Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிரிமினல் ஒருவர் கட்சிக்கு தலைவராகக் கூடாது; சசிகலாவுக்கு அடுத்த அடிக்கு ஏற்பாடு

Featured Replies

கிரிமினல் ஒருவர் கட்சிக்கு தலைவராகக் கூடாது; சசிகலாவுக்கு அடுத்த அடிக்கு ஏற்பாடு

 

 

கிரிமினல் வழக்கில் தண்டனைப் பெற்றவர்கள், வாழ்நாள் முழுவதும், தேர்தலில் போட்டியிட முடியாது என்றும், அவர் சாகும் வரை வாக்காளராக இருக்கவே தகுதி அற்றவராக அறிவிக்க வேண்டும் என்றும் கேட்டு, உச்ச நீதிமன்றத்தில்,டில்லி, பா.ஜ., நிர்வாகியும், வழக்கறிஞருமான அஸ்வினி உபாத்யாயா சார்பில் பொது நல வழக்கு தாக்கல் செய்யபப்பட்டுள்ளது.

அந்த வழக்கு, இந்திய அரசியல்வாதிகள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், அந்த வழக்கில், தன்னையும் ஒரு தரப்பாக இணைத்துக் கொண்டு, என்னுடைய தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும் என, தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.பி.,யான பழனிச்சாமி, உச்ச நீதிமன்றத்தில் மனு போடவிருக்கிறார்.

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணியில் இருக்கும் அவர், ஏற்கனவே, தேர்தல் கமிஷனில், அ.தி.மு.க.,வின் பொதுச் செயலராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என அறிவிக்கக் கோரி மனு கொடுத்து, அது விசாரணையில் உள்ளது. அந்த மனுவிலேயே, இதே மாதிரி போடப்பட்ட ஒரு வழக்கில், தேர்தல் கமிஷனின் எண்ணங்களை மேற்கோள்காட்டி, சசிகலாவுக்கு, வாழ் நாள் முழுவதும், கட்சித் தலைமைப் பொறுப்பில் இருக்க தடை விதித்து உத்தரவு போட வேண்டும் என்று, தேர்தல் கமிஷனில் மனு கொடுத்துள்ளார்.
அதற்குத் தோதாக இப்படியொரு வழக்கு விசாரணைக்கு வரவும், அந்த வழக்கில் தன்னையும், ஒரு தரப்பாக இணைத்து விசாரிக்க வேண்டும் என்று, மனு போடப்போவதாக கூறினார்.அவர் கூறியதாவது. தேர்தலில், தண்டனை பெற்ற குற்றவாளிகள் போட்டியிடுவதை தடுக்கவும், குற்றவாளிகளின் கையில், அரசியல் போவதை தடுக்கவும், தண்டனை பெற்றவர்கள், தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்க வேண்டும் என்று, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, அது சீரியஸாகி இருக்கிறது.

இந்த வழக்கில், தேர்தல் கமிஷன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தாங்கள் ஏற்கனவே இதுபோலவே தாக்கல் செய்யப்பட்டிருக்கும் வேறொரு வழக்கிற்கு பதில் தயார் செய்திருக்கிறோம். இந்த மனுவில் சொல்லப்பட்டிருக்கும் அனைத்து விஷயங்களிலும், தேர்தல் கமிஷனுக்கும் உடன்பாடான விஷயம்தான் என்பதாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வகையில் பார்க்கும்போது, தண்டனை பெற்ற குற்றவாளிகளுக்கு, வாழ்நாள் முழுக்க தேர்தலில் போட்டியிடுவதில் தடை விதிப்பதில் தவறில்லை என சொல்லியிருக்கிறார்.

இதே விஷயங்களை வலியுறுத்தித்தான், நான் ஏற்கனவே சசிகலா, அ.தி.மு.க.,வின் பொதுச் செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என, அறிவிக்கக் கோரி, தேர்தல் கமிஷனுக்குக் கொடுத்த மனுவில் குறிப்பிட்டுள்ளேன். அதில், கிரிமினல் வழக்கில் சிக்கி, தண்டனை பெற்றவர், கட்சியின் தலைமைப் பொறுப்பையும் வகிக்கக் கூடாது என உத்தரவிடுமாறும் கேட்டுள்ளேன்.

