Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்னை, ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், சசிகலா அணி வேட்பாளர் தினகரன், தன் குமுறல்களை கொட்டித் தீர்த்துள்ளார்.

Featured Replies

 
 
gallerye_235218429_1741698.jpg

சென்னை, ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், சசிகலா அணி வேட்பாளர் தினகரன், தன் குமுறல்களை கொட்டித் தீர்த்துள்ளார்.

 

Tamil_News_large_174169820170330233617_318_219.jpg

தன் வெற்றியை விரும்பாத, 13 அமைச்சர்கள், தனக்கு எதிராக வேலை செய்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இதற்கிடையில், பன்னீர் அணி வேட்பாளர் மதுசூதனன், 80 ஆயிரம் ஓட்டுகள் பெறுவார் என, வெளியான சர்வே முடிவால், ஒட்டுமொத்த சசி தரப்பினரும், அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஆர்.கே.நகர் தொகுதி பிரசாரத்தில், தொண்டர் களின் வெள்ளத்தில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், நீந்தி செல்லும் அளவுக்கு கூட்டம் கூடுகிறது. தினகரனுக்கு ஆதரவாக, வெளியூரில்இருந்து அழைத்து வரப்பட்டுள்ள தொண்டர்களின் கூட்டம் தான் காணப்படுகிறது.
 

விரும்பவில்லை:


தினகரன் வெற்றி பெற்றால்,அவர் உடனடியாக முதல்வர் பதவியை ஏற்கக் கூடும் என,

தெரிகிறது.அதனால், முதல்வர் பழனிசாமியும், அவரது ஆதரவு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்க ளும், தினகரன் வெற்றி பெறு வதை விரும்ப வில்லை.
குறிப்பாக, ஜெயக் குமார், ராஜு, வேலுமணி, தங்கமணி, காமராஜ், ராதாகிருஷ் ணன், மணிகண்டன், பாஸ்கரன், ராஜேந்திர பாலாஜி, எம்.ஆர். விஜயபாஸ்கர், நடராஜன்,வளர்மதி, ராஜலட்சுமி என, 13 பேர், தினகரன் வெற்றியை விரும்பவில்லை.

அந்த அமைச்சர்கள் அனைவரும் போட்டோவுக் கும், மீடியாவுக்கும் பிரசாரம் செய்வது போல போஸ் கொடுக்கின்றனரே தவிர, முழு மூச்சு டன் பிரசாரம் செய்ய வில்லை.

தேர்தல் முடிவை அறிந்த பின், அணி மாறவும், அவர்கள் தயாராக உள்ளதாக கூறப் படுகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில்,பிரசாரத்தின் போது பன்னீர்செல்வம் பேசுகை யில், 'என்னுடன் அமைச்சர்கள் தொடர்பில் தான் உள்ளனர்' என்றார்.
 

அதிருப்தி:


இதுவும், அமைச்சர்களின் மேம் போக் கான தேர்தல் பணி பற்றிய தகவல்களும், தினகரனுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், தனியார் நிறுவன சர்வே முடிவும், அவரையும், சசி தரப்பினரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கி உள்ளது.

 

ஆர்.கே. நகரில் பிரசாரம் துவங்கிய பின், தனியார் நிறுவனம் ஒன்று சர்வே எடுத்துள்ளது. அதில், மதுசூதன னுக்கு, 80 ஆயிரம்; தி.மு.க., வேட் பாளர் மருது கணேஷ், 50 ஆயிரம்; தினகர னுக்கு, 40 ஆயிரம் ஓட்டுகள் கிடைக்கும் என, கூறப்பட்டுள்ளது.

நெருக்கடி


இதனால் ஏற்பட்ட குமுறல்களை எல்லாம், தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், தினகரன் கொட்டித் தீர்த்துள்ளார். தனக்கு எதிராக வேலை செய்யும் அமைச்சர் கள் பெயரை குறிப்பிடாமல், அவர்கள் மீது குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் பேசியதாவது:

எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா உயிருடன் இல்லை. சசிகலாவும், சிறையில் இருக்கிறார். வழக்கு விசாரணை என, தினமும் என்னை கோர்ட்டுக்கு அலையும் வகையில், மத்திய அரசு நெருக்கடி அளிக்கிறது. இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டுள்ளது.
நான் வெற்றி பெற்றால் தான் கட்சியும், சின்னமும் நம்மிடம் இருக்கும்; இல்லை யென்றால், பறிபோய் விடும். எனவே, அனைவரும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபடுங்கள். இவ்வாறு அவர் கண்ணீர் மல்க பேசியுள்ளார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1741698

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.