Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சசிகலாவுக்காகக் களமிறங்கிய சல்மான் குர்ஷித்! -திவாகரன் குடும்பத்தின் 'திடீர்' மூவ்

Featured Replies

சசிகலாவுக்காகக் களமிறங்கிய சல்மான் குர்ஷித்!  -திவாகரன் குடும்பத்தின் 'திடீர்' மூவ்

சசிகலா-தினகரன்

' இரட்டை இலை சின்னம் யாருக்கு?' என்ற கேள்விக்கான பதில், இன்று மாலை தெரிந்துவிடும். ' தேர்தல் ஆணைய விவகாரத்தை நேரடியாக சசிகலாவே கையில் எடுத்துவிட்டார். தினகரன் தரப்பினர் ஆதிக்கம் செலுத்துவதையும் அவர் விரும்பவில்லை. திவாகரன் மகன் ஜெயானந்த் மேற்பார்வையிலேயே அனைத்து விவகாரங்களும் கையாளப்படுகின்றன' என்கின்றனர், அ.தி.மு.க நிர்வாகிகள். 

ஆர்.கே.நகர் தொகுதிக்கு, வரும் ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. அ.தி.மு.க வேட்பாளராக டி.டி.வி.தினகரன் களம் இறங்குகிறார். வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே, சசிகலா குடும்பத்துக்குள் முட்டல், மோதல்கள்  அதிகரித்துவிட்டன. குறிப்பாக, ' பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவின் ஒப்புதல் பெறாமலேயே தன்னைத்தானே வேட்பாளராக அறிவித்துக்கொண்டார் தினகரன். இந்த நடவடிக்கையை சசிகலா ரசிக்கவில்லை' என்கின்றனர், கார்டன் வட்டாரத்தில் உள்ளவர்கள். இதுகுறித்து நம்மிடம் விரிவாக விளக்கினர். " சொத்துக்குவிப்பு வழக்கில், கடந்த மாதம் 15-ம் தேதி பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. அவர், சிறை சென்ற நாளில் இருந்து அவருடைய தம்பி திவாகரன் உள்ளிட்ட குடும்ப உறவுகள் யாரும் பெங்களூரு பக்கமே தலைகாட்டவில்லை. காரணம், டி.டி.வி.தினகரன், டாக்டர்.வெங்கடேஷ் உள்ளிட்டவர்கள்... ஆட்சி அதிகாரத்திலும் கட்சி அதிகாரத்திலும் கோலோச்சி வந்ததுதான். ஐஏஎஸ் பணியிட மாற்றம், நிர்வாகிகள் சேர்ப்பு போன்ற பல விஷயங்களில் தன்னிச்சையாகவே இயங்கிவந்தார் தினகரன். இந்நிலையில், ஆர்.கே.நகர் வேட்பாளர் விவகாரத்திலும் சசிகலா கவனத்துக்குத் தவறான தகவல்களைக் கொண்டுசென்றார். ' நிர்வாகிகள் போட்டியிடுவதற்கே பயப்படுகின்றனர்' என சசிகலாவிடம் கூறினார். வேட்பாளராக அவர் தன்னைத்தானே அறிவித்த அன்று, ' அக்கா சொல்லித்தான் இத்தனையும் நடக்கிறதா?' எனக் கொந்தளித்தார் திவாகரன்.

ஜெயானந்த்இதன்பின்னர், தன்னுடைய மகன் ஜெயானந்தை பெங்களூரு சிறைக்கு அனுப்பி சசிகலாவை சந்திக்க வைத்தார். கட்சியில் நடக்கும் விவகாரங்கள் அனைத்தையும் சசிகலாவிடம் எடுத்துக் கூறினார்.                   ' இப்படியே போனால், நம் கையைவிட்டு அனைத்தும் பறிபோய்விடும்' என விளக்கியுள்ளனர். இந்தச் சந்திப்புக்குப் பிறகு, ' தேர்தல் ஆணைய விவகாரங்களை திவாகரனே பார்த்துக்கொள்ளட்டும்' என உறுதியாகக் கூறிவிட்டார். இன்று காலை தேர்தல் ஆணையத்தில் நடக்கும் விசாரணையில், திவாகரன் மகன் ஜெயானந்த் கலந்துகொள்கிறார். அவருடன் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் பங்கேற்க இருக்கிறார். ' நம்முடைய தரப்பு வாதத்தை எடுத்து வைக்க சல்மான் குர்ஷித் சரியானவர்' என சசிகலா சொன்னதையடுத்து, டெல்லியில் தங்கியிருந்து அவருடைய அனுமதியைப் பெற்றார் திவாகரன். பன்னீர்செல்வம் அணிக்காக தேர்தல் ஆணையத்தில் வாதாட, முன்னாள் அமைச்சர் கபில் சிபலை அணுகியுள்ளனர். இதை அறிந்து, காங்கிரஸ் தொடர்புகள் மூலம் அதைத் தடுத்து நிறுத்தியது சசிகலா தரப்பு. இந்த நடவடிக்கைகள் எதுவும் தினகரனுக்குத் தெரியாது. இன்று, தேர்தல் ஆணையத்தில் நடக்கும் விசாரணையில், டெல்லி பிரதிநிதி என்ற அடிப்படையில் தளவாய் சுந்தரம் வருவதையும் திவாகரன் தரப்பினர் விரும்பவில்லை" என்றார் விரிவாக. 

