Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுகேசை ஐகோர்ட் நீதிபதி என நினைத்தேன் : தினகரன்

Featured Replies

சுகேசை ஐகோர்ட் நீதிபதி என நினைத்தேன் : தினகரன்

 

புதுடில்லி : சுகேசை ஐகோர்ட் நீதிபதி என நினைத்தேன் என விசாரணையின் போது தினகரன் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 

 

துருவி, துருவி விசாரணை :


இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு ரூ.60 கோடி வரை லஞ்சம் கொடுக்க முயன்றதாக தினகரன் மீது டில்லி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சில நாட்களுக்கு முன்னர் டில்லியில் சிக்கிய தரகர் சுகேஷ் சந்திரா அளித்த தகவலின்படி போலீசார் தினகரன் மீது வழக்கு பதிவு செய்திருந்தனர். தினகரனின் நண்பர் மல்லிகார்ஜூனா, உதவியாளர் ஜனார்த்தனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். தினகரனின் மொபைல்போன் அழைப்புகளையும் போலீசார் ஆய்வு செய்தனர்.
 

 

ஒரே வரியில் பதில் :


ஏற்கனவே 2 நாட்களாக, தலா 10 மணி நேரம் தினகரனிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் போது பெரும்பாலான கேள்விகளுக்கு தினகரன் ஒரே வரியில் பதில் அளித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் 3வது நாளாக இன்றும் (ஏப்ரல் 24) விசாரணைக்கு ஆஜராக தினகரனுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இன்று மாலை 4 மணிக்கு தினகரன் ஆஜராக உள்ள நிலையில், நேற்று நடத்தப்பட்ட விசாரணையின் போது தனக்கு சுகேசை முன்பே தெரியும் என தினகரன் வாக்குமூலம் அளித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
 

 

நீதிபதி என நினைத்தேன் :


இதற்கு முன்பு வரை சுகேசை தனக்கு யார் என்றே தெரியாது என தினகரன் கூறி வந்தார். ஆனால் நேற்று நடந்த விசாரணையின் போது, 'சுகேசை எனக்கு முன்பே தெரியும். அவரை ஐகோர்ட் நீதிபதி என நினைத்து பேசினேன்' என தினகரன் கூறி உள்ளதாக கூறப்படுகிறது. சுகேசுடன் தனக்கு தொடர்பு இருப்பதை தினகரன் ஒப்புக் கொண்டுள்ளதால், தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக சுகேசை அளித்துள்ள வாக்குமூலம் உண்மையாக இருக்கும் என்ற முடிவுக்கு டில்லி போலீஸ் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தினகரன் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1758009

  • தொடங்கியவர்
கிடுக்கிப்பிடி கேள்வியால் திணறிய தினகரன்
சுகேஷை தெரியும் என இறுதியாக ஒப்புதல்
 
 
 


'இரட்டை இலை' சின்னம் பெறுவதற்காக, தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு தொடர்பான விசாரணையில், இடைத்தரகர் சுகேஷ் சந்தரை, தனக்கு தெரியும் என, சசிகலா அக்கா மகன் தினகரன் ஒப்புக் கொண்டுள்ளார்.

 

Tamil_News_large_1758115_318_219.jpg



அ.தி.மு.க., இரு அணிகளாக பிரிந்ததால், தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ள, இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக, தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு, தினகரன் சார்பில் லஞ்சம் கொடுக்க முயன்றது தெரிய வந்தது.

இது தொடர்பாக, சுகேஷ் சந்தர் என்ற இடைத்தரகரை, 1.30 கோடி ரூபாய் ரொக்கத்துடன், டில்லி போலீசார் சமீபத்தில் கைது செய்தனர். 'இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக, தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு, 50 கோடி ரூபாயை தருவதற்கு தினகரன் முன்வந்தார்' என, விசாரணையின் போது, சுகேஷ் சந்தர் கூறினான்.
 

நள்ளிரவு, 12:30 மணி வரை


இந்த பேரம் குறித்து நடந்த தொலைபேசி உரையாடல் பதிவு உள்ளிட்ட, ஆதாரங்களின் அடிப்படையில், 'விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும்' என, தினகரனுக்கு, டில்லி போலீஸ் நோட்டீஸ் அனுப்பியது.
அதன்படி, தொடர்ந்து இரு நாட்கள், பல மணி நேரம் அவரிடம் போலீசார் விசாரித்தனர். நேற்று முன்தினம் பிற்பகல், 2:00 மணிக்கு துவங்கிய விசாரணை, நள்ளிரவு, 12:30 மணி வரை நீடித்தது.

அதன் தொடர்ச்சியாக, மூன்றாவது நாளாக, நேற்றும் விசாரணைக்கு ஆஜராக, டில்லி போலீஸ் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, மாலை, 4:00 மணிக்கு, தினகரன், அவரது உதவியாளர் ஜனார்த்தனன், நண்பர் மல்லிகார்ஜூனா ஆகியோரிடமும் விசாரணை நடந்தது.
டில்லி போலீஸ் இணை கமிஷனர் பிரபிர் ரஞ்சன், துணை கமிஷனர் மதுர் வர்மா, உதவி கமிஷனர் சஞ்சய் ஷெராவத் ஆகியோர், மாறி மாறி விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், சுகேஷின் கோர்ட் காவல், இன்றுடன் முடிவடைகிறது. அவனை, இன்று மீண்டும் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்த உள்ளனர்.

இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், 8.50 கோடிரூபாய் பணப் பரிவர்த்தனை நடத்துள்ளதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், விசாரணையில் அது உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும், போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தினகரன் மற்றும் அவரது உதவியாளர், நண்பர் மற்றும் இடைத்தரகர் சுகேஷ் சந்திராவுக்கு இடையே நடந்த தொலைபேசி உரையாடல்கள், பகிர்ந்து கொள்ளப்பட்ட செய்திகள் உள்ளிட்ட ஆதாரங்கள் உள்ளதாகவும், போலீசார் தெரிவித்து உள்ளனர்.


விசாரணைக்கு, தினகரன் போதிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை. ஆனாலும், நேற்றையை விசாரணையின்போது, இடைத் தரகர் சுகேஷ் சந்தரை, தனக்கு தெரியும் என, தினகரன் ஒப்புக் கொண்டதாக தெரிகிறது.அவருக்கு எதிராக மிகவும் வலுவான ஆதாரங்கள் உள்ளதால், அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என, டில்லி போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

தேர்தல் அதிகாரிகளிடம் விசாரணை


தினகரன் உள்ளிட்டோரிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்து, டில்லி போலீஸ் அதிகாரிகள் கூறியுள்ளதாவது:

* தினகரன், தொடர்ந்து விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதால், அவரை கைது செய்து, கோர்ட் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது

* தினகரன் மற்றும் சுகேஷ்சந்திராவிடம், ஒரே நேரத்தில் விசாரணை நடந்தது. அப்போது, தினகரனுடனான சந்திப்பு, எப்போது, எங்கு நடந்தது என, சுகேஷ் கூறினான்

* முதலில், இதை மறுத்து வந்த தினகரன், பின், சுகேஷை சந்தித்ததை ஒப்புக் கொண்டார்

* தினகரனின் வழக்கறிஞர் மூலம், சென்னையில் இந்த சந்திப்பு நடந்ததை இருவரும் ஒப்புக் கொண்டுள்ளனர்

* தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு, லஞ்சம்

 


கொடுக்க முயன்றதாக கூறப்பட்டுள்ளதால், இது குறித்து, தேர்தல் கமிஷன் அதிகாரிகளிடமும் விளக்கம் கேட்கப்பட்டது

* இரட்டை இலை சின்னம் தொடர்பான தேர்தல் கமிஷனின் விசாரணை, தேர்தல் கமிஷனில் நடந்த வாதங்கள் குறித்து, டில்லி போலீஸ் தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டு உள்ளது

* போலீஸ் விசாரணையின் போது, தமிழகத்தில் தனக்கு பணம் கொடுக்கப்பட்டதை, சுகேஷ் ஒப்புக் கொண்டுள்ளான்

* அந்த பணத்தில், இரண்டு சொகுசு கார்களை வாங்கியதாகவும், சென்னையில் இருந்து டில்லிக்கு, சாலை வழியாக பணத்தை கொண்டு வந்ததாகவும் கூறியுள்ளான்

* இந்த வழக்கு தொடர்பாக, இதுவரை, டில்லி போலீசார், 15 பேரிடம் விசாரணை நடத்தி உள்ளனர்

* கேரள மாநிலம், கொச்சியில் உள்ள சுகேஷின் வீட்டிலும் சோதனை நடந்தது

* அவனுடைய காதலியும், நடிகையுமான லீனா பாலிடமும் விசாரணை நடந்துள்ளது. ஆனால், அதில் எதுவும் சிக்கவில்லை

* தினகரன் - சுகேஷ் இடையே நடந்த உரையாடல்கள், செய்தி பரிமாற்றங்களை ஆதாரமாக எடுப்பதற்காக, இருவரது மொபைல் போன்களும், ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன

* இந்த வழக்கில், தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். - நமது சிறப்பு நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1758115

  • தொடங்கியவர்
தினகரன் மீண்டும் இன்று(ஏப்.,25) மாலை ஆஜராக உத்தரவு

தற்போதைய செய்தி

 

 

புதுடில்லி: இரட்டை இலை சின்னத்துக்காக லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு விசாரணைக்காக, 4வது நாளாக மீண்டும் இன்று(ஏப்.,25) மாலை 5 மணிக்கு ஆஜராக தினகரனுக்கு போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.
 

 

4வது நாளாக...


இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக, தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு, தினகரன் சார்பில் லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், டில்லியில் தினகரனிடம் டில்லி குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 3வது நாளாக நேற்று(ஏப்.,24) நடந்த விசாரணை 9 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த நிலையில், நள்ளிரவு 12.45 மணிக்கு விசாரணை முடிந்தது. இந்நிலையில், இன்று(ஏப்.,25) மாலை 5 மணிக்கு விசாரணைக்காக மீண்டும் ஆஜராகும்படி, தினகரனுக்கு போலீசார் உத்தவிட்டுள்ளனர். ஜனார்த்தனன், மல்லிகார்ஜுனா ஆகியோர் மதியம் 2 மணிக்கு ஆஜராக உத்தரவிட்டுள்ளனர்.

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1758360

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.