Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெள்ளம் வந்தபோது யாரும் வரவில்லையே’- டிடிவி தினகரனை முற்றுகையிட்ட மக்கள்

Featured Replies

வெள்ளம் வந்தபோது யாரும் வரவில்லையே’- டிடிவி தினகரனை முற்றுகையிட்ட மக்கள்

 

 
  • அதிமுக தலைமைக் கழகத்தில் டிடிவி தினகரன் | கோப்புப் படம்: எல்.சீனிவாசன்.
    அதிமுக தலைமைக் கழகத்தில் டிடிவி தினகரன் | கோப்புப் படம்: எல்.சீனிவாசன்.
  • ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட கொடுங்கையூர் எழில் நகரில் ஆட்டோவில் சென்று வாக்குசேகரித்த அதிமுக (அம்மா) வேட்பாளர் டிடிவி தினகரன்.
    ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட கொடுங்கையூர் எழில் நகரில் ஆட்டோவில் சென்று வாக்குசேகரித்த அதிமுக (அம்மா) வேட்பாளர் டிடிவி தினகரன்.
 

ஆர்.கே.நகர் தொகுதி அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் டிடிவி தினகரன், கொடுங்கையூர் எழில் நகர் பகுதியில் நேற்று பிரச்சாரத் தில் ஈடுபட்டார். அவருடன் அமைச் சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், பா.பெஞ்சமின் உள்ளிட்டோர் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித் தனர்.

அப்போது பெண்கள் சிலர் தினகரனை முற்றுகையிட்டு, ‘‘வெள்ளத்தின்போது எங்கள் உடை மைகள் உட்பட ரூ.1 லட்சத்துக்கும் அதிகமான மதிப்புடைய பொருட் கள் அழிந்தன. ஆனால், எங்க ளுக்கு அரசின் நிவாரணம் ரூ.5 ஆயிரம்கூட கிடைக்கவில்லை. எங்க ளுக்கு ஆறுதல் கூறக் கூட கட்சிக் காரர்கள் யாரும் வர வில்லை’’ என கோபமாகக் கூறினர். அவர்களை தினகரனுடன் வந்தவர்கள் சமாதானப்படுத்த முயன்றனர்.

குடிசை பகுதி மக்கள்

பின்னர், ஆட்டோவில் பிரச்சாரம் செய்த தினகரனை அப்பகுதி குடிசைவாசிகள் வழிமறித்து, ‘‘ஜெயலலிதா மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்ட பிறகு, எங்களை யாரும் கண்டுக்கொள்ளவில்லை. எங்களுக்கு குடிசைமாற்று வாரிய குடியிருப்பு கொடுப்பதாக ஜெய லலிதா உறுதி அளித்திருந்தார். அதற்கான கோப்புகளும் தயார் செய்யப்பட்டன.

முதல்வர் மறைவுக்குப் பிறகு அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது’’ என்றனர். ‘‘ஜெயலலிதா அறிவித்த திட்டத்தை முடித்துக் கொடுக்கிறேன்’’ என தினகரன் உறுதியளித்தார்.

பின்னர் நிருபர்களிடம் தினகரன் கூறியதாவது:

இந்த தொகுதியில் உள்ள பொதுமக்கள், ஜெயலலிதாவிடம் 57 ஆயிரம் கோரிக்கை மனுக்களைக் கொடுத்துள்ளனர். அதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பேன். சொந்தமாக வீடு வேண்டும் என்று பலர் கோரிக்கை விடுத்துள்ளனர். இன்னும் 4 ஆண்டுகள் ஆட்சியில் இருப்போம். அதனால், அவர் களின் கோரிக்கைகளை நிறை வேற்றுவோம்.

பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள கொடுங்கையூர் குப்பை மேட்டை, சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் அகற்றி, அங்கு குடி யிருப்பு, பூங்காக்களை கட்டித் தருவேன். அதிக இளைஞர்கள் உள்ள தொகுதி என்பதால் தொடர்ந்து வேலைவாய்ப்பு முகாம் கள் நடத்தப்படும். இந்த தொகு தியை,முன்மாதிரி தொகுதியாக ஜெயலலிதா மாற்ற விரும்பினார். அதை நிறைவேற்றுவேன்.

