Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தினகரன் கைது

Featured Replies

லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தினகரன் கைது

 

புதுடில்லி: இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தினகரன் கைது செய்யப்பட்டார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1758849

தினகரன் நண்பர் மல்லிகார்ஜுனாவும் கைது
  • தொடங்கியவர்

லஞ்சம் தர முயன்ற வழக்கில் டி.டி.வி.தினகரன் அதிரடி கைது..!

 

இரட்டை இலை சின்னத்தைப் பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டி.டி.வி.தினகரன் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

dinakaran

கடந்த நான்கு நாட்களாக டி.டி.வி.தினகரனிடம் டெல்லி குற்றப்பிரிவு காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். நான்கு நாட்களில் 37 மணி நேரம் தினகரனிடம் விசாரணை நடைபெற்றது. இந்நிலையில், தினகரன் டெல்லி குற்றப்பரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். தினகரனின் நண்பர் மல்லிகார்ஜுனாவும் கைது செய்யப்பட்டார்.

சமீபத்தில் டெல்லி போலீஸில் சிக்கிய சுகேஷ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் டி.டி.வி.தினகரன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தொடர்ந்து தினகரனின் நண்பர் மல்லிகார்ஜூனா, உதவியாளர் ஜனார்த்தனிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வந்தது. மேலும், தினகரனின் செல்போன் அழைப்புகளையும் போலீஸார் ஆய்வு செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.

http://www.vikatan.com/news/politics/87558-ttvdinakaran-arrested-by-delhi-crime-branch-police.html

  • தொடங்கியவர்

‘டி.டி.வி.தினகரனைத் தொடர்ந்து, அ.தி.மு.க. ராஜதந்திரிக்கு வலை!’ - டெல்லி போலீஸின் அடுத்த அஸ்திரம் #VikatanExclusive

 
 

டி.டி.வி.தினகரன்

 டி.டி.வி.தினகரனைத் தொடர்ந்து, அ.தி.மு.க-வின் ராஜதந்திரியாகக் கருதப்படும் எம்பி ஒருவர், தினகரனின் நண்பர் ஆகியோரிடம் டெல்லி போலீஸார் விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

இரட்டை இலைச் சின்னத்தை மீட்க, ஒயிட் காலர் கிரிமினலான சுகேஷ் சந்திரசேகர்மூலம் பேரம் பேசியதாக, டி.டி.வி.தினகரன் மீது டெல்லி போலீஸார் வழக்குப்பதிவுசெய்தனர். ஒரு கோடி, 30 லட்சம் ரூபாய் பணத்துடன் சுகேஷ் சந்திரசேகரைக் கைதுசெய்த டெல்லி போலீஸார், அவரிடம் பெற்ற வாக்குமூலத்தின் அடிப்படையில், டி.டி.வி.தினகரனையும் மல்லிகார்ஜூனாவையும் நள்ளிரவில் கைது செய்தனர். போலீஸ் காவலில் உள்ள சுகேஷ் சந்திரசேகரிடம், தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது. டி.டி.வி.தினகரனை போலீஸ் காவலில் எடுக்கவும் டெல்லி போலீஸார் முடிவுசெய்துள்ளனர். அடுத்து, இந்த வழக்குத் தொடர்பாக, அ.தி.மு.க-வின் ராஜதந்திரியாகக் கருதப்படும் எம்பி ஒருவரிடமும், தினகரனின் வலதுகரமாகச் செயல்படும் ஒருவரிடமும் விசாரணை நடத்த டெல்லி போலீஸார் திடடமிட்டுள்ளனர்.

இதுகுறித்து டெல்லி போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், 'இரட்டை இலைச் சின்னத்தை மீட்க, தேர்தல் ஆணையத்திடமே பேரம் பேச டெல்லி இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரை, டி.டி.வி.தினகரன் தரப்பு அணுகியுள்ளது. சுகேஷ் சந்திரசேகர், டி.டி.வி.தினகரனுக்கு அ.தி.மு.க. வழக்கறிஞர் ஒருவர் மூலமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார். அதன்பிறகே, இரட்டை இலைச் சின்னம் மீட்க பேரம் பேசப்பட்டுள்ளது.

