Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீண்டும் பதவியில் அமர்ந்த ராமமோகன ராவ்! - டெல்லி லாபியை வளைத்த பின்னணி

Featured Replies

மீண்டும் பதவியில் அமர்ந்த ராமமோகன ராவ்!  - டெல்லி லாபியை வளைத்த பின்னணி 

ராமமோகன ராவ்

லைமைச் செயலகத்தில் வைத்தே ரெய்டு நடவடிக்கைக்கு ஆளான பெருமைக்குரியவர் ராமமோகன ராவ் ஐ.ஏ.எஸ். 100 நாட்களாக காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தவர், நேற்று தொழில் முனைவோர் மேம்பாட்டுக் கழக இயக்குநராக பணி அமர்த்தப்பட்டிருக்கிறார். ‘அவர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் எந்தவித ஆதாரமும் சிக்கவில்லை. சசிகலா தரப்பை வளைப்பதற்காக, அவரை ஒரு கருவியாக பயன்படுத்திக் கொண்டனர். தற்போது டெல்லி லாபி மூலம் மீண்டும் பதவிக்கு வந்துவிட்டார் ராமமோகன ராவ்’ என்கின்றனர் தலைமைச் செயலக அதிகாரிகள். 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் செயலர்களில் ஒருவராக இருந்த ராமமோகன ராவ், கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். ஜெயலலிதாவின் கட்டளைகளை சிறப்பாகச் செயல்படுத்தியதற்காகவே அவருக்குப் பதவி வழங்கப்பட்டதாகவும் கட்சி நிர்வாகிகள் பேசி வந்தனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5-ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார் ஜெயலலிதா. அடுத்த ஒரே வாரத்தில் வேலூரைச் சேர்ந்த பிரபல அரசு ஒப்பந்ததாரர் சேகர் ரெட்டியை வளைத்தது மத்திய அமலாக்கத்துறை. அவருடைய சென்னை அலுவலகம் உள்பட அனைத்து இடங்களையும் வருமான வரித்துறையும் அமலாக்கத்துறையும் ஆராய்ந்தது. அவரது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட புத்தம் புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தின. சேகர் ரெட்டி, பிரேம் குமார், சீனிவாசலு என ஆளும்கட்சி அமைச்சர்களுக்கு வேண்டப்பட்டவர்கள்  அனைவரும் வளைக்கப்பட்டனர். இதன் நீட்சியாக சேகர் ரெட்டியின் வர்த்தகத் தொடர்புகளுக்கு உதவியாக இருந்ததாகக் கூறி, தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் வீட்டில் கடந்த டிசம்பர் 21-ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் நுழைந்தனர். இதன்பின்னர் மத்திய தொழில் பாதுகாப்புப் படை அதிகாரிகளின் உதவியோடு, தலைமைச் செயலகத்திலும் அதிகாரிகள் ஆய்வை நடத்தினர். இந்த ஆய்வில் கணக்கில் காட்டப்படாத ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தகவல் வெளியானது. ஆனால், 'என்ன ஆவணங்கள்?' என்பது குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை. ராமமோகன ராவ் மகனின் வர்த்தக நிறுவனங்களிலும் தேடுதல் வேட்டை தொடர்ந்தது. 

