Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் தினகரன் திடீர் ஆலோசனை... முக்கிய முடிவு எடுக்கப் போவதாக தகவல்!

Featured Replies

ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் தினகரன் திடீர் ஆலோசனை... முக்கிய முடிவு எடுக்கப் போவதாக தகவல்!

 
 

TTV_3_23560.jpg

அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அலுவலகங்களில் ரெய்டு, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து, டி.டி.வி.தினகரன் மீது டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு என்று தொடர் சம்பவங்கள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, இன்று தலைமைச் செயலகம் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் தமிழக அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர்.

ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு, 'தினகரன் குடும்பத்தை ஒதுக்கிவைத்துவிட்டு, ஆட்சியை நடத்துவோம். கட்சியும் ஆட்சியும் ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்கக் கூடாது. பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தைக்கு வந்தால், அவருடன் பேசத் தயார்.' என்று அமைச்சர்கள் கூறினர்.

இந்நிலையில், அ.தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அடையாறு வீட்டில் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் தற்போது ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அ.தி.மு.க.வைச் சேர்ந்த 6-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டுள்ளனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு, டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களைச் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   
 

http://www.vikatan.com/news/tamilnadu/86867-ttv-dinakaran-is-in-discussion-with-his-support-mlas.html

  • தொடங்கியவர்

'தினகரன் தலைமையில் அ.தி.மு.க விண்ணுக்கும் மண்ணுக்கும் விஸ்வரூபம் எடுக்கும்...!'- நாஞ்சில் சம்பத் திட்டவட்டம்

 

nan_2_01222.jpg

அ.தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அடையாறில் இருக்கும் அவரது வீட்டில் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அ.தி.மு.க அம்மா அணி செய்தி தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் அங்கு வந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்து அவர், 'அ.தி.மு.க.வின் திசையை தீர்மானிக்க காலம் தந்த தலைவன் டி.டி.வி.தினகரன். இந்தக் கட்சியை வலுவோடும் பொலிவோடும் தினகரன் வழி நடத்துவார். டெல்லியில் இருக்கும் பா.ஜ.க.வின் அற்பத்தனமான மிரட்டுலுக்கு பயந்து ஆதாயச் சூதாடிகள் எடுக்கிற முடிவுகள் எங்களைக் கட்டுப்படுத்தாது. அ.தி.மு.க உடையவில்லை. ஜெயக்குமாரை நிதி அமைச்சராக உட்கார வைத்து அழகு பார்த்ததே தினகரன் தான். தினகரன் தலைமையில் அ.தி.மு.க விண்ணுக்கும் மண்ணுக்கும் விஸ்வரூபம் எடுக்கும்.' என்று பேசினார்.

முன்னர், தலைமைச் செயலகம் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் தமிழக அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு, 'தினகரன் குடும்பத்தை ஒதுக்கிவைத்துவிட்டு, ஆட்சியை நடத்துவோம். கட்சியும் ஆட்சியும் ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்கக் கூடாது. பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தைக்கு வந்தால், அவருடன் பேசத் தயார்.' என்று அமைச்சர்கள் கூறியது குறிப்பிடத்தக்கது.

http://www.vikatan.com/news/tamilnadu/86871-admk-will-flourish-under-the-leadership-of-dinakaran-says-nanjil-sampath.html

  • தொடங்கியவர்

அனைத்து எம்.எல்.ஏ.க்களும் என்னிடம் உள்ளனர்: டிடிவி. தினகரன்

கட்சியில் எனக்கு எந்த எதிர்ப்பும் இல்லை. அனைத்து எம்.எல்.ஏ.க்களும் என்னிடம் தான் உள்ளனர். விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று டி.டி.வி தினகரன் கூறினார்.

 
 
அனைத்து எம்.எல்.ஏ.க்களும் என்னிடம் உள்ளனர்: டிடிவி. தினகரன்
 
சென்னை:

டி.டி.வி. தினகரன் இன்று காலை 9.30 மணிக்கு பெசன்ட் நகர் இல்லத்தில் இருந்து கோர்ட்டில் ஆஜர் ஆவதற்காக புறப்பட்டார். அப்போது அவரிடம் நிருபர்கள் சரமாரி கேள்விகள் கேட்டனர்.

