Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாரை ஏமாற்றும் முயற்சி?

Featured Replies

யாரை ஏமாற்றும் முயற்சி?

Page-01-image-15d940a8929071d8c560cac4f2b6cadd5f36df8a.jpg

 

வடக்கில் இரா­ணு­வத்­தி­னரால் கைய­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள பொது­மக்­களின் காணி­களை விடு­விப்­பது தொடர்­பாக ஆராய்­வ­தற்­கான கூட்டம் ஒன்று கடந்த அண்மையில் பாது­காப்பு அமைச்சில் இடம்­பெற்­றி­ருந்­தது.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கும் அரச அதி­கா­ரிகள் மற்றும் பாது­காப்பு அதி­கா­ரி­க­ளுக்கும் இடையில் நடத்­தப்­பட்ட முக்­கி­ய­மான கூட்டம் இது.

இந்தக் கூட்­டத்தில் பங்­கேற்­றி­ருந்த இரா­ணுவத் தள­பதி லெப்.ஜெனரல் கிரி­சாந்த டி சில்வா பொது­மக்­களின் காணி­களை சுவீ­க­ரித்து வைத்­தி­ருப்­ப­தற்கு இரா­ணு­வத்­துக்கு அதி­காரம் இல்லை என்றும், தாம் அவ்­வாறு காணி­களைச் சுவீ­க­ரிக்­க­வு­மில்லை என்றும் கூறி­யி­ருந்தார்.

அத்­துடன், காணி­களை விடு­விக்­கு­மாறு ஜனா­தி­ப­தியோ, பாது­காப்புச் செய­லரோ உத்­த­ர­விட்டால் அதனை உட­ன­டி­யா­கவே நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்குத் தாம் தயா­ராக இருப்­ப­தா­கவும் அவர் தெரி­வித்­தி­ருந்தார்.

பாது­காப்பு அமைச்சில் நடந்த கூட்­டத்­துக்குப் பின்னர், கொழும் பில் நடத்­திய செய்­தி­யாளர் மாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் தான் இந்த தக­வலை வெளி­யிட்­டி­ருந்தார்.

பாது­காப்பு அமைச்சில் அண்மையில் இந்தக் கூட்டம் நடப்­ப­தற்கு இரண்டு நாட்கள் முன்­ன­தாக, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்­தனும், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­தி­ர னும் சந்­தித்துப் பேச்சு நடத்­தி­யி­ருந்­தனர்.

காணிகள் விடுப்பு, காணாமல் ஆக்­கப் ­பட்­டோரின் விவ­காரம் உள்­ளிட்ட வடக் கின் முக்­கி­ய­மான பிரச்­சி­னைகள் குறித்து பேச்சு நடத்­து­வ­தற்கே இந்தச் சந்­திப்பு இடம்­பெற்­றி­ருந்­தது.

இந்தச் சந்­திப்பின் போது, காணிகள் விடு­விப்புத் தொடர்­பா­கவும், அர­சியல் கைதி­களின் விடு­தலை தொடர்­பா­கவும் சம்­பந்தன் கேள்வி எழுப்­பிய போது, இது குறித்த நட­வ­டிக்­கைகள் தொடர்­பாக அறிக்கை ஒன்றை சமர்ப்­பிக்­கு­மாறு ஒரு வரு­டத்­துக்கு முன்­னரே, பாது­காப்புத் தரப்­புக்கு தாம் உத்­த­ர­விட்­ட­தா­கவும், ஆனால் தனது உத்­த­ரவு நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை என்று வருந்­து­வ­தா­கவும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கூறி­யி­ருந்தார். இந்தச் சந்­திப்பில் இரா.சம்­பந்­த­னுடன் பங்­கேற்­றி­ருந்த பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­திரன் தான் இந்த தக­வலை வெளி­யிட்­டி­ருந்தார்.

இரண்­டொரு நாள் இடை­வெ­ளியில் ஜனா­தி­ப­தி­யு­டனும், பாது­காப்பு அமைச்­சிலும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு நடத்­திய சந்­திப்­பு­களில் அளிக்­கப்­பட்ட பதில்கள், ஒன்­றுக்­கொன்று முரண்­பா­டா­ன­வை­யாக இருப்­பதை அவ­தா­னிக்­கலாம்.

