Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தருகிறோம், தருகிறோம் என்கிறது நல்லாட்சிஅரசு ஆனால் எதனையும் தருவதாக இல்லை! வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் விசனம்

Featured Replies

தருகிறோம், தருகிறோம் என்கிறது நல்லாட்சிஅரசு ஆனால் எதனையும் தருவதாக இல்லை!

04444-b2216c3326ae4e6a4cff63280b3757c4e56c30f5.jpg

 

வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் விசனம்

ஆர்.பி., எஸ்.கணேசன்

இரா­ணு­வத்­தினர் அவர்­களின் மன­தி­லி­ருக்கும் தவ­றா­னதோர் கருத்தை நீக்­க­வேண்டும். புலி­க­ளி­ட மி­ருந்து காணி­களை கைப்­பற்­றிய பின்னர் அது தமது காணிகள் என நினைக்­கின்­றார்கள். இங்கு நடை­பெற்­றது உள்ளூர்க் கல­வ­ர­மாகும். எனவே கல­வரம் முடிந்­ததும் இரா­ணுவம் காணி­களை விட்டு வெளி­யே­று­வது அவ­சி­ய­மா­னது என வட மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன் தெரி­வித்தார். வீர­கே­சரி வார­வெ­ளி­யீட்­டுக்கு அவர் வழங்­கிய செவ்­வி­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார். 

அவர் மேலும் கூறு­கையில், முன்­னைய அரசு எமக்கு எதையும் தர­மாட்டோம் என்று வெளிப்­ப­டை­யாகக் கூறி­யது. அதனால் நாம் எதிர்த்து நின்று சண்­டை­யிட்டோம். தற்­போ­தைய நல்­லாட்சி அரசு தரு­கிறோம் தரு­கிறோம் என்று கூறு­கி­றது. ஆனால், எத­னையும் தரு­வ­தாகத் தெரி­ய­வில்லை. இந்­நி­லையில் நாம் எவ்­வாறு அவர்­க­ளுடன் சண்­டை­யி­டு­வது என்றும் கேள்வி எழுப்­பினார். 

அவ­ரு­ட­னான முழு­மை­யான செவ்வி வரு­மாறு, 

கேள்வி: இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி இலங்­கைக்கு வரு­கை­த­ரும்­போது அவ­ரிடம் வட­மா­காண மக்­க­ளுக்கு நன்­மை­ய­ளிக்கக் கூடிய வகையில் ஏதா­வது கோரிக்­கை­யொன்றை முன்­வைக்கும் எண்ணம் உங்­க­ளிடம் இருக்­கின்­றதா?

பதில்:அவ்­வா­றான எண்ணம் தற்­போது இல்லை. ஆனால், பலாலி விமான நிலை­யத்தை, மக்­க­ளது சிறு அளவு காணி கூட எடுக்­காமல் அதை நவீ­னப்­ப­டுத்தி பயன்­ப­டுத்த முடியும் என்று இந்­திய அர­சாங்கம் தெரி­வித்­தி­ருந்­தது. ஆகவே அதை அவ்­வாறே புனர்­நிர்­மாணம் செய்து தரும்­படி கேட்­கலாம் என்று அண்­மையில் சில­ருடன் கலந்­து­ரை­யா­டி­யுள்ளேன். 

கேள்வி: வட, கிழக்கு காணி விட­யங்­களில் முப்­ப­டை­களின் தள­பதி என்ற வகையில் ஜனா­தி­ப­தியால் முடி­வெ­டுக்­க­மு­டியும். ஆனால், ஜனா­தி­பதி அந்த முடி­வெ­டுக்கும் அதி­கா­ரத்தை இரா­ணு­வத்­தி­ன­ரிடம் வழங்­கி­யது போன்ற தோற்­றப்­பாடு எழுந்­துள்­ளது. அது­மட்­டு­மன்றி, இரா­ணு­வத்­தி­ன­ருடன் கூட்­ட­மைப்பு பேச்­சு­வார்த்­தை­களை நடத்­தி­யுள்­ளது. ஆகவே, இது குறித்த உங்கள் கருத்து என்ன?

