Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“ஆர்.கே.நகர் ரிசல்ட் வரும் நாளில் எனக்குப் பதவி தர வேண்டும்!” - சசிகலாவிடம் பொங்கிய திவாகரன்

Featured Replies

“ஆர்.கே.நகர் ரிசல்ட் வரும் நாளில் எனக்குப் பதவி தர வேண்டும்!” - சசிகலாவிடம் பொங்கிய திவாகரன்

 

‘‘சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் முன்பு அமர்ந்திருந்த அறையில் இப்போது யார் உட்காரப் போகிறார் தெரியுமா?” என தம்பி திவாகரன் பொடிவைக்க, ‘‘யார்?” என்று அதிர்ச்சியோடு கேட்டார், அக்கா சசிகலா.

‘‘தளவாய் சுந்தரம்தான். கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் தினகரனுக்கு இவர்தான் இப்போது ஆலோசகர். அந்த உரிமையில்தான், ஷீலா பாலகிருஷ்ணன் அமர்ந்த அதே அறை தனக்கு வேண்டும் என்று கேட்டிருக்கிறார்” என்று திவாகரன் சொல்ல... சசிகலாவின் முகத்தில் கோபம் கொப்பளித்ததாம்.

திவாகரனும் அவரது மகன் ஜெயானந்தும், சசிகலாவை கடந்த வாரம் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலையில் சந்தித்து மூன்று மணி நேரம் பேசியிருக்கிறார்கள். அப்போது நடந்த உரையாடல்தான் இது. இன்றைய தேதிவரை திவாகரனுக்கும் தினகரனுக்குமான மோதல் முற்றுப்பெறவில்லை. இந்த மோதலால் சசிகலா குழம்பிப் போயிருக்கிறார்.

p4.jpg

டெல்லியில் தமிழக அரசுக்கான சிறப்பு பிரதிநிதி பதவியில் இருப்பவர்களுக்கு, தகவல் பரிமாற்றத்துக்காக சென்னை தலைமைச் செயலகத்தில் ஓர் அறை ஒதுக்குவதுண்டு. அந்த வகையில், ஷீலா பாலகிருஷ்ணன் முன்பு அமர்ந்திருந்த அறையே தனக்கு வேண்டும் என்று கேட்டிருக்கிறார் தளவாய். இதைத்தான் சசிகலாவிடம் புகாராக சொல்லி, தளவாயைத் தட்டிவைக்க நினைக்கிறார் திவாகரன்.

சசிகலா, ஆர்.கே. நகருக்கு பரோலில் வந்து பிரசாரம் செய்ய ஆசைப்பட்டார். ஆனால், ‘பெண் வாக்காளர்கள் கோபமாக இருக்கிறார்கள்’ என்று தினகரன் தரப்பு சொல்லி, அதற்கு முட்டுக்கட்டை போட்டதாம். அதேபோல், கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலாவின் படத்தையும் பெயரையும் தேர்தல் விளம்பரங்களில் தினகரன் தவிர்க்கிறார். ‘தேர்தல் கமிஷனில் பஞ்சாயத்து நிலுவையில் உள்ளதால், இப்படி தவிர்த்தோம்’ என்று இதற்கும் தினகரன் தரப்பு விளக்கம் சொன்னார்களாம். இதையெல்லாம் சுட்டிக்காட்டிய திவாகரன், ‘விரைவில் கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்றி, தலைமைப் பதவியில் அமரும் நோக்கில் தினகரன் உங்களை இப்படியெல்லாம் இருட்டடிப்பு செய்கிறார். அவரை நம்ப வேண்டாம்’ என்று சசிகலாவிடம் விளக்கிச் சொன்னாராம். ‘என்னை மூத்த துணைப் பொதுச்செயலாளர் ஆக்குங்கள். கட்சியைக் கட்டுக்கோப்பாகக் காப்பேன்’ என்று வெளிப்படையாக திவாகரன் கேட்டதாக அவரது ஆதரவாளர்கள் சொல்கிறார்கள்.

