Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'சசி' நிம்மதியை குலைத்த கோடநாடு கொலை!

Featured Replies

'சசி' நிம்மதியை குலைத்த கோடநாடு கொலை!
 
 
 

கோடநாடு எஸ்டேட் கொள்ளை விவகாரம் குறித்து தகவல் அறிந்ததும், பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா, மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கள நிலவர தகவல்களை சொல்லக் கூட, ஆளில்லாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார்.

 

Tamil_News_large_1762974_318_219.jpg

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில், நான்காண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட, ஜெ., தோழி சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோர், கர்நாடக மாநிலம், பெங்களூரு, பரப்பன அக்ர ஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்களை, உறவினர்கள் சந்திக்கக்கூட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

எனினும், அளவுக்கு அதிகமான

பார்வையாளர் கள், சசிகலாவை சந்திப்பதாக புகார் எழுந்தது. சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி என்பவர், தகவலறி யும் உரிமை சட்டத்தில், பெங்களூரு சிறை நிர்வாகத் திடம், சில தகவல்களை கடந்த மாதம் பெற்றார். ஒரே மாதத்தில், 14 பேர், 19 முறை சசிகலாவை சிறையில்சந்தித்தது அம்பலமானது.

இதையடுத்து, பார்வையாளர்கள் விஷயத்தில், கடுமையான கெடுபிடிகளை கடைபிடித்து வரும் சிறை நிர்வாகத்தால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான சசிகலா, இளவரசி ஆகியோரின் உடல் நலம், சமீபத்தில் பாதிக்கப்பட்டது. சிறை மருத்துவ மனையில் பரிசோதித்தடாக்டர்கள், மருந்துகளை பரிந்துரைத்து உள்ளனர்.

இந்நிலையில், கடந்த, 23ல், கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை சம்பவம், சசிகலாவை அதிகம் பாதித்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. சம்பவம் நடந்த மறுநாளே, நாளிதழ் செய்திகள் மூலமாக விஷயம் அவருக்கு தெரிந்திருக்கிறது. எனினும், அதையும் தாண்டி, என்ன நடந்தது என்றவிரிவான கள தகவல்களை அறிய முடியாமல் தவித்துள்ளார்.

சென்னையிலுள்ள, தம் உறவினர்களை சந்திக்க வேண்டுமென, சிறை அதிகாரிகளிடம் கேட்டுள் ளார். அவரது நம்பிக்கைக்குரிய, அ.தி.மு.க., துணை பொதுச் செயலர் தினகரன், டில்லி போலீசாரின் விசாரணையில் இருந்ததாலும், கணவர் நடராஜன் உடல்நலம் பாதித்து ஓய்வில் இருப்பதாலும்,

 

வேறு யாரை அழைத்து விசாரிப்பது என்ற குழப்பம், அவருக்கு ஏற்பட்டு உள்ளது.

கோடநாடு எஸ்டேட் அறைகளின் ரகசியம், சசிகலாமட்டுமே அறிந்தது என்பதால், அதிக பட்ச படபடப்பில் அவர் இருப்பதாக, சிறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும், தமிழக நிலவரம் குறித்து, குறிப்பாக, கோடநாடு எஸ்டேட் விவகாரம் குறித்து, உடனுக்குடன்தகவல்களை அறிந்து கொள்ள, தமிழ் நாளிதழ்கள் தமக்கு வேண்டுமென, சிறை நிர்வாகத்திடம் சசிகலா வேண்டுகோள் விடுத்து, அதன்படி வழங்கப்பட்டு வருகின்றன.

- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1762974

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.