Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் குறித்து, வருமான வரித்துறை விசாரணையை துவக்கியுள்ளது.

Featured Replies

gallerye_235600480_1761921.jpg

சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் குறித்து, வருமான வரித்துறை விசாரணையை
துவக்கியுள்ளது. இவரது, 'ஜாஸ்' சினிமா நிறுவனத்திற்கு, 1,000 கோடி ரூபாய் முதலீடு வந்தது பற்றியும், அவரது மலைக்க வைக்கும் அரசியல் தொடர்புகள் குறித்தும் விசாரிக்க திட்டமிட்டுள்ளது. சசிகலா, தினகரன், விவேக் என, அதிரடி நடவடிக்கை தொடர்வதால், சொத்துக்கள் பறிபோகுமோ என திவாகரன், வெங்கடேஷ் உள்ளிட்ட, சசிகலா சொந்தங்கள் பலரும் பீதியில் உள்ளனர்.

 

Tamil_News_large_176192120170430235541_318_219.jpg

அ.தி.மு.க.,வின் தலைமை பதவி மற்றும் முதல்வர் பதவியை கைப்பற்றும் வகையில், திட்டமிட்டு, அசுர வேகத்தில் காய் நகர்த்திய சசிகலா, தினகரன் ஆகியோர், அதே வேகத்தில் சிறைக்கு சென்றனர். 'இதனால், அவர்களின் குடும்ப ஆதிக்கம், இனி கட்சிக்குள் இருக்காது' என்ற நம்பிக்கை, அ.தி.மு.க.,வினரிடம் உருவாக துவங்கியது.

ஆனால், அ.தி.மு.க.,வின் அதிகாரபூர்வ பத்திரிகையான, 'நமது எம்.ஜி.ஆர்.,' நாளிதழில், வழக்கம் போல சசிகலா மற்றும் தினகரனுக்கு ஆதரவான செய்திகள் வந்தபடி உள்ளன.
முதல்வர் பழனிசாமி செய்தியை விட, அவர்களின் செய்திக்கே, முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

ஜெயா, 'டிவி' நிர்வாகத்தை நேரடியாகவும், நமது எம்.ஜி.ஆர்., நாளிதழை மறைமுகமாக வும் கவனித்து வருபவர், விவேக் ஜெயராமன். இவர், சசிகலாவின் மறைந்த அண்ணன் ஜெயராமனின் மகன். இவரது தாய் இளவரசி, பெங்களூரு சிறையில், சசிகலாவுடன் அடைக்கப்பட்டுள்ளார்.

விவேக், அ.தி.மு.க.,வின் அடிப்படை உறுப்பினராக உள்ளார். 2011ல், சசிகலாவின்

மொத்த சொந்தங்களையும் கட்சியை விட்டு நீக்கிய ஜெயலலிதா, விவேக்கை மட்டும் நீக்கவில்லை; போயஸ் கார்டனின் முகவரி யிலேயே, விவேக் உறுப்பினர் அட்டை வைத்துள்ளார்.எட்டு ஆண்டுகளுக்கு முன், ஜெ.,யிடமே உறுப்பினர் அட்டை வாங்கியவர் என்பதால், அவர் மூலமாக மறுபடியும், சசிகலா குடும்பத்தினர், கட்சிக்குள் நுழைய வாய்ப்புள்ள தாக, பன்னீர் அணியினர் சந்தேகிக்கின்றனர்.

எனவே தான், 'விவேக்கையும் கட்சியை விட்டு நீக்க வேண்டும்' என, பன்னீர் அணியினர், சசிதரப்பினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கட்சியை விட்டு ஒதுங்கி கொள்வதாக, தினகரன் அறிவித்துள்ள நிலையில், அவரது மைத்துனரான, டாக்டர் வெங்கடேஷ், தன் சொத்துக்களை காப்பாற்றிக் கொள்ள, கட்சி நடவடிக்கைகளை, அடியோடு குறைத்து அமைதியாக உள்ளார்.

