Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘சசிகலாவின் அன்-அக்கவுண்ட் எங்கே?’ - விவேக்கை வளைக்கும் வருமான வரித்துறை #VikatanExclusive

Featured Replies

‘சசிகலாவின் அன்-அக்கவுண்ட் எங்கே?’ - விவேக்கை வளைக்கும் வருமான வரித்துறை #VikatanExclusive

 

சசிகலா

ரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டார் டி.டி.வி.தினகரன். இதையடுத்து, அ.தி.மு.க அணிகள் இணைப்பின் ஒரு பகுதியாக தலைமைக் கழகத்தில் இருந்த சசிகலா பேனர்கள் அப்புறப்படுத்தப்பட்டுவிட்டன. 'சசிகலாவிடம் உள்ள பதிவு செய்யப்படாத சொத்து ஆவணங்களைத் துருவிக் கொண்டிருக்கிறது வருமான வரித்துறையின் புலனாய்வு பிரிவு. இந்த உண்மைகளை முழுமையாக அறிந்த விவேக் ஜெயராமன் வளைக்கப்பட இருக்கிறார்' என்கின்றனர் பா.ஜ.க வட்டாரத்தில். 

சசிகலா குடும்பத்தை முழுமையாக அப்புறப்படுத்தும் வேலையில் தீவிரம் காட்டி வருகிறது பா.ஜ.கவின் அகில இந்திய தலைமை. அ.தி.மு.கவின் பொதுச் செயலாளர் பதவியைக் கைப்பற்றிய வேகத்தோடு, கோட்டையை நோக்கி வேகத்தைக் கூட்டினார் சசிகலா. இதையடுத்து, சொத்துக் குவிப்பு வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார். இதன்பிறகு கட்சிப் பணிகளில் தீவிரம் காட்டி வந்த தினகரனும், லஞ்சப் புகாரில் கைது செய்யப்பட்டுவிட்டார். "தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்கும் பணியில் இடைத்தரகராக பணியாற்றிய சுகேஷ் சந்திரசேகருடன், தினகரன் பேசிய தொலைபேசி ஆதாரங்களை சமர்ப்பித்ததாகச் சொல்கிறார்கள். ஆனால், 'செல்போன் நம்பர் ஸ்டேட்மெண்ட் லிஸ்ட்டை மட்டும் கையில் வைத்துக் கொண்டு விசாரித்தார்கள்' என்றுதான் தினகரன் சொல்கிறார்.

'தினகரன் யார் என்றே தெரியாது' என சுகேஷ் கூறிய விஷயங்களை எல்லாம் டெல்லி போலீஸார் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. 'டெல்லியில் உள்ள மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் துணையோடுதான் தினகரன் இந்தக் காரியத்தைச் செய்தார்' என்பதற்கான ஆதாரங்களை வைத்துக் கொண்டு போலீஸார் விசாரிக்கின்றனர். கைது நடவடிக்கையில் இருந்து தப்புவதற்காக, கடைசிக்கட்ட முயற்சிகளை மேற்கொண்டார் தினகரன். அவருடைய கடைசிக்கட்ட நம்பிக்கையும் பொய்த்துப் போய்விட்டது. தற்போது ஜாமீன் பெறுவதற்கான வேலைகளில் அவருடைய வழக்கறிஞர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர் வழக்கறிஞர்கள். ‘டெல்லியை விட்டு நகரக் கூடாது’ என்ற நிபந்தனையோடு கூடிய ஜாமீன் கிடைக்கலாம் என நம்புகின்றனர். பன்னீர்செல்வம் அணியினர் எதிர்பார்த்தது போலவே, சசிகலாவும் தினகரனும் இப்போது களத்தில் இல்லை. கார்டன் நிர்வாகத்தைக் கவனித்து வந்த வெங்கடேஷும் வெளியேற இருக்கிறார். கார்டனின் அனைத்து போக்குவரத்துகளையும் அறிந்தவர் இளவரசி மகன் விவேக். அவரை வளைப்பதுதான் அடுத்தகட்ட டார்கெட்" என்கிறார் அ.தி.மு.க அம்மா அணியின் நிர்வாகி ஒருவர்.

