Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘இதைவிட வேறு அவமானம் என்ன வேண்டும்?!’ - கொந்தளிக்கும் சசிகலா குடும்ப உறவுகள்

Featured Replies

‘இதைவிட வேறு அவமானம் என்ன வேண்டும்?!’ - கொந்தளிக்கும் சசிகலா குடும்ப உறவுகள்

தினகரன்

எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.கவில் ஏற்பட்ட புயல், 28 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மையம் கொண்டுள்ளது. 'அ.தி.மு.கவில் பிளவு நீடிப்பதையே மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு விரும்புகிறது. வி.என்.ஜானகியோடு ஜெயலலிதா முரண்பட்டபோது, இரட்டை இலை விவகாரத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார் ராஜீவ்காந்தி. தற்போது அப்படியான எந்த அவசியமும் பிரதமர் மோடிக்கு இல்லை' என்கின்றனர் அரசியல் வட்டாரத்தில். 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின், அ.தி.மு.கவின் புதிய பொதுச் செயலாளராக பதவியேற்றுக் கொண்டார் சசிகலா. ஆட்சி அதிகாரத்தை நோக்கியும் அவர் வேகம் காட்டியபோது, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அ.தி.மு.க பிளவுபட்டது. 'அ.தி.மு.கவின் சட்டவிதிகளின்படி சசிகலா தேர்வு செய்யப்படவில்லை' என்பதை தேர்தல் ஆணையத்தில் தெரிவித்தது ஓ.பி.எஸ் அணி. இந்நிலையில், ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அ.தி.மு.க சார்பில் டி.டி.வி.தினகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். 'இரட்டை இலைச் சின்னத்தை அவருக்கு ஒதுக்கக்கூடாது. நாங்கள்தான் உண்மையான அ.தி.மு.க' என தேர்தல் ஆணையத்தில் புகார் மனு கொடுத்தார் மைத்ரேயன் எம்.பி. இதற்கு சாட்சியாக ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட ஆவணங்களையும் சமர்ப்பித்தார். டி.டி.வி.தினகரன் தரப்பில் இருந்தும் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களின் ஒப்புதல் கடிதம், அ.தி.மு.கவின் துணை அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளின் ஆதரவுக் கடிதம் என ஏராளமான ஆவணங்களை காட்சிப்படுத்தினர். இதற்கிடையில், சசிகலா குடும்பத்துக்குள்ளும் அதிகார மோதல் வெடித்தது. 'டெல்லியில் மேற்கொள்ள வேண்டிய பணிகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்' என திவாகரன் தரப்பினர் வரிந்து கட்டிக் கொண்டு களம் இறங்கினர். சசிகலாவுக்கு ஆதரவாக வாதாட முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தின் அனுமதியைப் பெற்றார் திவாகரன். தேர்தல் ஆணையத்தில் நடந்த வாதத்தின் முடிவில் இரண்டு தரப்புக்கும் சின்னம் கிடைக்கவில்லை. 'ஏப்ரல் 17-ம் தேதிக்குள் ஆவணங்களை அளிக்குமாறு' தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

சசிகலா"தமிழ்நாட்டுக்கு டிசம்பருக்குள் தேர்தலைக் கொண்டு வருவது குறித்து டெல்லி வட்டாரத்தில் தீவிர ஆலோசனை நடந்து வருகிறது. 'தேர்தல் ஆணையத்தில் கட்டாயம் வெற்றி பெறுவோம்' என தினகரன் ஆட்கள் டெல்லியில் முகாமிட்டிருந்தனர். கடைசி நாட்களில், 'ஆணையத்தின் முடிவு எதிராகப் போகலாம்' என்பதை அறிந்து, திவாகரன் தரப்பினர் டெல்லியில் தங்கியிருந்தனர். காங்கிரஸ் தலைமையில் உள்ளவர்களைத் தொடர்பு கொண்டு, அடுத்தக்கட்ட ஆலோசனைகளையும் கேட்டனர். ஆனால், முடிவு எப்படி இருக்கும் என்பதை பன்னீர்செல்வம் அணியினர் முன்பே யூகித்துவிட்டார்கள்" என விவரித்த ஆளும்கட்சியின் நிர்வாகி ஒருவர், நேற்று நடந்த விவகாரங்களை நம்முன் பட்டியலிட்டார். "இரட்டை இலைச் சின்னத்தை முடக்கி ஆணையம் உத்தரவிட்டதை தினகரன் தரப்பினர் எதிர்பார்க்கவில்லை. மிகவும் சோர்ந்து போய்விட்டனர்.

