Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஓட்டம்? ஜெ., பங்களா கொள்ளை; முக்கிய நபர் வெளிநாடு ஓட்டம்?

Featured Replies

ஓட்டம்?
ஜெ., பங்களா கொள்ளை;
முக்கிய நபர் வெளிநாடு ஓட்டம்?
 
 
 

கோடநாடுக்கு கூலிப்படையினரை அனுப்பியதாக சந்தேகிக்கப்படும் மரக்கடத்தல், 'மாபியா' கும்பலின் தலைவன், முன்கூட்டியே வெளிநாடுக்கு தப்பியோடியது, போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 

Tamil_News_large_1761497_318_219.jpg

மறைந்த முன்னாள் முதல்வர், ஜெ., மீதான சொத்து குவிப்பு வழக்கில், லஞ்ச ஒழிப்புத் துறை தயாரித்து, கோர்ட்டில் சமர்ப்பித்த சொத்து பட்டியலில், வரிசை எண், 166ல் இடம் பெற்றிருந்தது, 900 ஏக்கர் பரப்புள்ள, கோடநாடு எஸ்டேட். ஜெ., மறைவுக்கு பின், இது யாருக்குச் சொந்தம் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த எஸ்டேட்டை விட, 99 அறைகள், 48 ஆயிரம் சதுர அடி பரப்பில், அங்கு பிரம்மாண்ட மாக கட்டப்பட்டுள்ள கோடநாடு பங்களாவே, தற்போது மர்ம தேசமாக மாறி யுள்ளது. ஜெ., மறைந்த பின், சசிகலா, இளவரசி, தினகரன் என, எல்லாரும் சிறைக்கு போய் விட்டதால், இது யாருடைய கட்டுப் பாட்டில் இருக்கிறது என்பதே, புரியாத புதிராக உள்ளது.

இந்நிலையில் தான், கடந்த, 24ம் தேதி, கோடநாடு எஸ்டேட் காவலாளி, ஓம்பகதுார் மர்ம கும்பலால் கொல்லப்பட்டார்; மற்றொருவர், கடுமையாக தாக்கப்பட்டார். இந்த கொலையில் தொடர்புடையவர்களாக சந்தேகிக்கப்படும், ஜெ.,யிடம், கார் டிரைவராக வேலை பார்த்த கனகராஜ், சேலம் அருகே விபத்தில் உயிரிழந்தார்.

தேடப்பட்டு வந்த சயான் என்பவர், கேரள மாநிலம், பாலக்காடு அருகே, நேற்று காலை யில், விபத்தில் படுகாயமடைந்தார். இவரது

மனைவி, மகள் இறந்தனர்.இந்த தொடர் சம்பவங் களின் பின்னணியில், மன்னார்குடி குடும்பத்துடன் தொடர்பில் உள்ள,கேரளாவை பூர்வீகமாக கொண்ட நீலகிரியைச் சேர்ந்த, முக்கிய புள்ளி இருக்கலாம் என்ற சந்தேகம், போலீசுக்கு எழுந்துள்ளது.

சம்பவத்துக்கு முன்பாகவே, அவர் துபாய் கிளம்பிச் சென்றிருப்பது சந்தேகத்தை வலுப்படுத்தி உள்ளது. ஏனெனில், ஜெயலலிதா, சசிகலா, தற்போதுள்ள மேலாளர் ஆகியோர் தவிர, கோடநாடு பங்களாவை துல்லியமாக அறிந்த ஒரே நபர், அவர் தான்.

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட, 'ஜீவன்' உள்ள அந்த நபர், நீலகிரி மாவட்டம், கூடலுாரில் வசித்து வருகிறார். 15 ஆண்டுகளுக்கு முன், கூடலுார் வனப்பகுதியில், 'செக் ஷன் 17' நிலங்களில் உள்ள ஈட்டி மற்றும் தேக்கு மரங்களை வெட்டிக் கடத்தும், 'மாபியா'வாக வலம் வந்தார். 2008ல், ஜெ., பாதுகாப்பு அதிகாரி ஒருவரின் உதவியுடன், கோடநாட்டில் நுழைந்துள்ளார்.

மர வேலை செய்பவராக, ஜெ., மற்றும் சசிகலா வுக்கு அறிமுகமான அவர், கோடநாடு பங்களாவில், பர்னிச்சர் வேலைகளைச் செய்துள்ளார். நீலகிரி யில், கட்சியில் செல்வாக்கு மிக்கவராகவும் திகழ்ந்தார்.மன்னார்குடி குடும்பத்தினரிடம் இருந்த செல்வாக்கை பயன்படுத்தி, கூடலுார் வனத்தில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஈட்டி, தேக்கு மரங் களை வெட்டி கடத்தி, ஓவேலி என்ற ஊரில், மர அறுவை மில் நடத்தி வந்ததாக, வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

அங்கிருந்து பர்னிச்சர்களாக மாற்றி, நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பிவந்துள்ளார்; கோவையிலும், ஒரு பர்னிச்சர் ஷோரூம் நடத்தி வருகிறார்.
 

இது குறித்து, போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:


கோடநாடு பங்களாவின் அனைத்து ரகசியங்களை யும் அறிந்த நபரே, ஆட்களை வைத்து, பங்களாவில் இருந்த, 'ஏதோ' ஒன்றை கடத்தியிருக்க வாய்ப்புள் ளது. பங்களாவை துல்லியமாகத் தெரிந்துள்ளவர் என்பதோடு,கதவுகள் உட்பட மர வேலைகளையும்

 

செய்தவர் என்பதால், அவரிடம் அந்த கதவு களுக்கான கூடுதல் சாவிகள் இருந்திருக்கவும் வாய்ப்புண்டு.

காவலாளி கொல்லப்பட்ட அன்று, ஜெ., மற்றும் சசிகலா அறைகளிலிருந்து, 'ஏதாவது' கடத்தப்பட்டிருக்கலாம். இந்த விவகாரத்தில் தமக்கு தொடர்பில்லை என, வாதிட வசதியா கவே வெளிநாடு சென்றிருக்கலாம். அவர் திரும்பி வந்ததும் விசாரணை நடத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
 

ஆவணங்களை அழிக்க முயற்சி?


கோடநாடு எஸ்டேட்டின் பங்குதாரர்களாக, ஜெ., - சசிகலா இருவர் மட்டுமே இருந்தனர். இவர்களில், ஜெ., இறந்து விட்டதால், 'சசிகலா வுக்கு மட்டுமே எஸ்டேட் சொந்த மாகுமா' என்ற கேள்வி உள்ளது.

ஆனால், ஜெ., இறப்பதற்கு முன், 'எஸ்டேட் மற்றும் அதன் மூலம் கிடைக்கும் வருமானம் அனைத்தும், பொதுமக்களுக்கு செல்லும் வகையில், ஆவணத்தை தயார் செய்திருந்தார்' என்ற ஒரு தகவலும், நீலகிரி, அ.தி.மு.க., வட்டாரத்தில் பரவியுள்ளது.

இதன் காரணமாக, அந்த ஆவணத்தை அழிப் பதற்கு நடந்த முயற்சியாக, இந்த சம்பவங்கள் இருக்கலாம் என்ற ஒரு யூகத்திலும், போலீஸ் விசாரணை தொடர்கிறது.

- நமது சிறப்பு நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1761497

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.