இதுதொடர்பான போன் உரையாடல்களை நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளோம். கடந்த நான்கு நாள்களாக நாங்கள் டி.டி.வி.தினகரனிடம் விசாரணை நடத்தினோம். போலீஸ் காவல் முடிந்து, சுகேஷ் சந்திரசேகரை நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தியபோது, முதல் குற்றவாளியான டி.டி.வி.தினகரனை ஏன் கைதுசெய்யவில்லை என்று நீதிபதி கேட்டார். இதையடுத்தே விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு, டி.டி.வி.தினகரனையும். மல்லிகார்ஜூனாவையும் கைதுசெய்துள்ளோம். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், முக்கியத் தகவல்கள் எங்களுக்குக் கிடைத்துள்ளன. அதில், அ.தி.மு.க எம்பி ஒருவரின் தலையீடும் டி.டி.வி.தினகரனின் வலதுகரமாகச் செயல்பட்ட ஒருவரிடமும் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது" என்றனர்.

டி.டி.வி.தினகரன்

டெல்லி போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், "டி.டி.வி.தினகரன், சுகேஷ் சந்திரசேகருக்குக் கொடுத்த பணம், ஹவாலா என்பது தெரியவந்துள்ளது. இந்தப் பணம், ஹவாலா கும்பல்மூலம் கொச்சியில்வைத்து சுகேஷ் சந்திரசேகருக்குக் கொடுக்கப்பட்டுள்ளதும் விசாரணையில் தெரிந்துள்ளது. இதனால், சென்னையைச் சேர்ந்த ஹவாலா கும்பலைச் சேர்ந்தவர்களைத் தேடிவருகிறோம். இதற்காக,  டெல்லி டீம் சென்னையில் தங்கி, தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில், எங்களின் சந்தேக வளையத்துக்குள் இருக்கும் அ.தி.மு.க. எம்பி., பா.ஜ.க-வின் முக்கியத் தலைவர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார். இருப்பினும், எங்களது விசாரணை வளையத்துக்குள் அந்த எம்பி இருக்கிறார்.

இதற்கிடையில், டி.டி.வி.தினகரனுக்கு வலதுகரமாக இருக்கும் அ.தி.மு.க.பிரமுகர் ஒருவருக்கு, இரட்டை இலைச் சின்னம் பேரத்தில் தொடர்பு இருப்பதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. அவரிடம் விரைவில் விசாரணை நடத்த முடிவுசெய்துள்ளோம். டி.டி.வி.தினகரன் கைதான தகவல் வெளியானதும் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களின் சிலரது செல்போன்கள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளன. மேலும், சிலர் தலைமறைவாகியுள்ளனர். மேலும், சுகேஷ் சந்திரசேகரிடம் கொடுத்தப் பணம் தற்போது யாரிடம் இருக்கிறது என்பது தொடர்பாக விசாரணை நடந்துவருகிறது. இதில் எங்களுக்கு, ஆதாரத்துடன் சில தகவல்கள் கிடைத்துள்ளன. அவர்கள் பணத்துடன் பதுங்கியிருப்பதாகவும் தெரியவந்துள்ளது. அவர்களையும் பணத்தையும் மீட்க நடவடிக்கை எடுத்துவருகிறோம்" என்றனர்.

டி.டி.வி.தினகரன் தரப்பில் பேசியவர்கள், "இந்த வழக்குக்கும் டி.டி.வி.தினகரனுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. குறிப்பாக, போலீஸார் சந்தேகிக்கும் அ.தி.மு.க. எம்பி ஒருவர், டி.டி.வி.தினகரனின் நெருங்கிய நண்பர் ஆகியோருக்கு போலீஸிடமிருந்து எந்தவித சம்மனும் வரவில்லை. அவர்களுக்கும் இந்த வழக்குக்கும் எந்தவித தொடர்பு இல்லை. டி.டி.வி.தினகரன் சார்பில் டெல்லி நீதிமன்றத்தில் இன்று ஜாமீன் மனு தாக்கல்செய்ய உள்ளோம். அதோடு, இந்த வழக்கை சட்டப்படி எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம்.

 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சர்கள் அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி ஆகிய அணிகளைச் சேர்ந்தவர்கள், டி.டி.வி.தினகரன் கைதுக்குப் பிறகு, ரகசியப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்படியென்றால், டி.டி.வி.தினகரன் கைதுக்காகத்தான் அவர்கள் இதுவரை காலதாமதப்படுத்தினார்களா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. டி.டி.வி.தினகரன் நினைத்திருந்தால், இந்த ஆட்சியைக் கலைத்திருக்கலாம். ஆனால், அவர் அப்படி நினைக்கவில்லை. பிளவுப்பட்ட அ.தி.மு.க ஒன்றிணைய வேண்டும் என்பதற்காக, கட்சியிலிருந்து ஒதுங்குவதாகப் பெருந்தன்மையோடு அறிவித்தார். ஆனால், அவரால் கட்சிக்கு வந்தவர்களே, இன்று அவருக்கு எதிராகச் செயல்படுவது வேதனையளிக்கிறது. இருப்பினும் எல்லாவற்றுக்கும் காலம் பதில்சொல்லும்" என்றனர்.