மதுசூதனன் மீது புகார்

மதுசூதனனுக்கு மின்கம்பம் சின்னம்தான் வழங்கப்பட்டது. ஆனால், அந்தக் கட்சியினர் இரட்டை விளக்கு மின்கம்பம் என பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்க இருக்கிறோம்.

இவ்வாறு தினகரன் கூறினார்.

தேர்தல் வாக்குறுதிகள்

அதிமுக அம்மா கட்சி சார்பில் ஆர்.கே.நகர் தொகுதிக்கான தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. தேர்தல் அறிக்கையை முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் வெளியிட முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெற்றுக் கொண்டார்.

வீடில்லா 57 ஆயிரம் பேருக்கு வீடு, தண்டையார்பேட்டையில் அனைத்து வசதிகளுடன் கூடிய பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை, 10 நடமாடும் மருத்துவமனைகள், வேலைவாய்ப்பு ஆலோசனை மையம், புதிய மீன் அங்காடி, முக்கிய பேருந்து நிறுத்தங்கள், சாலையோர பூங்காக்களில் கைபேசி சார்ஜிங் மற்றும் கட்டணமில்லா வைபை இணைய வசதி என்பன உள்ளிட்ட பல வாக்குறுதிகள் அதில் வழங்கப்பட்டுள்ளன.

http://tamil.thehindu.com/tamilnadu/வெள்ளம்-வந்தபோது-யாரும்-வரவில்லையே-டிடிவி-தினகரனை-முற்றுகையிட்ட-மக்கள்/article9603526.ece?homepage=true

  • தொடங்கியவர்
அடுக்கடுக்கான கேள்விகளால் ஆடிப்போன தினகரன் : பிரசாரத்தின் போது பரபரப்பு
 
 
 

ஆர்.கே.நகரில் களமிறங்கியுள்ள, சசிகலா அக்கா மகனும், அ.தி.மு.க., அம்மா அணி வேட்பாளருமான தினகரனை, பொதுமக்கள் முற்றுகையிட்டு, சரமாரியாக கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளிக்க முடியாமல், அவர் திணறினார்.

 

Tamil_News_large_173943320170327230459_318_219.jpg

 

ஆட்சியையும் கொண்டு வர முடிவு



ஜெ., மறைவுக்கு பின், அ.தி.மு.க., பொதுச் செயலராக, சசிகலா நியமிக்கப்பட்டதை, கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. வருக்கு எதிராக போர்க்கொடி துாக்கிய, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் பின்னால், பலரும் அணிவகுத்தனர்.எனினும், சசிகலா சிறை செல்லும் முன், தினகரனை துணை பொதுச் செயலராக்கினார். அவர், கட்சியை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததுடன், ஆட்சியையும் கொண்டு வர முடிவு செய்துள்ளார். அதற்காக, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், களமிறங்கி உள்ளார்.

பொதுமக்களிடம் எதிர்ப்பு இருந்தாலும், பணத்தை வாரி இறைத்து வெற்றி பெற்று விடலாம் என்ற நம்பிக்கையில், வெளியூரில் இருந்து ஆட்களை வரவழைத்து, தேர்தல் பணியாற்றி வருகிறார்.
நேற்று காலை, 9:50 மணிக்கு,38வது வட்டத்திற்கு உட்பட்ட, துர்காதேவி நகர், எழில் நகர், எம்.ஜி.ஆர்., நகர் உள்ளிட்ட பகுதிகளில், கட்சி நிர்வாகிகளுடன், தொப்பி அணிந்தபடி நடந்து சென்றும், வாகனத்தில் சென்றும் ஓட்டு சேகரித்தார்.
 

