Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும், அ.தி.மு.க., துணை பொதுச் செயலர் தினகரனுக்கு, வெறும், 30 ஆயிரம் ஓட்டுகள் தான் கிடைக்கும்'

Featured Replies

 

 

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும், அ.தி.மு.க., துணை பொதுச் செயலர் தினகரனுக்கு, வெறும், 30 ஆயிரம் ஓட்டுகள் தான் கிடைக்கும்' என, உளவுத் துறை
அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதால், சசிகலா அணியினர் உற்சாகம் இழந்துள்ளனர்.

 

Tamil_News_large_173526220170321232421_318_219.jpg

அதனால், இரட்டை இலை சின்னம் கிடைக்காத பட்சத்தில், போட்டியில் இருந்து விலக, தினகரன் முடிவு செய்திருப்பதாக, சசி ஆதரவு வட்டாரத்தில் கூறப்படுகிறது.

சென்னை, ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல், ஏப்., 12ல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், அ.தி.மு.க., சசிகலா அணி சார்பில் தினகரன், பன்னீர்செல்வம் அணி சார்பில், மதுசூதனன் மற்றும் ஜெ., அண்ணன் மகள் தீபா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

மூன்று பேரும், நாளை மறுநாள் வேட்பு மனு தாக்கல் செய்கின்றனர். மேலும், பிரதான எதிர்க்கட்சி யான, தி.மு.க., சார்பில், மருதுகணேஷ் களமிறக்கப்பட்டு உள்ளார்.

தே.மு.தி.க., - மதிவாணன், பா.ஜ., -கங்கை அமரன், மார்க்.கம்யூ., - லோகநாதன் ஆகியோரும் களத்தில் குதித்துள்ளனர்.

இந்நிலையில், தினகரனின் வெற்றி வாய்ப்பு குறித்து, தமிழக உளவுத் துறை முதற்கட்ட கள ஆய்வு நடத்தியது. அதனடிப்படையில், முதல்வர் பழனிசாமிக்கு, ஒரு அறிக்கை அளித்துள்ளது. அதில், 'தினகரனுக்கு வெறும், 30 ஆயிரம் ஓட்டுகள் தான்கிடைக்கும். அதே நேரத்தில், 'டிபாசிட்' பெறுவார்' என, கூறியுள்ளனர்.
 

10 சதவீத ஓட்டுகள்


இது குறித்து, அ.தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:

ஜெ., மரணத்தில், சசிகலா குடும்பத்தினர் மீதான சந்தேகம், பொதுமக்களிடம் அதிகம் உள்ளது. அது, தினகரனுக்கு எதிராக திரும்பி யுள்ளது. ஆர்.கே.நகர் தொகுதியில், அ.தி.மு.க., வுக்கு, 40 சதவீத ஓட்டுகள் உள்ளன. இங்கு நடந்த இடைத்தேர்தலில், ஜெ., போட்டி யிட்ட போது, அவருடைய செல்வாக்கு காரணமாக வும், பண பலத்தாலும், அது, 55 சதவீதமாக அதிகரித்தது. தற்போது, தினகரன் போட்டியிடு வதால், அவருக்கு, 10 சதவீதம் ஓட்டுகள் தான் கிடைக்க வாய்ப்பு உள்ளது என, உளவுத் துறை அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

இங்கு, ஆதிதிராவிடர் சமுதாய ஓட்டுகள்,

 

60 ஆயிரம்; நாயுடு, 40 ஆயிரம்; நாடார்,35 ஆயிரம்; மீனவர், 39 ஆயிரம் ஓட்டுகள் உள்ளன. இந்த நான்கு சமுதாயத்தினரிடமும் எடுக்கப்பட்ட சர்வேயில், தினகரனுக்கு, 30 ஆயிரம் ஓட்டுகள் மட்டுமே கிடைக்கும் என்பது தெரிய வந்துள்ளது. தொகுதி மக்களிடம், 90 சதவீதம் எதிர்ப்பு அலையே வீசுகிறது.

மீனவர் ஓட்டுகளை குறிவைத்து வெற்றி பெறலாம் என, தினகரன் தரப்பினர் கருதினர். ஆனால், இந்திய கடல் எல்லையை தாண்டக் கூடாது; இரட்டை மடி வலைக்கு தடை போன்ற, முதல்வரின் உத்தரவுகள், மீனவர் களையும், தினகரனுக்கு எதிராக திருப்பியுள்ளது.
 

அவசர ஆலோசனை


இதற்கிடையில், கொங்கு மண்டல தொழில திபர்கள், தங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த முதல்வர் தொடர வேண்டும் என்பதற்காக, தினகரனுக்கு எதிராக, காய் நகர்த்துவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. இது போன்ற காரணங்களால், அதிர்ச்சி அடைந்துள்ள தினகரன், இரட்டை இலை சின்னமும் கிடைக் காமல் போனால், என்ன செய்வது என, யோசிக்க துவங்கி உள்ளார். அந்த நிலை ஏற்பட் டால், போட்டியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார். அவருக்கு பதிலாக, புதிய வேட் பாளரை நிறுத்துவது குறித்து, அவர் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1735262

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.