பதில்: நீங்கள் சொல்­வது உண்மை. அதா­வது படை­யினர் போர் முடி­வுற்ற ஒரு கால­கட்­டத்தில் மக்கள் பிர­தி­நி­தி­களின் ஆற்­றுப்­ப­டுத்­தலின் கீழ் செயற்­ப­ட­வேண்­டி­ய­வர்கள். போரில்­லாத நிலை­மை­களில் தங்­க­ளுக்கு விருப்­ப­மான விதத்தில் அவர்­களால் செயற்­பட முடி­யாது. போர் முடிந்து எட்டு வரு­டங்கள் முடிந்த நிலையில் மக்கள் பிர­தி­நி­தி­க­ளுடன் சரி­ச­ம­மாக இருந்து பேச்­சு­வார்த்தை நடத்­து­வ­தற்கு இரா­ணு­வத்­தி­ன­ருக்கு இட­ம­ளிக்­கக்­கூ­டாது. ஆனால், தற்­போ­தைய அர­சாங்கம் அவர்­க­ளுடன் சரி­ச­ம­மாக அமர்ந்து பேச்­சு­வார்த்தை நடத்தி அவர்­க­ளுக்கு ஒரு சம அந்­தஸ்தை கொடுப்­ப­தென்­பது சற்று சிந்­திக்­க­வேண்­டிய விட­ய­மாகும். அத்­துடன், வடக்கில் கிட்­டத்­தட்ட 150,000 இரா­ணுவம் நிலை­கொண்­டுள்ள நிலையில் அவர்­களை மக்கள் பிர­தி­நி­தி­க­ளுடன் பேச்­சு­வார்த்­தையில் ஈடு­ப­டு­வ­தற்கு அனு­ம­தி­ய­ளிக்கக் கூடாது. அம்­மக்கள் பிர­தி­நி­தி­க­ளுக்கு அது பின்னர் பாதிப்பை ஏற்­ப­டுத்­தலாம். வேண்­டு­மென்றே அர­சாங்கம் இந்த நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கின்­றதா என்றும் தெரி­யாது. 

ஆனால், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு இவ்­வி­ட­யங்­களில் எவ்­வாறு நடந்­து­கொள்­கின்­றது என்­பது எனக்குத் தெரி­யாது. மீள்­கு­டி­யேற்ற அமைச்சில் நடை­பெ­ற­வேண்­டிய காணி விடு­விப்பு சம்­பந்­த­மான பேச்­சு­வார்த்தை பாது­காப்பு அமைச்சில் இடம்­பெற்­றுள்­ளது. தீர்­மா­னங்­களை எடுக்கக் கூடிய எங்­க­ளு­டைய வலு­வையும் அந்­தஸ்­தையும் அதி­கா­ரத்­தையும் நாங்கள் இழந்து வரு­கின்றோம் என்­பதே இதன் அர்த்­த­மாகும். ஆனால், பொது­வாக இதுதான் நடந்­து­கொண்­டு­வ­ரு­கின்­றது.  

காணி­களைப் பற்றி நாங்கள் இரா­ணு­வத்­தி­ன­ரிடம் கேட்டு அதன்­படி நடந்­து­கொள்­ள­வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது. அத்­துடன் இரா­ணு­வத்­தி­ன­ரிடம் காணி­களை விடு­விக்­கின்­றீர்­களா எனக் கேட்டால், இல்லை என்­று­தானே சொல்­வார்கள். ஏனென்றால் இங்கு காணி­களை சுவீ­க­ரித்து வைத்­தி­ருப்­பதன் மூலம் படை­யினர் வரு­மானம் தேடிக்­கொள்­கின்­றனர். வீடு­களை கட்டி சுக­மாக வாழ்­கின்­றனர். மேலும் வேறு சமூகம் சம்­பந்­தப்­பட்ட பிரச்­சி­னைகள் இங்கு இல்­லா­மலும் இல்லை. ஆகவே, மேற்­கு­றிப்­பிட்ட விட­யங்­களைக் கார­ணங்­காட்டி நாங்கள் காணி­களை விடு­விக்க முடி­யாது என்றே படை­யினர் கூறி வரு­கின்­றனர். இந்தக் கார­ணங்­களை முதல் ஆராய்ந்­து­பார்க்­கும்­பட்­சத்தில் எந்­த­வொரு கார­ணமும் நியா­ய­மில்­லாத ஒரு கார­ண­மா­கவே தென்­படும்.

