வளவு இலகுவாக கழுவிக் கொள்ள முடியாது. இந்த காடழிப்புக்கும், மரங்கள் பலகைகளாக அரிந்து கொடுக்கப் பட்டமைக்கும், அரச மரக் கூட்டு ஸ்தாபனம் பயன்படுத்தப் பட்டுள்ளது என்பது உண்மை தான்.

(மகிந்த அரசு காலம் அது என்பது குறிப்பிடத்தக்கது)

தனது மிகத் தவறான செயல் பாடுகளுக்கு, இடம் பெயர்ந்த முஸ்லீம் மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை தடுக்கின்றனர் என  இனவாதம் பூசி மெழுக முயல்கின்றார் றிசாத் பதியுதீன். 

இடம் பெயர்ந்த முஸ்லீம் மக்களின், தமது முன்னைய உரிமையுள்ள காணிகளில்  மீள்குடியேற்ற துக்கு நாம் எதிரானவர்கள் அல்ல.

எனினும், 10 வீதமான காணிகள் உண்மையிலேயே உறுதிகளுடன் இருந்தாலும் கூட, மிகுதி 90 வீதமானவை, அதிகாரிகளின் கைகளை வளைத்து, அழுத்தம் பிரயோகித்து அழிக்கப் பட்டவை. அந்தக் காணிகளுக்கு உறுதிகள் ஒருபோதும் இருந்ததில்லை, அவர்களால் சமர்ப்பிக்கவும் முடியாது, ஏனெனில் அவை பாதுகாக்கப் பட்ட அரசுக்குரிய காடுகள் என்கிறார் அவர்.

யுத்தத்தினால் இடம் பெயர்ந்த ஒருவரான அமைச்சர், லண்டனில் வர்த்தக அமைச்சர்கள் மகாநாடு ஒன்றுக்காக வந்திருந்தார்.

வில்பத்து காடழிப்பு பற்றிய உரையாடல்கள் வரும் போதெல்லாம் உங்கள் பெயரும் சேர்ந்தே வரும் காரணம் என்ன என்று கேள்வியும் கேட்கப்பட்டது.

இந்த இடம் பெயர்ந்த முஸ்லிம்கள் குறித்து ஜெனீவாவில் பேசுவதில்லை, ஐரோப்பிய யூனியனில் பேசுவதில்லை. இந்தியாவிலோ, அரபு நாடுகளிலோ பேசுவதில்லை.

காடழிப்பு வேறு, துப்பரவு செய்யப்பட்ட காணிகளில் மக்கள் குடியேறுவது வேறு. இந்த இடம் பெயர்ந்த முஸ்லிம்கள் ஒரு போதும் காடழிப்பில் ஈடு படவில்லை. அது அரச நிறுவனங்கள் செய்த வேலை. 

ஆனால், துப்பரவாகப் பட்ட நிலையில் காணப்பட்ட காணிகளில் அவர்கள் குடியேற முனைந்தார்கள் என்று 'அடிடா சக்கை' ரக வியாக்கியானம் கொடுத்தார் அமைச்சர்.    

ஒரு பொறுப்பான அமைச்சராக, இந்த மக்களுக்கு அவர்கள், தமக்கு சொந்தமான காணிகளில் மீள் குடியேற உதவாமல் எப்படி இருக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார் அவர்.

http://www.thesundayleader.lk/2017/03/19/concern-over-rishards-views-on-wilpattu/

 

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.