Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

சென்னை, ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் ரத்து செய்யப்படலாமென வதந்திகள் கிளம்பியுள்ள நிலையில், ''பணப் பட்டுவாடா குற்றச்சாட்டை நம்பி, தேர்தலை ரத்து செய்யும் முடிவை எடுத்துவிட வேண்டாம்,'' என, லோக்சபா துணை சபாநாயகரும், சசிகலா அணியைச் சேர்ந்தவருமான, தம்பிதுரை, தலைமை தேர்தல் கமிஷனரிடம் மன்றாடி கேட்டுள்ளார்.

 

Tamil_News_large_1744295_318_219.jpg

மற்ற மாநிலங்களை விட, தமிழகத்தில் தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து, ஓட்டுகளை வாங்க, அரசியல் கட்சிகள் முயற்சிப்பது அதிகமாக நடப்பதாக, டில்லியில் ஒரு கருத்து நிலவுகிறது.தற்போது, சென்னை, ஆர்.கே.நகர் சட்டசபை இடைத் தேர்தல் நெருங்கும் சூழ்நிலையில், அதே குற்றச்சாட்டுகளுடன், முக்கிய அரசியல் கட்சிகள், டில்லி தலைமை தேர்தல் கமிஷனை மொய்க்க துவங்கியுள்ளன.
இதையடுத்து, தேர்தல் கமிஷன் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சென்னை போலீஸ் கமிஷனரை மாற்றியது, சில உயர் அதிகாரிகளை காத்திருப்பில் வைத்தது என, அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
 

குற்றச்சாட்டு


இந்நிலையில் தான், 'ஆர்.கே.நகர் தேர்தல் ரத்தாகலாம்' என்ற யூகங்கள் கிளம்பின. ஏற்கனவே, சட்டசபை தேர்தலின்போது அரவக்குறிச்சி, தஞ்சை ஆகிய தொகுதிகளில், பணப் பட்டுவாடா காரணமாகவே தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
தற்போதும், அதே குற்றச்சாட்டுகளோடு, அதிகாரம் தவறாக பயன்படுத்தப்படுவதாகவும்

புகார்கள் எழுந்துள்ளதால், தேர்தல்ரத்து என்ற பேச்சு வலுப்பெறத் துவங்கியுள்ளது.
இந்நிலையில், நேற்று லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, டில்லியில் உள்ள தலைமை தேர்தல் கமிஷனுக்கு வந்தார். தேர்தல் கமிஷனர்களை சந்தித்த அவர், ''ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் அதிகாரிகள் மாற்றம் இருக்கக் கூடாது. பணப் பட்டுவாடா என்ற எதிர்க்கட்சிகளின்குற்றச்சாட்டை நிராகரிக்க வேண்டும்,'' என, வலியுறுத்தினார்.

இது குறித்து, அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது:தேர்தல் ரத்து என்ற பேச்சு கிளம்பியுள்ளதன் பின்னணியில் அரசியல் உள்ளது. ஆளும் கட்சியான, அ.தி.மு.க., அம்மா அணி சார்பில் வேட்பாளராக போட்டியிடும் தினகரனின் அரசியல் எதிர்காலமே, இந்த தேர்தலில் தான் உள்ளது.
எப்படியாவது வெற்றி பெற்றாக வேண்டிய நிலையில் அவர் உள்ளார்.

அவர் மீதான வழக்கு விசாரணையும் வேகம் பெற்றுள்ளது. நாள்தோறும் விசாரணை என்ற அளவுக்கு செல்வதால், தீர்ப்பும், நெருக்கத்தில் வர அதிக வாய்ப்பு உள்ளது.
இந்த தீர்ப்புக்கு முன், தான், எம்.எல்.ஏ., ஆகிவிட வேண்டும் என்றும், முக்கிய பதவிக்கு வந்தால் தான், தனக்கு பாதுகாப்பு என்றும் தினகரன் கருதுகிறார்; இதை முறியடிக்க வேண்டுமெனில், அவர், எம்.எல்.ஏ., ஆவதை தாமதப்படுத்த வேண்டும்.
 

பதற்றம்


அதற்கு, தேர்தல் தள்ளிப்போவதே ஒரே வழியென்ற ரீதியில் எதிர்தரப்பு காய் நகர்த்துகிறது. இதை மோப்பம் பிடித்ததால் தான், தினகரன் தரப்புக்கு பதற்றம்

 

ஏற்பட்டுள்ளது.இந்த பின்னணியில் தான், தேர்தல் கமிஷனுக்கு தம்பிதுரை வந்திருந்தார். அவரது மிக முக்கியமான கோரிக்கையே, தேர்தலை எந்த காரணத்தாலும் ரத்து செய்யக் கூடாது என்பதாகவே இருந்தது. ஆர்.கே.நகரில் நேர்மையான முறையில் தான் அனைத்துமே நடப்பதாகவும், தங்களுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதால், அதை ஏற்க முடியாமல், தேர்தலை ஒத்திவைக்கும் முயற்சியில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

 

'சத்தியமாக இல்லை'



தேர்தல் கமிஷனர்களை சந்தித்த பின், தம்பிதுரை கூறியதாவது:இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை; இதில், மிகப்பெரிய சதி நடந்துள்ளது. சின்னத்தை முடக்கியது தேர்தல் கமிஷனின் தவறான முடிவு. இதுவரையில், இடைத் தேர்தல்களை நடத்தியதெல்லாம் பன்னீர்செல்வம் தான்; அவருக்குத் தான் பணப் பட்டுவாடா குறித்து தெரியும்; எங்களுக்கு தெரியாது. நாங்கள் பணப் பட்டுவாடாவில் ஈடுபடவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.
 

அவசர ஆலோசனை


தமிழக அரசின் தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன், டி.ஜி.பி., - டி.கே.ராஜேந்திரன் மற்றும் உள்துறை செயலர், வருமான வரித்துறை இயக்குனர் ஆகியோருடன் தலைமை தேர்தல் கமிஷனர், நஜிம் ஜைதி, டில்லியிலிருந்தே, 'வீடியோ கான்பரன்சிங்' மூலமாக, தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது பணப் பட்டுவாடா, போலி வாக்காளர்கள் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

- நமது டில்லி நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1744295

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.