Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘இரட்டை இலைக்கு உரிமை கோரினாரா பன்னீர்செல்வம்?!’ - ஆணைய விவாதத்தில் என்ன நடந்தது?

Featured Replies

‘இரட்டை இலைக்கு உரிமை கோரினாரா பன்னீர்செல்வம்?!’ - ஆணைய விவாதத்தில் என்ன நடந்தது?

ஓ.பன்னீர்செல்வம்

ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட 127 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். 'தேர்தல் ஆணையத்தால் சின்னம் முடக்கப்பட்ட கவலையில் இருந்து நிர்வாகிகள் முழுமையாக மீளவில்லை. தொப்பி சின்னத்தால் எதிர்பார்த்த வெற்றி கிடைக்குமா?' என்ற கவலையும் அ.தி.மு.க நிர்வாகிகள் மத்தியில் எழுந்துள்ளது. 

கோடை வெயிலின் வெப்பத்தையும் தாண்டி ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் களம் தகித்துக் கொண்டிருக்கிறது. அ.தி.மு.க வேட்பாளர் டி.டி.வி.தினகரனுக்கு தொப்பி சின்னத்தை ஒதுக்கியிருக்கிறது தேர்தல் ஆணையம். ஓ.பன்னீர்செல்வம் அணியின் சார்பில் போட்டியிடும் மதுசூதனன், இரட்டை மின் கம்பம் சின்னத்தை தேர்வு செய்திருக்கிறார். எங்களுக்குப் போட்டியே இல்லை என்ற கணக்கில் தி.மு.க வேட்பாளர் வலம் வருகிறார். "இரட்டை இலை சின்னம் கைவிட்டுப் போனதில் டி.டி.வி.தினகரன் உள்பட கட்சி நிர்வாகிகள் அனைவரும் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். 'ஆர்.கே.நகரில் தோற்றுவிட்டால், ஆளும் பா.ஜ.க இன்னும் வேகமாக நம்மை வீழ்த்தும் முயற்சியில் இறங்கும்' என்பதை அறிந்து, பிரசாரப் பணிகளில் வேகம் காட்டுகின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்பட அனைத்து அமைச்சர்களும் அட்டவணைப்படி தொகுதி மக்களை சந்தித்து வாக்கு கேட்க உள்ளனர்.

பன்னீர்செல்வம் அணியினரோ, 'ஆர்.கே.நகரில் நாங்கள் வெற்றி பெற்றால், ஒட்டுமொத்த அ.தி.மு.கவும் எங்கள் கைகளுக்கு வந்துவிடும். அம்மா மரணத்தில் உண்மையைக் கண்டுபிடிக்க, எங்களுக்கு ஆதரவு கொடுங்கள்' எனப் பேசி வருகின்றனர். தொகுதி மக்களின் அடிப்படைப் பிரச்னைகளைவிடவும், ஜெயலலிதா மரணத்துக்கு நீதி கேட்கும் தேர்தலாகவே மாற்றிவிட்டனர். தி.மு.கவினரோ, தொகுதிக்குள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் 'செயலற்ற அரசாக அ.தி.மு.க அரசு இருக்கிறது' என்பதை சுட்டிக் காட்டும் வகையில் பிரசாரம் செய்கின்றனர். மற்ற கட்சிகள் சமுதாய பலத்தைக் குறிவைத்துக் களமிறங்கியுள்ளன" என்கின்றனர் வடசென்னை அரசியல் பிரமுகர்கள். 

