Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்னையில் டெல்லி குற்றப்பிரிவு போலீஸார்: தினகரனை இன்று விசாரிக்கின்றனர்

Featured Replies

சென்னையில் டெல்லி குற்றப்பிரிவு போலீஸார்: தினகரனை இன்று விசாரிக்கின்றனர்

 
 

டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் சென்னை வந்தடைந்தனர். டி.டி.வி தினகரனிடம் இன்று அவர்கள் விசாரணை நடத்த இருக்கிறார்கள்.

ttv.dinakaran

இரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்காக டி.டி.வி தினகரன் லஞ்சம் கொடுத்ததாக, டெல்லி போலீஸில் புகார் தரப்பட்டது. இதையடுத்து, டெல்லி குற்றப்பிரிவு போலீசார் தினகரன் மீது வழக்குப்பதிவு செய்தனர். 
இந்த வழக்கு தொடர்பாக, சுகேஷ் சந்தர்  என்பவர் கைதுசெய்யப்பட்டார். அவரிடம் இருந்து 1.5 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இரட்டை இலைச் சின்னம் பெறுவதற்காக தினகரனிடம் இருந்து பணம் வாங்கியது தெரிய வந்தது. இது தொடர்பான எப்ஐஆர் நகலையும் நேற்று வெளியிட்டது போலீஸ்.

இதுகுறித்து தினகரனிடம் விசாரணை நடத்த, ஏ.சி.பி. சஞ்சய் ராவத் தலைமையில் டெல்லி போலீஸ் நேற்று சென்னை வருவதாகத் தகவல் வெளியானது. இந்த நிலையில், அவர்கள் இன்று காலை சென்னை வந்தடைந்தனர். அ.தி.மு.க இரட்டை இலைச் சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுத்த குற்றச்சாட்டு தொடர்பாக, டி.டி.வி.தினகரனிடம் இன்று விசாரணை நடத்த உள்ளனர். 

  • தொடங்கியவர்

தினகரன் விரைவில் கைதாகலாம்!

 

தினகரன்

'இரட்டை இலைச் சின்னத்தை பெறுவதற்காக 50 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயற்சித்த வழக்கில், டி.டி.வி தினகரன் விரைவில் கைதாகலாம்' என்று தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் கைது செய்யப்பட்ட இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கொடுத்த தகவலின் பேரில், டெல்லி போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஜெயலலிதா மரணத்தில் தொடங்கிய அரசியல் அதிர்வு இன்னும் ஓய்ந்தபாடில்லை. இப்படியான ஒரு மாற்றம் இதுவரை இந்திய அரசியலில் நிகழ்ந்திருக்குமா? என்பது கூட சந்தேகம்தான். அந்த அளவுக்கு தமிழக அரசியல் களம் மிகப் பெரிய மாற்றத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறது. "மோசமானவற்றில் இருந்து மிக மோசமான நிலைக்கு மாறுவதுதான் அரசியல் மாற்றம்" என்றார் பெரியார். அதுதான் தற்போது தமிழக அரசியலில்  நிகழ்ந்து வருவதாக அரசியல் ஆர்வலர்கள்  கருத்து தெரிவிக்கின்றனர்.

முதலமைச்சர் ஜெயலலிதா மறைவை அடுத்து சசிகலா அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி என அ.தி.மு.க இரண்டாக உடைந்தது. இந்த இரு அணிகளுக்கு இடையே ஏற்பட்ட ஆட்சி அதிகாரப் போட்டிக்கான காய் நகர்த்தலால் 'பெரும்பான்மையை நிரூபிக்க வாக்கெடுப்பு' எனும் பரபரப்பு அரங்கேற்றப்பட்டு தமிழக அரசியல் களம் மிகப்பெரிய மாறுதலையும் சந்தித்தது.

இந்த நிலையில், ஆர்.கே நகருக்கான இடைத்தேர்தல் அறிவிப்பும் வெளியானது. தி.மு.க., பி.ஜே.பி உள்ளிட்ட கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து களமிறங்கிய நிலையில், ஓ.பன்னீர்செல்வம் அணியும், சசிகலா அணியும் 'இரட்டை இலைச் சின்னத்தை தங்களுக்குத்தான் ஒதுக்க வேண்டும்' என்று தேர்தல் ஆணையத்தில் முறையிட்டு நின்றன.