“வருமான வரித்துறையின் நடவடிக்கைகளில் ராமமோகன ராவ் மீதான குற்றச்சாட்டுகளுக்கு உறுதியான ஆவணங்களைக் காட்ட முடியவில்லை. ஆனால், சேகர் ரெட்டியைக் காரணமாக வைத்துக் கொண்டு, 'தன்னைக் கைது செய்து விடுவார்கள்' என அஞ்சியவர், போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக தங்கிவிட்டார். அப்போது அவரைச் சந்தித்த ஆந்திராவைச் சேர்ந்த முக்கிய நபர்கள், சில ஆலோசனைகளைத் தெரிவித்தனர். இதனையடுத்து, பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார் ராமமோகன ராவ். இந்த சந்திப்பில், ‘ஜெயலலிதா இருந்திருந்தால், தலைமைச் செயலகத்தில் இப்படியொரு ரெய்டு நடந்திருக்குமா? என் வீட்டில் எந்த ஆவணமும் கைப்பற்றப்படவில்லை. இன்னமும் நான் தலைமைச் செயலாளராக நீடிக்கிறேன். என்னை யாரும் பதவியை விட்டு நீக்க முடியாது. ரெய்டு நடவடிக்கை என்ற பெயரில் கடுமையான மிரட்டலுக்கு ஆளானேன்' என பகிரங்கமாகப் பேட்டியளித்தார். அவரது துணிச்சலை வருமான வரித்துறை அதிகாரிகளோ, அமலாக்கத்துறை அதிகாரிகளோ எதிர்பார்க்கவில்லை. அதன்பிறகு அவர் மீதான நடவடிக்கைகளை வேகப்படுத்தவில்லை. அவரது மகனை மட்டும் அமலாக்கத்துறை விசாரணைக்கு வரவழைத்தனர்.

ராமமோகன ராவ் வீடு

மாநில அரசும் அவர் மீது எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. காத்திருப்போர் பட்டியலில் மட்டும் வைக்கப்பட்டார். புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டார். ‘என் மீது நடவடிக்கை எடுக்க இந்த அரசுக்குத் துணிச்சல் இருக்கிறதா? என்னைத் தேடி வந்து சஸ்பெண்ட் ஆர்டரைக் கொடுக்கச் சொல்லுங்கள்' என தன்னை சந்திக்க வருகின்றவர்களிடம் கொந்தளிப்பைக் காட்டி வந்தார் ராமமோகன ராவ். இதன்பிறகு, தனக்கு நெருக்கமான டெல்லி வட்டார அதிகாரிகள் மூலம், மத்திய அரசின் கவனத்துக்கு சில விஷயங்களைக் கொண்டு சென்றார். ‘அவர் பதவிக்கு வருவதில் எந்த சிக்கலும் இல்லை' என கிரீன் சிக்னல் கிடைத்ததும், அவருக்கான உத்தரவு வேகமாகத் தயாராகியது. அவருக்கான டெல்லி உதவிகளைச் செய்ததில், முன்னாள் மாண்புமிகுவுக்கும் பெரும் பங்கு இருக்கிறது. கடந்த சில நாட்களாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம் குறித்த தகவல், தலைமைச் செயலகத்தில் வலம் வருகிறது. 'புதிய பதவிக்கு வரப் போகும் ஐ.ஏ.எஸ்கள் யார்?' என்ற விவாதமும் நடந்து வந்தது. இந்நிலையில், யாரும் எதிர்பார்க்காமல் பதவிக்கு வந்துவிட்டார் ராமமோகன ராவ்" என்கின்றனர் தலைமைச் செயலக அதிகாரிகள். 

சிவ இளங்கோராமமோகன ராவ் பதவிக்கு வந்தது குறித்து, சட்டப் பஞ்சாயத்து இயக்கத் தலைவர் சிவ இளங்கோவிடம் பேசினோம். “பன்னீர்செல்வம், சசிகலா உள்ளிட்டவர்கள் செய்த தவறுகளை முழுமையாக அறிந்தவர் ராமமோகன ராவ். அந்த தைரியத்தில்தான், 'நான் இன்னமும் தலைமைச் செயலாளர்' எனப் பேட்டி அளித்தார். இவ்வளவு ஊழல்களைச் செய்துவிட்டு, துணிச்சலாக பேசுகிறார் என்றால், ஆட்சியாளர்களின் ஊழல் முறைகேடுகளை முழுமையாக அறிந்து வைத்திருப்பதுதான் காரணம். 'நான் சிக்கினால், உங்களையும் சேர்த்தே நான் சிக்க வைப்பேன்' என்பதுதான் அவருடைய வாதம். பன்னீர்செல்வத்தையும் சசிகலாவையும் வழிக்குக் கொண்டு வருவதற்காகத்தான் சேகர் ரெட்டி, ராமமோகன ராவ் ஆகியோர் வீடுகளில் ரெய்டு நடந்தது. இதற்காக, சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறையை மத்திய அரசு வழிநடத்தியது.

