Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆர்.கே.நகரில் ரவுடிகள் குவிப்பு கலவரம் வெடிக்கும் அபாயம்

Featured Replies

ஆர்.கே.நகரில் ரவுடிகள் குவிப்பு
கலவரம் வெடிக்கும் அபாயம்
 
 
 

ஆர்.கே.நகர் தொகுதியில், இரு சமூகத்தைச் சேர்ந்த ரவுடிகள், சசிகலா மற்றும் பன்னீர் அணி ஆதரவாளர்கள் என்ற போர்வையில் குவிக்கப்பட்டு உள்ளனர். தேர்தல் நாளன்று, அவர்களுக்குள் மோதல் உருவாகி, கலவரம் வெடிக்கும் அபாயம் உள்ளது என, தமிழக அரசுக்கும், போலீசுக்கும், மத்திய உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

Tamil_News_large_174016120170329001624_318_219.jpg

ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதியில், ஏப்., 12ல் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. சகிகலா அணி சார்பில் தினகரன்; பன்னீர் அணி சார்பில் மதுசூதனன் போட்டியிடுகின்றனர்.இத் தொகுதி யில், முக்குலத்தோர் சமுதாயத்தினருக்கு, 10 ஆயிரம் ஓட்டுகள் உள்ளன. அதில், மறவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களின் ஓட்டுகள், 6,000; அகமுடையார், 2,000; கள்ளர், 2,000 ஓட்டுகள் உள்ளன. இந்த ஓட்டுகளை பெற, இரு தரப்பினரும் பகீரத முயற்சில் ஈடுபட்டுள்ளனர்.

தேர்தல் பிரசாரத்தில், பன்னீர் அணிக்கு, பொது மக்களிடம் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. தினகரனுக்கு பணம் கொடுத்து, ஆட்கள் அழைத்து வரப்படுகின்றனர்.
 

கள்ள ஓட்டு:


தேர்தலில், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க திட்டமிட்டு உள்ளனர். பணத்தை பெற்றுக் கொண்டு, ஓட்டுப் போடாமல் இருந்துவிட்டால் சிக்கல் ஏற்படும்.இதை தவிர்க்க, ரவுடிகள் உதவியுடன், ஓட்டுச்சாவடிகளை கைப்பற்றி, கள்ள ஓட்டு போட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்காக, காவிரி டெல்டா மாவட்டங்களில் இருந்து, குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த ரவுடிகள், அமைச்சர் ஒருவரின் ஆசியோடு, சென்னைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்கள் அனை வரும், சசிகலாவின் ஆதரவாளர்கள் என்ற போர்வையில், வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர்.

இந்த தகவல் பன்னீர் அணிக்குதெரிய வந்ததும், முன்னாள் அமைச்சர் ஒருவரின் ஏற்பாட்டில், தென் மாவட்டங்களைச் சேர்ந்த, மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த ரவுடி கள், சென்னைக்கு வரவழைக்கபட்டு உள்ளனர். இரு அணிகளின் ரவுடிகளும், கட்சியினர் போர்வையில், ஆர்.கே.நகர் தொகுதியில் முகாமிட்டு உள்ளனர். தேர்தல் அன்று, ரவுடிகளை

 

களத்தில் இறக்கி, பொதுமக்கள் ஓட்டுப் போட விடாமல் செய்து, கள்ள ஓட்டுப் போட திட்டமிட்டு உள்ளனர்.

நடவடிக்கை தேவை


இரு அணியினரும் களத்தில் குதிக்கும் போது, மோதல் ஏற்படுவதுடன், கலவரம் வெடிக்கும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே, ரவுடி களை போலீசார் தேடி பிடித்து, உடனடி யாக சென்னையை விட்டு வெளியேற்ற வேண்டும். சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க, போலீஸ் அதி காரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாநில போலீசாருக்கு, மத்திய உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1740161

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.