Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெயலலிதா போல் போராடி இரட்டை இலை சின்னத்தை பெறுவோம் - டி.டி.வி. தினகரன்

Featured Replies

ஜெயலலிதா போல் போராடி இரட்டை இலை சின்னத்தை பெறுவோம் - டி.டி.வி. தினகரன்

தேர்தல் ஆணையத்தால் இரட்டை இலை சின்னம் தற்காலிகமாக தான் முடக்கப்பட்டுள்ளதாகவும், ஜெயலலிதா போல் போராடி சின்னத்தை மீட்போம் எனவும் அ.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

 
 
 
 
ஜெயலலிதா போல் போராடி இரட்டை இலை சின்னத்தை பெறுவோம் - டி.டி.வி. தினகரன்
 
சென்னை:

தேர்தல் ஆணையத்தால் இரட்டை இலை சின்னம் தற்காலிகமாக தான் முடக்கப்பட்டுள்ளதாகவும், ஜெயலலிதா போல் போராடி சின்னத்தை மீட்போம் எனவும் அ.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மரணத்தைத் தொடர்ந்து சசிகலா அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி என அ.தி.மு.க. இரண்டாக பிளவுபட்டுள்ளது.
ஆட்சியையும், கட்சியையும் கைப்பற்ற இரு அணிகளுக்கும் இடையே பலத்த போட்டி ஏற்பட்டது. அதன்பின்னர் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே தர வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் மனு கொடுத்தனர். இதனால் இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும் என்ற பரபரப்பு ஏற்பட்டது.
9453FA03-8048-419E-B2A8-B34B416E6361_L_s
இந்நிலையில், அக்கட்சியின் அதிகாரப்பூர்வமான சின்னமான இரட்டை இலையை முடக்கி வைத்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சசிகலா பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டது குறித்து சர்ச்சை நீடிப்பதால் தற்போது சின்னத்தை யாருக்கு என்ற முடிவை எடுக்கமுடியவில்லை எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அ.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறியிருப்பதாவது:-

இரட்டை இலை சின்னம் தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டது தற்காலிகமானது தான். ஜெயலலிதா போல் போராடி இரட்டை இலை சின்னத்தை பெறுவோம். தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு எங்களுக்கு ஓர் அனுபவம் தான். இவ்விவகாரத்தில் சட்டப்போராட்டம் நடத்தி வெற்றி பெறுவோம்.
7209E429-ABDA-4D40-AD8F-C4B97A4AF06B_L_s
இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. இதனால் வேறு யாருக்கும் வெற்றி வாய்ப்பு இல்லை. இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதில் யாருடைய பின்புலம் இருந்தாலும் அது குறித்து கவலை இல்லை.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நான் போட்டியிடுவதில் இருந்து எந்த மாற்றமும் இல்லை.நாளை காலை 11 மணிக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்ய இருக்கிறேன். மாற்று சின்னத்தில் போட்டியிடுவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/03/23000213/1075429/we-will-appeal-legaly-against-election-commission.vpf

  • தொடங்கியவர்

"எந்த சின்னத்தில் போட்டியிட்டாலும், நாங்கள் வெற்றி பெறுவது நிச்சயம்" - டிடிவி தினகரன் திட்டவட்டம்! #TWOLEAVES

 

dinakaran1511_10148_00050.jpg

 

ஆர்.கே நகர்  இடைத்தேர்தலில், ''ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா தரப்பினர் யாருமே, இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்தக்கூடாது'' என தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

