Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டெல்லி போலீஸ்முன் இன்று ஆஜர்.. சென்னையில் இருந்து புறப்பட்டார் டி.டி.வி. தினகரன்!

Featured Replies

டெல்லி போலீஸ்முன் இன்று ஆஜர்.. சென்னையில் இருந்து புறப்பட்டார் டி.டி.வி. தினகரன்!

 
 

இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்காக சென்னையிலிருந்து டெல்லி புறப்பட்டார் டி.டி.வி. தினகரன். இன்று டெல்லி குற்றப்பிரிவு போலீஸ் முன் ஆஜராகிறார். 

TTV Dinakaran
 

இரட்டை இலைச் சின்னத்தை மீட்க, இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரிடம் கோடிக்கணக்கில் பணம் கொடுத்ததாக, டி.டி.வி.தினகரன் மீது டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவுசெய்தனர். இந்த வழக்கில்,  கடந்த 16-ம் தேதி டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த சுகேஷ் சந்திரசேகரை டெல்லி போலீஸார் கைதுசெய்தனர்.  அவரிடமிருந்து ஒருகோடியே 30 லட்சம் ரூபாயும், இரண்டு சொகுசு கார்கள் மற்றும் சில ஆவணங்களையும் பறிமுதல்செய்தனர்.

சுகேஷ் சந்திரசேகரிடம் நடத்திய விசாரணையில், டி.டி.வி.தினகரன் தரப்புதான் இரட்டை இலைச் சின்னத்தை மீட்க, கோடிக்கணக்கில் பணம் கொடுத்ததாகத் தெரிவித்துள்ளார். சுகேஷ் நேற்று முன்தினம் இரவு பெங்களூருக்கு அழைத்துச்செல்லப்பட்டார். அவருக்கு, பெங்களூருரில் பணம் வழங்கப்பட்டதாகக் கூறப்படுவதால், அங்கு அழைத்துச்சென்று விசாரிக்கிறார்கள். 

இதனிடையே, சென்னை வந்த டெல்லி குற்றப்பிரிவு போலீஸார், டி.டி.வி.தினகரனுக்கு நேரில் சம்மன் வழங்கினர். அதில், ஏப்ரல் 22-ம் தேதி (இன்று)  டெல்லி குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. விசாரணைக்கு ஆஜராக மூன்று நாள் அவகாசம் கேட்டிருந்தார் டி.டி.வி.தினகரன். இந்த அவகாசத்தை டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் நிராகரித்தனர். இதையடுத்து, இன்று காலை சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டார தினகரன். இன்று டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் முன் ஆஜராகிறார்!

http://www.vikatan.com/news/tamilnadu/87214-ttv-dinakaran-to-appear-before-delhi-police-today.html

  • தொடங்கியவர்

டி.டி.வி.தினகரனிடம் விசாரணையை தொடங்கியது டெல்லி போலீஸ்!

 

கடந்த 16-ம் தேதி டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த சுகேஷ் சந்திரசேகரை டெல்லி போலீஸார் கைதுசெய்தனர்.  அவரிடமிருந்து ஒருகோடியே 30 லட்சம் ரூபாயும், இரண்டு சொகுசு கார்கள் மற்றும் சில ஆவணங்களையும் பறிமுதல்செய்தனர்.

Dinakaran

சுகேஷ் சந்திரசேகரிடம் நடத்திய விசாரணையில், டி.டி.வி.தினகரன் தரப்புதான் இரட்டை இலைச் சின்னத்தை மீட்க, கோடிக்கணக்கில் பணம் கொடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.  இதையடுத்து, டி.டி.வி.தினகரன் மீது டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவுசெய்தனர். சுகேஷ் நேற்று முன்தினம் இரவு பெங்களூருக்கு அழைத்துச்செல்லப்பட்டார். அவருக்கு, பெங்களூருரில் பணம் வழங்கப்பட்டதாகக் கூறப்படுவதால், அங்கு அழைத்துச்சென்று விசாரிக்கிறார்கள். 

