Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜே.வி.பி ஒரு மணி நேரம் தூங்கினால்- நாட்டின் அரைப்பங்கை அமெரிக்கா சூறையாடிவிடும்: சோமவன்ச அமரசிங்க

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜே.வி.பி ஒரு மணி நேரம் தூங்கினால்- நாட்டின் அரைப்பங்கை அமெரிக்கா சூறையாடிவிடும்: சோமவன்ச அமரசிங்க

[சனிக்கிழமை, 17 பெப்ரவரி 2007, 09:22 ஈழம்] [காவலூர் கவிதன்]

கொழும்பின் புறநகர்ப் பகுதியான நுகேகொடவில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற ஜே.வி.பி. யின் ஆர்ப்பாட்டப் பேரணியில், சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரத்தில் அமெரிக்கா மூக்கை நுழைப்பதாக வன்மையான கண்டனம் முன்வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்வில் ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்க தனதுரையில் தெரிவித்துள்ளதாவது:

"தற்போதைய சூழ்நிலையில், ஜே.வி.பி. விழித்திருந்து அவதானத்துடன் நாட்டைப் பாதுகாத்து வருகின்றது. தற்செயலாக ஜே.வி.பி.யினர் ஒரு மணிநேரம் கண்மூடித் தூங்கினால், நாட்டின் அரைவாசிப் பகுதியை அமெரிக்கா களவாடிச் சென்றுவிடும் அபாயம் காணப்படுகிறது.

நாட்டின் இயற்கை வளங்களை அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளுக்கு விற்கின்ற இன விரோதிகளே தற்போது சுதந்திரக் கட்சியுடன் போய் இணைந்திருக்கின்றனர். நாட்டின் விசுவாசமான பொறுப்புள்ள நேர்மையான ஒரு எதிர்க்கட்சியாக ஜே.வி.பி. தற்போது வளர்ச்சி பெற்று வருகின்றது.

மக்கள் ஆதரவுடன் நாட்டை ஆளும் பொறுப்பை ஜே.வி.பி. எடுத்துக்கொள்ளும் காலம் வந்துகொண்டிருக்கிறது. இருந்தாலும் ஜே.வி.பி. அவசரப்படப் போவதில்லை. சரியான நேரத்தில் எமது இலக்கை அடைவோம்" என்றார் அவர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய ஜே.வி.பி கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா கூறியதாவது:

"ஆளும் சுதந்திரக்கட்சியிலிருந்து மங்கள சமரவீர, சிறீபதி சூரியாராச்சி போன்றவர்களை நீக்கியதை வன்மையாகக் கண்டிக்கின்றோம். அரசாங்க சட்ட திட்டங்கள் மற்றும் ஒழுங்கு பற்றி அரச தலைவர் மகிந்த ராஜபக்ச கவலைப்படுவது உண்மையாக இருந்தால், முதலில் அமைச்சர் திஸ்ஸ விதாரணவையே பதவி நீக்கம் செய்திருக்க வேண்டும்.

அதிகாரப் பகிர்வு என்று சத்தமிட்டுக்கொண்டு திரியும் திஸ்ஸ விதாரணவின் கருத்து, 'மகிந்த சிந்தனை' திட்டத்திற்கு முற்றிலும் முரண்பட்டு இருக்கிறது. ஒற்றையாட்சியின் கீழ் தான் தீர்வு என்ற 'மகிந்த சிந்தனை' மகிந்த ராஜபக்சவினால் முன்வைக்கப்பட்டது" என்றார்.

http://www.eelampage.com/?cn=30821

  • கருத்துக்கள உறவுகள்

ஜே.வி.பி ஒரு மணி நேரம் தூங்கினால்- நாட்டின் அரைப்பங்கை அமெரிக்கா சூறையாடிவிடும்: சோமவன்ச அமரசிங்க

தூங்காமலா ஜேவிபி பற்றி இப்படிக் கனவு கண்டீர்கள். :D ஆனாலும் நீங்கள் முழிச்சுக் கொண்டிருக்கவே, உங்கள் கட்சியைச் சேர்ந்த நந்தன குணதிலகவை மகிந்தர் சூறையாடிவிட்டாராமே! அதை ஏன் தடுக்கமுடியவில்லை?

அமைச்சர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த குழு அமைக்கப்படும்: ஜே.வி.பி

சிறிலங்காவின் நாடாளுமன்ற அமைச்சர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் நோக்குடன் நாடாளுமன்ற குழு ஒன்றை ஜே.வி.பி அமைக்க உள்ளது.

இந்தக்குழு நிலையான எண்ணிக்கையுடைய அமைச்சரவை அமைக்கப்படுவதை கண்காணிப்பதுடன், திட்டமிடப்பட்ட அபிவிருத்தி இலக்குகள், சனத்தொகை, உற்பத்தியின் அளவு மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகள் தொடர்பான விடயங்களை ஆராயும் என தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக ஜே.வி.பியின் கம்பகா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான விஜித ஹேரத் நேற்று வெள்ளிக்கிழமை கூறியதாவது:

"இந்த புதிய திட்டத்தின் பிரகாரம் அரசுகள் மாற்றமடைந்தாலும் அமைச்சர்களின் எண்ணிக்கையில் மாற்றங்கள் ஏற்படுத்த முடியாது. இது தொடர்பான திட்டம் விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

இந்த திட்டம் தொடர்பாக ஏனைய அரசியல் கட்சிகள் தமது கருத்துக்களை முன்வைக்கலாம்" என்றார்.