அன்வர்ராஜா'ஆர்.கே.நகர் தேர்தல் களம்தான் இரட்டை இலையின் எதிர்காலத்தைத் தீர்மானிக்குமா?' என அ.தி.மு.க எம்.பி அன்வர்ராஜாவிடம் கேட்டோம். "இரட்டை இலையை எங்களுக்குத்தான் ஆணையம் ஒதுக்கீடு செய்திருக்க வேண்டும். பாரபட்சத்தோடு எங்களைப் புறக்கணித்துவிட்டனர். முலாயம் சிங் யாதவின்  குடும்பத்தில் பிரச்னை வந்தபோது, தேர்தல் ஆணையம் தலையிட்டு சமரசம் செய்து வைத்தது. ஆட்சி அதிகாரத்தில் இருந்த அகிலேஷ் யாதவ் வசம் கட்சியை ஒப்படைத்தது. ஆனால், அ.தி.மு.க விவகாரத்தில் இப்படியொரு சிக்கல் ஏற்படவே இல்லை. 'சின்னத்தை கையாள்வதற்கு சின்னம்மாவுக்குத் தகுதியில்லை'  என்பதுதான் பன்னீர்செல்வம் அணியின் வாதம். 'கட்சியின் பொதுச் செயலாளராக அவர் தேர்வு பெற்றது தவறு. அதே அடிப்படையில் சின்னத்தை ஒதுக்கீடு செய்வதற்கும் அவர் தகுதியற்றவர். கட்சி சார்பான அவருடைய நடவடிக்கைகள் எதுவும் செல்லாது. அ.தி.மு.கவின் உள்கட்சி விதிகளின்படி, பொதுச் செயலாளருக்கு அடுத்தநிலையில் அவைத் தலைவர் மதுசூதனன் இருக்கிறார். அவர் கையில் கட்சியின் அதிகாரத்தைக் கொடுக்க வேண்டும்' என ஆணையத்தில் வாதிட்டனர். எந்த இடத்திலும் பன்னீர்செல்வம் சார்பாக வாதிட்டவர்கள், 'எங்களுக்கு சின்னம் ஒதுக்குங்கள்' என்று எந்த இடத்திலும் கேட்கவில்லை. அவர் இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரியிருந்தால்கூட பரவாயில்லை. பொதுச் செயலாளராக சசிகலாவை தேர்வு செய்து முன்மொழிந்துவிட்டு, புதிய பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்படும் வரையில் தற்காலிக பொதுச் செயலாளருக்கு அனைத்து அதிகாரங்களும் இருக்கின்றன என அறிவித்தவரே பன்னீர்செல்வம்தான். இவை அனைத்தும் பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

எனவே, நிரந்தர பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்படும் காலம் வரையில் கட்சியின் அனைத்து நடவடிக்கைகளையும் தற்காலிக பொதுச் செயலாளர் மேற்கொள்வதற்கு அனைத்து அதிகாரங்களும் உண்டு. 'இரட்டை இலையை ஒதுக்கும் அதிகாரமும் சசிகலாவுக்கு உண்டு' என்று எங்கள் தரப்பில் வாதிட்டோம். கட்சியின் 37 எம்.பிக்களும் 122 எம்.எல்.ஏக்களும் 57 மாவட்ட செயலாளர்களும் எங்கள் பக்கம் உள்ளனர். நாங்கள் இந்த மாநிலத்தை ஆண்டு கொண்டிருக்கிறோம். இரட்டை இலை சின்னத்துக்காகவும் மறைந்த முதல்வருக்காகவும்தான் மக்கள் இந்த அரசைத் தேர்வு செய்தனர்.

இந்தநிலையில், இரட்டை இலை சின்னத்தில் நாங்கள் போட்டியிடுக் கூடாது என்பதில் எந்தவித நியாயங்களும் இல்லை. தேர்தல் ஆணையத்தின் முடிவு பாரபட்சமானது. இந்த விவகாரத்தில் சட்டரீதியாகவே வெற்றி பெறுவோம். எங்களுக்கு எதிராக இப்படியொரு உத்தரவு வருவதற்குக் காரணமே பா.ஜ.க அரசுதான். பன்னீர்செல்வத்தைக் கையில் வைத்துக் கொண்டு பா.ஜ.க அரசு சில காரியங்களைச் செய்கிறது. தமிழ்நாட்டில் பா.ஜ.கவுடன் கூட்டு சேருவதற்கு எந்தக் கட்சியும் தயாராக இல்லை. பன்னீர்செல்வத்துக்கு சாதகமாக செயல்பட்டால், அதன்மூலம் சில இடங்களில் வெற்றி பெறலாம் என அவர்கள் கணக்கு போடுகின்றனர். 'பா.ஜ.கவின் பினாமி ஓ.பி.எஸ்' என்பதை வரக் கூடிய காலங்களில் மக்கள் உணர்வார்கள். இதைப் பற்றி பகிரங்கமாக பேசுவதற்கு மற்றவர்கள் ஏன் பயப்படுகிறார்கள் என்று தெரியவில்லை. நான் சொல்வதுதான் உண்மை. எங்களை அழிக்க நினைக்கிறது பா.ஜ.க. தொண்டர்களுக்காக எம்.ஜி.ஆர் உருவாக்கிய கட்சி இது. எங்கள் ரத்தத்தை அவர்கள் உறிஞ்சுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்" என்றார் கொந்தளிப்புடன். 

http://www.vikatan.com/news/tamilnadu/84463-did-o-panneerselvam-claim-rights-for-two-leaves-symbol-what-happened-in-the-meeting.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.