பொது­மக்­களின் காணி­களை விடு­விப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு தாம் ஏற்­க­னவே உத்­த­ர­விட்­டி­ருந்த போதும், அந்த உத்­த­ரவை பாது­காப்புத் தரப்பு நடை­மு­றைப்­ப­டுத்­த­வில்லை என்றும் ஜனா­தி­பதி கூறு­கிறார்.

இரா­ணுவத் தள­ப­தியோ ஜனா­தி­பதி உத்­த­ர­விட்டால் தாம் காணி­களை உட­ன­டி­யாக விடு­விக்கத் தயா­ராக இருப்­ப­தாக கூறு­கிறார். இங்கு யார் உண்­மையைக் கூறு­கிறார் என்ற குழப்பம் பொது­மக்­க­ளுக்கு ஏற்­பட்­டி­ருக்­கி­றது.

இலங்­கையில் ஜனா­தி­பதி தான் அதிக அதி­காரம் படைத்­தவர். நிறை­வேற்று அதி­காரம் அவ­ருக்குத் தான் இருக்­கி­றது. முப்­ப­டை­க­ளி­னதும் தள­ப­தியும் அவர் தான்.

நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி பத­ வியை உரு­வாக்­கி­யவர் முன்னாள் ஜனா­தி­பதி ஜே.ஆர்.ஜய­வர்த்­தன. ஆணைப் பெண்­ணா­கவும், பெண்ணை ஆணா­கவும் மாற்­று­வதை தவிர மற்­றெல்லா அதி­கா­ரமும் தமக்கு இருப்­ப­தாக அவர் முன்னர் பெரு­மை­யுடன் கூறி­யி­ருந்தார்.

அந்­த­ள­வுக்கு அவ­ரிடம் அதி­கா­ரங்கள் குவிந்­தி­ருந்­தன.

பின்னர் மஹிந்த ராஜபக் ஷ 18ஆவது அர­சி­ய­ல­மைப்புத் திருத்­தத்தின் மூலம், ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரங்­களை மேலும் வலுப்­ப­டுத்திக் கொண்டார். எனினும் மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்ற பின்னர் 19 ஆவது திருத்­தச்­சட்­டத்தின் மூலம் ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரங்கள் குறைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.

இருந்­தாலும், நிறை­வேற்று அதி­கா­ரங்கள் இன்­னமும் அவ­ரிடம் தான் உள்­ளன. முப்­ப­டை­க­ளுக்கு ஆணை­யிடும் அதி­காரம் அவ­ரிடம் தான் இருக்­கி­றது,

ஆனால் தன்­னிடம் உள்ள நிறை­வேற்று அதி­கா­ரத்தை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பயன்­ப­டுத்­து­வ­தில்லை என்ற குற்­றச்­சாட்டு, ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி அமைச்­சர்­க­ளா­லேயே முன்­வைக்­கப்­பட்டு வரு­கி­றது. நிறை­வேற்று அதி­காரம் கொண்­ட­வ­ரான ஜனா­தி­பதி, தனது உத்­த­ரவை பாது­காப்புத் தரப்பு நடை­மு­றைப்­ப­டுத்­த­வில்லை என்று இரா.சம்­பந்தன், சுமந்­தி­ர­னிடம் கூறி­யி­ருக்­கிறார்.

அவ்­வா­றாயின், ஜனா­தி­ப­தியின் நிறை­வேற்று அதி­கா­ரத்தைக் கட்­டுப்­ப­டுத்தும் சக்­தி­யாக பாது­காப்புத் தரப்பு இருக்­கி­றதா என்ற சந்­தேகம் எழு­கி­றது.

அதே­வேளை, பாது­காப்பு அமைச்சில் நடந்த கூட்­டத்தில், காணி­களை பிடித்து வைத்­தி­ருப்­ப­தற்கு தமக்கு அதி­கா­ர­மில்லை என்று இரா­ணுவத் தள­பதி கூறி­யி­ருக்­கிறார். அவ்­வாறு காணி­களை பிடித்து வைத்­தி­ருக்­க­வில்லை என்றும் கூறி­யி­ருக்­கிறார். அர­சாங்கம் கூறினால், அதா­வது ஜனா­தி­ப­தியோ, பாது­காப்புச் செய­லரோ உத்­த­ர­விட்டால், உட­ன­டி­யாக காணி­களை விடு­விக்கத் தயார் என்றும் கூறி­யி­ருக்­கிறார்.