சசிகலாவின் கணவர் நடராஜன், தம்பி திவாகரன், அக்கா மகன் பாஸ்கரன் உள்ளிட்ட மன்னார்குடி உறவினர்கள் யாருமே, தற்போது, அ.தி.மு.க.,வில் உறுப்பினர்களாக இல்லை. கோடி கோடியாக சேர்த்த சொத்துக்களை காப்பாற்றிக் கொள்ள, இவர்களும் அடக்கியே வாசிக்கின்றனர்.

இதற்கிடையே, வருமான வரித்துறை, விவேக் மீது, தன் பார்வையை திருப்பியுள்ளது. 30 வயதைக் கூட எட்டாத விவேக், 1,000 கோடி ரூபாய் முதலீடு கொண்டதாக கூறப்படும், ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக உள்ளார்.
 

இதற்கான முதலீடு எங்கிருந்து வந்தது;


1,000 கோடி ரூபாய்க்கான பணப் பரிவர்த்தனை கள் எப்படி நடந்தன என்ற விபரங்களை, வருமான வரித்துறை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.'ஜாஸ் சினிமாஸ் உரிமையாளர் விவேக் அல்ல. அதில், சம்பளத்துக்கு பணி யாற்றுபவர் தான்' என கூறப்பட்டாலும், அரசி யல், சினிமா, தொழிலதிபர்கள் என, பலராலும் அணுக முடியாத உச்சத்துக்கு, விவேக் எப்படி உயர்ந்தார் என்பது, வருமான வரித்துறை

 

அதிகாரிகளை, கிறுகிறுக்க வைத்திருக்கிறது. டில்லி வரை நீண்டிருக்கும், விவேக்கின் அரசியல் தொடர்புகளும், மலைக்க வைக்கும் அளவுக்கு இருப்பதாக சொல்கின்றனர். இதனால், விரைவிலேயே, விவேக் சம்பந்தப் பட்ட நிறுவனங்களில், வருமான வரித்துறை சோதனை நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, சசிகலாவின் தம்பியான திவாகரனும், விவேக்கிற்கு எதிரான வேலைகளில், தீவிரமாக இறங்கி உள்ளார். பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை, அடிக்கடி சந்திக்கும் ஒரே ஆள், விவேக் தான்.

திவாகரன், அவரது மகன் ஜெய் ஆனந்த் உள்ளிட்டோர், சிறையில் சசிகலாவை சந்திக்க சென்ற போது, அவர் சந்திக்க மறுத்து விட்டார். இதில், ரொம்பவே நொந்து போன திவாகரன், விவேக்கிற்கு கொடுக்கப்படும் முக்கியத் துவத்தை கண்டித்து, குடும்பத்துக்குள்ளே எதிர்ப்பு குரல் எழுப்பி உள்ளார்.

இதற்கு பதிலடியாக, விவேக்கும், திவாகர னுக்கு எதிராக கொந்தளித்துள்ளார். 'தினகர னுக்கு எதிராக செயல்படுவதாக சொல்லி, நீங்கள் கட்சிக்கு எதிராக செயல்பட்டு இருக்கி றீர்கள். தினகரனோ, நானோ, கட்சிக்காரர்கள் யாரிடமும் சிபாரிசுக்காக பேசியதில்லை. ஆனால், நீங்களும், உங்கள் மகனும், அனைத்து அமைச்சர்களையும் போன் போட்டு நச்சரித்தீர் கள். உங்களால் தான் சசிகலாவிற்கு கெட்ட பெயர்' என, ஆவேசமாக பேசியதாக கூறப்படுகிறது.

இதனால், கடும் கோபத்துக்கு ஆளான திவா கரன், விவேக்கை அரசியலில் இருந்து அப்புறப் படுத்த, தீவிரமான வேலைகளில் இறங்கி உள்ளார். பன்னீர்செல்வம் தரப்பின் போர்க் கொடி, வருமான வரித்துறையின் கண் காணிப்பு, திவாகரன் உள்ளிட்ட உறவினர் களின் கோபம் என, பல விதங்களிலும் நெருக் கடி வளையத்தில், விவேக் சிக்கி உள்ளார். விரைவில் அவரால், தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு ஏற்படும் என, எதிர்பார்க்கப் படுகிறது.

-- நமது நிருபர் - -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1761921

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.