Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தினகரனுக்கு மேலும் சிக்கல் அமலாக்க துறையும் வழக்கு பதிவு

Featured Replies

தினகரனுக்கு மேலும் சிக்கல்
அமலாக்க துறையும் வழக்கு பதிவு
 

 

 

 

spaceplay / pause

qunload | stop

ffullscreen

shift + slower / faster

volume

mmute

seek

 . seek to previous

126 seek to 10%, 20% … 60%

 

 
 

புதுடில்லி:அன்னிய செலாவணி மோசடி வழக்கு, தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றவழக்கைதொடர்ந்து, சசிகலா அக்கா மகன் தினகரன் மீது, அமலாக்க துறையும், பண மோசடி வழக்கை தொடர்ந்துள்ளது.

 

Tamil_News_large_176296820170503000516_318_219.jpg

தினகரன் சட்டவிரோதமாக வாங்கி குவித் துள்ள சொத்துக்களை முடக்கவும் திட்டமிடப் பட்டுள்ளது. அ.தி.மு.க., இரண்டாக பிளவு பட்டதைத் தொடர்ந்து முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக, தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக, சசிகலா அக்கா மகன் தினகரன் மீது, டில்லி போலீசார் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.
 

4 நாள் விசாரணை


பெங்களூரைச் சேர்ந்த இடைத்தரகர் சுகேஷ் சந்தர், 1.3 கோடி ரூபாய் ரொக்கம், இரண்டு

சொகுசு கார்களுடன் பிடிபட்டதைத் தொடர்ந்து,இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. 'தேர்தல் அதிகாரிகளுக்கு, 50 கோடி ரூபாயும்; எனக்கு, 10 கோடி ரூபாயும் தருவதற்கு தினகரன் முன்வந்தார்' என, விசாரணையில் சுகேஷ் சந்தர் தெரிவித்தான்.

அதன் அடிப்படையில், சுகேஷ் சந்தர் - தினகரன் இடையே நடந்த உரையாடல்கள் உள்ளிட்ட ஆதா ரங்களின் அடிப்படையில், தினகரனிடம், டில்லி போலீசார் நான்கு நாட்கள் விசாரித்தனர். அதை தொடர்ந்து, ஏப்., 26ல் தினகரன் கைது செய்யப்பட்டு, ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்கப்பட் டார். இந்த வழக்கில், தற்போது டில்லி திகார் ஜெயிலில் தினகரன் அடைக்கப்பட்டுள்ளார்.

தினகரன் உள்ளிட்டோரிடம், டில்லி போலீசார் நடத்திய விசாரணையின்போது, தினகரனுக்கு வெளிநாடுகளில் பல்வேறு தொடர்புகள் இருப்பதும், கோடிக்கணக்கான பணத்தை, கப்பல்களில் கன்டெய்னர்கள் மூலம் வெளிநாடுகளுக்கு அவர் கடத்தி சென்றதும் தெரியவந்துள்ளது.
 

ஆலோசனை


இதைத் தவிர, பல்வேறு ஹவாலா புரோக்கர்களுட னும் அவருக்குதொடர்பு இருப்பதை, டில்லி போலீசார் உறுதிப்படுத்தினர்.இதையடுத்து, மத்திய அரசு அமைப்பான அமலாக்கத் துறையும், இதில் களம் இறங்கிஉள்ளது. கடந்த வாரம், டில்லி போலீசாருடன், அமலாக்கத் துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அதைத் தொடர்ந்து,

 

தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதில் நடந்துள்ள பண மோசடி தொடர்பாக, அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்துள்ளது. தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா, சுகேஷ் சந்தர் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடக்கிறது. விரைவில், இது தொடர்பாக, இவர் களுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப திட்டமிடப் பட்டுள்ளது.

பண மோசடி செய்து சம்பாதித்த பணத்தில், தினகரன் பல கோடி மதிப்புள்ள சொத்துக்களை வாங்கி குவித்துள்ளது குறித்து, அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனர். அதன் படி, இந்த மோசடி சொத்துக்களை முடக்கி வைக்க உத்தரவிடும் அதிகாரம், அமலாக்கத் துறைக்கு உள்ளது. அதனால், விரைவில் இதற்கான உத்தரவுகள் வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1762968

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.