Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரூ.100 கோடியை வசூலிக்காம விடமாட்டாங்க போல...!

Featured Replies

ரூ.100 கோடியை வசூலிக்காம விடமாட்டாங்க போல...!

கறார் கர்நாடகா

 

‘சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை உறுதி செய்யப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலா, எப்போது மறுசீராய்வு மனு போடுவார்?’ இந்தக் கேள்வியுடன் இருந்த அரசியல் வட்டாரங்களுக்கு, கர்நாடக அரசின் அதிரடி, அதிர்ச்சி தந்திருக்கக்கூடும். ஆம், சசிகலாவுக்குப் பதிலாக கர்நாடக அரசு முந்திக்கொண்டு, உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு போட்டிருக்கிறது. ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட நூறு கோடி ரூபாய் அபராதத்தை வசூலிப்பது குறித்து தெளிவு வேண்டி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம், உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்பு அடுத்த கட்டத்துக்கு நகர்ந்திருக்கிறது.

p40b.jpg

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நான்கு பேருக்கும் தலா நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும், முதல் குற்றவாளியான ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபாய் அபராதமும், மற்றவர்களுக்கு தலா 10 கோடி ரூபாய் அபராதமும் விதித்து 2014 செப்டம்பரில் தீர்ப்பு எழுதினார் கர்நாடக சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா. ‘அபராதத் தொகையை வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை வைத்தும், நகைகளை ஏலம் விட்டும் வசூலிக்க வேண்டும்’ என்றும் உத்தரவிட்டிருந்தார். இந்தத் தீர்ப்பை கடந்த மாதம் சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது. இதைத் தொடர்ந்து சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.

தீர்ப்பு வெளியான நாளிலிருந்தே, ஒரு விஷயம் குறித்து சட்ட வல்லுநர்கள் குழப்பமான கருத்துகளைத் தெரிவித்து வந்தார்கள். ‘ஜெயலலிதா இறந்துவிட்டதால், அவர் மீதான தண்டனை விலக்கப்படுகிறது’ என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திர கோஷ் மற்றும் அமிதவ ராய் அடங்கிய பெஞ்ச், தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது. ‘சிறைத் தண்டனைக்கு மட்டும்தான் விலக்கா?’ என்ற விஷயத்தில் குழப்பம் இருந்தது. இதைத் தெளிவாக்கவே இப்போது கர்நாடக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.

p40.jpg

கர்நாடக அரசு வழக்கறிஞர் ஜோசப் அரிஸ்டாட்டில், திடீரென கடந்த 21-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். ‘சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா மரணமடைந்ததையடுத்து அவரை வழக்கிலிருந்து முடித்து வைப்பதாகச் சொல்வது ஏற்புடையதல்ல. தவறானது. முதன்மைக் குற்றவாளியான ஜெயலலிதா மரணமடைந்து விட்டார் என்பதற்காக மேல்முறையீட்டு வழக்கு முடித்து வைக்கப்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் எப்படி தீர்ப்பு வழங்கப்பட்டிருக்குமோ, அதே வலிமையுடன் வழங்கப்பட வேண்டும். கடந்த 2013-ம் ஆண்டு வகுக்கப்பட்ட உச்ச நீதிமன்ற விதிகளின்படியும், அரசியல் சட்டத்தின் 136-வது பிரிவின்படியும், இப்படிப்பட்ட குற்றவியல் மேல்முறையீட்டு வழக்குகளில், குற்றவாளிகளுக்குத் தண்டனையை விலக்கி வைக்க விதி இல்லை. ஜெயலலிதா மரணமடைந்ததால் அவருக்குச் சிறைத் தண்டனை சாத்தியமில்லை. ஆனால், ‘அபராதம் செலுத்த வேண்டும்’ என்பது நிலைத்து நிற்கத் தக்கது. அரசு ஊழியராக இருந்து சட்ட விரோதமாக வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளை ஜெயலலிதா குவித்துள்ளார். சிறப்பு நீதிமன்றம், 100 கோடி ரூபாய் அபராதத்தை எப்படி வசூலிக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறது. மற்ற வழக்குகளுக்கு இது முன்னுதாரணம் ஆகி விடக்கூடாது என்பதால், அபராதத் தொகை 100 கோடி ரூபாயை வசூலிக்க, தெளிவான வழிகாட்டல் வேண்டும்’ என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் கர்நாடக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா, ‘‘இந்த வழக்கில் கடந்த ஜூலை மாதமே வாதங்கள் முடிந்துவிட்டன. நீதிபதிகளின் வசதிக்காகவே தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது. இடைப்பட்ட காலத்தில் அவர் இறந்துவிட்டார் என்பதற்காகவே, அவர் மீதான தண்டனை விலக்கப்படும் என்பது சரியல்ல. சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்கிறது என்றால், ஜெயலலிதாவையும் குற்றவாளி என்றே அறிவிக்க வேண்டும். அவரிடமிருந்து அபராதத்தை வசூலிக்கவும் தெளிவான வழிகாட்டல் வேண்டும்’’ என்கிறார்.

p40a.jpg

இதுபற்றி சசிகலா தரப்பு வழக்கறிஞர்களிடம் பேசினோம். ‘‘இரட்டை இலை சின்னம் தொடர்பாக டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்தில் பிஸியாக இருக்கிறோம். சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கியதிலிருந்து, மூன்று மாதங்களுக்குள் எப்போது வேண்டும் என்றாலும் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யலாம். அதனால் அடுத்த மாதம் மறு சீராய்வு மனு போட முடிவெடுத்திருக்கிறோம். அப்போது சசிகலா, சுகாதரன், இளவரசி ஆகியோரின் தண்டனைக் காலத்தைக் குறைக்கவும், அவர்களுக்கு விதிக்கப் பட்ட அபராதத் தொகையைக் குறைக்கவும் வலியுறுத்துவோம். அதுவரை இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. மரணம் அடைந்தவர்களைப் பற்றிய வழக்குகளை நீதிமன்றம் ஏற்காது’’ என்றார்கள்.

தமிழக அரசியல் பரபரப்புகள், தொடர்ந்து ஜெயலலிதாவைச் சுற்றியே நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.

http://www.vikatan.com/juniorvikatan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.