Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யார்? கோடநாடு கொள்ளையில்

Featured Replies

யார்?
கோடநாடு கொள்ளையில்
உண்மையான...குற்றவாளிகள் யார்?
அவிழாத மர்ம முடிச்சு;அவசரமாக முடித்த போலீஸ்
 
 
 

கோடநாடு எஸ்டேட் கொலையில் தொடர்புடைய உண்மையான, 'மாஸ்டர் மைண்ட்'களை, அரசியல் நெருக்கடி காரணமாக தப்பிக்கவிட்டுள்ள போலீசார், கூலிப்படையினரை மட்டும் கணக்கில்காட்டி, வழக்கை மூட முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

Tamil_News_large_1762073_318_219.jpg

பங்களா அறைகளில் ஜெ., சொத்து ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதா, என்பது குறித்து, புலனாய்வு ஏஜென்சிகளின் விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, மத்திய உள்துறைக்கு மனு அனுப்பியுள்ளனர் நீலகிரி அ.தி.மு.க.,வினர்.

'கடந்த, 23ம் தேதி நள்ளிரவு, நீலகிரி மாவட்டம், கோத்தகிரி, கோடநாடு எஸ்டேட்டிற்கு மூன்று வாகனங்களில் வந்த மர்ம நபர்கள், காவலாளி ஓம்பகதுார், 51, என்பவரை அடித்துக் கொன்றுவிட்டு பங்களாவிற்குள் நுழைந்தனர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகியோர் பயன்படுத்திவந்த அறைகளின் கதவுகளை உடைத்து, ஐந்து கைக்கடிகாரங்கள், வீட்டு அலமாரியில் வைக்கப்படும் படிகப்பொருட்கள் சிலவற்றை மட்டும்
கொள்ளையடித்துச் சென்றனர்.

''இத்திட்டத்திற்கு மூளையாக செயல்பட்டவர்கள், ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் சேலம், இடைப்பாடியைச் சேர்ந்த கனகராஜ் மற்றும் அவரது நண்பர், கோவையைச் சேர்ந்த சயான். இருவரும் சேர்ந்து திட்டமிட்டு, கேரளாவைச் சேர்ந்த ஒன்பது பேரைக் கூட்டுச் சேர்த்து கோடநாடு எஸ்டேட்டில் கோடிக்கணக்கில் பணமிருக்கும் எனக்கருதி கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். முக்கிய குற்றவாளியான கனகராஜ், சேலத்தில் நடந்த சாலை விபத்தில் பலியாகிவிட்டார்.
 

வழக்கை முடித்து...


''இன்னொரு முக்கிய குற்றவாளியான சயான், பாலக்காட்டில் நடந்த சாலை விபத்தில் படுகாய மடைந்து கோவை தனியார் மருத்துவமனை யில் சிகிச்சை பெறுகிறார். இவ்வழக்கில், திருச்சூரைச் சேர்ந்த சந்தோஷ்சமி,39, தீபு,32, சதீஷன், 42, உதயகுமார், 47, ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலரை தேடி வருகிறோம். கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளையில் நீலகிரியைசேர்ந்த உள்ளூர்வாசிகளுக்கோ, அரசியல் பிரமுகர் களுக்கோ எந்த தொடர்பும் கிடையாது. முழுக்க முழுக்க கனகராஜ், சயான் தலைமையிலான 11 பேர் கும்பலே காரணம்,'' என்று, நேற்றுமுன் தினம் அவசர அவசரமாக 'வழக்கை முடித்து' அறிக்கை வெளியிட்டிருக் கிறது நீலகிரி மாவட்ட போலீஸ்.

சம்பவம் நடந்து, ஐந்து நாட்களாக எந்த போலீஸ் உயரதிகாரியும் ஊடகங்களிடம் பேச முன்வராத நிலையில், தேடப்பட்டதாக கூறப் பட்ட நபர்கள் சாலை விபத்தில் சிக்கிய அன்று மாலையே, வழக்கின் விசாரணை ஏறத்தாழ முடிந்துவிட்டதைப் போன்று, நிருபர்களை அழைத்து பேட்டியும் அளித்திருக்கிறார் நீலகிரி எஸ்.பி., முரளி ரம்பா. இதன் பின்னணிதான், பலருக்கும் சந்தேகத்தை கிளப்பியிருக்கிறது.