அதற்கு பதில் அளிக்கையில் டி.டி.வி தினகரன் கூறியதாவது:-

கட்சியில் எனக்கு எந்த எதிர்ப்பும் இல்லை. அனைத்து எம்.எல்.ஏ.க்களும் என்னிடம் தான் உள்ளனர். விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும்.

என் பலத்தை யாருக்கும் நிரூபிக்க வேண்டியது இல்லை. கட்சி, ஆட்சி நலனுக்கு உகந்த முடிவை எடுக்க எனக்கு தெரியும்.
 
201704191112447561_bas-dinakaran-adyar-0

இவ்வாறு அவர் கூறினார்.

அ.தி.மு.க.வின் குழப்பத்துக்கு பா.ஜனதா தான் காரணமா என்று நிருபர்கள் கேட்டதற்கு, இது பற்றி அவர்களிடம் தான் கேட்க வேண்டும் என்றார்.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/04/19111234/1080679/TTV-Dinakaran-Says-majority-of-MLAs-are-supporting.vpf

தினகரன் ஏற்பாடு செய்திருந்த எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் ரத்து

 

சென்னை : இன்று பிற்பகல் 3 மணிக்கு தினகரன் ஏற்பாடு செய்திருந்த எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

கூட்டம் ரத்து :


தினகரன் மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்கு இன்று பிற்பகல் 3 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் பிற்பகல் 3 மணிக்கு எழும்பூர் கோர்ட்டில் தினகரன் ஆஜராக வேண்டும். இதனால் அதே நேரத்தில் நடக்க இருப்பதாக இருந்த ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் உடனான கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

 

கூட்டம் நடத்த முடியாது :

 

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தை நடத்த முடியாது என தெரிவித்துள்ளார். தினகரன் இன்று அழைப்பு விடுத்திருந்த எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் செங்கோட்டையன் கலந்து கொள்வாரா என்ற கேள்வி எழுந்திருந்த நிலையில், தினகரனுக்கு எதிராக செங்கோட்டையன் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1754625

 

 

 

கட்சியிலிருந்து நேற்றே ஒதுங்கிவிட்டேன்! டி.டி.வி.தினகரன் தடாலடி பேட்டி

 
 
 

ttv_dinakaran_intervier_2aa_11110.jpg

அ.தி.மு.க.வில் இருந்து ஒதுக்கியதால் நான் வருத்தப்படுவில்லை. நேற்றே கட்சியிலிருந்து ஒதுங்கிவிட்டேன் என்று டி.டி.வி.தினகரன் தடாலடியாக கூறியுள்ளார்.


சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், அ.தி.மு.க அம்மா அணியிலிருந்து ஒதுக்கப்பட்டதற்காக தான் வருந்தவில்லை. நேற்று இரவே கட்சியிலிருந்து ஒதுங்கிவிட்டேன். அமைச்சர்கள் தற்போது நடத்திய கூட்டத்தில் என்னையும் அழைத்திருந்தால் சென்றிருப்பேன். கட்சியும் ஆட்சியும் பிளவுபட தான் ஒருபோதும் காரணமாக இருக்கமாட்டேன்.

கட்சியில் சிலருக்கு ஏற்பட்ட அச்சத்தால் மட்டுமே தற்போதைய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், அவசரக்கதியில் அமைச்சர்கள் தங்கள் முடிவை அறிவித்துள்ளனர். கட்சியில் இருந்து நான் நேற்றே ஒதுங்கிவிட்டதால் கட்சிக்கு நன்மை அளிக்கும் எந்த முடிவுக்கும் நான் ஒத்துழைப்பேன் என தெரிவித்துள்ளார்.

