Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சொத்துக் குவிப்பு வழக்கு: கர்நாடக அரசு சீராய்வு மனு!

Featured Replies

சொத்துக் குவிப்பு வழக்கு: கர்நாடக அரசு சீராய்வு மனு!

sasikala-_elavarasi-_ssudhakaran_1_%288%

சொத்துக் குவிப்பு வழக்கில், கர்நாடக சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இதனால் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் மீது சுமத்தப்பட்டு இருந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால், ஜெயலலிதா இறந்துவிட்டதால் அவர் சிறை தண்டனை அனுபவிக்க முடியாத சூழல் நிலவி வருகிறது.

இந்த வழக்கில், ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. ஜெயலலிதா சிறை தண்டனை அனுபிக்கவில்லை என்றாலும், அபராதத் தொகையை வசூலிப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றன.

நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பில், அபராதத் தொகையை எப்படி வசூலிப்பது என்பது பற்றி தெளிவாக கூறப்பட்டு இருந்தது. இந்நிலையில், கர்நாடக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள அபராதத் தொகையை விரைந்து வசூலிக்கும் நோக்கில் தற்போது கர்நாடகா அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. 

http://www.vikatan.com/news/india/84254-disproportionate-case-karnataka-government-files-review-petition-in-sc.html

  • தொடங்கியவர்

சொத்து குவிப்பு வழக்கு: ரூ.100 கோடியை வசூலிப்பது எப்படி? சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு சீராய்வு மனு

 

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதற்கு எதிராகவும், அபராத தொகை ரூ.100 கோடியை வசூலிப்பது எப்படி என்பதை தெளிவு படுத்தக் கோரியும் கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.

 
 
 
 
சொத்து குவிப்பு வழக்கு: ரூ.100 கோடியை வசூலிப்பது எப்படி? சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு சீராய்வு மனு
 
புதுடெல்லி:
 
சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு தனிக்கோர்ட்டு முன்பு ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதித்து தீர்ப்பு கூறியது.

பின்னர் கர்நாடக ஐகோர்ட்டு அவர்களை விடுதலை செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, பெங்களுரு தனிக்கோர்ட்டு வழங்கிய தண்டனையை உறுதி செய்து தீர்ப்பு அளித்தது. ஜெயலலிதா மரணம் அடைந்து விட்டதால் வழக்கில் இருந்து அவர் விலக்கப்படுவதாக அப்போது நீதிபதிகள் கூறினார்கள்.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் 4 ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். அத்துடன் தலா ரூ.10 கோடி அபராதமும் செலுத்த வேண்டும். ஜெயலலிதா மரணம் அடைந்து விட்டதால் அவர் சார்பில் ரூ.100 கோடி அபராத தொகையை செலுத்த வேண்டுமா? என்பது தொடர்பாக தெளிவற்ற நிலையே இருந்து வந்தது. வழக்கில் இருந்து அவர்
விடுவிக்கப்பட்டதால் அவருக்கு விதிக்கப்பட்ட அபராத தொகை வசூலிக்கப்படுமா? எப்படி வசூலிக்கப்படும்? என தெளிவற்ற நிலையே
நிலவியது.

இந்நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு சீராய்வு மனுதாக்கல் செய்து உள்ளது. இந்த மனு அபராதம் ரூ.100 கோடியை வசூலிப்பது எப்படி? என்பது குறித்து தெளிவு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சசிகலா உள்ளிட்டோரிடம் அபராத்தை வசூலிக்கும் முறைக்கும் தெளிவு கோரி மனுதாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/03/21203655/1075185/Karnataka-government-files-review-petition-in-J-Jayalalithaa.vpf

  • தொடங்கியவர்

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதா இறந்துவிட்டாலும் ரூ.100 கோடி அபராதத்தை வசூலிக்க வேண்டும்: கர்நாடக அரசு சீராய்வு மனு தாக்கல்

 

 
 
ஜெயலலிதா | கோப்புப் படம்
ஜெயலலிதா | கோப்புப் படம்
 
 

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப் பட்ட‌ ஜெயலலிதா மறைந்தாலும், அவருக்கு சொந்தமான சொத்துக்களைக் கொண்டு ரூ.100 கோடி அபராதத் தொகையை வசூலிக்க உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.

கர்நாடக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜோசப் அரிஸ்டாட்டில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், ‘ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி தீர்ப்பு அளித்தது. பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பின்படியே நால்வரையும் குற்றவாளி என அறிவித்து, அபராதத் தொகையையும் உறுதி செய்தது. முதல் குற்றவாளியான ஜெயலலிதா மறைந்துவிட்டதால், அவர் மீதான வழக்கு கைவிடப்படுவதாக தீர்ப்பில் கூறப்பட்டிருக்கிறது.

முதல் குற்றவாளியான ஜெயலலிதா இவ்வழக்கின் அனைத்து விசாரணையும் நிறைவடைந்து, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் கடந்த‌ டிசம்பர் 5-ம் தேதி மறைந்தார். குற்றவியல் வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர் வழக்கு விசாரணையின்போது இறந்திருந்தால் மட்டுமே அவரது பெயரை வழக்கில் இருந்து விடுவிக்க முடியும். ஆனால், ஜெயலலிதா வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் இறந்ததால் அவரது பெயரை வழக்கில் இருந்து விடுவிக்க முடியாது. இதை உச்ச நீதிமன்ற விதிமுறைகள் - 2013 மற்றும் அரசமைப்பு சட்டம் உறுதி செய்கிறது.

ஜெயலலிதா இறந்துவிட்ட நிலையில் அவருக்கு தண்டனை நிறைவேற்ற இயலாது. அதே நேரம் பொது ஊழியரான அவர் வருமானத்துக்கு அதிகமாக குவித்த சொத்துக்களைக் கொண்டு அபராதத் தொகையை வசூலிக்க முடியும்.

எனவே, சொத்துக்குவிப்பு வழக்கின் முதல் குற்றவாளியான‌ ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் உள்ளிட்ட சொத்துக்களை ஏலம் விட்டு ரூ.100 கோடி அபராதத்தை வசூலிக்க வேண்டும். இவ்வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் அபராத தொகை வசூலிப்பது தொடர்பான தெளிவான விளக்கத்தையும் வழங்க வேண்டும். நீதிபதி குன்ஹா தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளபடி ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட ரூ.100 கோடி அபராதத்தை வசூலிக்க வேண்டும். இவ்வாறு க‌ர்நாடக அரசின் மனுவில் கூறப்பட்டுள்ளது.

http://tamil.thehindu.com/india/சொத்துக்குவிப்பு-வழக்கில்-தண்டிக்கப்பட்ட-ஜெயலலிதா-இறந்துவிட்டாலும்-ரூ100-கோடி-அபராதத்தை-வசூலிக்க-வேண்டும்-கர்நாடக-அரசு-சீராய்வு-மனு-தாக்கல்/article9595054.ece?homepage=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.