Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஜினி சந்திப்பில் என்ன நடந்தது? - கலகலக்கிறார் கங்கைஅமரன்

Featured Replies

ரஜினி சந்திப்பில் என்ன நடந்தது? - கலகலக்கிறார் கங்கைஅமரன்

"நான், தேர்தலில் போட்டியிடுவதை தெரிந்த ரஜினியே என்னைப் போனில் அழைத்து தன்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேலும், என்னைச் சந்திக்க அவர் இன்று மதியம் எனக்கு அழைப்புவிடுத்ததால் அங்கு சென்றேன்" என்றார் பா.ஜ.க.வேட்பாளர் கங்கை அமரன்.

பாடலாசிரியர், இசையமைப்பாளர், சினிமா இயக்குநர் எனப் பல பரிணாமங்களிலிருந்து திடீர் அரசியல் பிரவேசம் ஏன்?

"ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது காலத்தின் கட்டாயமாகக் கருதுகிறேன். தேர்தல் களத்தில் போட்டியாளனாக இருப்பது என்னுடைய முதல் அனுபவம். ஆனால், வாக்காளராக இதுவரை என்னுடைய ஜனநாயகக் கடமையைச் செய்திருக்கிறேன். ஒரு வாக்காளனின் எண்ணம் என்ன என்பது எனக்கு நன்றாகத் தெரியும். தற்போது, வேட்பாளராகப் போட்டியிடுவதால், ஒரு வாக்காளரின் எண்ணத்தை மதித்துச் செயல்படுவேன். என்னுடைய அரசியல் பிரவேசம் ஏற்கெனவே தொடங்கிவிட்டது. அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுடன் எனக்கு அரசியலுக்கு அப்பாற்பட்டு நெருங்கியத் தொடர்பு இருந்துள்ளது. பா.ஜ.க-வின் கொள்கைகள் என்னை ஈர்த்ததால், அந்தக் கட்சியில் சேர்ந்துள்ளேன். கட்சித் தலைமை என்மீது நம்பிக்கை வைத்து என்னை ஆர்.கே.நகர் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தி உள்ளது. அந்த நம்பிக்கைகையை நிச்சயம் காப்பாற்றுவேன். உத்தரப்பிரதேச மாற்றத்தைப்போல தமிழகத்திலும்  பா.ஜ.க.மாற்றத்தை ஏற்படுத்தும்."

ரஜினி, கங்கை அமரன்


பா.ஜ.க-வில் பல முன்னணி கட்சித்தலைவர்கள் இருந்தபோதும் உங்களை வேட்பாளராக நிறுத்தியதற்கு என்ன காரணம்?

"பா.ஜ.க-வின் கொள்கை, மக்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து மக்கள் பணியாற்ற வைப்பார்கள். மதம், ஜாதியைப் பார்க்காமல் பா.ஜ.க-வினரை செயல்பட அனுமதிப்பார்கள். இதற்கு உதாரணமாக, அப்துல்கலாமுக்கு ஜனாதிபதி பதவி கொடுத்து அழகுப்பார்த்தது பா.ஜ.க. நான் ஒரு தலித் இனத்தைச் சேர்ந்தவர் என்றாலும் என்னையும் மதித்து வேட்பாளராக பா.ஜ.க. அறிவித்துள்ளது. அதோடு, மக்களுடன் எங்கள் குடும்பத்தினருக்கு அதிக நெருக்கம் ஆரம்ப காலத்திலிருந்தே இருந்துவருகிறது. இதனால், மக்களைப் பொறுத்தவரைக்கும் எனக்கு அறிமுகம் தேவையில்லை. கிராம மக்களிடையே ஒன்றாகக் கலந்த 'கரகாட்டக்காரன்' படத்துக்கு இன்றும் மவுசு இருக்கிறது. அந்தப் படமே எனக்கு பெரிய அங்கீகாரத்தைக் கொடுத்தது. அதுபோல ஆர்.கே.நகர் தொகுதி மக்களும் என்னை வெற்றி பெற வைத்து, சட்டப்பேரவைக்கு அனுப்பிவைப்பார்கள் என்று நம்புகிறேன். இதுபோன்ற நம்பிக்கையை வைத்துதான் பா.ஜ.க. என்னை வேட்பாளராக அறிவித்தது."