இரா­ணுவத் தள­ப­தியின் இந்தக் கருத்து, அர­சாங்­கத்தின் உத்­த­ரவின் பேரில் தான், காணி­களை படை­யினர் பிடித்து வைத்­தி­ருக்­கின்­றனர் என்று அர்த்­தப்­ப­டுத்­து­கி­றது.

அதே­வேளை, தாம் காணி­களை பிடித்து வைத்­தி­ருக்­க­வில்லை என்றும் அவ்­வாறு காணி­களைப் பிடித்து வைத்­தி­ருப்­ப­தற்கு அதி­கா­ர­மில்லை என்றும் இரா­ணுவத் தள­பதி கூறிய கருத்து உண்­மை­யா­ன­தல்ல.

இன்­னமும் இரா­ணு­வத்­தினர் வசம் காணிகள் உள்­ளன. அதனால் தான் அவற்றை விடு­விப்­பது தொடர்­பாக கலந்­து­ரை­யா­டு­வ­தற்­கான கூட்டம் பாது­காப்பு அமைச்சில் நடத்­தப்­பட்­டது. வடக்கில் இரா­ணு­வத்­தினர் வச­முள்ள காணி­க­ளுக்குள் உரி­மை­யா­ளர்­களால் நுழையக் கூட முடி­யாது.

“இது இரா­ணு­வத்­தி­ன­ருக்கு ஒதுக்­கப்­பட்ட நிலம்”, “அத்­து­மீறி உள்­நு­ழையக் கூடாது” அல்­லது “உள்­நு­ழைந்தால் தண்­டிக்­கப்­ப­டு­வீர்கள்” என்­பது போன்ற வாச­கங்­களை வடக்கில் படை­யினர் வச­முள்ள காணி­களின் வெளிப் புறங்­களில் வைக்­கப்­பட்­டி­ருக்கும் அல்­லது தொடங்க விடப்­பட்­டி­ருக்கும் தகவல் பல­கை­களில் எழு­தப்­பட்­டி­ருப்­பதை இப்­போதும் காணலாம்.

பொது­மக்­களின் காணி­களில் யாரும் நுழையக் கூடாது என்று தடுக்­கின்ற அதி­காரம் இரா­ணு­வத்­துக்கு அளிக்­கப்­பட்­டி­ருக்­கி­றதோ இல்­லையோ, அந்த அதி­கா­ரத்தை இரா­ணுவம் பயன்­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கி­றது. அப்­ப­டி­யி­ருக்கும் போது, பொது­மக்­களின் காணி­களை பிடித்து வைத்­தி­ருப்­ப­தற்கு இரா­ணு­வத்­தி­ன­ருக்கு எந்த அதி­கா­ரமும் இல்லை என்ற இரா­ணுவத் தள­ப­தியின் கருத்து அபத்­த­மா­னது.

வடக்­கிலும் கிழக்­கிலும், இரா­ணுவம் தனக்­கான அதி­கா­ரங்­களை தாமா­கவே பெற்றுக் கொண்­டது. போர்க்­கா­லத்தில் மாத்­தி­ர­மன்றி, போருக்குப் பின்­னரும் கூட அவ்­வாறு தான் நிலை­மைகள் இருந்­தன.

தற்­போது அந்த நிலை­மை­களில் சில மாறு­தல்கள் ஏற்­பட்­டி­ருந்­தாலும், பொது­மக்­களின் காணி­களை இன்­னமும் இரா­ணுவம் பிடித்து வைத்­தி­ருக்­கி­றது. அவ்­வாறு காணி­களைப் பிடித்து வைத்­தி­ருப்­ப­தற்கு தமக்கு அதி­கா­ர­மில்லை என்று கூறிய இரா­ணுவத் தள­பதி தான், இன்­னொன்­றையும் கூறி­யி­ருக்­கிறார்.

ஜனா­தி­ப­தியோ, பாது­காப்புச் செய­லரோ உத்­த­ர­விட்டால், காணி­களை விடு­விக்கத் தயார் என்­பதே அது. இங்கு ஒரு குழப்பம் வரு­கி­றது.

காணி­களைப் பிடித்து வைக்கும் அதி­காரம் இரா­ணு­வத்­துக்கு இல்­லை­யென்றால், அவற்றை விட்டு வெளி­யேறிச் செல்ல வேண்­டி­யது தானே, எதற்கு ஜனா­தி­ப­தியின் உத்­த­ரவு தேவைப்­ப­டு­கி­றது?