போலீசார் கண்டுபிடித்து அதிகாரப்பூர்வ அறிக்கையாக வெளியிட்ட, 'வழக்கின் கதை' (தியரி) பல்வேறு கேள்விகள் எழ காரணமாகி இருக்கிறது.

*கோடநாடு கொள்ளை வழக்கில் கனகராஜ், சயான் ஆகியோர்தான் 'மாஸ்டர் மைண்ட்' என்றால்... சாலை விபத்தில் அவர்கள் சிக்கும் முன்பே, அவர்களை பிடிக்க மேற்கொள்ளப் பட்ட நடவடிக்கை என்ன?
* கனகராஜை 'தீவிரமாக' தேடியிருந்தால் அவரால் எப்படி சர்வசாதாரணமாக தனது வீட்டிற்கு சென்றுவர முடிந்தது? நண்பரின் வீட்டிற்குச் சென்று, அவரது இரு சக்கர வாகனத்தை 'ஓசி' வாங்கிச் செல்ல முடிந்தது? இவரது நடவடிக்கைகளை உண்மையாகவே கண்காணித்திருந்தால் விபத்தில் சிக்கி பலியாகும் முன்பே எளிதாக கைது செய்திருக்க லாமே; அதை செய்யாதது ஏன்?
* வழக்கின் மற்றொரு முக்கிய குற்றவாளியாக போலீசாரால் கூறப்படும் சயான், அவரது மனைவி வினுப்பிரியா, மகள் நீத்து ஆகியோர், விபத்துக்குள்ளான காரில் இருந்து மீட்கப்படும் போது, மூவர் கழுத்திலும் ஒரே மாதிரியான வெட்டுக்காயம் இருந்ததாக கேரள போலீசார் தெரிவித்துள்ளனர். அதுகுறித்து கோடநாடு கொலை வழக்கை விசாரிக்கும் நீலகிரி போலீசார் விசாரித்தனரா?
* மனைவி, மகளை பலிகொடுத்த சயான்,

