Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரட்டை இலை யாருக்கு? டில்லியில் இன்று பஞ்சாயத்து

Featured Replies

இரட்டை இலை யாருக்கு?
டில்லியில் இன்று பஞ்சாயத்து
 
 
 

கட்சியும், சின்னமும் யார் கைக்கு கிடைக்கப் போகிறது என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பில், ஒட்டுமொத்த, அ.தி.மு.க.,வுமே திகிலுடன் காத்திருக்கும் நிலையில், அது குறித்து முக்கிய முடிவை எடுப்பதற்கு, சசிகலா மற்றும் ஓ.பி.எஸ்., என, இருதரப்புக்கான பஞ்சாயத்தை, தேர்தல் கமிஷன் இன்று கூட்டியுள்ளது.

 

Tamil_News_large_173526420170321231406_318_219.jpg

இந்த விஷயத்தில், இன்று இரவோ அல்லது நாளையோ முடிவு அறிவிக்கப்படலாம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின், அ.தி.மு.க., இரு அணிக ளாக பிளவுபட்டு உள்ளது; இருதரப்புக்குமே, உள்ளுக்குள் பெரும் அச்சம் நிலவுகிறது.

மற்ற எந்த அரசியல் கட்சிகளுக்கும் இல்லாத அளவு, அ.தி.மு.க.,வின் இரட்டை இலை சின்னம் மிகவும் சக்தி வாய்ந்தது. எனவே, சின்னம் யாரிடம் போகுமோ, அந்த தரப்பின் தலைமையின் கீழ்தான், ஒட்டுமொத்த, அ.தி.மு.க.,வினரும், வரும் நாட்களில் அணி திரள்வர்; இது தான், இருதரப்பினரது அச்சத்திற்கான காரணம்.

பொதுச் செயலர் நியமனம் செல்லுமா, செல்லாதா என்ற கேள்விக்காகவே, துவக்கத் தில், இருதரப்பும் தேர்தல் கமிஷனின் கதவு களை தட்டின. அது குறித்து, எந்த உறுதியான முடிவும் எடுக்கப் படாத நிலையில், ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வந்துவிட்டது.
பொதுச் செயலர் விவகாரம் சற்று பின்வாங்கி, இரட்டை இலை சின்னம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இருதரப்புமே, முக்கிய வழக்கறிஞர்களை களமிறக்கி, தேர்தல் கமிஷன் அதிகாரிகளுடன் இடைவிடாத தொடர்பில் இருந்து வருகின்றன.

சசிகலாவின் உறவினர்களில் சிலர், டில்லி யிலேயே முகாமிட்டு, நிலைமையை கண் கொத்தி பாம்பாக கவனித்து வருகின்றனர். ஓ.பி.எஸ்., தரப்பும், ஆவணங்களை அள்ளித் தருவதும், கட்சி விதிகளை பிரித்து மேய்ந்து, விளக்குவதுமாக நாட்கள் நகர்ந்தன.

நேற்று முன்தினம், ஓ.பி.எஸ்., அணி சார்பில், 12 எம்.பி.,க்கள், 12 எம்.எல்.ஏ.,க்கள், 6,000 நிர்வாகி கள், 45 லட்சம் உறுப்பினர்கள் கையெழுத்துக்க ளுடன் ஆவணங்கள் தரப்பட்டன.

இதற்கு போட்டியாக, சசிகலா தரப்பும், நேற்று தலைமை தேர்தல் கமிஷனில், தங்கள் ஆதரவு, எம்.பி.,க்கள் - எம்.எல்.ஏ.,க்கள் தவிர, பொதுக் குழு செயற்குழுவைச் சேர்ந்த, 1,913 உறுப்பினர் களின் ஆதரவு ஆவணங்களையும் அளித்தது. இந் நிலை யில், இருதரப்பையும் நேரில் அழைத்து, அமர வைத்து பேச, தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்துள் ளது. ஒரு மினி கோர்ட் விசாரணை போல நடக்கும் இன்றைய விசாரணையில், இருதரப்பைச் சேர்ந்த வழக்கறிஞர்களும், நிர்வாகிகளும் பங்கேற்கின்றனர்.

மிக முக்கியமான இந்த கூட்டத்தில், தலைமை தேர்தல் கமிஷனர்களும் பங்கேற்க உள்ளனர். 'உ.பி.,யில், சமாஜ்வாதிக்குள் ஏற்பட்ட பிரச்னையை போல், இதிலும் தேர்தல் கமிஷன் முடிவெடுக்கும்' என, சசிகலா தரப்பு நம்புகிறது.அந்த விவகாரத்தில், பெரும்பாலான, எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.சி.,க்கள், எம்.பி.,க்கள் ஆதரவு, தனக்கு இருப்பதாக அகிலேஷ் நிரூபித்ததால், அவருக்கு சைக்கிள் சின்னம் கிடைத்தது; ஆனால், அ.தி.மு.க., விவகாரம் அப்படியல்ல.

இங்கு அடிப்படை கேள்வியே, 'பொதுச் செயலர் நியமனம் செல்லுமா, செல்லாதா' என்பது தான். கட்சி விதிகளோ, சசிகலாவின் தேர்வுக்கு எதிராக மிகத் தெளிவாக உள்ளன; அது தான் கேள்விக் குள்ளாகிறது.அங்கிருந்தே, விவாதத்தை தேர்தல் கமிஷன் துவக்கினால், அதன்பின் இந்த விவகாரத் தில், அத்தனையுமே பொல பொலவென உதிர்ந்து போய்விடும்.