தலைமைச் செயலாளர் தவறு செய்திருந்தாலும், ரெய்டு நடவடிக்கையில் இறங்குவது குறித்து முதல்வர் பன்னீர்செல்வத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தகவல் சொல்லியிருக்க வேண்டும். அப்படி எந்தத் தகவலையும் அவர்கள் சொல்லவில்லை. அரசின் ஊழல்களை விரிவாக அறிந்தவர் ராமமோகன ராவ். அரசுக்கு எதிராக அவர் கருத்துக்களைப் பேசியபோதே, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய ஒழுங்குமுறை விதிகளின்படியே அவர் மீது நடவடிக்கை எடுத்திருக்க முடியும். 'ஏன் இவ்வளவு நாட்கள் இவர்கள் அமைதியாக இருந்தார்கள்?' என்பதே ரகசியம்தான். அவர் மீது அம்பு எய்தால், நம்மை நோக்கியே அந்த அம்பு பாயும் என்ற பயம்தான், அவருக்குப் பதவி கொடுக்கக் காரணம். மத்திய அரசின் ஒத்துழைப்பு இருப்பதால்தான் மீண்டும் பதவிக்கு வந்திருக்கிறார். மத்திய, மாநில அரசுகளைப் பணிய வைத்துப் பதவிக்கு வருவது என்பது சரியான வழிமுறை அல்ல" என்றார் நிதானமாக. 

http://www.vikatan.com/news/tamilnadu/85029-ramamohana-raos-comeback.html

  • தொடங்கியவர்

காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்ட ராமமோகன ராவ் மீண்டும் பதவிக்கு வந்தது எப்படி?

 

 
ராமமோகன ராவ் | கோப்புப் படம்.
ராமமோகன ராவ் | கோப்புப் படம்.
 
 

தலைமைச் செயலக வட்டாரங்கள் தகவல்

 

வருமானவரி சோதனையைத் தொடர்ந்து காத்திருப்போர் பட்டிய லில் வைக்கப்பட்ட முன்னாள் தலைமைச் செயலர் பி.ராம மோகன ராவுக்கு 3 மாத காலத் துக்குள் மீண்டும் பதவி அளிக்கப் பட்டிருப்பது, அதிகாரிகள் மத்தி யில் வியப்பை ஏற்படுத்தி யுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெய லலிதாவின் ஆட்சிக்காலத்தில், முதல்வரின் செயலராக 2011 முதல் இருந்தவர் பி.ராமமோகன ராவ். 2016-ல் மீண்டும் ஜெய லலிதா முதல்வரானபோது, தலைமைச் செயலாளராக இருந்த ஞானதேசிகன் ஜூன் 7-ம் தேதி மாற்றப்பட்டு, தமிழக தலைமைச் செயலாளராக பி.ராமமோகன ராவ் பொறுப்பேற்றார்.

கடந்த டிசம்பர் 5-ம் தேதி ஜெய லலிதா காலமான நிலையில், தமிழக முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் பொறுப்பேற்றார். இந்த நிலையில், டிசம்பர் 21-ம் தேதி அதிகாலை 5.30 மணி அளவில் ராமமோகன ராவ் வீட்டில் வருமானவரித் துறை அதிகாரி கள் சோதனையிட்டனர். தலை மைச் செயலகத்தில் உள்ள தலைமைச் செயலர் அறையிலும் சோதனை நடந்தது. இது பெரும் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

ராமமோகன ராவ் மகனின் வீடு, நிறுவனத்திலும் சோதனை நடத்தப்பட்டது. இதையடுத்து, தலைமைச் செயலர் பதவியில் இருந்து ராமமோகன ராவ் நீக்கப் பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். அவருக்கு பதி லாக, தலைமைச் செயலராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப் பட்டார்.