பாலக்காடு மருத்துவமனையில் சுயநினைவுடன் பேசும் நிலையில்தான் இருந்துள்ளார். அவ்வாறு இருக்கையில் அங்குள்ள மாஜிஸ்திரேட்டை வரவழைத்து, 'மரண வாக்குமூலம்' வாங்காமல் கோவைக்கு அவரை, அவசர அவசரமாக கோவை போலீசார் 'துாக்கி வந்தது' யாருடைய உத்தரவின் பேரில்? அதன் நோக்கம் என்ன?
*ஜெயலலிதாவின் கார் டிரைவராக பணியாற்றிய சேலத்தைச் சேர்ந்த கனகராஜ் கடந்த, 2012 ம் ஆண்டிலேயே வேலையில் இருந்து வெளியேற்றப்பட்டுவிட்டார். ஐந்தாண்டுகள் கழிந்த நிலையில், கோடநாடு பங்களாவில், 'சி.சி.டி.வி.,' கேமரா கிடையாது என்பது அவருக்கு எப்படி தெரியும்?
* சாதாரண டிரைவரான கனகராஜ் என்ற தனி நபருக்கு, 24 மணி நேரமும் பாதுகாப்பு கெடுபிடி மிகுந்த, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கோடநாடு எஸ்டேட்டிற்குள் புகுந்து
கொள்ளையடிக்கும் துணிச்சல் வருமா?
* ஜெ., மரணத்துக்குப்பிறகோ, சசிகலா சிறைக்குப் போன பிறகோ கோடநாட்டில் நடக்காத சம்பவம், தினகரன் போலீஸ் விசாரணைக்கு ஆஜராக டில்லி சென்றதும் நடந்ததன் பின்னணியை விசாரித்தனரா?
* ஜெ., - சசி பங்களா அறைகளில் இருந்த ஐந்து கைக்கடிகாரங்கள் மட்டுமே களவுபோனது என்ற முடிவுக்கு எப்படி போலீசார் வந்தனர்? கொள்ளையர்கள் இவ்வாறு கூறினர் என்றால்... அவர்களது கூற்றை அப்படியே ஏற்றுக்கொண்டதா போலீஸ்? வேறுபொருளோ, ஆவணமோ கொள்ளை போகவில்லை என்பதை யாரை வைத்து புலன்விசாரணையில் உறுதிப்படுத்தினார்கள்?
* கூலிப்படையை ஏற்பாடு செய்ததே மன்னார்குடி குடும்பத்தினருடன் மிக நெருக்கமாக இருக்கும், நீலகிரி மாவட்டத்தில் மர ஆலை நடத்தும் முக்கிய புள்ளி என, தனிப்படை போலீசார் விஷயத்தை முன்கூட்டியே கசியவிட்டது எப்படி?
*கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட அந்நபரிடம் விசாரணை நடத்தப்பட்டதா? அவர் பல ஆண்டு களாக கோடநாடு எஸ்டேட்டிற்குள் சர்வசாதார ணமாக சென்று வந்தவர் என்பது, நீலகிரி மாவட்ட அ.தி.மு.க.,வின் அடிமட்ட தொண்டர்களும் அறிந்த விஷயம். அவ்வாறு இருக்கையில் அவரை விசாரணை செய்யாமலேயே அவசர அவசரமாக வழக்கை முடிக்க துாண்டிய சக்தி எது?
*கொலை நடப்பதற்கு மூன்று நாள் முன்பே அந்நபர் வெளிநாடு சென்றுவிட்டார் என்ற நிலையில் அவரது நடவடிக்கையை போலீசார் சந்தேகித் திருக்க வேண்டாமா? மன்னார்குடி குடும்பத்தின ருக்கு மிகநெருக்கமானவர் என்பதால் உண்மை யறிந்து விசாரிக்காமல் விட்டுவிட்டார்களா?
*கோடநாடு எஸ்டேட்டில் கொள்ளையடித்த ஐந்து வாட்ச்களையும் குற்றவாளிகள், கேரளாவிலுள்ள ஆற்றில் துாக்கி வீசிவிட்டார்கள் எனக்கூறும் போலீசார், அலமாரி அலங்காரத்துக்கு மட்டுமே பயன்படும் படிகப் பொருட்களை மட்டும் எவ்வாறு பறிமுதல் செய்தார்கள்?

ஜெ., - சசி பயன்படுத்திய ஐந்து வாட்ச்களின் மதிப்பை காட்டிலும், படிகப் பொருட்களின் விலை அவ்வளவு மதிப்புடை யதா? இவற்றை மட்டும் ஆற்றில் போடாமல் பத்திரமாய் பாதுகாத்து வைத்திருந்தார்களா?
* எஸ்டேட் பங்களா அறைகளில் ஜெயலலிதாவின் சொத்து பத்திர ஆவணங்களோ,பணமோ கொள்ளை போகவில்லைஎன்ற முடிவுக்கு போலீசார் எவ்வாறு வந்தனர்? வழக்கு விசாரணையை விரைவாக முடித்து, 'பிரஸ்'சுக்கு பேட்டி அளிக்குமாறு சென்னையில் இருந்து உத்தரவிட்ட அதிகாரி யார்?

இவை உள்ளிட்ட இன்னும் எண்ணற்ற கேள்விகள், நீலகிரி மாவட்ட மக்கள் மத்தியில் உலாவுகின்றன. போலீஸ் தரப்பில் பதில்தான் இல்லை. அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் விளக்கமும் இல்லை. வழக்கை விசாரித்த தனிப்படை போலீஸ் அதிகாரிகளுக்கும், 'வாய்ப்பூட்டு' போடப்பட்டிருக் கிறது. கோடநாடு சம்பவம் மற்றும் போலீசாரின் 'வழக்கு முடிவுரையை' பார்க்கையில், கூலிப் படையினரை மட்டும் கணக்கில் காட்டி, அவர்களை குற்றம்புரியத்துாண்டிய நபர்களை போலீசாரே காப்பாற்ற முயற்சிப்பதாக புலம்புகின்றனர், கோட நாடு எஸ்டேட் தொழிலாளர்கள்.

