Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வேட்பாளர்களின் செலவுக் கணக்கு... ஆர்.கே. நகரில் இறுக்கும் தேர்தல் ஆணையம்...!

Featured Replies

வேட்பாளர்களின் செலவுக் கணக்கு... ஆர்.கே. நகரில் இறுக்கும் தேர்தல் ஆணையம்...!


                        பிரசாரத்தின் போது                         

தேர்தல் என்றாலே வாக்கு இயந்திரம், வேட்புமனு, வேட்பாளர், சின்னம், கட்சி, பிரசாரம் என்று பல விஷயங்கள் இருக்கும். தேசியக்கட்சி, மாநிலக்கட்சி, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, சுயேட்சை என்ற அடுத்தக் கட்ட விஷயங்களும் அங்கே காணப்படும். அடுத்ததாக சொல்வதென்றால், அது தேர்தல் ஆணையம்தான். தேர்தல் ஆணையம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தும் போதெல்லாம் தவறாமல் நினைவில் வந்து விடுகிற பெயர் டி.என்.சேஷன். கட்சிக் கொடி கட்ட, போஸ்டர் ஒட்ட, கட்-அவுட் வைக்க, மைக் கட்டி பிரசாரம் செய்ய என்று அனைத்துக்கும் வேட்பாளர்கள் பயந்து நடுங்கிய காலகட்டம் அது. வாய்க்கு ருசியாக பிரியாணி சாப்பிட்ட கணக்கைக்கூட வெளியில் காட்ட முடியாமல் தவித்தனர். "இரண்டு இட்லியும், கொஞ்சம் சட்னியும் மட்டும் சாப்பிட்டேன், யுவர் ஆனர்" என்று  வேட்பாளர்கள் கணக்கெழுதி வைத்த காலமும் அதுதான். சேஷன் போட்டு வைத்த விதை இன்று ஆலமரமாய் உயர்ந்தும், பரந்தும் பலன் கொடுத்துக் கொண்டிருக்கிறது. அரசுப்பள்ளி மாணவர்கள் அணியும் சீருடைபோல, ஒரே யூனிஃபார்மில் வேட்பாளர்களின் தேர்தல் செலவுகள் ஒழுங்கு முறைக்குள் வந்துள்ளன. சுயேட்சையோ, கட்சியோ குறைந்த பட்ச செலவில் மாறுதல்கள் வரலாம். தேர்தல் ஆணையத்தின் கண்ணில் மண்ணைத் தூவாத வரையில், அதிகபட்ச செலவினத்தில் மாறுதல் வர வாய்ப்பில்லை. கடந்த 2016-ல் நடந்த தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலில் 3 ஆயிரத்து 728 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அவர்களில் 3 ஆயிரத்து 563 வேட்பாளர்கள் மட்டுமே தேர்தல் செலவுக்கணக்கு விவரங்களை அளித்ததாக அப்போது சொல்லப்பட்டது.

                         ஆர்.கே.நகர் பிரசாரக் காட்சிகள்                             

தமிழகத் தேர்தல் ஆணையரான ராஜேஷ்லக்கானி செய்தியாளர்களிடம் இதுகுறித்து (அப்போது)  கூறும்போது, "அ.தி.மு.க, தி.மு.க., தே.மு.தி.க., காங்கிரஸ், பி.ஜே.பி, கம்யூனிஸ்டு போன்ற கட்சிகளின் சார்பில் 996 பேர் போட்டியிட்டனர். அவர்களில், 979 பேர் செலவுக் கணக்கை தாக்கல் செய்துவிட்டனர். தேர்தல் கமிஷனில் பதிவு செய்துள்ள கட்சிகளின் சார்பில்  மட்டுமே 1,179 பேர் போட்டியிட்டனர். அவர்களில், 1,118 வேட்பாளர்கள் செலவுக்கணக்குகளை தாக்கல் செய்துவிட்டனர். சுயேட்சையாக 1,554 பேர் போட்டியிட்டதில், 1,466 பேர் செலவுக்கணக்கை கொடுத்துவிட்டனர். இந்தக் கணக்குப்படி 165 வேட்பாளர்கள் மட்டுமே தேர்தல் செலவுக் கணக்கை தாக்கல் செய்யவில்லை. இவர்களுக்குத் தேர்தல் கமிஷன் நோட்டீசு அனுப்பும். அதற்கு அவர்கள் பதிலளிக்க வேண்டும். பதில் அளிக்காமல், குறிப்பிட்ட காலத்துக்குள் செலவுக் கணக்கை தாக்கல் செய்யாமல் இருந்தால், தேர்தலில் போட்டியிட  தடை உத்தரவை பிறப்பிக்கும் தேர்தல் கமிஷன். இப்படியான உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தேதியில் இருந்து 3 ஆண்டுகள் வரை சம்பந்தப்பட்ட வேட்பாளர் தேர்தலில் போட்டியிட முடியாது'' என்றார்.'சட்டமன்றத் தேர்தலின்போது வேட்பாளர்கள் அதிகபட்சமாக ரூ.28 லட்சம் வரை செலவு செய்யலாம்' என்று அப்போது தேர்தல் ஆணையம், அறிவித்திருந்தது. கடந்த  2016-ல் நடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் முக்கியத் தலைவர்கள் செய்த செலவாக தேர்தல் ஆணையமே ஒரு பட்டியலையும் வெளியிட்டது.