உலக சாதனையில் இடம்பெறும் வண்ணம் மிகப்பெரும் அமைச்சரவை அரசினால் அமைக்கப்பட்டதன் எதிரொலியாகவே இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதுடன். தற்போதைய அமைச்சரவை 54 அமைச்சர்களையும், 34 அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்களையும் கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

"இந்த அமைச்சரவையில் பங்குபற்றுவது தமக்கு வெட்கக்கேடானது" என அமைச்சர் மைத்திரிபால சிறீசேன மற்றும் பதவி நீக்கப்பட்ட அமைச்சர் சிறீபதி சூரியாராச்சி ஆகியோர் முன்னர் தெரிவித்திருந்தனர்.

மேலும் தான் மீண்டும் அமைச்சரவையில் இணைய வேண்டுமாயின் அமைச்சரவையின் எண்ணிக்கையை 35 ஆக குறைக்கும் படி அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு மங்கள சமரவீர, நேற்று முன்தினம் நிபந்தனையாக விதித்திருந்தார்.

-Puthinam-

ஜே.வி.பி இவ்வளவு காலமும் மகிந்தவின் நிழலில் தூங்கினார்கள்.

இப்போ தூங்குவதற்கு நிழலில்லை. எங்காவது ஒரு நிழலைத் தேடு

கிறார்கள். அமெரிக்கா கொண்டு போனால் என்ன யார் கொண்டு

போனால் என்ன தூங்குவதற்கு யாராவது ஒரு இடத்தை ஒதுக்கிக்

கொடுங்கோ.

ஆமா சோமவன்சா அவர்களே நீங்கள் சொல்லவருவது எமக்கு விளங்குது. உங்க குகைக்குள் இருந்து பிரஸ் பிடிச்சவனான் நான். கண்டி- கம்பொள ரோட்டில என்ன சென்றி பார்க்க விட்ட போது சிங்களவனின் ஐடன்டிகாட்டு செக்கு பண்ண அப்படி இறங்கி வந்து என் முன் உன் சனத்தினையே மண்டியிட வைத்த பற போக்கி நாய்களே( நல்லவர்களே) அப்ப இந்தியன் வந்தான் 1987 ல் புலியினை ஒரம் கட்டிவிட்டு திருகோணமலையை தன் கட்டுப்பாட்டுக்குள் வைக்கலாம் என்று. அப்ப நீங்கள் நினைத்தனீர்கள் இந்தியா தமிழனுக்கு பிரிச்சுக்குடுக்க தான் வருரீனம் எண்டு. அப்ப எங்களின் உதவியுடன் தானே உந்த சீக்ஸ்ஸையும், கூர்க்காமாரையும் இங்கிருந்து போக போடாடினீங்கள். இப்ப அவன் எனி வரமாட்டான். இந்த கடற்கரை பக்கமா தான் நிண்டு அலுப்புத்தருவான். இப்ப அவனுக்கு புலிகளின் பலம் விளங்காது ஏனெண்டால் 1987 ல் தான் அவர்கள் விரல் சுப்பிக்கொண்டு இருந்திருப்பீனம். எனிதான் வந்து புதிசா பரசூட்டில குதிச்சு எம்மட ரலண்ட் என்ன எப்படி இந்தியா குதிக்கிற இடத்தை அப்படி கண்டு பிடித்தான்

என்பதெல்லாம் அதுவும் பிரச்சனை இறுகேக்கதான் எல்லோருக்கும் விளங்கும் விளங்கும்.

ஆகவே இதுகளை எல்லாம் தவிர்கலாம் இப்ப நீங்க முந்தி காட்டின தேசபக்தியினை மீண்டும் எடுத்து விடுங்க. அரசியல்வாதிகளை கொஞ்சம் கவனியுங்க.நீங்க அமெரிக்கா, இங்கிலாந்து போன்றவர்களுக்கு ஏன் வால் பிடிக்கவேண்டும். அவன்களுக்கு சொல்லுங்கோ இந்தியாவுக்கு நடந்த கதைதான் எல்லோருகும் எண்டு. இப்படி சொன்னா அவன் பயந்திருவான் உங்க படயைப்பார்த்து. பின்ன பார்ப்பான் ஏன் உங்களோட தேவையிலாம மோதி வீணாய் உள்ள பெயரையும் இழக்க எண்டு. நீங்கள் வாய்ச்சவாடல்லள் விடுகிறதில உண்மையிலேயே மகா வீரர்கள். ஆனா துப்பாக்கியத்தான் வடிவா ஒப்பரேற்பண்ண தெரியாது. :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.