பின்னணியில் 'அவர்'


நீலகிரி மாவட்ட அ.தி.மு.க., முக்கிய நிர்வாகி ஒருவர் கூறியதாவது:

கோடநாடு எஸ்டேட்டிற்குள் சர்வசாதாரணமாக சென்றுவரக்கூடிய நபர் யார் என்பது, நீலகிரி போலீசார் அறியாத ரகசியம் அல்ல. அந்த நபருக்குத்தான் ஜெ., அறை எது, சசி அறை எது என்று நன்கு தெரியும். காரணம், பல ஆண்டுகளாக பல்வேறு வேலைகளை கவனித்தவர் அவர்.சசிகலா குடும்பத்துக்கு மிக நெருக்கமானவர். அதனால் தான், கடந்த சட்டசபை தேர்தலின்போது, நீலகிரி மாவட்டத்திலுள்ள மூன்று தொகுதிகளுக் கான தேர்தல் செலவினங்களை கவனிக்கும் பொறுப்பு அவரிடம் தரப்பட்டது.

அமைச்சர், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களே அவரிடம் கூறி மேலிடத்தில் காரியம் சாதித்தது உண்டு. தற்போது அ.தி.மு.க., பொதுச்செயலாளர் சசிகலா சிறையிலும், துணைப்பொதுச்செயலாளர் தினகரன் டில்லி போலீஸ் கஸ்டடியிலும் உள்ளனர். குடும்பத் திற்குள் பல உறுப்பினர்களிடையே பதவி, சொத்துச் சண்டை உக்கிரத்தில் உள்ளது.

இந்நிலையில்தான், எஸ்டேட் பங்களா விபரங் களை நன்கறிந்த நபரைக்கொண்டு, சொத்துப்பத்திர ஆவணங்களை கடத்தியுள்ள னர். துரதிஷ்டவசமாக காவலாளி தடுத்து போராடியதால் அடித்துக் கொல் லப்பட்டி ருக்கிறார். விவகாரமும் யாரும் எதிர்பார்க் காத வகையில் பூதாகரமாகிவிட்டது. கொலை

 

நடந்திருக்காவிட்டால், இது ஒரு பெரிய சம்பவ மாகவே கருதப்பட்டிருக்காது.
 

இயக்கியது யார்:

மன்னார்குடி குடும்ப உறுப்பினர் யாரோ ஒருவரின் உத்தரவின் பேரில், கூலிப் படையை அனுப்பியது, 'நீலகிரி புள்ளி'யாக இருக்கலாம் என்பதுதான் எங்களது சந்தேகம். சம்பவம் நடப்பதற்கு மூன்று நாட்கள் முன்பே அந்நபர் வெளிநாடு சென்றுவிட்டார். அவரை பின்னாலிருந்து இயக்கியது யார் என தெரிய வில்லை.

ஏற்கனவே, வழக்கு சிக்கலில் உள்ள மன்னார் குடி குடும்பத்திற்கு மேலும் ஒரு பெரிய சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது எஸ்டேட் காவலாளி கொலை விவகாரம்.சேலத்தைச் சேர்ந்த கனகராஜ், கோவையைச் சேர்ந்த சயான் ஆகியோரை மட்டுமே இவ்வழக்கில்,'தலைமை குற்றவாளிகளாக' அறிவித்ததன் மூலம், இவ்வழக்கின் உண்மையான 'மாஸ்டர் மைண்ட்'களை தப்பிக்கவிட்டுவிட்டதாகவே சந்தேகம் எழுகிறது. போலீஸ்துறையை, குறிப்பாக உளவுத்துறையை தன் கட்டுப்பாட் டில் வைத்திருக்கும் முதல்வர் பழனிச்சாமிக்கு இதெல்லாம் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.