இரட்டை இலைக்கான சண்டை!

இதனை விசாரித்த தேர்தல் ஆணையம், இரட்டை இலைச் சின்னத்தை எந்த அணிக்கும் வழங்காமல் முடக்கி வைத்தது. மேலும், 'அ.தி.மு.க-வின் பெயரையும் இரு அணியினரும் பயன்படுத்தக் கூடாது' என்றும் உத்தரவிட்டது. இதையடுத்து, இரு அணிகளுக்கும் தனித்தனியான சின்னத்தையும், கட்சிப் பெயரையும் ஒதுக்கியது தேர்தல் ஆணையம். 

இந்த நிலையில், கடந்த 6-ம் தேதி ஆர்.கே நகரில், பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதாக அரசியல் கட்சிகளிடையே மோதல் ஏற்பட்டது. இந்தப் பட்டுவாடாக் குற்றச்சாட்டில் அமைச்சர் விஜயபாஸ்கரின் பெயர்  அடிபட்டது. இதையடுத்து அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் எம்.பி சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், ச.ம.க தலைவர் சரத்குமார், எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக் கழக துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோரின் வீடுகளில் வருமானவரித்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனையில் பணப்பட்டுவாடா தொடர்பான ஆவணங்கள் சிக்கியதாக  வருமானவரித்துறை தெரிவித்தது. இந்த தகவல் தேர்தல் ஆணையத்துக்குப் போக 12-ம் தேதி நடைபெற இருந்த ஆர்.கே நகர் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்து உத்தரவிட்டது. 

சின்னத்துக்காக பணம் கொடுத்தது அம்பலம் ! 

இந்த பரபரப்பு  ஓய்வதற்குள் சசிகலா அணியும் ஒ.பன்னீர்செல்வம் அணியும் சேருவதற்கான  வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதேநேரம் சுகேஷ் சந்திரசேகரிடம் நடத்திய விசாரணையில், தேர்தல் ஆணையத்திடம் இருந்து இரட்டை இலை சின்னத்தைப் பெற்று தருவதற்காக டி.டி.வி தினகரனிடம் இருந்து பணம் வாங்கியதாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து சுகேஷிடம் இருந்து 1.3 கோடி ரூபாய் பணம் மற்றும் சொகுசு கார்களையும் டெல்லி போலீசார் பறிமுதல் செய்தனர். 

இரட்டை இலைச் சின்னத்தைப் பெற்றுத்தருவதற்காக, டி.டி.வி தினகரனிடம்  50 கோடிக்கு ரூபாய்க்கு பேரம் பேசியதாகவும் சுகேஷ் கூறியுள்ளார். முன் பணமாக சுகேஷ் வாங்கியத் தொகையான 1.3 கோடி ரூபாய் மற்றும் டி.டி.வி தினகரனுடன் பேசிய ஆடியோ ஆகியவற்றை டெல்லி போலீசார் கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். 

தினகரன் மீது வழக்கு பதிவு ..! 

இதன் அடிப்படையில் தினகரன் மீது டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனால் தினகரனை விசாரிக்க டெல்லி போலீசார் சுகேஷ் சந்திரசேகர்சென்னை வர உள்ளதாகவும்  தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், சசிகலாவை சந்திக்க பெங்களூரு சென்ற தினகரன் அவரை சந்திக்கும் திட்டத்தை ஒத்திவைத்துவிட்டு அங்கேயே வழக்கறிஞர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டதாகவும் சொல்கின்றனர்.

இதுகுறித்துப் பேசும் டெல்லித் தரப்பினர், "தினகரனை விசாரிக்க டெல்லி போலீசார் சென்னை வர தயாராகி வருகின்றனர். அவர்கள் எந்த நேரத்திலும் அங்கு வரலாம். ஏற்கெனவே மத்திய உளவுப்பிரிவு அதிகாரிகள் சென்னை வந்துவிட்டார்கள்" என்ற ரகசியத் தகவலையும் கசியவிடுகின்றனர். 

சுகேஷ் சொல்லிய பி.ஜே.பி தலைவர் ? 