விவேக் ஜெயராமன்“போயஸ் கார்டனில் இதுநாள் வரையில் நடந்த பதிவு செய்யப்படாத கணக்கு வழக்குகளை வருமான வரித்துறையின் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். சிறுதாவூர் பங்களா, கொடநாடு எஸ்டேட், மிடாஸ் மதுபான ஆலை, ஜெயா டி.வி, நமது எம்.ஜி.ஆர், ஜாஸ் சினிமாஸ் என கண்ணுக்குத் தெரிந்த சொத்துக்களை ஆய்வு செய்வது ஒருபுறம் இருந்தாலும், மன்னார்குடி உறவுகளின் பெயர்களில் வாங்கிக் குவிக்கப்பட்ட சொத்துக்கள், கார்டனின் முக்கிய உதவியாளர் பெயரில் கையெழுத்திடப்பட்ட சொத்துக்கள், தமிழ்நாடு மற்றும் ஆந்திர, கர்நாடக மாநிலங்களில் வாங்கப்பட்ட நிலங்கள், பங்கு முதலீடு, மருத்துவமனையில் ஜெயலலிதா இருந்த நாட்களில் டெல்டா மாவட்டத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட சொத்துக்கள் என அனைத்தையும் மிகத் துல்லியமாக கணக்கெடுத்து வருகின்றனர். ஆவணங்களைப் பதுக்கியது குறித்த விவரத்தை, பன்னீர்செல்வம் அணியின் தரப்பில் இருந்து டெல்லி கவனத்துக்கு சில தகவல்கள் கொண்டு செல்லப்பட்டன. சேகர் ரெட்டி முதல் விஜயபாஸ்கர் வரையில் ரெய்டு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டனர். இவர்களின் வீடுகளுக்குள் நுழைந்த அதிகாரிகளுக்கு கை நிறைய ஆவணங்கள் சிக்கின. இதற்குக் காரணமே, அதிகாரிகளுக்குக் கிடைத்த துல்லியமான சர்வே தகவல்கள்தான்.

பன்னீர்செல்வம்அடுத்தகட்டமாக, கணக்கில் வராத சசிகலா சொத்துக்களை பொதுமக்கள் மத்தியில் அடையாளப்படுத்தும் வேலைகளில் நிதித்துறை அமைச்சகம் இறங்கியிருக்கிறது. சசிகலா, தினகரனோடு மத்திய அரசின் வேலைகள் நின்றுவிடாது. அடுத்து இருக்கும் முக்கிய சாட்சிகள் விவேக், டாக்டர்.வெங்கடேஷ், டாக்டர்.சிவக்குமார், தினகரன் மனைவி அனுராதா உள்ளிட்டவர்கள். இதில் விவேக்கின் பணப் பரிவர்த்தனைகளை வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். கடந்த ஆட்சியில் தியேட்டர் அதிபர்கள் மிரட்டப்பட்டது முதல் முக்கிய தியேட்டர்கள் விலைக்கு வாங்கியது வரையிலான ஆதாரங்களைக் கையில் வைத்துள்ளனர். 'இவர்களையும் கைது வளையத்துக்குள் கொண்டு வந்துவிட்டால், சசிகலா குடும்பத்தை ஒரே அடியாக அரசியலில் இருந்து அப்புறப்படுத்திவிடலாம்' எனக் கணக்கு போடுகிறது பா.ஜ.க தலைமை. வரக்கூடிய நாட்களில் மிகப் பெரிய சோதனைகளை எதிர்கொள்ள இருக்கிறார் இளவரசி மகன் விவேக்" என்கிறார் அ.தி.மு.க தலைமைக்கழக நிர்வாகி ஒருவர். 

இதுகுறித்து நம்மிடம் பேசிய விவேக்கின் உதவியாளர் ஒருவர், "ஜாஸ் சினிமாஸ் அலுவலகத்தைத் தொடங்கிய முதல், வங்கியின் கடன் பெற்றுத்தான் நடத்தி வருகிறோம். தியேட்டர்களை குத்தகை அடிப்படையில் வாங்கி நடத்தப்பட்டு வருகிறது. எந்த இடத்திலும் விவேக்கின் பெயருக்கு ஆவணங்கள் பதிவு செய்யப்படவில்லை. ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்தின் பொறுப்பில் அவர் இருக்கிறார். கூடவே, ஜெயா டி.வி நிர்வாகத்தையும் கவனித்து வருகிறார். அரசியல் நடைமுறைகளை அறியாமல் வளர்ந்தவர் அவர். ஒரு தொழிலாளியாகத்தான் செயல்பட்டு வருகிறார். இந்த விவகாரத்தில் அவரை இழுப்பது அவசியமற்றது" என்கின்றனர். 

‘இன்னும் நான்காண்டுகளுக்கு சசிகலா வெளியில் வரப் போவதில்லை. அவர் படம் இருப்பதில் என்ன தவறு?' எனப் பேசி வந்த எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள், இன்று காலை அந்தப் படங்களை அப்புறப்படுத்திவிட்டனர். ‘இன்று முதல் பேச்சுவார்த்தை தொடங்கலாம்’ என இரண்டு தரப்பினரும் உற்சாகமாக இருக்கின்றனர். 'ஜெயா டி.வி நமது கட்டுப்பாட்டில் வரும் வரையில் நமக்கு முழுமையான வெற்றி இல்லை. அந்தக் குடும்பத்தின் நிழல்கூட படராத வகையில் மத்திய அரசின் நடவடிக்கைகள் தொடரும்' என அதிர வைக்கின்றனர் பன்னீர்செல்வம் அணியினர். 

http://www.vikatan.com/news/tamilnadu/87579-where-is-sasikalas-unofficial-accounts---it-department-targets-vivek.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.