இதனிடையே, சென்னை வந்த டெல்லி குற்றப்பிரிவு போலீஸார், டி.டி.வி.தினகரனுக்கு நேரில் சம்மன் வழங்கினர். அதில், ஏப்ரல் 22-ம் தேதி (இன்று)  டெல்லி குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இதையடுத்து, டெல்லி குற்றப்பிரிவு காவல்நிலையம் முன்பு டி.டி.வி. தினகரன் ஆஜராகியுள்ளார். அவரிடம், டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சுகேஷ் சந்திரசேகரையும் விசாரணைக்காக போலீஸார் அழைத்து சென்றுள்ளனர்.

http://www.vikatan.com/cinema/tamil-cinema/news/87126-list-of-viral-hit-songs-in-tamil-movies.html?artfrm=cinema_most_read

  • தொடங்கியவர்

தினகரனிடம், டெல்லி போலீஸ் ஏழு மணி நேரம் விசாரணை: நாளை மீண்டும் ஆஜராக உத்தரவு!

 

கடந்த 16-ம் தேதி டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த சுகேஷ் சந்திரசேகரை டெல்லி போலீஸார் கைதுசெய்தனர்.  அவரிடமிருந்து ஒருகோடியே 30 லட்சம் ரூபாயும், இரண்டு சொகுசு கார்கள் மற்றும் சில ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர்.

Dinakaran

சுகேஷ் சந்திரசேகரிடம் நடத்திய விசாரணையில், டி.டி.வி.தினகரன் தரப்புதான் இரட்டை இலைச் சின்னத்தை மீட்க, கோடிக்கணக்கில் பணம் கொடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.  இதையடுத்து, டி.டி.வி.தினகரன் மீது டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவுசெய்தனர். சுகேஷ் நேற்று முன்தினம் இரவு பெங்களூருக்கு அழைத்துச்செல்லப்பட்டார். அவருக்கு, பெங்களூருரில் பணம் வழங்கப்பட்டதாகக் கூறப்படுவதால், அங்கு அழைத்துச்சென்று விசாரிக்கிறார்கள். 

இதனிடையே, சென்னை வந்த டெல்லி குற்றப்பிரிவு போலீஸார், டி.டி.வி.தினகரனுக்கு நேரில் சம்மன் வழங்கினர். அதில், ஏப்ரல் 22-ம் தேதி (இன்று)  டெல்லி குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இதையடுத்து, டெல்லி குற்றப்பிரிவு காவல்நிலையம் முன்பு டி.டி.வி. தினகரன் ஆஜரானார். இதையடுத்து சுமார் மூன்று மணியளவில் அவர் டெல்லி போலீசில் ஆஜரானார்.

தினகரன் நண்பர் மல்லிகார்ஜூனா மற்றும் அவரது உதவியாளர்  ஜனார்த்தனன் ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அதேபோல், தினகரனின் செல்போன் அழைப்புகளை வைத்தும் விசாரணை நடத்தப்பட்டது. அவரிடம் சுமார் ஏழு மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. சற்று முன் அந்த விசாரணை நிறைவு பெற்றது.

இதையடுத்து, தினகரனை நாளை மீண்டும் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி நாளை மதியம் 2.30 மணியளவில் தினகரனை ஆஜராக டெல்லி போலீஸ் உத்தரவிட்டுள்ளது.

http://www.vikatan.com/news/india/87284-delhi-police-ordered-dinakaran-to-appear-on-tomorrow.html

  • தொடங்கியவர்

டெல்லியில் தினகரனை முடக்க திட்டம்- பின்னணி இதுதான்!

 

Dinakaran

டெல்லி காவல்துறையின் விசாரணையில் இருக்கும் தினகரன் விசாரணை முடிந்து சென்னை திரும்புவது சந்தேகம் தான் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தல் ஆணையத்தினால் முடக்கப்பட்டுள்ள இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக அதிகாரிகளுக்கு 50 கோடி ரூபாய் வரை லஞ்சம் கொடுக்க முயன்றதாக தினகரன் மீது டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. தினகரனுக்கு இடைத்தரகராக இருந்ததாக சுகேஷ் சந்திரசேகரையும் கைது செய்துள்ளது டெல்லி போலீஸ். அவரிடம் விசாரணை செய்தபோது தினகரன் லஞ்சம் தர முயன்றதை ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து, டெல்லி போலீஸார் சென்னைக்கே வந்து தினகரனுக்கு சம்மன் கொடுத்து சென்றனர். 