வறுத்தெடுத்தனர்


எழில் நகரில் ஓட்டு கேட்டு சென்ற போது, அவரை பொதுமக்கள் முற்றுகையிட்டு, சரமாரியாக கேள்வி எழுப்பினர். 'ஜெ.,யின் சொந்த தொகுதியாக இருந்தும், ஆர்.கே.நகரில், எந்த பிரச்னைக்கும் தீர்வு காணப்படவில்லை. பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும், நடவடிக்கை இல்லை. மீண்டும் எப்படி ஓட்டு கேட்டு வருகிறீர்கள்' என, கேள்விகளால் வறுத்தெடுத்தனர்.
உடனே, சுதாரித்த கட்சிநிர்வாகிகள், 'உங்கள் ஓட்டு தொப்பிக்கே' என, கோஷமிட்டப்படி, அவர்களை பேச விடாமல் தடுத்தனர். உடனே, தப்பித்தோம் என, அவசரமாக பிரசார வாகனத்தில், தினகரன் ஏற முயன்றார்.

அப்போது, அவரை ஆரத்தி எடுப்பதற்காக, அவரது ஆதரவாளர்களால் ஏற்பாடு செய்திருந்த பெண்களும், 'ஜெ., இருந்த வரை, எதுவும் நடக்கவில்லை. குப்பை மேடு

 

அகற்றப்படாததால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. அதை அகற்றவில்லை. நீங்கள் எந்த முகத்தோடு வருகிறீர்கள்' என, கேள்வி கேட்க துவங்கினர்.
 

வாக்குறுதி


பதிலளிக்க முடியாமல் தடுமாறிய தினகரன், அங்கிருந்து வேகமாக புறப்பட்டு சென்றார். அடுத்த தெருவிற்கு சென்ற தினகரன், ''ஜெ.,விடம், 57 ஆயிரம் மனுக்கள், வீடு கேட்டு கொடுக்கப்பட்டு உள்ளன. அதை, நான்கு ஆண்டுகளில் நிறைவேற்றி தருவோம். கொடுங்கையூர் குப்பை மேட்டை அகற்ற கோரிக்கை விடுத்தனர். இங்கு, சுற்றுச்சூழலை பாதிக்காத, நவீன குப்பை கிடங்கு அமைக்கப்படும்,'' என, வாக்குறுதி அளித்தார்.

- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1739433

  • தொடங்கியவர்

சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும், அ.தி.மு.க., - சசிகலா அணி வேட்பாளர் தினகரனுக்கு, திரும்பிய பக்கமெல்லாம் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அதனால், 70 ஆயிரம் ஓட்டுகளை மட்டும் குறிவைத்து, பணப் பட்டுவாடா செய்ய, தினகரன் ஆட்கள் திட்டமிட்டு உள்ளனர். வாக்காளர்களிடம் சத்தியம் வாங்கிக் கொண்டு, பரிசுப் பொருட்கள் கொடுக்கவும் முடிவு செய்துள்ளனர்.

 

Tamil_News_large_174015820170328234425_318_219.jpg

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால், ஆட்சிக்கு தலைமை ஏற்கலாம் என்ற எண்ணத்தில், சசிகலா குடும்பத்தினரால், தினகரன் களமிறக்கப்பட்டு உள்ளார். தொகுதி
மக்களிடம், சசிகலாவுக்கு கடும் எதிர்ப்பு உள்ளதால், ஜெ.,வை முன்னிலைப்படுத்தி, அவர் பிரசாரம் செய்து வருகிறார்.

பிரசாரத்தில், சசிகலா பெயர், படம் போன்ற வற்றை அறவே தவிர்த்து, சசிகலாவுக்கும், தனக்கும் சம்பந்தம் இல்லாதது போல, தொகுதியை வலம் வருகிறார். எனினும், சசிகலா குடும்பத்தின் மீதான எதிர்ப்பை, மக்கள் இவரிடம் வெளிப்படையாக காட்ட துவங்கி உள்ளனர். அதனால், அவர் ஓட்டு கேட்டு

செல்லும் இடங்களில் எல்லாம், மக்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தொகுதியில் உள்ள, எழில் நகர் பகுதியில், நேற்று முன்தினம் ஓட்டு கேட்டு சென்ற போது, தினகரனை முற்றுகையிட்டு, பெண்கள் சரமாரி யாக கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளிக்க முடியாமல், அவர் அங்கிருந்து சென்று விட்டார்.

