Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கமிஷனர் ஜார்ஜ் அதிரடி மாற்றம்: ஆணையராக கரண் சின்ஹா நியமனம்- தேர்தல் ஆணையம்

Featured Replies

கமி‌ஷனர் ஜார்ஜ் அதிரடி மாற்றம்: ஆணையராக கரண் சின்ஹா நியமனம்- தேர்தல் ஆணையம்

 

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கோரிக்கையை ஏற்று கமிஷனர் ஜார்ஜ் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். புதிய ஆணையராக கரண் சின்ஹாவை நியமித்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

 
 
 
 
கமி‌ஷனர் ஜார்ஜ் அதிரடி மாற்றம்:  ஆணையராக கரண் சின்ஹா நியமனம்- தேர்தல் ஆணையம்
 
சென்னை:

ஜெயலலிதா மரணத்தை தொடர்ந்து காலியாக இருந்த ஆர்.கே.நகர் தொகுதிக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 12-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

அ.தி.மு.க. 2 அணிகளாக உடைந்து இடைத்தேர்தலை சந்திக்கிறது. அ.இ.அ.தி.மு.க. அம்மா (சசிகலா அணி) கட்சி சார்பில் டி.டி.வி.தினகரனும், அ.இ.அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா (ஓ.பன்னீர்செல்வம் அணி) கட்சி சார்பில் மதுசூதனனும் போட்டியிடுகிறார்கள்.

தி.மு.க. வேட்பாளராக மருது கணேஷ் களத்தில் உள்ளார். ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா தனித்து போட்டியிடுகிறார். பா.ஜனதா, தே.மு.தி.க., நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளும் களத்தில் உள்ளன.

இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்ட நிலையில் டி.டி.வி.தினகரன் தொப்பி சின்னத்திலும், மதுசூதனன் இரட்டை விளக்கு மின்கம்பம் சின்னத்திலும் போட்டியிடுகிறார்கள். இதனால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் களம் வித்தியாசமான தேர்தல் களமாகவே காட்சி அளிக்கிறது.

அங்கு போட்டியிட 127 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில் 82 பேரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

ஆர்.கே.நகரில் வெற்றியை ருசிக்க அ.தி.மு.க. அணிகள் மற்றும் தி.மு.க. இடையே கடும் பலப்பரீட்சை ஏற்பட்டுள்ளது. இதனால் தேர்தல் களத்தில் அனல் பறக்கிறது.

இதற்கிடையே அமைதியான முறையில் தேர்தலை நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. ஆர்.கே.நகரில் பதட்டமான சாவடிகள் கண்டறியப்பட்டு அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக இன்னும் சில தினங்களில் துணை ராணுவ படையினரும் ஆர்.கே.நகருக்கு வருகை தர உள்ளனர்.

இடைத்தேர்தல் ஏற்பாடுகளை கண்காணிப்பதற்காக டெல்லியில் இருந்து தேர்தல் பார்வையாளர் பிரவீன் பிரகாஷ் நேற்று வருகை தந்தார்.

ஆர்.கே.நகர் தேர்தலை நடத்தும் அதிகாரியான பிரவீன் நாயருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அசம்பாவிதங்கள் ஏதுமின்றி ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நடத்தி முடிப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது. அதற்கு தேவையான ஏற்பாடுகளை முழுவீச்சில் செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.

இதனால் அரசியல் கட்சியினருக்கு இணையாக தேர்தல் அதிகாரிகளும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் களத்தில் சுறுசுறுப்புடன் பணியாற்றி வருகிறார்கள்.

இதற்கிடையே தி.மு.க. சார்பில் சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் புகார் செய்யப்பட்டது.

தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி, மாநில தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி, தமிழக அரசின் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோருக்கு இது தொடர்பான மனுவை தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அனுப்பி இருந்தார்.

அதில் கமி‌ஷனர் ஜார்ஜ் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுபவர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அவர், ஒருதலைபட்சமாக செயல்பட வாய்ப்பு உள்ளது. சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது கமி‌ஷனர் ஜார்ஜ் உத்தரவின் பேரிலேயே ஐ.பி.எஸ். அதிகாரிகள் செயல்பட்டனர். எனவே ஆர்.கே.நகர் தேர்தலையொட்டி அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தார்.
 
4BC36825-FF3F-4C25-9EF3-3D193203E094_L_s


இதனை தொடர்ந்து கமி‌ஷனர் ஜார்ஜ் இன்று அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ளது. இடமாற்றம் செய்யப்பட்டிருக்கும் ஜார்ஜுக்கு புதிய பணியிடம் எதுவும் வழங்கப்படவில்லை.