தினகரனும் இன்று டெல்லி சென்று, குற்றப்பிரிவு புலனாய்வு காவல்துறையினர் முன் ஆஜர் ஆகினார். தினகரனோடு அவருடைய உதவியாளர் ஜனார்தனனையும் விசாரணைக்கு அழைத்திருந்தனர்.நேற்று நண்பகலில் காவல்துறையினர் விசாரணையை துவக்கினார்கள். முதலில் கேட்கபட்ட கேள்விகளுக்கு தினகரன் தரப்பில் இருந்து தெரியாது என்றே பதில் வந்துள்ளது. அதனால் தினகரனை வேறு அறையில் அமர சொல்லிவிட்டு, அவருடைய உதவியாளிரிம் விசாரணையை ஆரம்பித்துள்ளார்கள். துவக்கத்தில் சில பேப்பர்களை காட்டியதும் ஜனார்தனன் ஆடிபோய் உள்ளார். அந்த பேப்பர்கள் குறித்து எந்த பதிலையும் சொல்லாமல் முரண்டுபிடித்ததால், அடுத்ததாக ஜனா - சுகேஷ் இடையே நடைபெற்ற செல்போன் உரையாடலை போட்டு காட்டியுதும், பதில் சொல்ல முடியாமல் திணறிவிட்டார் ஜனார்த்தனன். 

Dinakaran

அதன் பின்னர் மீண்டும் தினகரனிடம் விசாரணயை ஆரம்பித்துள்ளார்கள். இந்த முறை ஜனார்தனன், ஒப்புக்கொண்ட தகவல்களை வைத்தே தினகரனிடம் கேள்விகளை ஆரம்பித்துள்ளார்கள். ஆனால், ஜனார்தனன்  சொன்ன தகவல் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றே மறுத்து வந்துள்ளார் தினகரன். தொடர்ந்து அதிகாரிகள் கிடுக்குபிடியால் தனது உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக கூறிவிட்டார் தினகரன். கிட்டதட்ட ஏழு மணிநேரம் வரை இந்த விசாரணை படலம் நீடித்துள்ளது. 

தினகரனை இன்று மீண்டும் விசாரணைக்கு வர காவல்துறையினர் உத்தரவிட்டுள்ளார்கள். ஆதாரங்களை கையில் வைத்துக் கொண்டு இன்று மீண்டும் கேள்விகளை ஆரம்பிக்க உள்ளார்கள். "அனைத்து ஆதாரங்களும் கைப்பற்றிய பிறகு தான் நாங்கள் விசாரணையை ஆரம்பித்துள்ளோம், எங்கள் கணிப்புபடி அவர் எங்களிடம் எதையும் மறுக்க முடியாது. ஒரு நிலையில் ஒப்புக்கொண்டு தான் ஆக வேண்டும். அப்போது அவருடைய கைது தவிர்க்க முடியாது.” என்கிறார்கள் விசாரணையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள்.

மத்திய அரசு ஏற்கெனவே சசிகலா குடும்பத்தின் மீது ஏககடுப்பில் இருக்கும் நிலையில், இந்த வழக்கை வைத்து அந்த குடும்பத்துக்கு நெருக்கடிகளை கொடுக்கும் என்ற பேச்சு உள்ளது. அ.தி.மு.கவின் இரண்டு அணிகளின் பேச்சுவார்த்தை திங்கள்கிழமை அன்று நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதால் அந்த நேரத்தில் தினகரன் தரப்பு சென்னையில் இருப்பதை மத்திய அரசு விரும்பவில்லை. இதனால் டெல்லி காவல்துறையின் விசாரணை வளையத்தில் இருந்தே தினகரன் மீண்டு வருவது கடினம் என்ற தகவலும் உலவுகிறது. இந்த வழக்கில் தினகரன் கைதாவது உறுதி என்கிறார்கள். மொத்தத்தில் டெல்லி சென்றுள்ள தினகரன் சென்னை திரும்புவது கடினம் தான்.

http://www.vikatan.com/news/tamilnadu/87292-it-is-tough-for-dinakaran-to-return-back-to-chennai-says-sources.html

  • தொடங்கியவர்
gallerye_004942122_1756902.jpg

புதுடில்லி:'இரட்டை இலை' சின்னம் பெற, தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் தர முயன்ற வழக்கில், அ.தி.மு.க., துணை பொதுச் செயலர் தினகரன், டில்லி குற்றப்பிரிவு போலீசில், நேற்று ஆஜரானார். அவரிடம், போலீஸ் அதிகாரிகள் பல மணி நேரம், கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதிகாரிகளின் பல கேள்விகளுக்கு, தினகரன் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால், அவர் எந்த நேரத்திலும் கைதாகலாம் என்ற தகவலால் பரபரப்பு உருவாகியுள்ளது.