டெல்லி பி.ஜே.பி வட்டாரத்தில் பேசியபோது, ''தேர்தல் ஆணையத்திடம் இருந்து கட்சியையும் சின்னத்தையும் சசிகலா அணிக்கு சாதகமாக முடித்துக் கொடுக்க  பி.ஜே.பி-யைச் சேர்ந்த இரு தலைவர்கள் செயல்பட்டனர்'' என்கின்றனர். விசாரணையிலும் பி.ஜே.பி-யில் உள்ள அந்த தலைவரின் பெயரை  சுகேஷ் சந்திரசேகர் உச்சரித்துள்ளதாகவும் போலீஸ்  வட்டாரங்கள் கூறுகின்றன. ''இந்தத் தகவல், பி.ஜே.பி-யின் மேலிடத்துக்கும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், மேலிடம் நடவடிக்கை எடுக்குமா? என்பதுதான் சந்தேகம்'' என்கிறார்கள். 

சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டது குறித்து தினகரனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, "அவர் யார் என்றே எனக்கு தெரியாது. தெரியாதவர்களிடம் நான் எப்படி பேசியிருக்க முடியும்?" என்றும் கேள்வி எழுப்பியிருந்தார் . 

மீண்டும் பெரியாரின் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது .."கெட்டதில் இருந்து கழிசடைக்கு மாறுவதுதான் அரசியல் மாற்றம்!" 

http://www.vikatan.com/news/tamilnadu/86862-dinakaran-can-get-arrested-soon-says-delhi-sources.html

  • தொடங்கியவர்

டெல்லி போலீசார் கைது செய்ய தீவிரம்: தினகரன் தேடப்படும் நபராக அறிவிப்பு

 
 

டெல்லி போலீசார் கோர்ட்டில் சிறப்பு அனுமதி பெற்று டி.டி.வி.தினகரனை தேடப்படும் நபராக அறிவித்துள்ளனர். இதற்கான அறிவிப்பை போலீசார் நேற்று வெளியிட்டனர். விமானம் மூலம் அவர் வெளிநாட்டுக்கு சென்று விடக்கூடாது என்பதற்காக உஷார்படுத்தப்பட்டுள்ளது.

 
 
 
 
டெல்லி போலீசார் கைது செய்ய தீவிரம்: தினகரன் தேடப்படும் நபராக அறிவிப்பு
 

சென்னை:

அ.இ.அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக ரூ.50 கோடி பேரம் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாக டெல்லியில் நேற்று முன்தினம் இடைத்தரகர் சுகாஷ் என்ற சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து ரூ.1.30 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. 2 கார்களும் கைப்பற்றப்பட்டன.

சுகேசிடம் டெல்லி குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தியபோது இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக ரூ.50 கோடி பேரம் பேசிய டி.டி.வி.தினகரன் முதல் கட்டமாக ரூ.10 கோடியை ஹவாலா மூலம் கொச்சியில் இருந்து டெல்லிக்கு அனுப்பி வைத்ததாக வாக்குமூலம் கொடுத்தான். இதையடுத்து அவனது செல்போன் தொடர்புகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

அப்போது டி.டி.வி. தினகரனுடன் இடைத்தரகர் சுகேஷ் கடந்த 15-ந்தேதி பலதடவை பேசியிருப்பது தெரிய வந்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து டி.டி.வி.தினகரன் மீது டெல்லி குற்றப்பிரிவு போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

201704191133223040_suresh._L_styvpf.gif

டி.டி.வி.தினகரனிடம் நேரில் விசாரணை நடத்தவும் டெல்லி போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக அவர்கள் நேற்று சென்னை வருவார்கள் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் நேற்று டெல்லி போலீசார் வரவில்லை.

இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரிடம் தீவிர விசாரணை நடந்து வருவதால் கூடுதல் ஆதாரங்களுடன் சென்னை வர டெல்லி போலீசார் திட்டமிட்டுள்ளனர். தற்போது சுகேஷ் மூலம் ஓரளவு தகவல்கள் கிடைத்துள்ளன. எனவே டெல்லி போலீசார் நாளை (வியாழக்கிழமை) சென்னை வருவார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே டெல்லி போலீசாருக்கு நேற்று ஒரு ரகசிய தகவல் கிடைத்தது. அதில், “டி.டி.வி.தினகரன் வெளிநாட்டு குடியுரிமை பெற்று இருப்பவர். எனவே அவர் வெளிநாட்டுக்கு சென்று விட கூடும்” என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து டெல்லி போலீசார் கோர்ட்டில் சிறப்பு அனுமதி பெற்று டி.டி.வி.தினகரனை தேடப்படும் நபராக அறிவித்துள்ளனர். இதற்கான அறிவிப்பை போலீசார் நேற்று வெளியிட்டனர்.