" கார்டன் நிர்வாகத்தை டாக்டர் வெங்கடேஷ் கவனித்துவருகிறார். ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ-வாக இருக்கும் விவேக் ஜெயராமன், சில தொழில்களைக் கவனித்துவருகிறார். பெங்களூரு சிறைக்குச் செல்வதற்கு முன்னதாக கட்சி நிர்வாகத்தை தினகரன் கையில் ஒப்படைத்தார், சசிகலா. சிறைக்குள் நடக்கும் விவகாரங்களை முழுமையாக அறிந்த விவேக், தினகரன் பக்கம் சாய்ந்துவிட்டதையும் கொந்தளிப்புடன் கவனித்துசல்மான் குர்ஷித்வந்தது திவாகரன் தரப்பு. கட்சி மற்றும் ஆட்சியின் அனைத்து முடிவுகளையும் சசிகலா ஒப்புதல் இல்லாமலேயே தினகரன் செய்து வருவதாகவும் ஆவேசப்பட்டனர். ' கட்சியை விட்டு சசிகலா நீக்கப்பட்ட நேரத்தில், அதை வரவேற்று மொட்டை அடித்துக்கொண்டவர்களை எல்லாம் தினகரன் கட்சியில் சேர்த்துவிட்டார்' என 'நமது எம்.ஜி.ஆர்-ல் வந்த அறிவிப்புகளையும் சசிகலாவிடம் காண்பித்தனர். இப்படி நடக்கும் என்பதை அறிந்து, ' சசிகலா குடும்பத்தில் இனி யாருக்கும் இடமில்லை' எனப் பேசி வந்தார் தினகரன். ' குடும்ப உறவுகளுக்கு இடமில்லை என்றால், இவருக்கும் சசிகலாவுக்கும் என்ன சம்பந்தம்? இவர் குடும்ப உறுப்பினர் இல்லையா?' எனக் கேள்வி எழுப்பத் தொடங்கினர். ஐஏஎஸ் பணியிட மாற்றம், அரசு ஒப்பந்தங்கள் என அனைத்திலும் தினகரன் சொல்வதே சட்டமாக இருக்கிறது. பணியிட மாற்றம் தொடர்பாக குடும்ப உறவுகள் ஏதேனும் சிபாரிசுக் கடிதம் கொடுத்தால், சம்பந்தப்பட்ட நபரை தொலைதூரத்துக்கு பணியிட மாற்றம்செய்யும் பணிகளிலும் இறங்கினார். 'இனியும் பொறுத்திருக்க முடியாது' என்ற நிலையில்தான், அனைத்து விவகாரங்களையும் சசிகலா கவனத்துக்கு எடுத்துச் சென்றோம். அதன்பின்னர்தான், டெல்லி விவகாரங்களைக் கையாளும் பொறுப்பை திவாகரனிடம் ஒப்படைத்தார்" என்கிறார் மன்னார்குடியைச் சேர்ந்த அ.தி.மு.க நிர்வாகி ஒருவர். 

" மத்திய அரசின் முழுப் பார்வையும் பன்னீர்செல்வம் அணியின் பக்கமே இருக்கிறது. எந்தச் சூழ்நிலையிலும் இரட்டை இலை சின்னம் சசிகலா பக்கம் சென்றுவிடக்கூடாது' என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். கட்சியின் பொதுக் குழு உறுப்பினர்கள், பேரவை நிர்வாகிகள் உள்பட ஆறாயிரம் பேரின் கையெழுத்துடன்கூடிய பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்திருக்கிறோம். ' கட்சியின் உறுப்பினர் அட்டைகூட சசிகலாவிடம் இல்லை' என்பதை ஆதாரத்துடன் ஆணையத்தின் பார்வைக்கு சமர்ப்பித்திருக்கிறோம். அ.தி.மு.க நிர்வாகிகளின் ஒட்டுமொத்த ஆதரவும் எங்களுக்கே இருக்கிறது. ஒரு சில நிர்வாகிகள், ஆதாயத்துக்காக சசிகலா பக்கம் நிற்கின்றனர். கட்சியின் சின்னம் எங்கள் கைக்கு வந்துவிட்டால், மற்றவர்களும் எங்கள் பின்னால் வருவார்கள். ' ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் மதுசூதனன் போட்டியிடுவது உறுதி' என்கின்றனர் பன்னீர்செல்வம் அணியினர் நம்பிக்கையோடு. 

'இரட்டை இலை யாருக்கு?' என்ற கேள்விக்கான பதில், இன்று மாலைக்குள் முடிவுக்கு வந்துவிடும். ' ஆட்சி அதிகாரத்தில் யாருக்கு செல்வாக்கு?' என சசிகலா குடும்பத்தில் நடக்கும் சண்டைகள் அவ்வளவு எளிதில் முடிக்கு வருவது போல தெரியவில்லை. 

http://www.vikatan.com/news/tamilnadu/84277-why-did-salman-khurshid-stand-for-sasikala---divakarans-surprising-move.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.