அவருக்கு பதிலாக சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனரையும் தேர்தல் ஆணையம் உடனடியாக அறிவித்தது.

சி.பி.சி.ஐ.டி. கூடுதல் டி.ஜி.பி. கரண் சின்ஹா, புதிய போலீஸ் கமி‌ஷனராக நியமிக்கப்பட்டார். இவர் இன்று அல்லது நாளை பொறுப்பேற்க உள்ளார்.

இடமாற்றம் செய்யப்பட்டுள்ள ஜார்ஜ் கடந்த 2011-ம் ஆண்டு அ.தி.மு.க. வெற்றி பெற்று ஜெயலலிதா முதல்-அமைச்சரானதும், 2012-ம் ஆண்டு சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனராக நியமிக்கப்பட்டார். 19-9-2012 அன்று முதல் முறையாக பொறுப்பேற்றார். அதன் பின்னர் தேர்தல் நேரங்களில் மட்டுமே அவர் இடமாற்றம் செய்யப்பட்டார். கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போதும், சட்டமன்ற தேர்தலின் போதும் மாற்றப்பட்டிருந்தார்.

இடையில் சில காலம் மட்டுமே கமி‌ஷனர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டிருந்த ஜார்ஜ், 2-வது முறையாக அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் அதே பதவியில் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/03/25111958/1075908/EC-order-to-Police-Commissioner-george-transferred.vpf

  • தொடங்கியவர்

“முள் இருக்கையா சென்னை போலீஸ் கமிஷனர் பதவி?”  முத்துக்கருப்பன் முதல் ஜார்ஜ் வரை!


                       சென்னை கமிஷனர் கரன்சின்ஹா                                        

'ஐ.பி.எஸ் அதிகாரிகளின் கனவுப்பதவி' என்று சென்னை போலீஸ் கமிஷனர் பதவியைக் குறிப்பிட்டுச் சொல்வார்கள். அப்படிப்பட்ட சென்னை போலீஸ் கமிஷனர் பதவிக்கு வந்தவர்களையும், அந்தப்பதவிக்கு நேர்ந்த சோகங்களையும்,  2001-க்கு முன் 2001-க்குப் பின் என்று பார்த்தால் கிர்ர்ரடிக்கிறது. சென்னை போலீஸ் கமிஷனராக 2000-வது ஆண்டுவரையில்  இருந்த கே.காளிமுத்து, 2001-ம் ஆண்டு சமூகநீதித்துறை கூடுதல் இயக்குநராக மாற்றி நியமிக்கப்பட்டார். அதுவரையில் ஆயுதப்படை போலீஸ் ஐ.ஜி-யாக இருந்த முத்துக்கருப்பனை சென்னை போலீஸ் கமிஷனராக நியமித்தார் அன்றைய முதல்வரான ஜெயலலிதா. கூடுதல் போலீஸ் டி.ஜி.பி அந்தஸ்தில் இருந்த  சென்னை போலீஸ் கமிஷனர் பதவி அப்போதுதான் ஐ.ஜி அந்தஸ்துக்கு இறங்கியது.முத்துக்கருப்பனும் அந்த இருக்கையில் அதிகநாட்கள் தாக்குப்பிடிக்க முடியவில்லை. ஓராண்டுக்குள்ளேயே அதே ஆயுதப்படை ஐ.ஜி-யாக திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார். முத்துக்கருப்பனின்  இடமாற்றத்துக்குப் பின் , அதிரடிப்படை ஐ.ஜி-யாக இருந்த கே.விஜயகுமார் (2002) சென்னை போலீஸ் கமிஷனராக கொண்டு வரப்பட்டார். அதிரடிப்படை ஐ.ஜி-யாக ஆர்.நட்ராஜ் நியமிக்கப்பட்டார். சட்டசபை உரிமை மீறல் பிரச்னை தொடர்பாக இரண்டு பத்திரிகையில் இருப்பவர்களை உடனடியாகக் கைதுசெய்ய ஜெ.அரசு உத்தரவிட்டது. ஆனால், அந்த உத்தரவை நிறைவேற்ற முடியாமல் கமிஷனர் விஜயகுமார் கோட்டைவிட்டார். திருவல்லிக்கேணி போலீஸ் துணை கமிஷனராக இருந்த சின்ராஜ், இந்த அலுவலங்களின் அத்தனை அறைகளையும் திறந்து பார்த்ததுதான் மிச்சம். அவர்கள் தேடிவந்த யாரும் கிடைக்கவில்லை. 