 

Tamil_News_large_175690220170422233637_318_219.jpg

ஜெயலலிதா மறைவுக்கு பின், அ.தி.மு.க., பன்னீர் அணி - சசிகலா அணி என, இரண்டாக பிரிந்துள்ளது. இரு அணியினரும், கட்சியின் சின்னமான இரட்டை இலையை பெற விரும்புகின்றனர்.
 

வழக்கு பதிவு


இந்நிலையில், கட்சி சின்னத்தை தங்கள் அணிக்கு சாதகமாக பெற, இடைத்தரகர் சுகேஷ் சந்தர் என்ற மோசடி இளைஞர் மூலம், தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முற்பட்டதாக, சசிகலா அணியை சேர்ந்த, தினகரன் மீது, டில்லி போலீசார் வழக்கு பதிவு

செய்தனர். இடைத்தரகராக செயல்பட்ட சுகேஷ் சந்தர், டில்லி போலீசில் சிக்கிஉள்ள நிலையில், இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராவதற் கான, தினகரனிடம், 'சம்மன்' நேற்று முன்தினம்
வழங்கப்பட்டது.

இந்நிலையில், போலீஸ் விசாரணைக்காக, நேற்று டில்லி வந்த தினகரன், பகல், 3:11க்கு, டில்லி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆஜரானார். இதையொட்டி, போலீஸ் கமிஷனர் வளாகம் முழுவதும், பலத்தபாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பத்திரிகையாளர்கள், 'டிவி' நிருபர்கள், போட்டோகிராபர்கள் அனைவரும், வளாகத்திற்கு வெளியிலேயே நிறுத்தப்பட்ட னர். தினகரனின் வழக்கறிஞர்கள் பரமசிவம் மற்றும் வஜ்ரவேல் மட்டும் வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

மூடிய அறையில், துணை கமிஷனர், சஞ்சய் ஷெகாவத் மற்றும் சப் - இன்ஸ்பெக்டர்கள், நரேந்திர தோமர், நரேந்திர ஷெகல், ரித்தேஷ் சிங் அடங்கிய குழு, தினகரன் மற்றும் அவரது உதவியாளர் ஜனார்த்தனத்தை விசாரிக்க துவங்கினர். இரவு வரை இந்த விசாரணை தொடர்ந்தது.
 

15 கேள்விகள்


விசாரணையின் போது, தினகரனுக்கு, 15 கேள்விகள் அடங்கிய விபர அறிக்கை வழங்கப் பட்டது. அதில், 'சுகேஷ் சந்தரை எப்படி தெரியும்; எப்போதில் இருந்து தெரியும்; ஆர்.கே. நகர் தேர்தலில் பணம் பட்டுவாடா விபரம், தேர்தல் கமிஷன் அதிகாரிகளை சந்திக்க முயற்சி செய்தீர்களா... தொலைபேசியில்

 

தொடர்பு கொண்டீர்களா...' என்பன போன்ற கேள்விகள், இடம் பெற்றிருந்தன.

தினகரன் மற்றும் அவரது உதவியாளரின், எஸ்.எம்.எஸ்., குறுஞ்செய்திகள், இ - மெயில் மற்றும் 'வாட்ஸ் ஆப்' தகவல்களையும் போலீசார் சோதித்து வருகின்றனர்.நேற்றைய விசாரணை, பல மணி நேரம் நீடித்தது. இன்றும் விசாரணை தொடரும் என, கூறப்படுகிறது. மேலும், தினகரன் மற்றும் சுகேஷ் சந்தரை, நேருக்கு நேர் அமர வைத்து விசாரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

அதிகாரிகளின் விசாரணையின் போது, தினகரன் அளித்த பதில்கள், முன்னுக்கு பின் முரணாக இருந்ததாகவும், இதனால் அவர், எந்த நேரத்திலும் கைதாகலாம் என்றும் தகவல்கள் வெளியாகின. இது, தினகரன் ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

முன்னதாக, நேற்று மதியம், டில்லி விமான நிலையம் வந்திறங்கிய தினகரனிடம், சுகேஷ் குறித்து நிருபர்கள் கேட்டதற்கு, ''சுகேஷ் யாரென்றே எனக்கு தெரியாது; பணம் கொடுத்தது தொடர்பாக, எனக்கு எதுவும் தெரியாது; அதுபோன்ற எண்ணமே இல்லை,'' என்றார்.
 