நேற்று அவர்கள் தீவிர ஆலோசனையிலும் இறங்கினர். ' உங்களால் எதையும் சரியாகச் செய்ய முடியவில்லை. நீங்கள் நம்பிய ஆட்கள் எல்லாம் பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றிவிட்டனர். தவறான ஆட்களை நம்பி களத்தில் இறங்கிவிட்டீர்கள். இந்த விவகாரத்தை எப்படி அணுக வேண்டும் என்பதைக்கூட உங்களால் கணிக்க முடியவில்லை' என தினகரன் தரப்பினரை நோக்கிக் குற்றம் சுமத்தினர். அவரது தரப்பினரோ, ' நமக்கு ஆதரவாக இருந்தவர்கள் கடுமையாக வேலை பார்த்தார்கள். அவர்களை நாம் குறை சொல்ல முடியாது. பொதுச் செயலாளர் பதவி நீடித்திருப்பதற்குக் காரணமும் அவர்கள்தான். நம்மை மீறிய சக்தி விளையாடும்போது நாம் என்ன செய்ய முடியும்?' என ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். 

திவாகரன்இதையடுத்து, திவாகரன் குடும்பத்துக்கு மூத்தவரான அந்த நபர் பேசும்போது, 'நம்மை நெகட்டிவ் சக்தி என்று டெல்லியில் ஆள்பவர்கள் நினைக்கிறார்கள். அவர்களை நாம் ஆதரித்தாலும் எதிர்த்தாலும் நம்மை அடிப்பார்கள். இப்போது கோழையாக அடி வாங்கி வந்திருக்கிறோம். இதைவிட வேறு அவமானம் என்ன வேண்டும்? தொடக்கத்தில் இருந்தே அவர்களை நாம் வலுவாக எதிர்த்திருக்க வேண்டும். நாம் அப்படிச் செய்யாமல் அமைதியாக இருந்ததால், வீரமணி, திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்களும் நம்மை ஆதரித்த முஸ்லிம் அமைப்புகளும் விலகிச் சென்றுவிட்டனர். மத்திய அரசை எதிர்த்திருந்தால், இந்தளவுக்கு தோல்வி வந்து சேர்ந்திருக்காது. இதைத்தான் நான் ஆரம்பத்தில் இருந்தே சொல்லி வருகிறேன். நம்மால் அவர்களுக்கு ஆக வேண்டிய காரியம் என்று எதுவும் இல்லை. குடியரசுத் தலைவர் தேர்தலில் தி.மு.க ஆதரித்தாலே பா.ஜ.கவுக்குப் போதுமானது. நம்முடைய ஆதரவை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. இனி சின்னத்தை மீட்க நாம் கடுமையாக போராட வேண்டியது இருக்கும்' எனக் கொந்தளித்தார். இதையடுத்து சட்டரீதியாக செய்ய வேண்டிய காரியங்கள் குறித்து விவாதித்து வருகின்றனர்" என்றார் விரிவாக. 

"அ.தி.மு.க நிர்வாகிகள் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என பா.ஜ.க மேலிடம் விரும்பவில்லை. அவர்கள் பிளவுபட்டு இருப்பதையே தங்களுக்கான ஆதாயமாகப் பார்க்கின்றனர். 'ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருந்தாலும், மூன்றாவது இடத்துக்குள் வந்துவிட வேண்டும்' என பா.ஜ.க நிர்வாகிகள் அறிவுறுத்தியுள்ளனர். அதற்கேற்ப பிரசார வியூகத்தையும் அமைத்து வருகின்றனர். இப்போதுள்ள சூழலில் களத்தில் அ.தி.மு.க என்ற கட்சி போட்டியிடவில்லை. தொகுதிக்குள் பணபலத்தைக் காட்ட டி.டி.வி.தினகரன் முயற்சித்தாலும், அதை முறியடிக்கவும் தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படை அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர். 'தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது?' என்பதை உணர்ந்து கொள்ள முடியாத நிலைக்கு, அ.தி.மு.க நிர்வாகிகள் தள்ளப்பட்டுள்ளனர். அ.தி.மு.க அரசு முழுமையாக பதவிக்காலத்தை நிறைவு செய்யுமா என்பதும் சந்தேகம்தான்" என்கிறார் அரசியல் விமர்சகர் ஒருவர். 

http://www.vikatan.com/news/tamilnadu/84377-losing-two-leaves-symbol-is-the-biggest-shame-weve-ever-faced---sasikala-faction-in-anger.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.