Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘‘அக்காவுக்கு துரோகம் செய்தவர்களை.....?!" சசிகலா மன்னிப்பு கேட்ட நாள் இன்று

Featured Replies

‘‘அக்காவுக்கு துரோகம் செய்தவர்களை.....?!" சசிகலா மன்னிப்பு கேட்ட நாள் இன்று

சசிகலா

ஜெயலலிதாவின் ஆட்சியை சசிகலா குடும்பம் இப்போது பங்கு போட்டுக்கொண்டிருக்கிறது. 2011-ம் ஆண்டிலும் இதேபோல சதித் திட்டம் தீட்டப்பட்டதால் சசிகலா உள்பட அவரது குடும்பத்தினரைக் கட்சியில் இருந்து ஜெயலலிதா கட்டம் கட்டினார். 2011 டிசம்பர் 19-ம் தேதி இது அரங்கேறியது. மூன்று மாதங்களில் சசிகலாவை மட்டும் ஜெயலலிதா சேர்த்துக்கொண்டார். அந்த நேரத்தில், அதாவது 2012 மார்ச் 28-ம் தேதி சசிகலா வெளியிட்ட அறிக்கை, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது. ‘'அரசியல் ஆசை இல்லை... கட்சிப் பதவிக்கு வர விரும்பவில்லை... எம்.பி. எம்.எல்.ஏ-வாக வேண்டும் என்ற எண்ணம் இல்லை... அமைச்சர் பதவி வேண்டாம்'' என்றெல்லாம் அந்த அறிக்கையில் உருகிய சசிகலா, சொன்னது அத்தனையும் பச்சைப் பொய்கள். அறிக்கையில் ஜெயலலிதாவுக்காகச் சொன்ன ஒன்றைக்கூட நிறைவேற்றாமல் சசிகலா இன்று துரோகத்தைச் செய்திருப்பது காலத்தின் கோலம். 

சரியாக ஐந்தாண்டுகளுக்கு முன்பு, இதே மார்ச் மாதத்தில் வெளியிடப்பட்ட அந்த அறிக்கை அப்படியே ரிப்பீட்! 

''கடந்த மூன்று மாத காலமாகப் பலதரப்பட்ட பத்திரிகைகளில் என்னைப் பற்றிய பலவிதமான செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டிருப்பதால், இந்த அறிக்கையை வெளியிட வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டுள்ளது. 1984-ம் ஆண்டில் முதன்முறையாக அக்காவை நான் சந்தித்தேன். அதன் பின்னர் எங்களுக்குள் நட்பு வளர்ந்தது. அவரும், என்னைத் தனது தங்கையாக ஏற்றுக்கொண்டார். 1988-ம் ஆண்டிலிருந்து அக்காவின் போயஸ் கார்டன் இல்லத்திலேயே அவருடன் வசித்துவந்தேன். அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராகவும், தமிழகத்தின் முதல்வராகவும் இரவு பகல் பாராமல் கடுமையாக உழைத்து வந்த அக்காவின் பணிச்சுமையை ஓரளவுக்காவது குறைக்கும் வகையில் அவருக்கு உதவியாக இருந்து என்னால் இயன்ற பணிகளைச் செய்யவேண்டும் என்றுதான் விரும்பினேனே தவிர, வேறு எந்தவிதமான எண்ணங்களும் எனக்கில்லை. போயஸ் கார்டன் இல்லத்தில் அக்காவுடன் இருந்தவரை, வெளியில் என்ன நடக்கிறது என்பது குறித்து ஓரளவுக்குத்தான் தெரிந்ததே தவிர, முழு விபரம் தெரியவில்லை. 24 ஆண்டுகள் அக்காவுடன் ஒரே வீட்டில் வாழ்ந்துவந்த நான், கடந்த டிசம்பர் மாதம் (2011 டிசம்பர்) அவரைப் பிரிந்து வீட்டைவிட்டு வெளியே வந்து வேறு இடத்தில் வசிக்கவேண்டிய சூழ்நிலை உருவான பின்னர்தான் நடந்த உண்மைகள் முழுமையாக எனக்குத் தெரியவந்தன.