இதனிடையே, டி.டி.வி.தினரகன் ஆதரவு எம்எல்ஏவான தங்கதமிழ்ச்செல்வன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "அமைச்சர்களின் அவசர நடவடிக்கையில் ஏதோ பின்னணி உள்ளது. அமைச்சர்கள் தன்னிச்சையாக செயல்படுகின்றனர்.
எம்எல்ஏக்கள் கூட்டம் கூட்ட எங்களுக்கு அதிகாரம் உள்ளது" என்று தெரிவித்தார்.

இந்நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் எம்.எல்.ஏ.க்களின் கூட்டத்தை டி.டி.வி.தினகரன் நடத்த முடியாது என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

http://www.vikatan.com/news/tamilnadu/86893-wasnt-upset-for-being-destituted-from-the-party.html

  • தொடங்கியவர்

முற்றும் நெருக்கடி: திணறும் தினகரன்

 

 
ttv_dinakaran_3133243f.jpg
 
 
 

தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், அந்நிய செலாவணி வழக்கில் இன்று காலை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரான தினகரன் மீதான விசாரணை பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று மாலை 3 மணிக்கு நடைபெறவிருந்த தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது போன்ற கூட்டம் நடைபெறாது, நடத்த முடியாது என்று அவைத்தலைவர் செங்கோட்டையன் அறிவித்திருக்கிறார்.

ரத்தாகும் டெண்டர்கள்?

சென்னை தலைமை செயலகத்தில் அனைத்து துறை செயலாளர்களும் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும், தினகரன் ஆதரவாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள டெண்டர்களை ரத்து செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தலைமை செயலக வட்டாரங்களில் இருந்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடையவை

http://tamil.thehindu.com/tamilnadu/முற்றும்-நெருக்கடி-திணறும்-தினகரன்/article9648813.ece?homepage=true

  • தொடங்கியவர்

‘இனி யாரும் தினகரனை ஆதரிக்க வேண்டாம்!’ - திவாகரனின் ‘திடீர்’ உற்சாகம் #VikatanExclusive

 
 

நடராசன்-திவாகரன்

அ.தி.மு.கவின் இரண்டு அணிகளும் இணைவதில் சசிகலாவின் தம்பி திவாகரன் உள்பட குடும்பத்தினர் பலரும் மகிழ்ச்சியாக உள்ளனர். 'அமைச்சர்கள் அனைவரும் ஒன்று திரண்டு சரியான முடிவை எடுத்துள்ளனர். அம்மாவின் ஆட்சியைத் தொண்டர்கள் தொடர வேண்டும் என்பதுதான் எங்களின் விருப்பம்' எனவும் அதிர வைக்கின்றனர்.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக, அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்தே மருத்துவமனையின் இரண்டாவது மாடியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது திவாகரன் குடும்பம். மருத்துவமனை வாசலில் நின்றபடியே, நிர்வாகிகளுக்கு உத்தரவிடுவது என வலம் வந்தார் திவாகரன். ஜெயலலிதாவின் மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடுகளுக்குப் பயணம் செய்தார் அவருடைய மகன் ஜெயானந்த். அவருடைய மகள் ராஜமாதங்கியும் அப்போலோவிலேயே தங்கினார். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, ஆளுநர் வித்யாசாகர் ராவ் உள்பட முக்கிய புள்ளிகள் ஜெயலலிதா உடல்நலனை விசாரிக்க வந்தபோதும், அவரது குடும்பமே முன்னிலை வகித்தது. ஜெயலலிதா இறந்த பிறகு, ராஜாஜி ஹாலில் திவாகரனே முன்னின்றார். ஆனால், அடுத்து வந்த நாட்களில் இந்தக் குடும்பத்தை ஓரம்கட்டிவிட்டு தினகரனும் டாக்டர்.வெங்கடேஸும் லைம் லைட்டுக்கு வந்தனர். சசிகலாவின் நடை, உடை, பாவனைகளில் மாற்றத்தைக் கொண்டு வந்தார் தினகரன்.

