Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சினிமாவில் கிரிக்கெட் பீவர்.... ஸ்பெஷல் ரிப்போர்ட்

Featured Replies

நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இன்னும் சில வாரங்களில் தொடங்க உள்ளது. கால்பந்து அளவுக்கு பிரபலமானதல்ல கிரிக்கெட். ஆயினும் இங்கிலாந்து மற்றும் அதன் காலனியாதிக்கத்தில் இருந்த நாடுகளில் கால்பந்தை விட கிரிக்கெட்டிற்கே மதிப்பு அதிகம்.

இந்தியா கிரிக்கெட் விளையாடும் தினங்களில் சாலைகள் வெறிச்சோடி விடும். முக்கியமாக திரையரங்குகள். பார்வையாளர்களை கிரிக்கெட் ஈர்த்துக் கொள்வதால் திரையரங்குகள் காற்று வாங்கும். உலக கோப்பை கிரிக்கெட் நடைபெறும் காலத்தில் திரையரங்கை கிரிக்கெட் ஒளிபரப்பும் அரங்கமாக மாற்றிய நிகழ்வுகள் இந்தியாவில் நடந்ததுண்டு.

ஜனங்களின் இந்த கிரிக்கெட் பீவர் திரையுலகிலும் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. முக்கியமாக பட வெளியீட்டில்!

தமிழக அரசின் தாராள சலுகையால் படத்தயாரிப்பாளர்கள் உற்சாகத்தில் உள்ளனர். மினிமம் பட்ஜெட் படங்கள் மாதம்தோறும் கணிசமான எண்ணிக்கையில் வெளியாகின்றன. இடையிடையே பெரிய படங்களின் தரிசனங்களும் உண்டு.

பொங்கலையொட்டி எட்டு திரைப்படங்கள் வெளியாவதாக இருந்தது. கடைசி நேரத்தில் பல பின் வாங்கின. தியேட்டர்கள் கிடைக்காதது ஒரு காரணம். அஜித், விஜய், விஷால் படங்களுடன் போட்டியிட வேண்டுமா என்ற எச்சரிக்கை இன்னொரு காரணம். தயாரிப்பு சிக்கல்கள் மூன்றாவது காரணம்.

மேற்சொன்ன காரணங்களால் பொங்கலுக்கு வெளிவர இயலாத படங்கள் பிப்ரவரி மாதத்தில் அதாவது இம்மாதம் எப்படியேனும் வெளிவரும் முயற்சியில் உள்ளன. அதே நேரம் மார்ச்சில் வெளிவர இருந்த படங்களையும் அவசர அவசரமாக முடித்து பிப்ரவரியில் வெளியிடும் ஆவேசத்தில் உள்ளனர். காரணம் எளிமையானது. மார்ச் மாதம் உலக கோப்பை கிரிக்கெட் தொடங்குகிறது.

சரி, கிரிக்கெட் முடிந்த பிறகு படத்தை வெளியிடலாம் என்றால், தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இரண்டு திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன. ஒன்று ரஜினி, ஷங்கர் கூட்டணியின் 'சிவாஜி'. இன்னொன்று கமல் பத்து வேடங்களில் நடிக்கும் 'தசாவதாரம்'.

இந்த இரு படங்களுடன் தங்கள் படங்களை ரிலீஸ் செய்வது சுமோ வீரர்கள் நடுவில் சுண்டெலி மாட்டிக் கொள்வது மாதிரி என்பது அனைவருக்கும் தெரியும். ஆக, பிப்ரவரி மாதம் ஒன்றே தமிழ் சினிமாக்காரர்கள் பதட்டமில்லாமல் மூச்சு விடுவதற்கு ஏற்ற காலமாக உள்ளது.

ஏறக்குறைய இருபது படங்கள் இந்த மாதம் மட்டும் ரிலீசுக்கு தயாராக உள்ளன. பொங்கலுக்கு வெளிவருவதாக இருந்த விஜய டி. ராஜேந்தர், மும்தாஜ், மேக்னா நாயுடு நடித்த 'வீராசாமி' இம்மாத தொடக்கத்தில் வெளியானது. ஜீவா, பூஜா நடிக்க சுப்ரமணியம் சிவா இயக்கிய 'பொறி' படமும் ரிலீஸாகியிருக்கிறது. பொங்கலுக்கு வெளியாவதாக இருந்து பிறகு ஒதுங்கிக் கொண்ட படங்களில் ஒன்று 'தீபாவளி'. இதுவும் இந்த மாதமே ரிலீஸாகியிருக்கிறது. பல வருடங்களாக பெட்டிக்குள் இருந்த 'அகரம்' திரைப்படமும் இப்போதுதான் வெளியாகியிருக்கிறது.

இவை தவிர இரண்டு டப்பிங் படங்களும் வெளியாகியிருக்கின்றன. ஒன்று, ஒன்பது வயது சிறுவன் இயக்கிய 'சாதனை'. மற்றது ராகவா லாரன்சின் 'லட்சியம்- ஒரு தாயின் சபதம்'.