அப்­ப­டி­யாயின், ஜனா­தி­ப­தியும், இரா­ணுவத் தள­ப­தியும், ஒரு­வரை ஒருவர் மாறி மாறி சாட்டுச் சொல்லித் தப்­பிக்க முனை­கின்­ற­னரா? அல்­லது, இவ்­வாறு கூறி கூட்­ட­மைப்பை ஏமாற்ற முனைந்­தி­ருக்­கின்­ற­னரா? என்ற கேள்வி எழு­கி­றது.

வடக்கில் மாத்­தி­ர­மன்றி, கிழக்­கிலும் கூட தமிழ் மக்கள் பரம்­பரை பரம்­ப­ரை­யாக வாழ்ந்து வந்த, வளம்­மிக்க, பொரு­ளா­தாரப் பெறு­மானம் கொண்ட ஆயி­ரக்­க­ணக்­கான ஏக்கர் காணிகள் படை­யி­ன­ரிடம் உள்­ளன. இந்தக் காணிகள் தனியே பாது­காப்புத் தேவைக்கு என்றே அப­க­ரிக்­கப்­பட்­டன. ஆனாலும், வளம்­மிக்க இந்தக் காணி­களை படை­யினர் தமது பொரு­ளா­தாரத் தேட்­டங்­க­ளுக்­கா­கவும் வணிக நோக்­கங்­க­ளுக்­கா­கவும் பயன்­ப­டுத்தி வரு­கின்­றனர்.

அதே­வேளை படை­யி­ன­ரிடம் காணி­களை இழந்த குடும்­பங்கள் இன்­னமும் தற்­கா­லிக இருப்­பி­டங்­களில் அல்­லது முகாம்­களில் தமது பாரம்­ப­ரிய தொழில்­களை செய்ய முடி­யாத நிலையில் இருக்­கின்­றன.

இவ்­வா­றான நிலையில் தான் கேப்­பாப்­பு­ல­விலும் முள்­ளிக்­கு­ளத்­திலும் போராட்­டங்கள் நடத்­தப்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றன. இந்தப் போராட்­டங்­களின் தூண்­டு­தல்­களின் பேரில் தான், அர­சாங்­கத்தின் மீது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு அழுத்­தங்­களைக் கொடுக்க ஆரம்­பித்­தி­ருக்­கி­றது.

தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களை தீர்த்து வைக்­காமல், தமது கோரிக்­கை­களை நிறை­வேற்றிக் கொடுக்­காமல், கூட்­ட­மைப்பை தமிழ் மக்­க­ளிடம் இருந்து அந்­நி­யப்­ப­டுத்­து­வ­தற்கு அர­சாங்கம் முயற்­சிக்­கி­றதா என்று கூட பாரா­ளு­மன்­றத்தில் கேள்வி எழுப்­பப்­பட்­டது.

இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, கூட்டமைப்பின் தலைமையை மாற்ற வேண்டும் என்று வேறு ஒரு தரப்பு கிளம்பியிருக்கிறது.

இத்தகைய சூழலில் ஜனாதிபதியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இந்த விடயத்தில் இறுக்கமான நிலைமைகளை எதிர்கொண்டுள்ளனர். இதன் விளைவாகத் தான், காணிகள் விடுவிப்புத் தொடர்பான சில கூட்டங்களை நடத்தி பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

ஜனாதிபதியும், இராணுவத் தளபதியும் அவ்வாறு கூறியிருந்தாலும் கூட, காணிகள் விடுவிப்பில், வெறும் உத்தரவுகளுக்கு அப்பால் பல நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன என்பதை தான் மாவட்ட மட்டத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள கூட்டங்கள் உணர்த்தியிருக்கின்றன.

வாய்மொழி அல்லது எழுத்து மூல உத்தரவுகளுக்கு அப்பாலும், காணிகள் விடுவிப்பு விவகாரத்துக்கு இன்னொரு பரிமாணம் இருக்கிறது. ஆளை ஆள் காரணம் கூறித் தப்பிக்க முனைந்தாலும், அந்த மறைமுகக் காரணியானது, காணிகள் விடுவிப்பு விவகாரத்தை இலகுவாக நடைமுறைப்படுத்த அனுமதிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-04-23#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.