'இனி சசிகலா குடும்பத்தில் யாருக்கும் இடமில்லை' என டி.டி.வி. அளித்த பேட்டியால் கொந்தளித்துப் போனார் திவாகரன். 'குடும்பத்தில் உள்ளவர்களுக்கு இடம் இல்லை என்றால், இவர் எந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்? அவருக்குத் தேவையில்லாமல் அதிகாரத்தை வழங்கிவிட்டீர்கள். அவர் நம் குடும்பத்தை மட்டுமல்ல. ஆட்சியையே கவிழ்க்கப் போகிறார். தளவாய் சுந்தரத்தை வைத்துக் கொண்டு ஆடுகிறார். அமைச்சர்கள் பலரும் அதிருப்தியில் உள்ளனர்' என பெங்களூரு சிறையிலேயே சசிகலாவிடம் எடுத்துச் சொன்னார். "சசிகலாவையே ஓரம்கட்டும் அளவுக்கு தினகரனின் நடவடிக்கைகள் எல்லை மீறிப் போய்விட்டன. அவரை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. ' அமைதியாக இருந்து காரியம் சாதிக்கலாம்' என குடும்பத்தின் மூத்தவர்கள் சொன்னதையும் கேட்காமல், தன்னைத்தானே வேட்பாளராக அறிவித்துக் கொண்டார். இதுதான் வினையாகிப் போனது" என விவரித்த சசிகலா குடும்ப உறவினர் ஒருவர், 

ஜெயானந்த் திவாகரன்

" ஜெயலலிதா இறந்த பிறகு, கட்சியைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான வேலைகளில் திவாகரன் இறங்கினார். மத்திய அரசின் நெருக்கடிகளை உணர்ந்து, ' இது ஆரியர் கட்சி அல்ல. திராவிடர் கட்சி' எனவும் ஆவேசப்பட்டார். சசிகலாவின் கணவர் நடராசனும், 'ஆமாம். நாங்கள் குடும்ப ஆட்சியை செய்வோம்' எனக் கொதித்தார். திவாகரன் கை ஓங்கும் நேரத்தில், சசிகலாவை கைப்பிடிக்குள் வைத்துக் கொண்டார் தினகரன். ' குடும்ப ஆட்சி என்று வெளியில் விமர்சனம் செய்கிறார்கள். ஆட்சி அதிகாரத்துக்குள் அவர்கள் ஜெயானந்த்தலையிடுகிறார்கள். அமைச்சர்களால் சுயமாக முடிவெடுக்க முடியவில்லை. யாருக்குக் கட்டுப்படுவது என அவர்களுக்குத் தெரியவில்லை. அவர்களை ஒதுங்கியிருக்கச் சொல்லுங்கள்' எனக் கூறிவிட்டார். சசிகலாவும், ' கார்டன் நிர்வாகத்தை வெங்கடேஷும் கட்சி நிர்வாகத்தை தினகரனும் கவனித்துக் கொள்ளட்டும்' எனக் கூறிவிட்டே சிறை சென்றார். இதனை திவாகரன் தரப்பினர் ரசிக்கவில்லை.

முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்கும்போதும், ஆளுநர் வித்யாசாகர் ராவை தனியே சந்தித்தார் திவாகரன். ' தங்களால்தான் விவகாரம் எளிதாக முடிந்தது' என டி.டி.விக்கு சுட்டிக் காட்டினர். இதன்பின்னரும் திவாகரன் சம்பந்தியான போலீஸ் அதிகாரி ஜெயச்சந்திரனை கரூருக்கு இடமாற்றம் செய்து குடும்ப உறவுகளின் கோபத்தை சம்பாதித்தார். 'இதற்கு மேலும் தினகரனை வளர்த்துவிட்டால், அனைவருக்கும் ஆபத்து' என்று உணர்ந்ததால்தான், இணைப்பு முயற்சிகளுக்கு அவரும் ஆதரவு தெரிவித்தார்.

சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவன் இறந்தபோது, தினகரனையும் திவாகரனையும் அழைத்து சமசரம் பேசினார் நடராசன். 'நீங்கள் ஒற்றுமையாக இருக்கவில்லையென்றால், எல்லாம் நம் கையைவிட்டுப் போய்விடும். அமைதியாக இருங்கள்' என வலியுறுத்தினார். இந்த சமசரத்துக்கு தினகரன் உடன்படவில்லை. எதிர்பார்த்தது போலவே, ஆட்சியும் கட்சியும் கையைவிட்டுப் போய்விட்டது. இதனால் திவாகரன் தரப்புக்கு எந்த இழப்பும் இல்லை" என்றார் விரிவாக. 

அ.தி.மு.கவின் இரண்டு அணிகளும் இணைவதை வரவேற்று கருத்து தெரிவித்திருந்தார் திவாகரன் மகன் ஜெயானந்த். இதுகுறித்து அவருடைய விளக்கத்தை அறிய தொடர்பு கொண்டோம். "தொண்டை வலி அதிகமாக இருப்பதால், அவரால் பேச முடியவில்லை" என விவரித்த அவருடைய உதவியாளர், "முன்னாள் முதல்வர் அம்மாவின் உழைப்பால் உயர்ந்த கட்சி இது. கழகத்தின் மூத்தவர்களும் தொண்டர்களும் இணைந்து கட்சியை வழிநடத்த வேண்டும் என்பதுதான் திவாகரனின் விருப்பம். இப்படியொரு முடிவை நாங்களும் வரவேற்கிறோம். கட்சி உடையாமல் காக்க இது ஒன்றுதான் ஒரே வழி" என்றார். 

http://www.vikatan.com/news/tamilnadu/86909-divakaran-excited-about-dinakarans-situation.html

  • தொடங்கியவர்
தினகரன் பின்வாங்கியது எப்படி?அசைய வைத்த அனுராதா

 

 

சென்னை:
கட்சியில் இருந்து தினகரன், சசிகலா ஆகியோரோடு, அவர்களது குடும்பத்தினரும் ஒதுங்க வேண்டும் என்று, தமிழக அமைச்சர்கள், முதல்வர் பழனிச்சாமி தலைமையில் கூடி முடிவெடுத்தனர்.

அதைத் தொடர்ந்து, ஒட்டுமொத்த சசிகலா குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்தனர். குறிப்பாக, தினகரனின் மனைவி அனுராதா ரொம்பவே கவலை அடைந்தார். இதற்கிடையில், தினகரன் இல்லத்துக்கு, தங்கதமிழ்ச் செலவன், வெற்றிவேல், சுப்பிரமணியன் உள்ளிட்ட சில எம்எல்ஏக்கள் மட்டும் சென்றனர். அவர்கள், இனியும் நாம் சும்மா இருக்க வேண்டாம்; நம்முடைய ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் அனைவரையும் ஒன்று திரட்டுவோம். இனிமேல் ஒரு நாள் கூட பழனிச்சாமி ஆட்சி தொடரக் கூடாது. அமைச்சர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டால், எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் இளிச்சவாயர்களா? இவர்கள் சொல்வது படியெல்லாம் கேட்பதற்கு நாம் தலையாட்டி பொம்மைகள் அல்ல என்று சீற்றத்துடன் கருத்துச் சொல்லியிருக்கின்றனர்.தங்கத் தமிழ்ச் செல்வனும், வெற்றிவேலும்தான், பழனிச்சாமி ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று பேசியதாக தெரிகிறது. அதையடுத்தே, தலைமைக் கழகத்தில் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடத்தப்படும்; அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்து பேசி முடிவெடுக்கப்படும் என, நடு இரவில் தெரிவித்தார் தினகரன்.