ஆர்.கே.நகர் தொகுதியில் பா.ஜ.க-வின் வெற்றி வாய்ப்பை எப்படிப் பார்க்கிறீர்கள்?

"ஆர்.கே.நகர் தொகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகள்கூட கிடைக்காமல் வாழ்கின்றனர். அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்துகொடுப்பதே என்னுடைய முதல் கடமை. மற்ற அரசியல் கட்சிகளைப் போல வாக்குறுதிகளைக் கொடுத்துவிட்டு, அதை நிறைவேற்றாமல் இருக்காது பா.ஜ.க. இன்றைய அரசியல் சூழ்நிலையில் மக்கள், பா.ஜ.க-வைத்தான் அதிகம் நம்புகின்றனர். அவர்களின் நம்பிக்கையால் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க-வுக்கு அமோக வெற்றி கிடைத்தது. ஆர்.கே.நகர் தொகுதி மக்களும் பா.ஜ.க-வை நம்பி வாக்களிப்பாளர்கள். இந்தத் தொகுதியில் தாமரை மலரும் என்று நம்புகிறோம். இருப்பினும், மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்வோம். மக்களை நம்பித்தான் நிற்கிறோம். அவர்கள் கொடுக்கும் தீர்ப்பை மதிப்போம்"


உங்களின் அடையாளமே பாடல், இசை என்பதால் கலைவழியாக ஆர்.கே.நகர் தொகுதியில் புதுமையான வழியில் பிரசாரத்தில் ஈடுபடுவீர்களா?

 "'கலை' என்பது அனைத்து வகைகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பிரசாரத்தில் கலையே ஒன்றோடு ஒன்று கலந்தது. உண்மைகளை எடுத்துரைக்கவும் கலை தேவைப்பட்டுள்ளது. அமெரிக்கா, ஜப்பான் போன்ற தேர்தல்களிலும் கலை பயன்படுத்தப்பட்டுள்ளன. மக்களை மகிழ்ச்சி அடையவைக்கும் கலை மூலமாகவும் பிரசாரத்தில் ஈடுபடுவேன். மக்களின் விழிப்பு உணர்வுக்கு கலை இருந்துள்ளது. இதனால், ஆர்.கே.நகர் தொகுதி மக்களைக் கவர, தனிமெட்டுடன் கூடிய பாடல் தயாராகி வருகிறது"  
என்ற  கங்கைஅமரன்...

'வல்லரசா எழுந்து நிற்கும் இந்தியா,

ஊழல் குறையும் நாடு மாறும் உண்மைதான்,

தூய்மை திட்டங்களும், ஊழல் சட்டங்களும் கொண்டுவந்த பிஜேபி-க்கு மாஸ்தான்...

என்று மெட்டோடு பாடினார்.

அடுத்து அவர் பேசுகையில், "பாடல்கள். பிரசாரத்தில் ஒரு வியூகமாக இருக்கும்"

 கங்கைஅமரன்

உங்களுக்கு போட்டியாக யாரை கருதுகிறீர்கள்?