இதற்கிடையே இந்தியா முழுவதும் உள்ள விமான நிலையங்கள் மற்றும் துறை முகங்களுக்கு டெல்லி குற்றப் பிரிவு போலீசார் டி.டி.வி. தினகரன் பற்றிய தகவல்களை அனுப்பி உள்ளனர். விமானம் மற்றும் கப்பல் மூலம் அவர் வெளிநாட்டுக்கு சென்று விடக்கூடாது என்பதற்காக உஷார்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் தினகரன் மீதான டெல்லி குற்றப்பிரிவு போலீசாரின் நடவடிக்கைகள் இறுகி வருகிறது. டெல்லி போலீசார் சென்னை வந்து விசாரிக்கும் போது தினகரன் கைது செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் மாலை பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்து பேசுவதற்காக சென்னையில் இருந்து டி.டி.வி.தினகரன் புறப்பட்டு சென்று இருந்தார். இதை அறிந்த டெல்லி போலீசார் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறை முன்பு கண்காணித்தப்படி இருந்தனர்.

இதை அறிந்த டி.டி.வி. தினகரன் தன்னை டெல்லி போலீசார் கைது செய்யக் கூடும் என்று நினைத்து சசிகலாவை சந்திக்காமல் திரும்பி விட்டதாக கூறப்படுகிறது. இதன் மூலம் டி.டி.வி.தினகரனின் ஒவ்வொரு அசைவும் டெல்லி போலீசார் பின்தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிய வந்துள்ளது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/04/19113311/1080686/Delhi-police-to-try-and-bring-TTV-Dinakaran-under.vpf

  • தொடங்கியவர்

தினகரன் வெளிநாட்டுக்கு தப்பிவிடாமல் தடுக்க விமான நிலையங்களுக்கு டெல்லி போலீஸ் நோட்டீஸ்

 

 
 
டிடிவி தினகரன் | கோப்புப் படம்: எல்.சீனிவாசன்.
டிடிவி தினகரன் | கோப்புப் படம்: எல்.சீனிவாசன்.
 
 

தினகரன் வெளிநாட்டுக்கு தப்பிவிடாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் டெல்லி போலீஸ் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இரட்டை இலை சின்னம் பெற இடைத்தரகருக்கு லஞ்சம் கொடுத்ததாக டிடிவி.தினகரன் மீது டெல்லி போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. இந்நிலையில், தினகரன் வெளிநாட்டுக்கு தப்பிவிடாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் டெல்லி போலீஸ் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தினகரன், வெளிநாட்டு குடியுரிமை பெற்றுள்ளவர் என்பதால் விமான நிலையங்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக டெல்லி போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி க்ரைம் பிராஞ்சு இணை ஆணையர் பிரவீர் ரஞ்சன், எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதை உறுதி செய்தார். தூதரக அதிகாரிகளுக்கும் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

முன்னதாக டெல்லியில் சுகேஷ் சந்திரசேகர் என்ற இடைத்தரகர் கைது செய்யப்பட்டார். இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவரை அணுகியதாகவும். இரட்டை இலை சின்னத்தை பெற்றுத் தந்தால் ரூ.60 கோடி லஞ்சம் தர தினகரன் தயாராக இருந்ததாகவும் சுகேஷ் டெல்லி போலீஸில் தெரிவித்திருந்தார். இதனடிப்படையிலேயே தினகரனுக்கு வழக்கு பதிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

http://tamil.thehindu.com/tamilnadu/தினகரன்-வெளிநாட்டுக்கு-தப்பிவிடாமல்-தடுக்க-விமான-நிலையங்களுக்கு-டெல்லி-போலீஸ்-நோட்டீஸ்/article9648547.ece?homepage=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.