கடந்த டிசம்பர் மாதம் அக்கா மேற்கொண்ட சில ஒழுங்கு நடவடிக்கைகளுக்குப் பிறகுதான் அதற்கு என்ன காரணம், அதன் பின்னணி என்ன என்பதெல்லாம் எனக்குத் தெரியவந்தது. என்னுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சிலர், நான் அக்காவுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்ததை அடிப்படையாகவைத்து எனது பெயரைத் தவறாகப் பயன்படுத்திச் சில விரும்பத்தகாதச் செயல்களில் ஈடுபட்டனர் என்பதையும், அதனால் கட்சிக்குப் பாதிப்புகள் ஏற்படுத்தப்பட்டன என்பதையும் அவர்களின் தவறான நடவடிக்கைகளால் பல குழப்பங்கள் உண்டாக்கப்பட்டன என்பதையும், கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கப்பட்டது என்பதையும், அக்காவுக்கே எதிரான சில சதித் திட்டங்கள் தீட்டப்பட்டன என்பதையும் அறிந்தபோது நான் பெரிதும் அதிர்ச்சியுற்றேன்; மிகுந்த வேதனை அடைந்தேன்.

தந்தியில் வந்த செய்தி

இவை எல்லாம் எனக்கே தெரியாமல் நடந்தவை என்பதுதான் உண்மை. அக்காவைச் சந்தித்த நாள் முதல் அவர் நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் ஒவ்வொரு வினாடியும் நான் நினைத்திருக்கிறேனே தவிர, கனவிலும் அக்காவுக்கு நான் துரோகம் நினைத்ததில்லை. என்னுடைய உறவினர்கள், நண்பர்கள் என்று சொல்லிக்கொண்டு அக்காவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் செய்தது மன்னிக்க முடியாத துரோகம். அக்காவுக்குத் துரோகம் புரிந்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் எனக்கு வேண்டாதவர்கள்தான். இவ்வாறு அக்காவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு அவருக்குத் துரோகம் புரிந்தவர்களுடனான தொடர்புகளை நான் துண்டித்துவிட்டேன். அக்காவுக்குத் துரோகம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் இனிமேல் அவர்களுடன் எனக்கு எந்தவித ஒட்டுமில்லை; உறவுமில்லை.

என்னைப் பொறுத்தவரை அரசியலில் ஈடுபட வேண்டும் என்றோ, கட்சியில் பெரிய பொறுப்பு வகிக்க வேண்டும் என்றோ, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் ஆகவேண்டும் என்றோ, அமைச்சர் பதவியை அடைய வேண்டும் என்றோ, ஆட்சியில் பங்கேற்க வேண்டும் என்றோ எனக்குத் துளியும் ஆசையில்லை. பொது வாழ்வில் பங்கு பெறவேண்டும் என்ற விருப்பமும் இல்லை. அக்காவுக்கு உண்மையான தங்கையாக இருக்கவே நான் விரும்புகிறேன். என் வாழ்க்கையை ஏற்கெனவே அக்காவுக்கு அர்ப்பணித்துவிட்டேன். இனியும் எனக்கென வாழாமல், அக்காவுக்காக என்னால் இயன்ற அளவுக்கு பணி செய்து அக்காவுக்கு உதவியாக இருக்கவே நான் விரும்புகிறேன்''.

அவ்வளவுதான் அறிக்கை. இதை ஏற்று மார்ச் 31-ம் தேதி சசிகலாவை மட்டும் கட்சியில் சேர்த்துக்கொண்ட ஜெயலலிதா, ‘'நடராசன், திவாகரன், தினகரன், பாஸ்கரன், சுதாகரன், டாக்டர் வெங்கடேஷ், ராமச்சந்திரன், ராவணன், மோகன், குலோத்துங்கன், ராஜராஜன், மகாதேவன், தங்கமணி, கலியப்பெருமாள், பழனிவேலு, தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி, சந்தானலட்சுமி, சுந்தரவதனம், வைஜெயந்தி மாலா ஆகியோர் மீதான ஒழுங்கு நடவடிக்கையில் எந்த மாற்றமும் இல்லை'’ என்று சொன்னார். 

'‘அக்காவுக்குத் துரோகம் செய்தவர்களுடன் தொடர்புகளைத் துண்டித்துவிட்டேன். அவர்களுடன் எனக்கு எந்தவித உறவுமில்லை'' என்று சொன்ன சசிகலாதான், அவர்களை மீண்டும் கட்சிக்குள் கொண்டுவந்துவிட்டு சமாதியில் சபதம் போடுகிறார். சபாஷ் சசிகலா!

http://www.vikatan.com/news/tamilnadu/84793-this-is-the-day-when-sasikala-apologised-to-jayalalithaa.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.