வட­மா­காண முத­ல­மைச்சர் என்­ற­வ­கையில் எந்­த­வி­த­மான பாது­காப்பும் இரா­ணு­வத்­தி­ட­மி­ருந்து எனக்குத் தேவை­யில்லை என்­பதை தெரி­வித்துக் கொள்­கின்றேன். இந்தப் பாது­காப்பு விட­யத்தை நாங்கள் பொலி­ஸா­ருடன் பார்த்­துக்­கொள்வோம். அத்­துடன் எங்­க­ளுக்கு பொலிஸ் அதி­கா­ரத்தைத் தந்தால் கூட அதுவும் எங்­க­ளுக்கு வச­தி­யா­க­வி­ருக்கும். ஆனால், இரா­ணு­வத்­தினர் தமது இருப்பை பாது­காப்­ப­தற்­காக நடக்­கா­ததை நடந்­த­தாகக் கூறிக்­கொண்­டி­ருக்­கின்­றனர்.  

கேள்வி: அப்­ப­டி­யென்றால் இரா­ணு­வத்­தி­ன­ருடன் கதைப்­பது சாத்­தி­ய­மில்லை என்­கின்­றீர்­களா?

பதில்: அது அப்­ப­டி­யல்ல. இரா­ணு­வத்­தி­ன­ருக்கு இருக்­கின்ற அந்­தஸ்தைப் பார்க்­கிலும் அதிக அந்­தஸ்தைக் கொடுத்து கதைப்­ப­தென்­பது பிழை­யான விடயம் என்று சொல்­கின்றேன்.  

கேள்வி: காணியை விடு­விப்­பது தொடர்பில் எவ்­வித தந்­தி­ரோ­பா­யத்தை கையாள்­வது பொருத்­த­மென்று நினைக்­கின்­றீர்கள்?

பதில்: எனது சார்பில் வட­மா­காண சபை உறுப்­பி­ன­ரான குரு­கு­ல­ராஜா இரா­ணு­வத்­தி­ன­ரு­டனும் மீள்­கு­டி­யேற்ற அமைச்­சு­டனும் காணி விடு­விப்பு தொடர்பில் பேச்­சு­வார்த்தை நடத்­தினார். எனது சார்பில் நான் அப்­பேச்­சு­வார்த்­தைக்கு வழங்­கிய கடி­தத்தில், முத­லா­வ­தாக இரா­ணு­வத்­தினர் அவர்­களின் மன­தி­லி­ருக்கும் தவ­றா­னதோர் கருத்தை நீக்­க­வேண்டும். அதா­வது அவர்கள் விடு­த­லைப்­பு­லி­க­ளி­ட­மி­ருந்து காணி­களை கைப்­பற்­றிய பின்னர் அந்தக் காணிகள் தம்­மு­டைய காணிகள் என்று நினைத்­துக்­கொண்­டி­ருக்­கின்­றனர். யுத்தம் நடந்­த­போது அர­சாங்­கத்தின் அதி­காரம் முழு இலங்­கை­யிலும் இருந்­தது. ஏனென்றால், அரச உத்­தி­யோ­கஸ்­தர்­க­ளுக்கு சம்­பளம் உள்­ளிட்ட அனைத்­தையும் கொடுத்­தது அர­சாங்­கம்தான். அந்­தக்­கா­லத்தில் அர­சாங்­கத்தின் அதி­கா­ரப்­ப­ரவல் இந்த முழு இலங்­கை­யிலும் இருந்­தது. ஆகவே, நடந்­தது ஓர் உள்­ளூர்க்­க­ல­வரம். அந்த உள்­ளூர்க்­க­ல­வரம் முடிந்­த­பின்னர் இரா­ணுவம் அந்தக் காணி­களை விட்டு செல்­ல­வேண்டும். ஆகவே, இரா­ணுவம் இங்கு இருக்­க­வேண்­டிய அவ­சி­ய­மில்லை. சகல அதி­கா­ரமும் பொலி­ஸா­ரிடம் வழங்­கப்­ப­ட­வேண்டும் போன்ற விட­யங்­களை உள்­ள­டக்­கியே நான் ஒரு கடிதம் எழுதி அதை குரு­கு­ல­ரா­ஜா­வுக்கு அனுப்­பி­யுள்ளேன்.