இந்த பரபரப்பான சூழலில் செய்தியாளர்களை சந்தித்த ராமமோகன ராவ், ‘தமிழக அரசும், முதல்வர் ஓபிஎஸ்ஸும் இந்த விவகாரத்தில் ஒன்றும் செய்யாமல் இருந்துவிட்டனர். ஜெயலலிதா இருந்திருந்தால் இதுபோல வருமானவரித் துறை சோதனை நடந்திருக்காது’ என்று தெரிவித்தார். உயர் பொறுப்பில் இருந்த அரசு அதிகாரி இவ்வாறு பேசியது விதிகளின்படி தவறு என் றாலும், தமிழக அரசு கண்டு கொள்ளவில்லை. ராமமோகன ராவ் வீட்டில் நடத்தப்பட்ட சோதனை, தொடர் நடவடிக்கை கள் குறித்த தகவல்களை வருமானவரித் துறையும் வெளி யிடவில்லை.

இந்நிலையில், கடந்த 3 மாதங் களுக்கு மேலாக காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த ராமமோகன ராவுக்கு நேற்று முன் தினம் இரவு புதிய பதவி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவன இயக்குநராக அவர் நிய மிக்கப்பட்டுள்ளார். இந்த திடீர் நியமனம் அரசு அதிகாரிகள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தி யுள்ளது.

இதுதொடர்பாக தலைமைச் செயலக வட்டாரங்கள் கூறிய தாவது:

சீனியர் ஐஏஎஸ் அதிகாரியை நீண்ட நாட்களாக காத்திருப்போர் பட்டியலில் வைப்பது சரியாக இருக்காது என்பதால் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. ஓபிஎஸ் முதல்வராக இருந்தபோது, ஞான தேசிகனுக்கும் இதேபோல்தான் பதவி வழங்கப்பட்டது. தற் போது முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருக்கும் நிலையில், ராமமோகன ராவுக்கு பதவி கொடுக்கப்பட்டுள்ளது. ஆளும் தரப்பு ஆதரவு இல்லாமல் அவர் மீண்டும் பதவியைப் பெற்றிருக்க முடியாது. டெல்லியில் தனக்கு உள்ள பிடிப்பைப் பயன்படுத்தி அவர் மீண்டும் பதவியைப் பெற்றதாக கூறப்படுகிறது. ஆந்திராவில் முக்கிய பொறுப்பில் இருக்கும், மத்திய அரசுக்கு நெருக்கமான ஒருவர் மூலமாக தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் பரவ லாக பேசப்படுகிறது. வருமான வரித் துறை சோதனை யின் பின்னணிதான் புரியாத புதிராக உள்ளது.

http://tamil.thehindu.com/tamilnadu/காத்திருப்போர்-பட்டியலில்-வைக்கப்பட்ட-ராமமோகன-ராவ்-மீண்டும்-பதவிக்கு-வந்தது-எப்படி/article9611101.ece?homepage=true

  • தொடங்கியவர்

'தினகரன் முதல்வரானால், நான்தான் தலைமைச்செயலாளர்!''- ராம மோகன ராவ் கணக்கு

ராம மோகன ராவ்

'ஜெயலலிதாவின் மறைவு அரசியல் களத்தையே புரட்டிப்போட்டது என்றால்,அடுத்த சில நாட்களில்,தலைமைச் செயலகத்தில் உள்ள தலைமைச் செயலாளர் (ராம மோகன ராவ்)அலுவலகத்தில் வருமானவரித்துறை நடத்திய சோதனை அரசு நிர்வாகத்தையே ஆட்டம் காண வைத்தது.வருமான வரித்துறையின் இந்த நடவடிக்கையால்,அமைச்சர்களும் அதிகாரிகளும் பயத்தில் உறைந்து போயினர். 

