Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தினகரன் வீட்டில் டெல்லி போலீஸ்! தீக்குளிக்கு முயன்ற தொண்டர்!

Featured Replies

தினகரன் வீட்டில் டெல்லி போலீஸ்! தீக்குளிக்கு முயன்ற தொண்டர்!

 

Dina_2_23018.jpg

சென்னை அடையாறில் இருக்கும் டி.டி.வி.தினகரன் வீட்டுக்கு டெல்லி போலீஸ் வந்தனர். தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் தர முயன்ற வழக்கில் சம்மன் கொடுக்க அவர்கள் தினகரனை நேரில் சந்திக்க வந்துள்ளனர். இரட்டை இலைச் சின்னத்தை பெறுவதற்காக தினகரன் இடைத்தரகர் சுகேஷ் சந்தர் மூலம் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தினகரன் மீது குற்றச்சாட்டு உள்ளது. மேலும், டி.டி.வி.தினகரனிடம் இருந்து பணம் வாங்கியதாக சுகேஷ் சந்தர் ஒப்புக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

டெல்லி போலீஸ் வந்ததை அடுத்து, தினகரன் வீட்டின் முன்னர் தொண்டர் ஒருவர் தீக்குளிக்க முயன்றுள்ளார். தீக்குளிக்க முயன்றவர் பெயர் ரவிச்சந்திரன் என்று தகவல் கூறப்படுகிறது. அவர், தினகரன் வீட்டுக்கு முன் தீக்குளிக்க முயன்ற போது, அருகில் இருந்தவர்கள் அதை தடுத்து போலீஸிடம் அவரை ஒப்படைத்தனர். டெல்லி போலீஸ் வருகை, தொண்டர் தீக்குளிக்க முயற்சி போன்ற சம்பவங்களால் தினகரனின் அடையாறு வீடு பரபரப்பாக காணப்படுகிறது.

http://www.vikatan.com/news/tamilnadu/86980-as-delhi-police-arrived-to-dinakarans-house-a-supporter-tried-fire-himself.html

  • தொடங்கியவர்

சென்னை வந்தது டெல்லி போலீஸ்; தினகரனிடம் விசாரணை!

இரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்காக டி.டி.வி தினகரன் லஞ்சம் கொடுத்ததாக, அவர் மீது டெல்லி குற்றப்பிரிவு போலீஸ் வழக்குப்பதிவு செய்தனர்.

Dinakaran

இந்த வழக்கு தொடர்பாக, சுகேஷ் சந்தர்  என்பவர் கைதுசெய்யப்பட்டார். அவரிடம் இருந்து 1.5 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இரட்டை இலைச் சின்னம் பெறுவதற்காக தினகரனிடம் இருந்து அவர் பணம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பான எப்ஐஆர் நகலையும் நேற்று வெளியிட்டது போலீஸ்.

இதுகுறித்து தினகரனிடம் விசாரணை நடத்த, ஏ.சி.பி. சஞ்சய் ராவத் தலைமையில் டெல்லி போலீஸ் நேற்று சென்னை வருவதாகத் தகவல் வெளியானது. பின்னர். அவர்கள் இன்று காலை வருவதாகக் கூறப்பட்டது. 

இதையடுத்து, அவர்கள் மாலை 5.15 மணிக்கு டெல்லியில் இருந்து சென்னை புறப்பட்டனர். இந்நிலையில், சற்று முன் டெல்லி போலீஸ் சென்னை வந்துள்ளனர். இதைத்தொடர்ந்து அடையாறில் உள்ள தினகரனிடம் விசாரணை நடத்துகின்றனர். டெல்லி கூடுதல் ஆணையர் சஞ்சை ஷெரவத், காவல் ஆய்வாளர் நரேந்திர சஹால் ஆகியோர் தினகரனிடம் விசாரணை நடத்த வந்துள்ளனர். 

http://www.vikatan.com/news/tamilnadu/86976-delhi-police-reached-chennai-to-investigate-dinakaran.html

 

  • தொடங்கியவர்

சுகேஷ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தினகரனிடம் டெல்லி போலீசார் விசாரணை

 

டெல்லியில் கைதான சுகேஷ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், சென்னை விரைந்த டெல்லி போலீசார் டிடிகே தினகரனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 
சுகேஷ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தினகரனிடம் டெல்லி போலீசார் விசாரணை
 
சென்னை:

அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்திற்கு சசிகலா அணியும், ஓ.பி.எஸ். அணியும் உரிமை கோரியதால் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. அத்துடன், இரட்டை இலையை யாருக்கு வழங்குவது? என்பது குறித்து இரு தரப்பினரிடமும் பிரமாணப் பத்திரங்கள் பெற்று அதன் அடிப்படையில் முடிவு செய்ய உள்ளது.

இந்நிலையில், டெல்லியில் கைது செய்யப்பட்ட இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இரட்டை இலை சின்னத்தை பெற்றுக் கொடுப்பதற்காக டி.டி.வி.தினகரனிடம் 50 கோடி ரூபாய் பேரம் பேசியதாக வாக்குமூலம் கொடுத்தார். இதையடுத்து, தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தினகரன் மீது டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
201704192330100791_dinakaran2._L_styvpf.
சுகேஷ் சந்தரை டெல்லி போலீசார் 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணையில், கிடைத்த புதிய தகவல்களை அடுத்து, சென்னை விரைந்த டெல்லி போலீசார், அடையாறில் உள்ள டிடிவி தினகரன் வீட்டுக்கு சென்று சம்மன் அளித்தனர். சம்மனை தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்திய டெல்லி போலீசார் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/04/19232958/1080806/Delhi-police-investigation-on-TTK-Dinakaran-in-chennai.vpf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.