 "தேர்தலில் போட்டியிடும் அனைவரும் மதிப்பிற்கும், மரியாதைக்குரிய போட்டியாளர்கள்தான். மக்கள் அளிக்கும் தீர்ப்பை அனைவரும் மதித்து ஏற்றுக்கொள்ள வேண்டும்.  இந்தப் போட்டியே மக்கள் சேவைக்காகத்தான். பல கட்சிகள் சார்பில் போட்யிட்டாலும் வெற்றி பெறுபவர்கள் மக்களுக்கு பணியாற்ற வேண்டும். எந்தவித ஊழல் குற்றச்சாட்டிலும் சிக்காத கட்சி பா.ஜ.க. அதுதான் நாட்டின் வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருந்துவருகிறது. ஊழலை மக்கள் விரும்பவில்லை. ஊழல் குற்றச்சாட்டில்தான் சசிகலா, சிறையில் இருக்கிறார். தி.மு.க-வில் குடும்ப அரசியலும், அந்தக் கட்சியினர் ஊழலிலும் சிக்கித் தவிக்கின்றனர். எனவே, ஊழலற்ற கட்சியான பா.ஜ.க-வை ஆர்.கே.நகர் மக்கள் அங்கீகரிப்பார்கள். இதனால், ஆர்.கே.நகரில் தாமரை மலரும்."

 ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க. சொற்ப ஓட்டுக்களையே பெற்றுள்ளதே?
 
"வேட்பாளர்களைப் பொறுத்தவரை வெற்றி, தோல்வி சகஜம். வேட்பாளர்களின் வெற்றி, தோல்வி என்பது வாக்காளர்களின் எதிர்பார்ப்பின் அடிப்படையிலேயே அமைகிறது. கடந்த முறை ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் சில எதிர்பார்ப்புகளோடு வெற்றியை அ.தி.மு.க-வுக்கு கொடுத்தார்கள். அதைப் பூர்த்திசெய்ய வேண்டிய கடமை ஜெயலலிதாவுக்கு இருந்தது. தி.மு.க-வும் இந்தத் தொகுதியில் வெற்றிபெற்றுள்ளது. மக்களின் எதிர்பார்ப்பை தி.மு.க-வும், அ.தி.மு.க-வும் மதிக்கவில்லை. அந்த இரண்டு கட்சிகளும் மாறி மாறி ஊழல் செய்து, வழக்குகளில் சிக்கியது வெளிப்படையாகத் தெரிகின்றன. எனவே, மக்களுடைய எதிர்பார்ப்பைத் தெரிந்துகொண்டு செயல்படுவோம். அதில்தான் எங்கள் வெற்றி இருப்பதை நான் நம்புகிறேன்."

ரஜினியை சந்தித்தது ஏன்?

 "எனது நீண்ட கால நண்பர் ரஜினி. நான் தேர்தலில் போட்டியிடுவதையறிந்த ரஜினி, உடனே எனக்கு போனில் வாழ்த்துகளைத் தெரிவித்தார். அப்போது நேரில் சந்திக்கலாம் என்று கூறினார். போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டிலிருந்து எனக்கு இன்று அழைப்பு வந்தது. பிரசார இடைவெளியில் அவரை இன்று சந்திக்க வீட்டுக்குச் சென்றேன். என்னை அன்போடு வரவேற்ற ரஜினி, கட்டியணைத்துக் கொண்டார். பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டோம். அரசியல் நிலவரங்கள் குறித்தும் விவாதித்தோம். ஆன்மிகத்திலிருந்து அரசியல் பிரவேசம் வரை பேசினோம். அப்போது, 'உங்களை மாதிரியான நபர்கள் அரசியலுக்கு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. நீங்கள் வெற்றி பெற வாழ்த்துகிறேன்' என்று ரஜினி தெரிவித்தார். ரஜினியின் வாழ்த்துகளை ராகவேந்திராவின் வார்த்தையாக கருதுகிறேன்"

 உங்களை ஆதரித்து ரஜினி பிரசாரம் செய்வாரா?

 "இந்தக் கேள்வியை நீங்கள் அவரிடம்தான் கேட்க வேண்டும். என்றாலும் ரஜினி, எதைச் செய்தாலும் அதில் ஒர் அர்த்தம் இருக்கும். பொறுத்திருந்து நீங்களே அதைப் பார்ப்பீர்கள்"

http://www.vikatan.com/news/tamilnadu/84214-rajini-invited-me-to-his-home-says-a-happy-gangai-amaran.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.