Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரட்டை இலையை தக்கவைக்க... டி.டி.வி. தினகரனின் ஆயுதம்!

Featured Replies

இரட்டை இலையை தக்கவைக்க... டி.டி.வி. தினகரனின் ஆயுதம்!

தினகரன்

.தி.மு.க தற்காலிகப் பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது தொடர்பாக விளக்கம் கேட்டு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதற்கான கெடு புதன்கிழமை முடிவடைகிறது. இந்தநிலையில், அ.தி.மு.க துணைப் பொதுச்செயலாளர்  டி.டி.வி. தினகரன், இரட்டை இலையைத் தக்கவைக்க கடைசி ஆயுதமாக தமிழகம் முழுவதும் உள்ள அ.தி.மு.க நிர்வாகிகளிடம் தனித்தனியாகக் கடிதம் வாங்கியுள்ளார். அந்தக் கடிதங்களை எல்லாம் தொகுத்து, இத்தனை பேரின் ஆதரவு தங்களுக்கு இருக்கிறது. தாங்கள்தான் உண்மையான அ.தி.மு.க என்ற கடிதத்துடன் தேர்தல் ஆணையத்தில் சமர்பிக்கும் முன்னேற்பாடுகளில் அ.தி.மு.க நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர். ஆதரவுக் கடிதங்களை தினகரன் தரப்பில் 22-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க உள்ளனர். 

அ.தி.மு.க தற்காலிகப் பொதுச் செயலாளராக சசிகலாவை நியமித்தது செல்லாது என்று ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க-வினர் தேர்தல் ஆணையத்துக்கு புகார் மனு அளித்திருந்தனர். சசிகலா நியமனமும் அதைத் தொடர்ந்து அவரால் நியமிக்கப்பட்ட துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் நியமனமும் செல்லாது என்றும் அதற்கான காரணங்களை விளக்கியும் தேர்தல் ஆணையத்துக்கு மனு கொடுத்துள்ளனர். இரட்டை இலை சின்னமும் தங்களுக்குத்தான் தர வேண்டும் என்றும் பன்னீர் தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர். 

இதற்கு, சசிகலா தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை மறுத்து ஓ.பி.எஸ் தரப்பில் மீண்டும் மனுக் கொடுத்தனர். இந்தநிலையில், தேர்தல் ஆணையம், சசிகலா அணியினரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. இப்போது, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சசிகலா தரப்புக்கு இரட்டை இலைச்சின்னம் முக்கியப் பிரச்னையாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. 

ஏற்கெனவே, அ.தி.மு.க பொதுக்குழுவில் சசிகலா நியமனம் செய்யப்பட்டதற்கு அந்தப் பொதுக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட எம்.எல்.ஏ, எம்.பி-க்கள், மாவட்டச் செயலாளர்கள் உள்பட 2,500 பொதுக்குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்களின்  கையெழுத்து அடங்கிய பொதுக்குழு வருகைப்பதிவேட்டை தேர்தல் ஆணையத்துக்கு சசிகலா தரப்பைச் சேர்ந்த அ.தி.மு.க-வினர் தாக்கல் செய்திருந்தனர். ஆனால், இந்தப் பொதுக்குழுக் கூட்டம் என்பது, ஓ.பன்னீர்செல்வம் வெளியேறுவதற்கு முன்னர் நடந்து என்பதால், இந்த விளக்கத்தில் தேர்தல் ஆணையம் திருப்தி அடையவில்லை. 

இந்தநிலையில், சசிகலா தரப்பினர் வருகிற புதன்கிழமைக்குள் (22-3-2017) தேர்தல் ஆணையத்துக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டுள்ளது. அதனால் கடந்த ஒருவாரமாக தமிழகம் முழுவதும் சசிகலாவை ஆதரிக்கும் அந்தந்த மாவட்ட செயலாளரின் நேரடிப் பார்வையில், பொதுக்குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள், ஒன்றிய நகர கழக செயலாளர்கள், பேரூராட்சி செயலாளர்கள் உள்ளிட்டவர்களிடம் சசிகலாவை ஆதரித்து தனித்தனியாக ஆதரவு கடிதம் வாங்கப்பட்டது. அந்தக்கடிதங்களை மாவட்டச் செயலாளர்கள் நேற்று, சென்னைக்கு கொண்டுவந்தனர். 

துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், ராயப்பேட்டையில் உள்ள தலைமைக் கழகத்தில், 19-ம் தேதி இரவு 10 மணி வரை உட்கார்ந்து, கடிதங்களைப் பெற்றுக்கொண்டார். மேலும், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்களிடமும் நீண்ட நேரம் தனித்தனியாக பேசினார். 

இந்த ஆலோசனையின்போது, தேர்தல் கமிஷனுக்கு கொடுக்கப்போகும் விளக்கங்கள் பற்றி விவாதித்ததாக நிர்வாகிகள் தெரிவித்தனர். மேலும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு இரட்டை இலை கிடைக்காமல் முடங்கிப்போனால், அடுத்து எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தியுள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணிகளை எவ்வாறெல்லாம் பிரித்து ஆக்கப்பூர்வமாக மேற்கொள்ளவேண்டும் என்பது குறித்தும் தினகரன் ஆலோசனை வழங்கியிருக்கிறார்.

தினகரன்

கடிதங்களை சரிபார்த்து, தேர்தல் ஆணையத்துக்கு அளிக்கும் பணியில் நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பான்மையான பொதுக்குழு, செயற்குழு, மாவட்டச் செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள் ஆதரவு கடிதம் அளித்துள்ளனர். இதனால், எப்படியும் இரட்டை இலை சின்னம் தங்களுக்குக் கிடைத்துவிடும் என்று தினகரன் தரப்பு நம்பிக்கையில் இருக்கிறது. 

http://www.vikatan.com/news/tamilnadu/84093-what-plan-does-dinakaran-have-to-retain-aiadmks-symbol.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.