இப்படி கிரிமினல் வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டவர், கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும்போது, அவர்தான், கட்சியின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அங்கீகாரம் அளிக்கிறார். அதாவது, மக்கள் பிரதிநிதியாக வாய்ப்பளிக்கும் தேர்தலில், கட்சி சார்பில் யார் போட்டியிட வேண்டும் என தீர்மானிக்கிறார். அவர்தான், கட்சி சின்னம் தொடர்பாக தேர்தல் கமிஷனுக்கு, பி-பாரம் அளிக்கிறார்.

அதன்பின், தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிகள் மூலம், யார் முதல்வர் என்பதை, கிரிமினல் வழக்கில் தண்டிக்கப்பட்ட ஒருவர் தீர்மானிக்கிறார். ஆக, அப்படிப்பட்டவர் பரிந்துரையின் பேரில், ஒருவர் முதல்வராக வந்து, அவரால், அவரது ஒப்புதல் இல்லாமல் எந்த காரியத்தையும் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. அதாவது, கிரிமினல் ஒருவரின் பினாமி ஆட்சி நடத்தப்படுகிறது.

அதுமட்டுமல்ல, ஒரு சட்டம் நிறைவேற வேண்டும் என்றால், அதை ஆதரித்தோ, எதிர்த்தோ ஓட்டளிக்க வேண்டிய நிர்பந்தம், கட்சியின் எம்.எல்.ஏ.,க்கள் அல்லது எம்.பி.,க்களுக்கு, குறிப்பிட்ட அந்த கிரிமினல் தலைவரிடம்தான் வரும் நிலைமை உள்ளது. இல்லையில்லை, சட்டசபையோ, பார்லிமெண்ட்டோ, கொறடா சொல்கிறபடிதான் செயல்பட வேண்டும் என்றாலும் கூட, அந்த கொறடாவையும் நியமிப்பது, கிரிமினல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட குற்றவாளிதான்.

அதுமட்டுமல்ல… இப்படி தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகளான எம்.பி.,க்களும், எம்.எல்.ஏ.,க்களும் சேர்ந்து, ஓட்டளித்துத்தான், இந்த நாட்டின் முதல் குடிமகன் ஜனாதிபதி தேர்வு செய்யப்படுகிறார்.

சமீபத்திய உதாரணமாக, சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கி, குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும் சசிகலாதான், அ.தி.மு.க.,வின் நியமன பொதுச் செயலராக இருந்து, கட்சிக்கு அனைத்து வழிகளிலும் வழிகாட்டியாக இருக்கிறார். எடப்பாடி பழனிச்சாமி, முதல்வராக இருந்து, சசிகலாவின் பினாமி ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலை தொடர்ந்தால், லஞ்சம், ஊழல் அற்ற மக்களாட்சியை அமைக்க வேண்டும் என்ற, ஜனநாயகத்தின் அடிப்படை கட்டமைப்பே தகர்ந்து விடும் போல இருக்கிறது. அதனால், கிரிமினல் வழக்கில் தண்டிக்கப்பட்ட ஒருவர், தேர்தலில் போட்டியிடக் கூடாது; வாக்காளராக இருக்கவே தகுதியில்லாமல் செய்யப்பட வேண்டும் என்பதோடு, கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்து, கட்சியை வழி நடத்தவும் தடை விதிக்க வேண்டும். அப்போதுதான், தேர்தல், அரசியல் ஜனநாயகம் நேர்மையானதாக இருக்கும்.

அதனாலேயே, சசிகலாவை மனதில் வைத்து, தேர்தல் கமிஷன் விதிகளில் திருத்தத்தைக் கொண்டு வருவதற்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிடக் கோரி, சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கில் என்னையும் ஒரு தரப்பாக இணைத்துக் கொண்டு, எனது தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும் என, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவிருக்கிறேன்.

ஏற்கனவே இது தொடர்பாக, தேர்தல் கமிஷனில் மனுக்கள் என் சார்பில் கொடுக்கப்பட்டிருப்பதால், எந்த தகுதியின் அடிப்படையில் நான், என்னையும் ஒரு தரப்பாக சேர்க்க முறையிடுகிறேன் என்பதை, நீதிபதிகள் புரிந்து கொண்டு, ஏற்பர்.

இனி, சசிகலா எந்த ரூபத்தில் கட்சி மற்றும் ஆட்சியில் அதிகாரத்தை செலுத்த முயன்றாலும், விட மாட்டோம். இவ்வாறு பழனிச்சாமி கூறினார்.-நமது நிருபர்-

http://www.dinamalar.com/news_detail.asp?id=1738402

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.