                     ஆர்.கே.நகர் பிரசார வேளையில்                              

திருவாரூர் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி ரூ. 19.12 லட்சம், ஆர்.கே.நகரில் போட்டியிட்ட ஜெயலலிதா ரூ.24.55 லட்சம், தேனியில் போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வம் ரூ.11.53 லட்சம் செலவு செய்திருந்ததாக அந்தப் பட்டியல் தெரிவித்தது. அதேபோல்  உளுந்தூர்பேட்டையில்  விஜயகாந்த் ரூ.16.70 லட்சம், கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் ரூ.25.01 லட்சம் செலவிட்டிருந்தனர். டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. ரூ.19.01 லட்சம், விடுதலை சிறுத்தைகள் திருமாவளவன் ரூ.15.90 லட்சம் செலவிட்டிருந்தனர். அதிகபட்சமாக, லால்குடியில் தி.மு.க. வேட்பாளர் சவுந்திரபாண்டியன் ரூ.27.60 லட்சம் வரை செலவிட்டிருந்ததாக ஆணையம் தெரிவித்தது. வருகிற ஏப்ரல் 12-ம் தேதி, ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் நடக்கிற பொதுத்தேர்தல் போன்ற பார்வையை ஏற்படுத்தி வைத்துள்ளது. ஒரு வாக்குச் சாவடியில் மட்டுமே 4 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்தும் அளவுக்கு அதிகமான எண்ணிக்கையில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.தேர்தல் ஆணையத்தின் பொதுப் பார்வையாளராக பிரவீன் பிரகாஷ் (செல் எண்: 9445036578), சட்டம்-ஒழுங்கு காவல் பிரிவு  குறித்த பார்வையாளராக சிவ்குமார் வர்மா (9445036579), செலவுக்கணக்கு பார்வையாளராக அபர்ணா வில்லூரி (9445036584) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள்  ஆர்.கே.நகர் தொகுதியில் முகாமிட்டுள்ளனர்.

ஆர்.கே.நகர்த் தொகுதியில்  பண விநியோகம் குறித்த கண்காணிப்பில், வருமான வரித்துறையின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவுக் குழுவினர் சிறப்புக் கவனம் செலுத்தி வருகின்றனர். தேர்தல் அதிகாரிகள் தரப்பில் பேசியபோது,  "ஆர்.கே.நகர் இடைத் தேர்தலைப் பொறுத்தவரையில், ஒரு கட்சியை இன்னொரு கட்சி தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. அனைத்து துறைகளுக்கும் இவர்களில் யாராவது ஒருவர்  மாற்றி, மாற்றி புகாரை அனுப்பி விடுவதால் எங்களுக்கு வேலை சுலபமாக இருக்கிறது. மேலும், ஆர்.கே.நகர்த் தொகுதியில் கடந்த இரண்டு நாட்களாக ஆடிட்டர் பஞ்சமும் ஏற்பட்டு இருக்கிறது. வேட்பாளர்களின் நடத்தை, வாக்கு சேகரிப்பின்போது பயன்படுத்தக் கூடாத விஷயங்கள், வார்த்தைகள் என்று அடுத்தடுத்து நாங்கள் போட்ட ஆலோசனைக் கூட்டத்தில் விளக்கமாகவே சொல்லியுள்ளோம். அனைத்தையும் விட எந்த மாதிரியான செலவினங்கள் வேட்பாளரின் கணக்கில் வரும் என்பதையும் தெளிவுபட சொல்லிக் கொண்டுதான் இருக்கிறோம். இதுவரையில் மூன்று கூட்டம் போட்டு விட்டோம். ஆணையத்தின் நடவடிக்கையில் சிக்காமல் இருப்பதுதான் அவர்களின் வெற்றியை விட பெரிய வெற்றி என்று சொல்ல வேண்டும். இல்லையென்றால் எப்போதும் சிக்கல்தானே?" என்கின்றனர். இன்னொரு பக்கம் ரவுடிகளின் நடமாட்டத்தையும் போலீசார் கண்காணித்து வருகின்றனர். ரவுடிகளின் வேகம், நெட்-வொர்க், பணபலம், ஆள்பலம் போன்றவற்றின் அடிப்படையில், அவர்களுக்கு 'மார்க்' போட்டு தேட ஆரம்பித்துள்ளனர்.

http://www.vikatan.com/news/tamilnadu/85233-rk-nagar-bypoll-candidate-expense-election-commission-tightens-the-vigil.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.