தந்­தி­ரோ­பாயம் என்றால், முத­லா­வது இரா­ணு­வத்­தி­னரின் மனங்­களில் இருக்­கின்ற தவ­றான கருத்­துக்­களை முதல் களை­ய­வேண்டும். இரண்­டா­வது படை­யினர் அர­சாங்­கத்­துக்கு கட்­டுப்­பட்­ட­வர்கள் என்­பதை நாங்கள் வெளிக்­கொ­ணர வேண்டும். மூன்­றா­வது தமது மக்­க­ளு­டைய தேவை­களை கருத்­திற்­கொண்டு அதற்கு என்­னென்ன தேவையோ அதை மேற்­கொள்­ள­வேண்டும். அந்­த­வ­கையில் எம்­மு­டைய மக்­களின் காணி­களை விடு­விக்­க­வேண்­டி­யது அர­சாங்­கத்தின் பாரி­ய­தொரு கடப்­பா­டாகும். நான்­கா­வது யுத்­த­கா­லத்தில் அதி­க­ள­வான படை­யி­னரை அர­சாங்கம் உள்­வாங்­கி­யி­ருக்­கின்­றது. ஆகவே, அவர்­களை படை­ய­ணி­யி­லி­ருந்து படிப்­ப­டி­யாகக் குறைத்து சமூ­கத்­தோ­டி­ணைந்த ஒரு வாழ்க்­கையை வாழ்­வ­தற்­கேற்ற வழி­வ­கைகள் செய்­யப்­ப­ட­வேண்டும். அத்­துடன், முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரி­கா­விடம் இதற்­கென்று ஒதுக்­கப்­பட்­டுள்ள விசேட நிதி ஒதுக்­கீட்டு நிதியில் இதை செய்­யலாம் என்று அவ­ரிடம் நாம் கூறி­யி­ருந்தோம். அதை இன்னும் செய்­ய­வில்லை. அத்­துடன், போரினால் பாதிக்­கப்­பட்டு புனர்­வாழ்வு பெற்­ற­வர்­க­ளுக்கு வாழ்­வா­தார உத­வி­களை செய்­ய­வேண்டும் என்று நாங்கள் கூறி­யி­ருந்தோம். அதையும் அவர்கள் இன்னும் செய்­ய­வில்லை. சமா­தா­னத்­துக்கும் நல்­லி­ணக்­கத்­துக்கும் என்று ஒதுக்­கப்­பட்ட நிதி எங்­க­ளுடன் கலந்­தா­லோ­சிக்­காமல் செல­வ­ழிக்­கப்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்­றது. போர்க்­குற்றம் சம்­பந்­த­மான விசா­ர­ணை­களை நடத்­துதல், இரா­ணு­வத்­தி­னரைக் குறைத்தல் உள்­ளிட்ட பல விடங்­களை நாங்கள் அர­சாங்­கத்­துடன் பேசிக்கொண்டிருக்கின்றோம். 

கேள்வி: வடமாகாண சபைக்கும் மத்திய அரசுக்குமிடையிலான உறவுமுறை தற்போது எவ்வாறு காணப்படுகின்றது?

பதில்: எங்களுக்கும் மத்திய அரசாங்கத்துக்குமிடையில் அப்படி பெரியதொரு பிரச்சினை இல்லை. ஆனால், மத்திய அரசாங்கமோ எல்லாவற்றையும் தருகின்றோம் தருகின்றோம் என்று எதையும் தருவதில்லை. தரமாட்டோம் என்றால் எதிர்த்து நின்று சண்டை பிடிக்கலாம். தருகின்றோம் தருகின்றோம் என்று தராமல் விடுபவர்களுடன் எவ்வாறு சண்டைபிடிப்பது? இதுவே தற்போது காணப்படுகின்ற பிரச்சினை. சென்ற அரசாங்கமோ தரமாட்டோம் என்று சொன்னது. ஆகவே, அவர்களுடன் சண்டைபிடித்தோம். ஆனால், தற்போதிருக்கின்ற அரசாங்கமோ தருகின்றோம் தருகின்றோம் என்று சொல்லிக்கொண்டுவந்தாலும் எதையும் தருகின்ற மாதிரித் தெரியவில்லை. இவ்வாறானதொரு நிலைமையே தற்போதைய வடமாகாண சபை எதிர்கொண்டு வருகின்றது. ஆகவே, மத்திய அரசாங்கத்துடன் மனவருத்தப்படக்கூடிய ஓர் உறவே தற்போது வடமாகாணசபைக்கு இருந்துவருகின்றது.    

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2017-04-30#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.