 

அனுராதா அட்வைஸ்?:

 

ஒட்டுமொத்த சம்பவங்களையும் கவனித்துக் கொண்டிருக்கும் தினகரன் மனைவி அனுராதா, இதெல்லாம் தேவையில்லாத வேலை என்று, கணவருக்கு அட்வைஸ் செய்திருக்கிறார். அதைத் தொடர்ந்தே, தினகரன் தனது நிலைப்பாட்டை திடீரென மாற்றிக் கொண்டு, அமைச்சர்கள் விருப்பப்படி ஒதுங்கி இருக்கிறேன் என அறிவித்து விட்டார் என, தினகரனுக்கு நெருக்கமானவர்கள் கூறினர்.
அவர்கள் மேலும் கூறியதாவது:அமைச்சர்கள், முதல்வர் வீட்டில் தொடர்ச்சியாக நான்கு நாட்கள் இரவிலும் கூடி, விவாதித்த அத்தனை விஷயங்களையும், தனது தொடர்புகள் மூலமாக தனியாக திரட்டினார் தினகரன் மனைவி அனுராதா. அதில், ஆறு எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமே, தினகரனுக்கு ஆதரவாக திரண்டிருப்பதாகவும், அதிலும் சிலர், மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் போய்விடக் கூடும் என்றும் தகவல் கிடைத்திருக்கிறது.இதற்கிடையில், தினகரன் கூடவே இருந்து, மத்திய அரசை பகைத்துக் கொள்வதில் இருந்து, அமைச்சர்களையும், கட்சியின் மூத்த தலைவர்களையும் பகைத்துக் கொள்வது வரையில், எல்லா விஷயங்களுக்கும் காரணமாக இருந்த அந்த சுந்தரத் தலைவர் மீது, அடுக்கடுக்கான புகார்கள், அனுராதாவுக்கு வந்து கொண்டே இருந்தன.
அவரின் தவறான வழிகாட்டுதல்தான் இத்தனைக்கும் காரணம் என்றும் அவர் அறிந்து கொண்டார். உடனே, அவர், தனக்கு நேரடி தொடர்பில் இருக்கும் சில அமைச்சர்களைத் தொடர்பு கொண்டு, உண்மையில் நடந்தது என்ன என்று கேட்டறிந்தார். அமைச்சர்கள் பலரும், தினகரன் சமீப நாட்களில் நடந்து கொண்ட அத்தனை விதங்களைக் கூறி வருத்தப்பட்டுள்ளனர்.தேர்தல் கமிஷனில் சசிகலாவின் பொதுச் செயலர் பதவிக்கு சிக்கல் வந்தது, தினகரன் மீதான பெரா வழக்கு திடீர் என உயிர் பெற்றது, தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுத்த பிரச்னையில் சிக்கியிருப்பது என பல்வேறு விஷயங்கள் ஒரே நேரத்தில் தினகரன் கழுத்தை நெரிப்பதற்குக் காரணம், நிலைமை புரியாமல், தினகரன் நடந்து கொண்டதுதான் என்பதை அறிந்து கொண்டார்.

 

பாதிப்பால் ஆத்திரம்:

தினகரனுக்கு ஆதரவாளர்களாக அணி திரளும் அத்தனை எம்.எல்.ஏ.,க்களும், சிலரால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த ஆத்திரத்தையெல்லாம், தினகரனை வைத்துக் கொண்டு அவர்கள் மேல் காட்டினர். அதெல்லாம் கூட, தினகரனுக்கு எதிரான பிரச்னை தலைக்கு மேல் செல்வதற்கு காரணம் என்றும் சொல்லப்பட்டது.

 

அமைச்சர்கள் பல்டி:

நேற்று வரை, தினகரன் அணியில் இருந்த உடுமலை ராதாகிருஷ்ணன், ஓ.எஸ்.மணியன், திண்டுக்கல் சீனிவாசன், கடம்பூர் ராஜூ, ஆர்.காமராஜ், ஆர்.பி.உதயக்குமார், செல்லூர் ராஜூ, தங்கமணி, வீரமணி, வேலுமணி, வெல்லமண்டி நடராஜன், சி.வி.சண்முகம், செங்கோட்டையன், ஜெயக்குமார், ராஜேந்திர பாலாஜி, விஜயபாஸ்கர் உள்ளிட்ட அமைச்சர்கள் பலரும், அப்படி அப்படியே தினகரனை கழட்டி விட்டு விட்டு, எடப்பாடி பழனிச்சாமி பக்கம் அணி திரண்டு, ஓ.பன்னீர்செல்வத்தை வரவேற்றுக் கொண்டிருக்கின்றனர். அப்படிப்பட்டவர்களையெல்லாம் நம்பி தினகரன் அரசியல் செய்ததே தவறு.
இப்படி மொத்த விவரங்களையும் திரட்டிய அனுராதா, தினகரனிடம் நிறைய பேசினார். அப்போது, நடந்த சம்பவங்கள் அனைத்தையும் தினகரனிடம் கூறி, அமைதியாக, அமைச்சர்கள் விருப்பம் போல ஒதுங்கி விடுங்கள். இல்லையென்றால், அவர்கள் தொண்டர்களை திரட்டி உங்களை விரட்டி அடிக்கக் கூடும். அது, அவமானத்தை ஏற்படுத்தி விடும். இனி, எக்காரணம் கொண்டும் போயஸ் தோட்டம் பக்கமோ, தலைமைக் கழகம் பக்கமோ போக வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.இது என்னுடைய கருத்து மட்டுமல்ல; ஒட்டுமொத்த நம் குடும்பத்தினரின் கருத்தும்தான். மன்னார்குடி குடும்பம் மாபியா குடும்பம் என்று எல்லா மட்டங்களிலும் சொல்லப்படுகிறது. இந்த மன்னார்குடி குடும்பத்தின் ஒட்டுமொத்த கருத்தும் கூட, சசிகலாவும், தினகரனும் கட்சி ஆட்சியில் இருந்து ஒதுங்க வேண்டும் என்பதுதான்.
குடும்பமும் கைவிட்ட பின்னால், யாரை நம்பி நீங்கள் எதிர்த்து நிற்கப் போகிறீர்கள். உங்களை ஆதரிப்பதாக கூறும் ஆறு எம்.எல்.ஏ.,க்களும் கூட, நாளையே கூட, அந்தப் பக்கம் போய் விடுவர். அதனால், மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்க வேண்டாம். பெரும் ஆபத்தில் முடியும். எனவே, அமைதியாக, ஒதுங்கி விடலாம். அதுதான், நமக்கும் நமது குடும்பத்துக்கும் நல்லது. இப்போதைக்கு ஒதுங்குங்கள். பிறகு எப்படி போகிறது என பார்த்துவிட்டு, அதன்படி செயல்படலாம் என்று உறுதிபட கூறியிருக்கிறார் அனுராதா. தினகரன் தீர்க்கமாக அதன்பின் யோசித்திருக்கிறார். அதைத் தொடர்ந்தே, அவர், அமைச்சர்கள் விருப்பப்படி, கட்சி மற்றும் ஆட்சியில் இருந்து ஒதுங்கிக் கொள்வதாக அறிவித்தார். இவ்வாறு அந்த உறவினர்கள் கூறினர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1754643

  • தொடங்கியவர்

ட்விட்டரில் டி.டி.வி.தினகரன் உருக்கம்!

 
 

'தனக்கு ஒத்துழைப்பு தந்த நிர்வாகிகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி' என ட்விட்டரில் உருக்கமாகத் தெரிவித்துள்ளார் டி.டி.வி.தினகரன்.

dinakaran

தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில், தான் நேற்றே கட்சியில் இருந்து ஒதுங்கிவிட்டேன் எனக் கூறி, இன்று காலை அதிரவைத்தார், டி.டி.வி தினகரன். மேலும், 'அ.தி.மு.க-வில் இருந்து என்னை ஒதுக்கியதால் நான் கவலைப்படவில்லை. என்னை ஒதுக்குவதால் அவர்களுக்கு நன்மை என்றால், அதுவே நடக்கட்டும். கட்சியோ ஆட்சியோ, பிளவுபட நான் காரணமாக இருக்க மாட்டேன். நேற்றே நான் ஒதுங்கிவிட்டேன்' எனத் தெரிவித்து, இன்று அவர் தலைமையில் நடக்க இருந்த எம்எல்ஏ-க்கள் கூட்டத்தையும் ரத்துசெய்வதாக அறிவித்தார். 