'ஜெ.சொல்லியும், சுப்பிரமணிய சாமியை பிடிக்காமல் விட்டார்' என்ற காரணத்துக்காக  போலீஸ் டி.ஜி.பி. ஸ்ரீபால் மாற்றப்பட்டதுபோல் கமிஷனர் கே.விஜயகுமாரும் இந்த விவகாரத்தால், அதிரடிப்படைக்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார்.  மத்திய அரசுப்பணியில் இருந்த விஜயகுமாரை,  தமிழ்நாடு அதிரடிப்படை ஐ.ஜி பணிக்காக கேட்டு வாங்கிய ஜெயலலிதாவே, மறுபடியும் அவரை அதே அதிரடிப்படைக்கு அனுப்பிவைத்தார்.

விஜயகுமார் மாற்றப்பட்டதும் சென்னை போலீஸ் கமிஷனராக ஆர்.நட்ராஜ் நியமிக்கப்பட்டார். தேர்தல் நேரத்தில் நடந்த உலக மகளிர் தினவிழாவில், "ஜெயலலிதா ஒரு லட்சியப் பெண்மணி..." என்று ஆரம்பித்து நிறைய பேசினார் போலீஸ் கமிஷனர் ஆர். நட்ராஜ். (இன்றைய மயிலாப்பூர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ), இந்தப் பேச்சை, தேர்தல் ஆணையத்துக்கு தி.மு.க அனுப்பி வைத்தது. இதனால்  ஆர்.நட்ராஜ் பதவி பறிபோனது. சென்னையின் புதிய போலீஸ் கமிஷனர் பட்டியலில், கே.வி.எஸ் மூர்த்தி, நாஞ்சில் குமரன், லத்திகா சரண் ஆகிய மூன்று பெயர்கள் தேர்தல் ஆணையத்துக்கு போக, அதில் லத்திகா சரண்  தேர்வானார். சென்னையின் முதல்பெண் போலீஸ் கமிஷனர் என்ற அந்தஸ்துடன் இருந்த லத்திகா சரண் அடுத்து வந்த தி.மு.க-வுக்கும் விசுவாசமாக இருக்கவே கமிஷனராக தொடர்ந்தார். 
உள்ளாட்சித்தேர்தலில் வரலாறு காணாத கலவரம் நடந்தபோது, சென்னை போலீஸ் கமிஷனராக இருந்தவர் இதே லத்திகா சரண்தான். அவருடைய உச்சக்கட்ட விசுவாசமானது, டி.ஜி.பி பதவி வரை எதிரொலித்தது. தமிழ்நாடு போலீஸ் டி.ஜி.பி-யாக பணியில் இருக்கும்போதே நீண்ட விடுப்பில்  அனுப்பி வைக்கப்பட்டார் கே.பி.ஜெயின். ஆர். நட்ராஜ் உள்ளிட்ட மூன்று சீனியர்கள் பேனலில் இருந்தபோதும், முதல்வர் கருணாநிதி, லத்திகா சரண் பெயரை பரிந்துரைத்தார். சீனியர்கள் கோர்ட்டுக்குப் போனார்கள்.'மூவரும் டி.ஜி.பி அந்தஸ்துதானே... இதில் யாரை சட்டம் -ஒழுங்கு டி.ஜி.பி-யாக பணியில் அமர்த்த வேண்டுமென்பது அரசின் கொள்கை முடிவு' என்றது கோர்ட். லத்திகா சரண், தமிழ்நாட்டின் முதல் பெண் டி.ஜி.பி ஆனார். தமிழ்நாடு கேடரில், படித்த தமிழகத்தின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரியான திலகவதி, அப்போதும் கூடுதல் டி.ஜி.பி-யாகத்தான் இருந்தார். தமிழகத்தைச் சேர்ந்த அவரை கடைசி வரையில் இரண்டு கழகங்களும் கமிஷனராக்க சம்மதிக்கவில்லை.