அவருக்கு ஆதரவாக, ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளஅமைச்சர்கள், எம்.பி., - எம்.எல். ஏ.,க்கள் என, அனைவருமே, இது போன்ற எதிர்ப்பை, தொகுதி முழுவதும் சந்தித்து வருகின்றனர். அதற்கு உதாரணமாக, லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரையை, மக்கள் திட்டி தீர்க்கும் வீடியோ, சமூக வலைதளங் களில் பரவி வருகிறது.

இந்நிலையில், தோல்வியை தவிர்க்க, 70 ஆயிரம் வாக்காளர்களை குறிவைத்து, பணப்
பட்டுவாடா செய்யும் திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. தொகுதி முழுவதும் சுற்றி வந்தாலும், எதிர்ப்பை தான் சம்பாதிக்க வேண்டும் என்பதால், குறிப்பிட்ட சில பகுதிகளைச் சேர்ந்த மக்களை மட்டும், 'கவனிப்பு' மூலம் கவர திட்டமிட்டு உள்ளனர்.

அதன்படி, பணம் பெற்றுக் கொண்டு ஓட்டு போடுவோர் யார் என்ற கணக்கெடுப்பு நடத்தப் பட்டு வருகிறது. அது போன்ற வாக்காளர்களை மட்டும், தனியாக கவனிக்க, ஆட்களை நியமித் துள்ளனர். அவர்கள்,அந்த பகுதிகளுக்கு சென்று, ஆண் வாக்காளராக இருந்தால்,பணம் கொடுக்க

 

திட்டமிட்டு உள்ளனர். பெண்களாக இருந்தால், சத்தியம் வாங்கிக் கொண்டு, அவர்கள் விரும்பும் பரிசு பொருட்களை கொடுக்க முடிவு செய்துள்ளனர்.

இது போன்ற கவனிப்புகளை, அந்தந்த பகுதி நிர்வாகிகள் முன்னிலையில் மேற்கொள்ள, ரகசிய ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். இதையறிந்த, தி.மு.க., மற்றும் பன்னீர் அணியினர், பணப் பட்டுவாடாவை தடுத்து நிறுத்த வேண்டும் என, தேர்தல் கமிஷனில், புகார் மனு கொடுத்துள்ளனர்.
 

தொப்பிகள் ஏராளம்!


தினகரனுக்கு தொப்பி சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளது. எனவே, ஓட்டு கேட்டு செல்லும் இடங் களில், அனைவருக்கும் தொப்பி வினியோகம் செய்கின்றனர். வெயிலுக்கு உதவும் என்பதால், எல்லாரும் வாங்கி அணிகின்றனர். இதை தடுக்க வேண்டும் என, மற்ற வேட்பாளர்கள், தேர்தல் கமிஷனில் புகார் அளித்துள்ளனர்.
 

வெளியே தாராளம்!


ஆர்.கே.நகர் தொகுதியில், வீடு வீடாக சென்று பணம் கொடுப்பதை, தி.மு.க., மற்றும் பன்னீர் அணியினர் தடுத்து வருகின்றனர். அதனால், தினகரன் தரப்பினர், ஆர்.கே.நகர் தொகுதியை ஒட்டி அமைந்துள்ள, பெரம்பூர், திரு.வி.க., நகர், ராயபுரம், துறைமுகம் போன்ற தொகுதிகளில், திருமண மண்டபத்திற்கு, வாக்காளர்களை வரவழைத்து, பணம் வினியோகம் செய்ய உள்ளனர். - நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1740158

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.