Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுயநலத்திற்காக சசிக்கு ‛குட்பை': தினகரனின் ‛தில்லாலங்கடி' திட்டம்

Featured Replies

சுயநலத்திற்காக சசிக்கு ‛குட்பை': தினகரனின் ‛தில்லாலங்கடி' திட்டம்
 
 
Tamil_News_large_1740787_318_219.jpg
 
 
 

 

spaceplay / pause

qunload | stop

ffullscreen

shift + slower / faster

volume

mmute

seek

 . seek to previous

12

சென்னை: மொத்த தமிழகத்தையும் தன் கைக்குள் கொண்டு வர அ.தி.மு.க., அம்மா கட்சியின் துணைப் பொதுச் செயலர் தினகரன் முயற்சிப்பது கண்டு, பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
சசிகலா ஜெயிலுக்கு சென்றுவிட்டதால், சென்னை, போயஸ் தோட்டத்தில் இருந்து, கட்சியையும், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அமைச்சரவையையும் வழி நடத்தி வருகிறார் தினகரன். ஆனால் அவரது திட்டமே வேறு என்கின்றனர் விபரம் தெரிந்த அதிமுகவினர்.

 

முழு கட்டுப்பாடு:

இது குறித்து, அ.தி.மு.க., அம்மா கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் சிலர் கூறியதாவது:ஜெயலலிதாவுக்குப் பின், கட்சியை கைப்பற்றிய சசிகலாவோடு, தினகரனும் இருந்தார். சசிகலா சிறைக்குச் செல்லும் நிலையில், கட்சியை வழிநடத்தும் பொறுப்பை என்னிடம் கொடுங்கள் என்று சொல்லி, கேட்டு வாங்கி, கட்சிக்குள், துணைப் பொதுச் செயலராக நுழைந்த தினகரன், அதன் பின், தனது நீண்ட கால திட்டங்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றத் துவங்கினார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முதற்கொண்டு, ஒட்டுமொத்த அமைச்சரவைக்கும் உத்தரவு மேல் உத்தரவு போட்டு, தன்னுடைய கண்ணசைவிலேயே ஆட்சி நிர்வாகம் நடத்தப்படும் சூழலை உருவாக்கினார். கட்சியையும் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டார். சசிகலாவின் கணவர் நடராஜன் மற்றும் சசியின் சகோதரர் திவாகரன் ஆகிய இருவரையும், இன்னும் கட்சியில் சேர்க்கவே இல்லை. எதிர்காலத்திலும் அவர்களை சேர்க்கும் திட்டம் எதுவும் இல்லை. அவர்களுக்கும் கட்சிக்கும், ஆட்சி அதிகாரத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என, அதிரடியாக அறிவித்தவர், தன் இன்னொரு உறவுக்காரர், டாக்டர் வெங்கடேஷையும் ஓரங்கட்டினார். அவரை, போயஸ் தோட்டம் வராமலும் செய்து விட்டார். இளவரசியின் மகன் விவேக், ஜெயலலிதாவின் செல்லப் பிள்ளையாக போயஸ் தோட்டத்தில் இருந்தவர். அவரையும், ஓரங்கட்டி, போயஸ் தோட்டம் பக்கம் அடிக்கடி தென்படாமல் செய்து விட்டார்.

 

சசிக்கும் அதே கதி:

தற்போது, கட்சியின் பொதுச் செயலராக இருக்கும் சசிகலாவையும் முழுமையாக ஓரங்கட்டிவிட்டார். அவரது ஒப்புதல்படியே, எல்லாமும் செய்யப்படுவது போல, கட்சியில் ஒரு தோற்றத்தை உருவாக்கி வைத்திருக்கும் தினகரன், தன்னிச்சையாக எடுக்கும் எந்த முடிவு குறித்தும், சசிகலாவுக்குத் தெரியப்படுத்துவதில்லை.அப்படித்தான், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், தானே வேட்பாளராகப் போவதை, சசிகலாவிடம் தெரிவிக்கவில்லை; ஒப்புதல் பெறவில்லை. அதேபோல, கட்சிக்கு ஆட்டோ சின்னம் கிடைக்கப் போகிறது என்று சொல்லிக் கொண்டிருந்த தினகரன், கடைசி நேரத்தில் தொப்பி சின்னம் வாங்கப்படுவதற்கு முன்னால், சசிகலாவிடம் ஆலோசித்து செய்யவில்லை.

 

தேர்தல் அறிக்கையில் சசி எங்கே?

 

தற்போது, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்காக, தனியாக வெளியிடப்பட்ட கட்சியின் தேர்தல் அறிக்கையில் சசிகலாவின் பெயர் மற்றும் படம் மருந்துக்கும் இடம்பெறவில்லை. சசிகலா பெயரோ, படமோ அச்சிட்டு வெளிப்படுத்தினால், அவர் மீதான கோபத்தில் இருக்கும் மக்கள் எனக்கு ஓட்டுப் போட மாட்டார்கள். அதனால், அவரது படம் போட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.அதே போல, பிரசாரத்திலும், சசிகலா பெயரை முழுமையாக புறக்கணிக்கிறார். அடுத்தகட்டமாக, தேவையானால், சசிகலா வகிக்கும், பொதுச் செயலர் பதவியையும் பிடிக்க நினைக்கிறார். அதற்கான காய் நகர்த்தல்கள் துவங்கி விட்டனர். சசிகலா நியமனம் செல்லாது என்று, தேர்தல் கமிஷனில் நடக்கும் விசாரணையின் போது, தம்மால் எந்த வாதமும் எடுத்து வைக்க முடியாது என்பதோடு, சசிகலா, நியமனம் செல்லாது என்றே, தேர்தல் கமிஷன் அறிவிக்கும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.அதனால்தான், முழுமையாக கட்சியை கைப்பற்றுவதோடு, சசிகலாவையும் முழுமையாக ஓரங்கட்டி வைக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார். விரைவில், அ.தி.மு.க.,வில் பல அதிரடி மாற்றங்களை காணுவீர்கள். ஆர்.கே.நகரில் வெற்றி பெற்று சீக்கிரமே முதல்வராகி விட வேண்டும் என்பதுதான், தினகரன் திட்டம். அதை வைத்து, போயஸ் தோட்டம், கொடநாடு எஸ்டேட் உள்ளிட்ட ஜெயலலிதாவின் சொத்துக்கள் அனைத்தையும், தன் கன்ட்ரோலில் கொண்டு வரவும், கட்சியின் மூத்தத் தலைவர்கள் பலரையும் முன்னாள் அமைச்சர்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தளவாய் சுந்தரம் ஆகியோர் சகிதம் சந்தித்து வருகிறார் தினகரன். இப்படியெல்லாம் தினகரன் போட்டு வைத்திருக்கும் திட்டமெல்லாம் எடுபடுமா என்பது, இன்னும் சில நாட்களில் தெரிந்து விடும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1740787

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.