நேற்று கெளதமின் 'பச்சைக்கிளி முத்துச்சரம்' தியேட்டர்களுக்கு வந்திருக்கிறது. இன்று வெளியாகியிருக்கும் படம் 'லீ.' சத்யராஜ் தயாரிக்க சிபிராஜ் நடித்திருக்கும் இப்படமும் நாம் மேலே பார்த்த கிரிக்கெட் பீவரில் சிக்கிக் கொண்ட படங்களில் ஒன்று.

இம்மாதம் முடிய இன்னும் இரண்டு வாரங்கள் இருக்கும் நிலையில் மேலும் பல படங்கள் வெளியாக இருக்கின்றன. அமீரின் மூன்றாவது படமான 'பருத்தி வீரன்' அதில் ஒன்று. பொங்கலுக்கே ரிலீஸாக வேண்டிய படம் இது. பைனான்ஸ் பிரச்சனையால் வரும் 23- ந் தேதி ரிலீஸாகிறது.

பிரகாஷ்ராஜின் டூயட் மூவிஸ் தயாரித்திருக்கும் படம் 'மொழி'. ஜோதிகா நடித்த கடைசிப் படம். இதுவும் 23- ந் தேதி ரிலீஸாகிறது. பல வருடங்களாக படப்பிடிப்பில் இருந்த விவேக் கதாநாயகனாக நடிக்கும் 'சொல்லி அடிப்பேன்' படமும் அதே தேதியில் ரிலீஸாகிறது.

இவையனைத்தும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டவை. அறிவிக்கப்படாதவை இவற்றை விட அதிகம். சின்னதாக பட்டியலிட்டாலே பத்துக்கு மேல் தேறும். அவை,

விஜயகாந்த் டாக்டராக நடித்திருக்கும் 'சபரி', சரண் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கியிருக்கும் 'முனி', எஸ்.ஜே. சூர்யா, மீரா ஜாஸ்மின் நடித்த 'திருமகன்', பரத் இரண்டு வேடங்களில் நடித்திருக்கும் 'கூடல் நகர்', ஆர்யா, பூஜாவின் 'ஓரம் போ', சத்யராஜ், குஷ்பு பெரியார் மணியம்மையாக நடித்திருக்கும் 'பெரியார்' என பெரிய படஜெட் படங்களே அரை டஜன் தேறும்.

இவை தவிர, 'பிறப்பு', 'கண்ணும் கண்ணும்', 'நெஞ்சைத் தொடு', 'சினிமாக்காரன்', 'ரசிகர் மன்றம்', 'தூவானம்', 'அடாவடி', 'காசு இருக்கணும்' ஆகிய மினிமம் பட்ஜெட் படங்களும் பிப்ரவரியை குறி வைத்து காத்திருக்கின்றன.

கிரிக்கெட்டால் உருவாகியிருக்கும் இந்த ரிலீஸ் நெருக்கடி சுலபத்தில் தீர்ந்து விடுகிற பிரச்சனை அல்ல. முதலில் அனைத்துப் படங்களையும் ரிலீஸ் செய்ய தியேட்டர்கள் கிடைக்க வேண்டும். மாதத்திற்கு பத்து படங்கள் என்பதே அதிகம். இதில் பொங்கலுக்கு வெளியான 'போக்கிரி'யும், 'தாமிரபரணி'யும் இப்போதும் ஹவுஸ்புல்லாக ஓடிக் கொண்டிருக்கின்றன. சில ஹாலிவுட் டப்பிங் படங்களும் திரைக்கு வந்திருக்கின்றன.

சில வாரங்கள் முன்பு, ஒரே நடிகரின் இரண்டு படங்கள் ஒரே தினத்தில் வெளியிட தயாரிப்பாளர்கள் சஙகம் தடைவிதித்தது. மேலும், ஒரே நேரத்தில் அதிக படங்கள் வெளியாவதை கட்டுப்படுத்த இருப்பதாகவும் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். ஆனால், கிரிக்கெட் இந்த கட்டுப்படை தகர்த்தெறிந்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

படத்தை முடித்து தயாராக வைத்திருப்பவர்கள் அனைவரும் கிரிக்கெட் போட்டி தொடங்குவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பாவது படத்தை வெளியிட அவசரம் காட்டுகிறார்கள். இந்த நெருக்கடியை தியேட்டர்களும், விநியோகஸ்தர்களும், தயாரிப்பாளர்களும், தமிழ் சினிமாவும் எப்படி எதிர் கொள்ளப் போகிறார்கள்? முக்கியமாக ரசிகர்கள் இந்த புற்றீசல் படையெடுப்பை எங்ஙனம் எதிர் கொள்ளப் போகிறார்கள்?

உலக கோப்பை கிரிக்கெட் அளவிற்கு இதுவும் சுவாரஸ்யமாக இருக்கும் என்பது மட்டும் நிஜம்!

:lol:

இகிகி இவங்களையும் கிரிக்கட் விட்டு வைக்கலியா..?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.