வருமான வரித்துறையினரின் இந்தச் சோதனையில்,அப்போதைய தலைமைச் செயலாளரான ராம மோகன ராவ் வீடு மற்றும் அலுவலகத்தில் இருந்து முக்கிய ஆவணங்கள்  கைப்பற்றப்பட்டதாகத் தகவல்கள் வெளியாயின.இந்தச் சூழ்நிலையில்,சேகர் ரெட்டியுடனான தொடர்பு,அதிகார துஷ்பிரயோகம் என ராம மோகன ராவ் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் வெளியானபோதும் அவரை தலைமைச்செயலாளர் பதவியில் இருந்து நீக்காமல் வைத்திருந்தது தமிழக அரசு. ராம மோகன ராவின் நடவடிக்கை 'நேர்மையான ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு தலை குனிவை ஏற்படுத்தியுள்ளதாக'சில ஓய்வுப்பெற்ற அதிகாரிகளும்,அரசியல் தலைவர்களும் பகிரங்கமாக கருத்து தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்தே தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து விலக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார் ராம மோகன ராவ். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் மத்திய அரசுக்கு சவால் விடும் வகையில் பேட்டி அளித்து ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிரவைத்தார்.மேலும், 'மத்தியதொழிற்பாதுகாப்பு படை எப்படி மாநில அரசின் அலுவலகத்துக்குள் நுழைய முடியும்?' என்று கேள்வி எழுப்பியவர், 'இது இந்திய அரசியலமைப்புக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட தாக்குதல்' என்றும் குற்றம் சாட்டினார். 

ராம மோகன ராவ்

 
இந்த நிலையில்,அ.தி.மு.க-வில் ஏற்பட்ட பிளவு காரணமாக நடைபெற்ற ஆட்சி,அதிகாரப் போட்டி சண்டையில் ராம மோகன ராவ் சம்பந்தப்பட்ட விவகாரங்கள்அனைத்தும் ஒதுக்கி வைக்கப்பட்டன. பின்னர் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சசிகலா சிறைக்கு சென்று விட,அவருடைய ஆதரவாளரான எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக பதவி ஏற்றார்.இந்த நிலையில், காத்திருப்போர் பட்டியலில் இருந்த ராம மோகன ராவுக்கு தற்போது 'தொழில் முனைவோர் மேம்பாட்டுக் கழகத்தின் இயக்குனர்' பதவி வழங்கப்பட்டுள்ளது.பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் இருந்தவருக்கு இந்தப் பதவி வழங்கப்பட்டிருப்பதுஅரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் இதுகுறித்து தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோரும் தமிழக அரசுக்கு எதிராக கேள்வி எழுப்பியுள்ளனர். 
 
வலுக்கும் சந்தேகங்கள் !

தற்போது உள்ள சூழலில், ராம மோகன ராவுக்கு இந்தப் பதவி வழங்கப்பட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளன.மணல் மாஃபியாவான சேகர் ரெட்டியுடன் தொடர்பு இருப்பதாக வெளியான தகவலை அடுத்தே ராம மோகன ராவ் அலுவலகம் மற்றும் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.அந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து அதிகாரப்பூர்வத் தகவல்களும் தெரிவிக்கப்படவில்லை.ராம மோகன ராவ் குற்றமற்றவராக இருந்தால்,அவரை பதவியிலிருந்து விலக்க காரணம் என்ன?அல்லது அவர் குற்றம் செய்திருக்கிறார் என்பது உண்மையானால்,அவருக்கு மீண்டும் பொறுப்பு வழங்கியது சரிதானா?இப்படி பல்வேறு கேள்விகள் எழுகின்ற நிலையில் அவற்றுக்கெல்லாம் விளக்கம் தராமல்,தற்போது அவரைப் பதவியில் அமர்த்துவதற்கான அவசியம் எங்கிருந்து வந்தது? என அரசியல் ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
 