சின்னத்திற்கான, 'பி பார்ம்' வழங்க, சசிகலா தகுதியற்றவராகும் பட்சத்தில், ஜெ., மரணமடைந்த சமயத்தில், கட்சியின் நிர்வாகிகளாக யார் இருந்தனரோ, அவர்களே தற்போதும் தொடருவதாக அர்த்தமாகும்.

அதன்படி, அவை தலைவர் மதுசூதனனும், பொருளா ளர் பன்னீர்செல்வமும் அதிகாரம் பெற்றவர்களாக கூடும். ஆனாலும், பொதுச் செயலர் என்ற பதவிக்கு மட்டுமே, சின்னம் வழங்குவதற்கான உரிமை உள்ளது என்பதால், இவர்களாலும், உடனடியாக எதையும் செய்து விட முடியாது.ஆர்.கே.நகர் இடைத் தேர்தலுக்கு, சில நாட்களே உள்ளன. எனவே, பொதுக்குழு கூடி, புதிய பொதுச் செயலரை தேர்ந்தெடுத்து, அவர் மூலம் சின்னத்தை கோருவதற்கு, ஓ.பி.எஸ்., அணிக்கு அவகாசம் தருவதற்கான நிலையில், தேர்தல் கமிஷனும் இல்லை.

 


சின்னத்தை பொறுத்தவரை, தேர்தல் கமிஷன் அளிப்பது தான் இறுதி தீர்ப்பு. இருப்பினும், யாராவது ஒருவருக்கு சின்னம் தந்துவிட்டால், பாதிக்கப்பட்ட தரப்பு, இந்த விவகாரத்தை கோர்ட்டிலும் முறையிடலாம்.இத்தனை விஷயங்கள் இருப்பதால், தற்போதைய குழப்பமான சூழ்நிலையில், இரட்டை இலை சின்னம் முடக்கப்படுவதற்கான வாய்ப்பே அதிகமாக உள்ளது. இதை, இருதரப்புமே உணர்ந்துள்ளன.

இருப்பினும், பேச்சின் முடிவிலேயே, தன் முடிவை தேர்தல் கமிஷன் அளிக்குமா என்பது சந்தேகமே. இந்த விவகாரத்தில், இன்று இரவோ அல்லது நாளையோ, தெளிவான பதில் கிடைக்க வாய்ப்புள்ளது.
 

அரசியல் தரகர்கள்


இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர் பாக, டில்லி அரசியல் வட்டாரங்கள் கூறிய தாவது: இரட்டை இலை சின்னத்தை எப்படி யாவது பெற்று விட வேண்டும் என்பதற் காக, டில்லியில் பழம் தின்று கொட்டை போட்ட, சில முக்கியமான அரசியல் அதிகார தரகர் களையும் , இருதரப்பினரும் அழைத்து பேசியுள்ளனர்.

நாட்டின் முக்கிய பதவியில் உள்ள ஒருவரது மகன், தடாலடி பிரமுகர், கதர்ச்சட்டை வக்கீல், உ.பி.,யில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகளின் பிரமுகர்களை, இரு தரப்பினரும் அணுகியுள்ள னர். இரு தரப்பினரின் சார்பில், தமிழகத்தை சேர்ந்த தொழில் அதிபர்கள் சிலர், இதற்காக கோடிக்கணக்கில் பணத்தை வாரி இறைத்துள் ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1735264

  • தொடங்கியவர்

இரட்டை இலை சின்னம் யாருக்கு? தலைமைத் தேர்தல் ஆணையர் முன்னிலையில் வாதம் தொடங்கியது

ops-_sasikala_long_10527.jpg

இரட்டை இலை சின்னம் தொடர்பாக, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் முன்னிலையில், பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் வாதாடிவருகின்றனர்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், அ.தி.மு.க சசிகலா அணி, பன்னீர்செல்வம் அணி, தீபா அணி எனப் பிரிந்தது. இந்நிலையில், ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. சசிகலா அணி சார்பில் டி.டி.வி.தினகரனும், பன்னீர்செல்வம் அணி சார்பில் மதுசூதனனும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தீபா, இன்று வேட்புமனு தாக்கல்செய்வார் என்று தெரிகிறது.

இதனிடையே, இரட்டை இலை சின்னம் தங்களுக்குத்தான் சொந்தம் என சசிகலா மற்றும் பன்னீர்செல்வம் அணியினர் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தனர்.  தங்களுக்கு லட்சக்கணக்கான தொண்டர்களின் ஆதரவு இருப்பதாகவும் இருஅணியினரும் கூறியுள்ளனர். இந்நிலையில், இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பான வாதம், டெல்லியில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி முன்னிலையில் இன்று நடந்துவருகிறது.

சசிகலா தரப்பில் காங்கிரஸைச் சேர்ந்த வீரப்பமொய்லி, சல்மான் குர்ஷித், மோகன் பராசரன், அரிமா சுந்தரம் ஆகியோர் வாதம் செய்து வருகின்றனர். இந்த வாதம் முடிவடைந்த பின்னர், பன்னீர்செல்வம் அணி சார்பில் மனோஜ் பாண்டியன், வைத்தியநாதன், குருகிருஷ்ணகுமார், மைத்ரேயன் ஆகியோர் வாதாட உள்ளனர்.

பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த 12 எம்பி-க்கள், ஆதரவு நிர்வாகிகளும், சசிகலா அணியைச் சேர்ந்த அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஆர்.பி உதயகுமார், ராதாகிருஷ்ணன் ஆகியோர் டெல்லி சென்றுள்ளனர்.

http://www.vikatan.com/news/tamilnadu/84279-rk-nagar-by-poll-argument-began-before-election-commissioner-in-delhi-over-admk-party-symbol.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.