தினகரனுக்குபழங்கள்


போலீஸ் விசாரணையின் போது, மாலை, 4:00 மணிக்கு, டில்லியில் உள்ள, தமிழ்நாடு இல்லத்தில் இருந்து, தினகரனுக்காக பழங்கள் கொடுத்தனுப்பப்பட்டன.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1756902

  • தொடங்கியவர்

'இரட்டை இலை' லஞ்ச விவகாரம் : 2-வது நாள் விசாரணையில் டி.டி.வி.தினகரன் ஆஜர்

இரட்டை இலை சின்னத்தை பெற்றுத் தருவதற்காக லஞ்சம் கொடுக்க முயற்சி செய்தது தொடர்பான வழக்கின் இரண்டாவது நாள் விசாரணையில் டி.டி.வி.தினகரன் நேரில் ஆஜரானார். டெல்லி குற்றப் பிரிவு காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

.%E0%AE%9F%E0%AE%BF.%E0%AE%B5%E0%AE%BF.%

ஏப்ரல் 16-ம் தேதி டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த சுகேஷ் சந்திரசேகரை டெல்லி காவல்துறையினர் கைதுசெய்தனர். அவரிடமிருந்து ஒருகோடியே 30 லட்சம் ரூபாயும், இரண்டு சொகுசு கார்கள் மற்றும் சில ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. சுகேஷிடம் நடைபெற்ற விசாரணையில், 'டி.டி.வி.தினகரன் தரப்பு தான் மீட்டுத் தர கோடிக்கணக்கில் பணம் கொடுத்ததாக' தெரிவித்துள்ளார். இதனையடுத்து டி.டி.வி.தினகரன் மீது டெல்லி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக டி.டி.வி.தினகரனிடம் டெல்லி குற்றப்பிரவு காவல்துறையினர் நேற்று சுமார் 7 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினர். நேற்று விசாரணை முழுவதுமாக முடிவடையாத நிலையில் இன்றும் விசாரணை தொடர்கிறது. இரண்டாம் நாள் விசாரணைக்காக டி.டி.வி.தினகரன் தற்போது நேரில் ஆஜராகியுள்ளார். சுகேஷ் சந்திரசேகர் அளித்த வாக்குமூலத்தில் அடிப்படையில் டெல்லி காவல்துறையினர் டி.டி.வி.தினகரனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

http://www.vikatan.com/news/politics/87317-ttvdinakaran-appeared-before-delhi-police.html

  • தொடங்கியவர்

இரட்டை இலை' சின்னம் பெற, தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், சசிகலா அக்கா மகன், தினகரனிடம், டில்லி போலீஸ் அதிகாரிகள், இரண்டாவது நாளாக, நேற்றும் விசாரணை நடத்தினர். அடுக்கடுக்கான ஆதாரங்களுடன், அதிகாரிகள் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணை யில், பதிலளிக்க முடியாமல், இடியாப்பம் போல், தினகரனின் நிலை காணப்படுகிறது.

 

Tamil_News_large_175746220170423233738_318_219.jpg

ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து, அ.தி.மு.க., இரண்டாக பிரிந்துள்ளது. ஆர்.கே.நகர் தொகுதிக்கு அறிவிக்கப்பட்டு இருந்த இடைத்தேர்தலின் போது, அ.தி.மு.க., வின் சின்னமான, 'இரட்டை இலை'யை, யாருக்கு ஒதுக்குவது என்பது தொடர்பாக, தேர்தல் கமிஷன் விசாரணை நடத்தி, சின்னத்தை தற்காலிகமாக முடக்குவதாக அறிவித்தது.

இதனிடையில், இரட்டை இலை சின்னத்தை, தங்கள் அணிக்கு ஒதுக்குவதற்காக, தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு, தினகரன் லஞ்சம் கொடுக்க முயற்சித்தது அம்பலமானது.இது தொடர்பாக, இடைத்தரகரான சுகேஷ் சந்தர் என்பவனை, 1.30 கோடி ரூபாய் ரொக்கத்துடன், டில்லி போலீசார், சமீபத்தில் கைது செய்தனர். தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம்

கொடுக்க, 50 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்ட தாக, விசாரணையில் அவன் தெரிவித்து உள்ளான்.