ராம மோகன ராவுக்கு பதவி! ரெட்டிகள் உற்சாகம்

இது தொடர்பாக அரசு அதிகாரி ஒருவரைத் தொடர்புகொண்டு பேசியபோது, "சசிகலா சொன்னது மற்றும் சொல்லாததையும் செய்து காட்டி பாராட்டைப் பெற்றவர் ராமமோகன ராவ்.அந்த விசுவாசத்தின் அடிப்படையில்தான் தற்போது அவரைப் பதவியில் அமர்த்தியுள்ளது சசிகலா தரப்பு.அதுமட்டுமன்றி ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்க உள்ள நிலையில்,ராம மோகன ராவ் பதவியில் இருப்பது நல்லது என்று நினைக்கிறார்கள்.அதனை உறுதி செய்யும் வகையில், 'தேர்தலில் டி.டி.வி தினகரன் வெற்றி பெற்றுவிட்டால் அடுத்த தலைமை செயலாளர்  நான்தான்' என்று ராம மோகன ராவும் தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லி வருகிறார்.மேலும்,சேகர் ரெட்டியை வெளியில் எடுக்கும் வேலைகளையும் செய்து வருகிறார்.ஆனால்,ராம மோகன ராவுக்கு மீண்டும் பதவி கொடுத்திருப்பது சில உயர் அதிகாரிகளுக்குப் பிடிக்கவில்லை.    
 
சிப்காட்டில் ராம மோகன ராவ் நுழைந்திருப்பது மற்றொரு ரெட்டிக்கு புதிய உற்சாகத்தை கொடுத்துள்ளது.ராமமோகன ராவ் பதவியில் இருந்து விலக்கப்பட்டபோது,அடுத்த ஒப்பந்ததாரர் சுப்பாரெட்டிதான் சிறைக்குப் போவார் என்றார்கள்.ஏனெனில்,ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவரான இவருக்கே கடந்த ஆறு வருடங்களாக அனைத்து ஒப்பந்தங்களும் ராம மோகன ராவ் பரிந்துரையின் பேரில் வழங்கப்பட்டுள்ளது.சிப்காட்டில் அவ்வளவு எளிதில் ஒப்பந்தம் பெற முடியாது.ஆனால் சுப்பாரெட்டிக்கு மட்டும் எளிதில் ஒப்பந்தம் கிடைத்துவிடும்.சிப்காட்டில் மட்டும் சுமார் 600 -கோடிக்கும் மேலான ஒப்பந்தங்களை சுப்பாரெட்டிதான் எடுத்துள்ளார்.அந்த அளவுக்கு அவர் ராம மோகன ராவ் உள்ளிட்ட மேலிட அதிகாரிகளோடு நெருக்கமாக இருந்தார். 

ஒட்டுமொத்தத்தில்,ராமமோகன ராவ் சிப்காட்டின்முக்கிய பொறுப்பில் அமர்த்தப்பட்டிருப்பது சுப்பாரெட்டிக்கு தொழில் ரீதியான மகிழ்ச்சியாக அமைந்திருக்கிறது.இன்னொருபுறம் சேகர் ரெட்டியின் சிறைவாசத்தை முடித்துவைக்கும் முயற்சியில் ராம மோகன ராவ் இறங்கியிருப்பதால்,அவருக்கும் இது பெரும் மகிழ்ச்சியாகவே அமைந்திருக்கிறது. 

எது எப்படியோ....இப்படி ரெட்டிகள் மூலமாக பெற்ற வருமானத்தை மிகச் சரியாக பங்கீட்டதன் விசுவாசமே தற்போது மீண்டும் ராம மோகன ராவ் பதவிக்கு வந்திருப்பதன் ரகசியம்." என்றார் அந்த அதிகாரி.

http://www.vikatan.com/news/coverstory/85121-if-dinakaran-wins-i-will-become-chief-secretary-ramamohan-rao.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.