ttv dinakaran

தற்போது, தனது விலகல் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுவரும் தினகரன், 'இக்கட்டான சூழ்நிலையில் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் பதவியை ஏற்றுக்கொண்டேன். ஏதோ ஒரு அச்சம் காரணமாக அமைச்சர்கள் என்னையும், குடும்பத்தினரையும் ஒதுங்கி இருக்கச் சொல்கிறார்கள். பொது வாழ்க்கையில் அச்சம் இருக்கக்கூடாது. நான் ஒதுங்கி இருப்பதனால் கட்சிக்கு நன்மை என்றால், ஒதுங்கியிருப்பதில் தப்பில்லை என நினைக்கக்கூடிய முதிர்ச்சி உள்ளவன்.

கட்சியும் ஆட்சியும் பலவீனம் ஆவதற்கு நான் என்றும் காரணமாக இருக்க மாட்டேன். எனக்கென்று ஒரு பொறுப்பு உண்டு என்ற எண்ணத்தில் சொல்கிறேன், எந்தக் காரணத்தைக்கொண்டும் கட்சி பிளவுபட்டுவிடக்கூடாது; அனைவரும் ஒற்றுமையாக இருங்கள். எனக்கு இதுவரை ஒத்துழைப்பு நல்கிய அத்துணை கழக நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

http://www.vikatan.com/news/politics/86918-ttvdinakaran-conveys-his-gratitude-in-twitter.html

  • தொடங்கியவர்

தினகரன் மீதான புகார்: சுகேஷ் சந்தரை சென்னைக்கு அழைத்து வருகிறது டெல்லி போலீஸ்

இரட்டை இலை சின்னம் வழங்க லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட இடைத்தரகர் சுகேஷ் சந்தரை டெல்லி போலீசார் இன்று சென்னைக்கு அழைத்து வருகின்றனர்.

 
 
 
 
தினகரன் மீதான புகார்: சுகேஷ் சந்தரை சென்னைக்கு அழைத்து வருகிறது டெல்லி போலீஸ்
 
சென்னை:

அ.தி.மு.க.வின் சின்னமான இரட்டை இலை சின்னத்திற்கு சசிகலா அணியும், ஓ.பி.எஸ். அணியும் உரிமை கோரியதால் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கி உள்ளது. அத்துடன், இரட்டை இலையை யாருக்கு வழங்குவது? என்பது குறித்து இரு தரப்பினரிடமும் பிரமாணப் பத்திரங்கள் பெற்று அதன் அடிப்படையில் முடிவு செய்ய உள்ளது.

இந்த சூழ்நிலையில், டெல்லியில் கைது செய்யப்பட்ட இடைத் தரகர் சுகேஷ் சந்திரசேகரிடம் நடத்திய விசாரணையில், இரட்டை இலை சின்னத்தை பெற்றுக் கொடுப்பதற்காக டி.டி.வி.தினகரனிடம் 50 கோடி ரூபாய் பேரம் பேசியதாக தெரிவித்தார். இதையடுத்து, தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தினகரன் மீது டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அத்துடன் சென்னை வந்து விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
201704191904018920_vote._L_styvpf.gif
இதற்கிடையே, கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்தரை 8 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணையில், மேலும் புதிய தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, சுகேஷ் சந்தருடன் டெல்லி போலீசார் இன்று மாலை சென்னைக்கு புறப்பட்டனர். இன்று இரவு சென்னை வந்து சேர்கிறார்கள். பின்னர், சுகேஷ் சந்தர் கொடுத்த தகவலின் அடிப்படையில் லஞ்சப் புகார் தொடர்பாக சென்னையில் டெல்லி போலீசார் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/04/19190351/1080789/delhi-police-to-arrive-soon-in-chennai-today-to-investigate.vpf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.