'இரட்டை இலை சின்னம் முடக்கம்' குறித்து டி.டி.வி. தினகரன் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது, "தேர்தல் ஆணையம் தற்காலிகமாகத்தான் இரட்டை இலை சின்னத்தை முடக்கியுள்ளது. எனவே நாங்கள் உயர்நீதிமன்றத்திலோ அல்லது உச்ச நீதிமன்றத்திலோ மேல்முறையீடு செய்து இரட்டை இலை சின்னத்தை நிச்சயமாக மீட்டெடுப்போம். ஏனெனில் அரசியலைப் பொறுத்தமட்டில், எந்தவொரு நிகழ்வையும் அதிர்ச்சியாக எடுத்துக்கொள்ளக்கூடாது, அனுபவமாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். மீண்டும் சரித்திரம் திரும்பி இருக்கிறது. எம்.ஜி.ஆர் அவர்களின் மறைவுக்குப் பின், இதேபோல இரட்டை இலை சின்னம் முடக்கம் செய்யப்பட்டது. அப்போதும் இரட்டை இலை சின்னம் யாருக்கும் கிடைக்கவில்லை. அப்போது இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுக்க, அம்மாவுடன் சேர்ந்து நாங்கள் போராடினோம். அதன் விளைவாகவே இரட்டை இலை சின்னம் எங்களுக்கு கிடைத்தது. அதுபோல இந்த முறையும், ஆர்.கே நகர் தேர்தலில் வெற்றிபெற்று இரட்டை இலை சின்னத்தை எங்களுக்கே உரியதாக்குவோம். ஒன்றரை கோடி உண்மையான தொண்டர்கள் எங்களோடு இருக்கிறார்கள். இந்த நேரத்தில் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதில் எங்களுக்கு எந்த பிரச்னையையும் இல்லை. நாங்கள் எந்த சின்னத்தில் போட்டியிட்டாலும், ஆர்.கே நகர் தேர்தலில் உறுதியாக வெற்றி பெறுவோம். அதுமட்டுமல்லாமல் நான் அம்மாவின் மாணவன். அவரிடம்தான் அரசியல் பயின்றேன். இந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் 'இரட்டை இலை' சின்னத்தை மீட்டெடுப்போம்" என்று கூறினார்.

http://www.vikatan.com/news/politics/84360-what-ever-symbol-we-use-doesnt-stop-us-from-winning-the-election-says-ttv-dinakaran.html

  • தொடங்கியவர்

ஏப்ரலில் ஒன்றரை கோடி தொண்டர்களுடன் இரட்டை இலை சின்னத்தை மீட்போம்: டிடிவி தினகரன்

 
டிடிவி தினகரன் | கோப்புப் படம்.
டிடிவி தினகரன் | கோப்புப் படம்.
 
 

ஏப்ரலில் ஒன்றரை கோடி தொண்டர்களுடன் இரட்டை இலை சின்னத்தை மீட்போம் என்று டிடிவி தினகரன் வேட்புமனு தாக்கல் செய்த பிறகு கூறினார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதற்கான வேட்புமனுக்கள் கடந்த மார்ச் 16-ம் தேதி முதல் பெறப்பட்டு வருகின்றன. தேர்தல் நடத்தும் அலுவலர் பிரவீன் நாயர் வேட்பு மனுக்களை பெற்று வருகிறார்.

வேட்பாளர்கள் சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள மண்டலம் 4 அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி பிரவீன் பி.நாயரிடம் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர்.

ஆர்.கே.நகர் தேர்தலில் இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டதையடுத்து, சசிகலா அணிக்கு தொப்பி சின்னமும், ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு இரட்டை விளக்கு மின்கம்பம் சின்னமும் தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று டிடிவி தினகரன் கட்சி சின்னமான தொப்பியை அணிந்தபடி வேட்புமனு தாக்கல் செய்தார்.

அதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், ''ஆர்.கே.நகரில் பல்லாயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்.

இரட்டை இலை சின்னம் தற்போது முடக்கப்பட்டுள்ளது. இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதற்கு சதியே காரணம். சதிக்கு யார் காரணம் என்பதை மக்கள் அறிவர். ஏப்ரலில் ஒன்றரை கோடி தொண்டர்களுடன் இரட்டை இலை சின்னத்தை மீட்போம். ஜெயலலிதாவின் பிரதிநிதியாக இருந்து தேர்தலுக்கு முன் ஜெயலலிதா அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவேன்.

ஆர்.கே.நகர் தொகுதியில் இன்று மாலை முதல் பிரச்சாரம் மேற்கொள்கிறேன்'' என்று டிடிவி தினகரன் கூறினார்.

http://tamil.thehindu.com/tamilnadu/ஏப்ரலில்-ஒன்றரை-கோடி-தொண்டர்களுடன்-இரட்டை-இலை-சின்னத்தை-மீட்போம்-டிடிவி-தினகரன்/article9597853.ece?homepage=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.