                                முன்னாள் கமிஷனர் ஜார்ஜ்
அதேபோல்,சென்னை போலீஸ் கமிஷனராக ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட நடராஜனும் குறுகிய காலத்திலேயே இடமாற்றம் செய்யப்பட்டார். அதன் பின்னணி சுவாரசியமானது.... வைகோவுக்கும், ஜெயலலிதாவுக்கும் கட்சி  விஷயங்களில்  எதிர் எதிராக இருந்த காலம் அது. திருமண விழா ஒன்றில் கமிஷனர் நடராஜன், வைகோவைப் பார்த்து சிரித்து வைத்ததால் அவர் பதவி போனது. இப்படிப் பல ஏற்றங்களையும், இறக்கங்களையும் பார்த்து வந்தது இந்த சென்னை  போலீஸ் கமிஷனர் பதவி.தமிழக முதல்வராக 2011-ம் ஆண்டு ஜெயலலிதா  பதவி ஏற்றதும் சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த திரிபாதி இடமாற்றம் செய்யப்பட்டு, ஜார்ஜ் கொண்டு வரப்பட்டார். அதன் பின்னணியையும் பார்த்துவிடுவோம். அண்ணாசாலையில் இருந்த அமெரிக்கத் தூதரகம் முன்பு இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தியது. போலீஸ்கமிஷனர் திரிபாதி, "ஆர்ப்பாட்ட ஊர்வலம் எப்படி இருக்கிறது, நான் அங்கு வரவேண்டிய நிலைமை இருக்கிறதா?" என்று நிமிடத்துக்கு ஒருமுறை  மைக்கில் வந்த போதெல்லாம், ''எல்லாம் ஸ்மூத்தாக போகிறது சார், நோ ப்ராப்ளம்'' என்று  அடுத்தநிலை அதிகாரிகள் பலரும் சொல்லி வைத்தார்கள். கடைசியில், அமெரிக்கத் தூதரகம் உடைந்தது. 'எல்லாம் ஸ்மூத்' என்று கமிஷனரிடம் ரிப்போர்ட் கொடுத்தவர்கள், திரிபாதிக்கு பக்கத்தில் நின்றுகொண்டு, முதல்வர் ஜெயலலிதாவின் காருக்கு கோட்டையில் சல்யூட் அடித்துக் கொண்டிருந்தார்கள். "என்னய்யா, மொத்த பேரும் இங்கிருக்கீங்க?" என்று திரிபாதி கேட்ட சில நிமிடங்களில் அவர் சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி-யாக்கப்பட்டிருந்தார். திரிபாதியை பக்குவமாக ஓரங்கட்டியதில் பல கைகள் இருந்தன. சென்னைக்கு ஜார்ஜ் புதிய கமிஷனராக பொறுப்பேற்றார். அதன்பிறகு ஜெ.வுடன் ஏற்பட்ட பிணக்கு காரணமாக 2015-ல் ஜார்ஜ் ஓரம்கட்டப்பட்டார். அந்த இடத்துக்கு கூடுதல் டி.ஜி.பி அந்தஸ்தில் இருந்த டி.கே.ராஜேந்திரன் நியமிக்கப்பட்டார். அந்த சீட்டில் இருந்தபடியே டி.ஜி.பி அந்தஸ்தும் அடைந்தார்; ஆனாலும் கமிஷனராகவே தொடர்ந்தார். ஜெ.வின் கோபம் குறைந்ததும், சென்னை போலீசில் மூன்றாவது முறையாகவும் சென்னையின் 100-வது  கமிஷனராகவும் வந்து ஸ்ட்ராங்காக உட்கார்ந்தார் ஜார்ஜ்.


சென்னை கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் கையில் உளவுப்பிரிவு டி.ஜி.பி.,  சட்டம் -ஒழுங்கு பொறுப்பு டி.ஜி.பி ஆகிய இரண்டு பொறுப்புகளை ஜெயலலிதா ஒப்படைத்தார். இந்த 2017-ம் ஆண்டு இறுதிக்குள் டி.கே.ராஜேந்திரன் முன்னே, ஜார்ஜ் பின்னே என்ற வரிசையில், பணி ஓய்வு பெறவுள்ளனர். சட்டம்-ஒழுங்கு நிரந்தர டி.ஜி.பி பொறுப்புக்கு  இருவரில் யார் வந்தாலும், அதிலிருந்து மூன்றாண்டுகள் அவரே டி.ஜி.பி-யாக பணியில் இருப்பார். கூடுதலாக இரண்டரை ஆண்டுகாலம் பணி நீட்டிப்பும், தானாகவே நடந்துவிடும். ஆர்.கே நகர் இடைத்தேர்தலின் முடிவுகள் பல அரசியல் மாற்றங்களுக்கு வித்திடக் கூடிய தேர்தலாகவும் கருதப்படுவதால் அத்தனை  அதிகாரிகளும், அரசியல்வாதிகளை விட தீவிரமாக தேர்தலை கவனிக்கத் தொடங்கியுள்ளனர். இப்படிப்பட்ட தருணத்தில்தான் ஜார்ஜ், மீண்டும் மாற்றப்பட்டுள்ளார். சி.பி.சி.ஐ.டி-யின் கூடுதல் டி.ஜி.பி-யாக இருக்கும் கரன்சின்ஹா  சென்னை போலீஸ்  கமிஷனராக வந்திருக்கிறார். தேநீரில் தொடங்கி உணவு ஐட்டம் வரையில் வீட்டிலிருந்தே வரவழைத்துக் கொள்ளும் கரன்சின்ஹாவால் பலருக்கும் தொண்டைநீர் வற்றத் தொடங்கியிருக்கிறது.

http://www.vikatan.com/news/tamilnadu/84575-chennai-commissioner-seat-is-like-a-seat-full-of-thorns.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.