Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெயலலிதா மகன் என்று கூறியவருக்கு நேர்ந்த சிக்கல்! அதிரடி காட்டிய உயர்நீதிமன்றம்

Featured Replies

ஜெயலலிதா மகன் என்று கூறியவருக்கு நேர்ந்த சிக்கல்! அதிரடி காட்டிய உயர்நீதிமன்றம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மகன் என்றுக் கூறியவரை கைது செய்ய சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

jaya_son-_chennai_high_court_16326_14560

ஈரோடு மாவட்டம், காஞ்சிகோவில் கிராமத்தைச் சேர்ந்த ஜெ.கிருஷ்ணமூர்த்தி (32) என்பவர், தான் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மகன் என்றும், தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "தத்து எடுக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், நான் மறைந்த நடிகர் சோபன்பாபு, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோரது மகன் ஆவேன். 1985-ம் ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி நான் பிறந்தேன். நான் குழந்தையாக இருந்தபோது, என் தாய்-தந்தைக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், 1986-ம் ஆண்டு காஞ்சிகோவில் கிராமத்தைச் சேர்ந்த வசந்தாமணி என்பவருக்கு, மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர். முன்னிலையில் என்னை தத்துக்கொடுத்துவிட்டனர். இதற்கான ஒப்பந்தத்தில், என் பெற்றோர் சோபன்பாபு, ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர். ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

ஈரோட்டில் தத்து எடுத்த பெற்றோருடன் வசித்தாலும், அடிக்கடி சென்னை வந்து என் தாயார் ஜெயலலிதாவைச் சந்திப்பேன். கடந்த மார்ச் மாதம் அவரை சந்தித்தபோது, என்னை தன் மகன் என்று செப்டம்பர் மாதம் அறிவிக்கப்போவதாக ஜெயலலிதா கூறினார். இதற்கான நடவடிக்கைகளை அவர் எடுத்துவந்தார். இவையெல்லாம் தற்போது கர்நாடக மாநிலச் சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு நன்றாகத் தெரியும். இதனால், ஜெயலலிதாவுடன் அவர் தகராறு செய்தார். இந்த நிலையில், என் தாயார் அப்போலோ மருத்துவமனையில், கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். பின்னர் டிசம்பர் 5-ம் தேதி அவர் மரணம் அடைந்தார்.

என் தாயாருக்கு இறுதிச்சடங்கு செய்வதற்கு சசிகலாவும், அவரது உறவினர்களும் என்னை அனுமதிக்கவில்லை. டி.டி.வி.தினகரனின் தூண்டுதலின்பேரில், அடையாளம் தெரியாத சிலர் என்னைக் கடத்திச்சென்று, சிறுதாவூர் பங்களாவில் அடைத்துவைத்துக் கொடுமைப்படுத்தினர். அந்த பங்களாவில் வேலை செய்யும் காவலாளியின் உதவியுடன் அங்கிருந்து தப்பி வந்தேன். அதன் பின்னர், என்னுடைய நலவிரும்பிகள் கொடுத்த யோசனையின் அடிப்படையில், டிராபிக் ராமசாமியைக் கடந்த மாதம் இறுதியில் சந்திக்கச் சென்றேன். இதைத் தெரிந்துகொண்ட சசிகலாவின் ஆட்கள், என்.எஸ்.சி.போஸ் சாலையில் வைத்து என்னைத் தாக்கினார்கள். இதில் நான் படுகாயம் அடைந்தேன்.

இதன் பின்னர், கடந்த 11-ம் தேதி டிராபிக் ராமசாமியைச் சந்தித்து, சசிகலாவுக்கு எதிராகப் போராடி, என்னுடைய உரிமையையும், என் தாயாரின் சொத்துக்களையும் மீட்டுத் தரும்படிக் கேட்டேன். அவர் கொடுத்த அறிவுரையின்படி, தமிழகத் தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், தமிழக டி.ஜி.பி. உள்ளிட்டோருக்கு கடந்த 12-ம் தேதி புகார் மனுவை அனுப்பினேன். தேனாம்பேட்டை போலீஸாருக்கும் தனியாக புகார் மனு அனுப்பப்பட்டது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனக்கும், என்னை தத்து எடுத்துள்ள பெற்றோருக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை. தற்போது, சசிகலாவின் ஆட்களால் என் உயிருக்கு ஆபத்து உள்ளது. அவர்கள் தற்போதைய முதலமைச்சரிடம் செல்வாக்குப் பெற்றவர்கள். எனவே, எனக்குத் தகுந்த போலீஸ் பாதுகாப்பை வழங்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், அதற்கான உரிய அசல் ஆவணங்களைத் தாக்கல் செய்ய கிருஷ்ணமூர்த்திக்கு உத்தரவிட்டிருந்தது. இதைத்தொடர்ந்து அவர் கடந்த 18-ம் தேதி ஆவணங்களைத் தாக்கல் செய்திருந்தார். இதனையடுத்து, அவர் தாக்கல் செய்திருந்த ஆவணங்களை  காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது,  கிருஷ்ணமூர்த்தி போலி ஆவணங்களைத் தாக்கல் செய்திருப்பதாக, காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கிருஷ்ணமூர்த்தியைக் கைது செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், அவரைக் கைது செய்வதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, வருகின்ற ஏப்ரல் 10-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறையினருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

http://www.vikatan.com/news/tamilnadu/84676-hc-orders-to-arrest-krishnamurthy-who-claims-to-be-jayalalithaas-son.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.