'இது தொடர்பான விசாரணைக்கு, 22ல், நேரில் ஆஜராக வேண்டும்' என, தினகரனுக்கு, டில்லி போலீஸ் அதிகாரிகள் சென்னை வந்து, 'நோட்டீஸ்' அளித்தனர்.அதன்படி, நேற்று முன்தினம், டில்லி சாணக்கியபுரியில் உள்ள, டில்லி போலீசாரின் கிரைம் பிராஞ்ச் அலுவல கத்தில், தினகரன் ஆஜரானார். அவரி டம், ஏழு மணி நேரம், டில்லி போலீஸ்அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பல்வேறு கேள்விகளை கேட்டு, தினகரனை திக்குமுக்காட வைத்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக, மீண்டும் ஆஜராகும் படி, தினகரனுக்கு, போலீசார் உத்தரவிட்டிருந் தனர். அதன்படி, நேற்று பிற்பகல், 2:00 மணிக்கு விசாரணை துவங்கி யது. தினகரன், அவரது
உதவியாளர் ஜனார்த்தனன், நண்பர் மல்லிகார் ஜுனா ஆகியோரை, ஒரே இடத்தில் அமர வைத்து, டில்லி போலீசார் விசாரணை நடத்தினர். மாலை, 6:00 மணி வரை, மூவரிட மும் பல்வேறு கேள்விகளை, டில்லி போலீசார் கேட்டனர்.
 

டில்லி போலீசார் கேட்ட கேள்விகள்:


இடைத்தரகர் சுகேஷ் சந்தரை எப்படி தெரியும்; எத்தனை நாட்களாக தெரியும். அவனை,
உங்களுக்கு அறிமுகம் செய்து வைத்தது யார். சுகேஷ் சந்தரை எப்போது சந்தித்தீர்கள். நீங்கள் குற்றம் செய்யவில்லை என்றால், உங்கள் பெயரை சுகேஷ் ஏன் கூறியுள்ளான். தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு பணம் கொடுக்க,

 

வேறு யாராவது முயற்சித்துஉள்ளனரா; தேர்தல் கமிஷன் அதிகாரி களுக்கு பணம் கொடுக்கப்பட்டதா. எந்தெந்த அதிகாரி களுடன் பேசினீர்கள். அவர்களுக்கு எப்படி பணம் கொடுக்கப்பட இருந்தது.

வேறு ஏதாவது வேலைகளுக்கும், சுகேஷ் சந்தர் பயன்படுத்தப்பட்டானா. இந்த விவகாரத் தில் எந்தெந்த அதிகாரிகளை நீங்கள் சந்தித்தீர் கள். பணம் எப்படி கைமாறியது. இது போன்ற பல்வேறு கிடுக்கிப்பிடி கேள்விகளை, போலீசார் கேட்டனர்.

மேலும், தினகரன் உள்ளிட்டோரின் மொபைல் போனையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக, தங்களிடம் உள்ள பல்வேறு ஆதாரங்களை காட்டி, அதற்கான விளக்கத்தையும் கேட்டனர்.பெரும்பாலான கேள்விகளுக்கு, தனக்கு எதுவும் தெரியாது என்றே, தினகரன், பதிலளித்ததாக தெரிகிறது. மாலை, 6:00 மணிக்கு பின், தினகரனிடம் தனியாக விசாரிக்கத் துவங்கினர். போலீஸ் அதிகாரிகள் எழுப்பிய பல்வேறு கேள்வி களுக்கு, பதிலளிக்க முடியாமல், தினகரன் திணறினார்.
 

ஊடகங்களுக்கு தடை


தினகரனிடம், டில்லி, கிரைம் பிராஞ்ச் அலுவலக வளாகத்தில் விசாரணை நடந்தது. விசாரணை விபரங்கள், வெளியில் கசிந்து விடக் கூடாது என்பதில், போலீசார் உறுதியாக இருந்தனர். இதனால், செய்தியாளர் கள் யாரும், அலுவலகத்திற்குள் அனுமதிக்கப் படவில்லை. அலுவலக வளாகத்திற்கு வெளியிலேயே, அனைத்து செய்தியாளர்களும் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1757462

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.