http://www.vikatan.com/news/tamilnadu/87576-delhi-polices-next-target-after-ttv-dinakaran.html

  • தொடங்கியவர்

ஜாமீன் கேட்கிறார் தினகரன்; காவலில் எடுத்தது டெல்லி போலீஸ்

 
 

ttv_dinakaran_intervier_2aa_15395.jpg

டி.டி.வி.தினகரன் மற்றும் அவரது நண்பர் மல்லிகார்ஜூனா ஆகியோரை திஸ் ஹசாரி நீதிமன்றத்தில் டெல்லி போலீஸார் இன்று ஆஜர்படுத்தினர். டெல்லி காவல்துறையினரின் கோரிக்கையை ஏற்று போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி திஸ் ஹசாரி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

டெல்லியில் சுகேஷ் சந்திரசேகர் என்பவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ஒரு  கோடி ரூபாய்க்கு மேல் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் அளிக்க முயற்சி செய்ததாக டி.டி.வி.தினகரன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக தினகரனிடம் டெல்லி காவல்துறையினர் நான்கு நாள்களாக விசாரணை செய்தனர்.

நான்கு நாள்கள் நடைபெற்ற விசாரணையின் முடிவில் தினகரன் லஞ்சம் கொடுக்க முயற்சி செய்ததை ஒப்புக்கொண்டார் என்று டெல்லி காவல்துறை தரப்பில் தெரிவித்தனர். இதனையடுத்து இன்று டெல்லி திஸ் ஹசாரி நீதிமன்றத்தில் டி.டி.வி.தினகரன் மற்றும் அவருடைய நண்பர் மல்லிகார்ஜூனா ஆகியோர் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, டி.டி.வி.தினகரன் மற்றும் மல்லிகார்ஜூனா ஆகியோரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கக் கோரி டெல்லி காவல்துறை சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி பூனம் சவுத்திரி, டெல்லி காவல்துறையினரின் கோரிக்கையை ஏற்று போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார். ஒரு வாரம் வரை போலீஸ் காவலில் விசாரணை தொடரும் என்று தெரிகிறது. சென்னை, பெங்களூரு, கொச்சி உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்த டெல்லி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

இதனிடையே, ஜாமீன் கேட்டு தினகரன் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

http://www.vikatan.com/news/politics/87613-dinakaran-and-mallikarjuna-appeared-in-delhi-court-and-appealed-for-bail.html

  • தொடங்கியவர்

டெல்லி குற்றப்பிரிவு போலீஸ் நாளை சென்னை வருகை!

 

Dina_33_18550.jpg

டி.டி.வி.தினகரனை ஐந்து நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லியின்  திஸ் ஹசாரி நீதிமன்றம் அனுமதி வழங்கியதை அடுத்து, டெல்லி குற்றப்பிரிவு போலீஸ் நாளை சென்னை வரவுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் டி.டி.வி.தினகரனை டெல்லி போலீஸ், சென்னை அழைத்து வரலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றன. 

தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் அளிக்க முயற்சி செய்ததாக டி.டி.வி.தினகரன் மற்றும் அவரின் நண்பர் மல்லிகார்ஜுனா ஆகியோரை டெல்லி குற்றப்பிரிவு போலீஸ் நேற்று கைது செய்தது. 

நான்கு நாள்கள் நடைபெற்ற விசாரணையின் முடிவில் தினகரன் லஞ்சம் கொடுக்க முயற்சி செய்ததை ஒப்புக்கொண்டார் என்று டெல்லி காவல்துறை தரப்பில் தெரிவித்தனர். இதையடுத்து, இன்று டெல்லி திஸ் ஹசாரி நீதிமன்றத்தில் டி.டி.வி.தினகரன் மற்றும் அவரின் நண்பர் மல்லிகார்ஜுனா ஆகியோர் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கக் கோரி டெல்லி காவல்துறை சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி பூனம் சவுத்திரி, டெல்லி காவல்துறையினரின் கோரிக்கையை ஏற்று தினகரனை ஐந்து நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார். கைது நடவடிக்கையை அடுத்து, ஜாமீன் கேட்டு தினகரன் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

வழக்கு விசாரணையில் டெல்லி போலீஸின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் வேகம் பிடித்துள்ளன. 

http://www.vikatan.com/news/india/87635-delhi-police-to-come-to-chennai-tomorrow.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.