பெங்களூரில் நடந்தது பற்றி திவாகரனின் நெருங்கிய ஆதரவாளரிடம் கேட்டோம். ‘‘சசிகலா மட்டும் நேரடி அரசியலில் இருந்தால் போதும் என்றுதான் திவாகரன் நினைத்தார். ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் குடும்பத்தினர் யாரும் நிற்க வேண்டாம் என்கிற முடிவில் அவர் இருந்தார். ஆனால், ‘ஆர்.கே. நகரில் நிற்கத் தகுதியான வேறு வேட்பாளரே இல்லை’ என்று காரணம் சொல்லி, தன்னை வேட்பாளராக அறிவிக்கச் சொன்னார் தினகரன். அவரின் வலதுகரமான தளவாய், கையில் எப்போதும் ஃபைலுடன் நடமாடுகிறார். ஆர்.கே. நகர் தேர்தல் பணி செய்யும் குழுவில் இடம்பெறுகிறவர்களை அவர்தான் முடிவு செய்கிறார். தளவாய் தவிர, அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், விராலிமலை விஜயபாஸ்கர், காமராஜ், ஜெயக்குமார் ஆகியோருடன் டாக்டர் வெங்கடேஷ், அக்ரி கிருஷ்ணமூர்த்தி என ஆறு பேர் கொண்ட குழுவினர்தான் கட்சியில் படிப்படியாக ஆதிக்கம் செய்கிறார்கள். இவர்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் முக்கியத்துவம் தருகிறார்கள். வேண்டாதவர்கள் பற்றி தினகரனிடம் போட்டுக் கொடுத்து ஓரங்கட்டி வருகிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் திவாகரனிடம் போய் புலம்பியதால்தான், அவர் சசிகலாவிடம் புகார் செய்தார்’’ என்றார் அவர்.

p4a.jpg

பல்வேறு திசைகளில் இருந்து கட்சிப் பிரமுகர்கள் தந்த பிரஷரால் சசிகலாவைச் சந்தித்த திவாகரன், ‘‘தினகரன் செய்யும் தவறான நிர்வாகத்தால், நம் கட்சி உடைவது உறுதி. ஓ.பன்னீர்செல்வம் அணிக்குப் பலரும் போய்விடுவார்கள். இரட்டை இலை சின்னம் பெறும் விஷயத்தில்கூட தமிழக சிறப்புப் பிரதிநிதியான தளவாய் சுந்தரம் அதிக ஆர்வம் காட்டவில்லை. வக்கீல்கள் அமர்த்துவதிலும் ஆர்வம் காட்டவில்லை” என்றாராம்.

கோபத்தில் இருந்த திவாகரனை சமாதானப்படுத்திய சசிகலா, ‘‘கொஞ்சம் பொறுத்திருங்கள். ஆர்.கே. நகர் தேர்தல் முடியட்டும். அதில் நல்லபடியாக ஜெயித்து வர வேண்டும் என்பதே இப்போது முக்கியம். நாம் ஜெயித்தால்தான் டெல்லி பி.ஜே.பி மேலிடம் நம்மைத் தேடி வரும். இந்த நேரத்தில் நீங்களும் தினகரனும் அடித்துக்கொண்டால்... அது எதிரிக்கு சாதகமாகப் போய்விடும். இதுவரை தேர்தல் வேலை பார்க்க, நீங்கள் ஆர்.கே. நகர் செல்லவில்லை என்று கேள்விப்பட்டேன். உடனே போய் தேர்தல் பணியைக் கவனியுங்கள்” என்றாராம்.

அதற்கு திவாகரன், ‘‘நான் நேரடியாகப் போக மாட்டேன். ஆனால், தேர்தலில் நம் கட்சியை ஜெயிக்கவைக்க வேண்டியது என் பொறுப்பு. ரிசல்ட் வரும் நாளன்று எனக்குக் கட்சியில் பதவி அறிவிப்பு வெளியாக வேண்டும். இது என் எதிர்பார்ப்பு அல்ல. கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் விருப்பம்’’ என்று சொல்லிவிட்டு வந்ததாக அவரது ஆதரவாளர்கள் பேசிக்கொள்கிறார்கள்.

சசிகலா என்னசெய்யப் போகிறார்?

http://www.vikatan.com/juniorvikatan/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.