Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொடநாடு காவலாளி கொலை வழக்கு: ரூ.200 கோடியை கொள்ளையடிக்க திட்டம் தீட்டியது அம்பலம்

Featured Replies

கொடநாடு காவலாளி கொலை வழக்கு: ரூ.200 கோடியை கொள்ளையடிக்க திட்டம் தீட்டியது அம்பலம்

 

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கொடநாடு எஸ்டேட்டுக்குள் ரூ.200 கோடி ரொக்கமாக இருப்பதாகவும், அந்த பணத்தை கொள்ளையடிக்க திட்டம் தீட்டப்பட்டதாக கைதானவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்

 
 
 
 
கொடநாடு காவலாளி கொலை வழக்கு: ரூ.200 கோடியை கொள்ளையடிக்க திட்டம் தீட்டியது அம்பலம்
 
கோவை:

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் கடந்த 24-ந் தேதி காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டதும், அங்கிருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கொள்ளை கும்பல் தாக்கியதில் காயமடைந்த மற்றொரு காவலாளியான கிருஷ்ணபகதூர் கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். இதில் ஜெயலலிதாவிடம் கார் டிரைவராக பணியாற்றிய கனகராஜ் என்பவர் தான் இந்த சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது நண்பரான கோவையை சேர்ந்த சயன் ஏற்பாட்டின் பேரில் கேரள மாநிலத்தை சேர்ந்த கூலிப் படையினர் உள்பட மொத்தம் 11 பேர் இச்சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

அவர்களை பிடிப்பதற்காக கேரளா, சென்னைக்கு தனிப்படை விரைந்தது. போலீஸ் நெருங்கியதை அறிந்த கனகராஜ் தனது சொந்த ஊரான சேலத்துக்கு தப்பி சென்றார். உடனே தனிப்படை அங்கு விரைந்து சென்றனர். போலீஸ் துரத்துவதை தெரிந்து கொண்ட கனகராஜ் போலீசாரிடம் சரணடைய சென்ற போது கார் மோதி விபத்தில் பலியானார். இதேபோல கனகராஜின் நண்பரான சயனை போலீசார் தேடி சென்றனர். அவர் தனது மனைவி வினுபிரியா(27), மகள் நீனு(5) ஆகியோருடன் காரில் கேரளாவுக்கு தப்பி சென்ற போது பாலக்காடு அருகே விபத்தில் சிக்கினார். இதில் வினுபிரியா, நீனு ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். படுகாயமடைந்த சயன் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
201704301008061559_Copy%20of%20Untitled-
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கொடநாடு எஸ்டேட்டுக்குள் பாதுகாப்பு குறைக்கப்பட்டு இருப்பது கனகராஜிக்கு தெரிந்தது. மேலும், எஸ்டேட்டுக்குள் ரூ.200 கோடி ரொக்கமாக இருப்பதாகவும் அவருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. எனவே அந்த பணத்தை கொள்ளையடிப்பதற்காக கனகராஜ் தனது நண்பர் சயனுடன் சேர்ந்து திட்டம் வகுத்துள்ளார்.

சயனுக்கு திருச்சூரை சேர்ந்த ஹவலாகும்பலுடன் தொடர்பு உண்டு. அவர்கள் மூலம் கொடநாடு எஸ்டேட்டில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டி கனகராஜூம், சயனும் கடந்த 20 நாட்களுக்கு முன்பு திருச்சூர் சென்று ஹவலா கும்பலின் முக்கிய புள்ளியும், சாமியாருமான மனோஜ் என்பவரை சந்தித்து பேசி உள்ளனர். அவர் வகுத்துக் கொடுத்த திட்டத்தின்படி 3 கார்களில் 11 பேர் வந்து இந்த சம்பவத்தை அரங்கேற்றியது தெரிய வந்தது.

இந்த வழக்கில் தொடர்புடைய திருச்சூரை சேர்ந்த சந்தோஷ் சாமி, தீபு, சதீ‌ஷன், உதயகுமார் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். கொள்ளை மூலம் கிடைக்கும் பணத்தில் பங்கு தருவதாக மனோஜ் ஆசை காட்டியதால் அவருடன் வந்ததாக கைது செய்யப்பட்ட 4 பேரும் வாக் குமூலத்தில் கூறி உள்ளனர்.

இந்த கொள்ளையில் திருச்சூரை சேர்ந்த ஜிதின் ராய், ஜம்சத், குட்டி என்ற ஜிதின் ஆகியோர் ஈடுபட்டது தெரிய வந்தது. தொடர்ந்து நடந்த தேடுதல் வேட்டையில் ஜிதின் ராய், ஜம்சத் ஆகியோரை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

இவர்களிடம் இருந்து கொள்ளை சம்பவத்தில் பயன் படுத்திய ஒரு காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள மனோஜ், குட்டி என்ற ஜிதின் உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். மனோஜ் மீது கேரளாவில் பல்வேறு வழக்குகள் உள்ளது.

கடைசியாக கடந்த ஜனவரி மாதம் ஹவலா பணத்தை கொள்ளையடித்த வழக்கில் கைதாகி ஜெயிலுக்கு சென்று ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்த நிலையில் சயன் மூலம் கொடநாடு எஸ்டேட்டில் கொள்ளையடிக்கும் திட்டத்தை வகுத்து அரங்கேற்றி உள்ளார். அவர் பிடிபடும் போது இந்த திட்டத்தின் பின்னணியில் வேறு யார்-யாரெல்லாம் உள்ளனர்? கொள்ளையடிக்கப்பட்டவை என்னென்ன? என்பது போன்ற பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் தெரிகிறது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/04/30100805/1082813/Kodanad-guard-murder-case-Rs-200-crore-plan-to-plunder.vpf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.