எனவே, கோடநாடு மர்மம் குறித்து புலனாய்வு ஏஜென்சிகள் மூலமாக மத்திய அரசு விசாரணை நடத்த வேண்டும். இதை வலியுறுத்தி, நீலகிரி அ.தி.மு.க., சார்பில் மத்திய உள்துறைக்கு மனு அனுப்பியுள்ளோம். இவ்வாறு, அந்த நிர்வாகி தெரிவித்தார்.

ஏப்-23நள்ளிரவு 12.00 -2.00கோடநாடு காவலாளி கொலை
ஏப்-24அதிகாலை நீலகிரி முக்கிய சாலைகளுக்கு சீல்
ஏப்-26முக்கிய குற்றவாளியின் 'வரைபடம்' வெளியீடு
ஏப்-27தனிப்படை போலீசார் கேரளா விரைவு
ஏப்-28கூலிப்படையினர் கேரளாவில் கைது
ஏப்-27முக்கிய குற்றவாளி கனகராஜ் விபத்தில் பலி.
ஏப்-28கனகராஜ் நண்பர் சயான் கார் விபத்தில் காயம். மனைவி, மகள் பலி
ஏப்-29 கோடநாடு கொலையில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதாக நீலகிரி எஸ்.பி., முரளி ரம்பா பேட்டி
ஏப்-30சயான் உடல்நிலை குறித்து தனியார் டாக்டர் பேட்டி
மே01சயான் குடும்பத்தினரின் மரணம் குறித்து விசாரிக்க கேரளா போலீஸ் இன்று கோவை வருகை.
 

காவலாளி கொலை ஏன்?


ஜெ., பங்களாவில் நுழையமுயன்ற முகமூடி கும்பலை பார்த்த காவலாளி ஓம்பகதுார், 51, கூச்சலிட்டுள்ளார். அவரைப்பிடித்து கட்டிப் போட முயன்றபோது, திமிறி எழுந்து போராடி யுள்ளார். ஆத்திரமடைந்த கும்பல், இரும்பு ராடால் அவரை தலையில் அடித்துள்ளது; இதில் அவர் உயிரிழந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தனிப்படை போலீசார் கூறுகையில், 'மற்ற காவலாளிகளை காட்டிலும், 'கூர்க்கா'க்கள் பணியிடத்திற்கு விசுவாசமாக நடப்பவர்கள். கொலை செய்யப்பட்ட ஓம்பகதுார், எதிர்த்து போராடாமல் இருந்திருந்தால் பிழைத்திருக்க வாய்ப்புள்ளது. எதிர்த்து போராடியதாலேயே கொல்லப்பட்டிருக்கிறார்' என்றனர்.
 

ஜெ., சொத்து கைப்பற்ற போட்டி


மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, வருமானத்துக்கும் அதிகமாக சேர்த்துள்ளதாக, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையால் கோர்ட்டில் பட்டியலிடப்பட்ட சொத்துபட்டியலில், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, 306 வகை யான சொத்து விவரங்கள் இடம்பெற்றுள்ளன. ஜெ., மறைவுக்குப்பின் இந்த சொத்துக்களின் கதி என்ன, யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது, என்பது மர்மமாகவே உள்ளது.

இச்சொத்துக்கள் பற்றி ஓரளவு விபரமறிந்த மன்னார்குடி குடும்பத்தினர், அவற்றை கைப்பற்ற கடும்போட்டியில் இறங்கியிருப்ப தாகவும், அதனால் மோதல் முற்றி வருவதாக வும் தகவல்கள் வெளியாகி யுள்ளன. ஒரு மாநிலத்தை ஆண்டு, ஆட்சியிலும், கட்சியிலும் அசைக்க முடியாத சக்தியாக விளங்கிய ஜெ.,வின் சொத்துக்களையே சூறையாட ஒரு கும்பல் திட்டமிட்டு துணிந்திருப்பதையே, கோடநாடு சம்பவம் காட்டுவதாக, தமிழக போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1762073

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.