Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெசாக் பௌர்ணமியன்று கறுப்பு கொடி ஏற்ற இடமளியோம் – மங்கள சமரவீர

Featured Replies

வெசாக் பௌர்ணமியன்று கறுப்பு கொடி ஏற்ற இடமளியோம் – மங்கள சமரவீர

mangala13_CI.jpg
வெசாக் பௌர்ணமியன்று கறுப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்த இடமளிக்கப்படாது என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். சில வங்குரோத்து அடைந்த அரசியல்வாதிகள் வெசாக் பௌர்ணமியன்று கறுப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்த முயற்சிக்கின்றனர் என  குற்றம் சுமத்தியுள்ள அவர் சர்வதேச வெசாக் தின கொண்டாட்டங்களில் ஈடுபட கிடைத்தமை ஓர் புனிதமான தருணம் என  குறிப்பிட்டுள்ளார்.

இந்த தருணத்தை சீர்குலைப்பதற்கு எவருக்கும் இடமளிக்கப்பட முடியாது என  குறிப்பிட்டுள்ள மங்கள சமரவீர முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க ஆட்சிக் காலத்தில் வெளிவிவகார அமைச்சராக கடமையாற்றிய அமரர் லக்ஸ்மன் கதிர்காமரின் முயற்சியினால் சர்வதேச வெசாக் பௌர்ணமி தினத்தை அனுஸ்டிக்க சந்தர்ப்பம் கிட்டியது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

http://globaltamilnews.net/archives/26036

  • தொடங்கியவர்

மோடிக்கு கறுப்புக் கொடி காட்டினால் காலிமுகத்திடலை நிரப்பிக்கொண்டே எதிரணி இருக்க வேண்டி வரும்

 

பிரான்ஸ் வெசாக் வைபவத்திற்கு சென்ற ஷிரந்திக்கு 250 இலட்சம் ரூபா செலவீடு; சபையில் மங்கள

(ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்)

 சர்­வ­தேச வெசாக் தினத்­திற்கு இலங்கை வரும் இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி யின் வரு­கைக்கு எதி­ராக கூட்டு எதி­ரணி யினர் கறுப்புக் கொடி ஏந்தப் போவ­தாக குறிப்­பிட்­டுள்­ளனர். முடி­யு­மானால் கறுப்புக் கொடியை ஏந்திப் பாருங்கள். மோடிக்கு கறுப் புக் கொடி காண்­பித்தால் எதி­ர­ணியில் இருந்து கொண்டு காலி முகத்­திடல் மைதா­னத்தை மக்­க­ளினால் நிரப்­பிக்­கொண்டே இருக்க வேண்டி ஏற்­படும் என்று வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர தெரி­வித்தார். 

அத்­துடன் சர்­வ­தேச வெசாக் தினத்­திற்­காக பிரான்ஸ் சென்ற முன்னாள் ஜனா­தி­ப­தியின் பாரியார் ஷிரந்தி ராஜ­பக் ஷ ,எலி­சபெத் மகா­ராணி கூட விலை அதிகம் என்­ப­தனால் தங்­காத ஜோர்ஜ் ஸ்டேன் ஹோட்­டலில் 250 இலட்சம் ரூபா செல­விட்டு தங்­கி­யுள்ளார். இந்த விஜ­யத்தில் 'தேசி' பாட்­டி­யையும் கூட் டிக் கொண்டு சென்­றுள்ளார் என்றும் அவர் குறிப்­பிட்டார். 

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை நடை­பெற்ற இரா­ஜ­தந்­திர  சிறப்­பு­ரி­மைகள் சட்­டத்தின் கீழான கட்­ட­ளையை அங்­கீ­க­ரித்துக் கொள்­வ­தற்­கான பிரே­ரணை மீதான விவா­தத்தில் கலந்துகொண்டு உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். 

அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,

இம் முறை சர்­வ­தேச வெசாக் தினம் முதற்­த­ட­வை­யாக இலங்­கையில் நடை­பெ­ற­வுள்­ளது. இது பெரு­மைப்­பட வேண்­டிய விட­ய­மாகும். சர்­வ­தேச வெசாக் தினம் இலங்­கையில் நடத்­து­வ­தற்கு முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்கா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்­கவும், முன்னாள் வெளி­வி­வ­கார அமைச்சர் ல­க்ஷமன் கதிர்­கா­மரும், பிரதி வெளி­வி­வ­கார அமைச்சர் ல­க்ஷமன் கிரி­யெல்­ல­வுமே பிர­தான கார­ண­மாகும். அப்­போ­தைய ஆட்­சியின் போது சர்­வ­தேச வெசாக் தினத்தை இலங்­கைக்கு பெற்­றுக்­கொள்­வ­தற்கு அவர்­களே கடும் முயற்­சி­களை முன்­னெ­டுத்­தனர்.

இந்­நி­லையில் முதற்­த­ட­வை­யாக இலங்­கையில் சர்­வ­தேச வெசாக் தினம் நடை­பெ­ற­வுள்­ளது. இந்த நிகழ்வில் இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி, நேபாள ஜனா­தி­பதி உள்­ளிட்ட பலர் கலந்து கொள்­ள­வுள்­ளனர்.

எனினும் தற்­போது சர்­வ­தேச வெசாக் தினத்­திற்கு இலங்கை வரும் இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடியின் வருகைக்கு எதி­ராக கூட்டு எதி­ரணி கறுப்பு கொடி ஏந்தப் போவ­தாக குறிப்­பிட்­டுள்­ளது. முடி­யு­மானால் கறுப்புக் கொடியை ஏந்தி பாருங்கள். மோடிக்கு கறுப்புக் கொடி காண்­பித்தால் காலி முகத்­திடல் மைதா­னத்தை மக்­க­ளினால் நிரப்­பிக்­கொண்டே இருக்க வேண்டி ஏற்­படும்.

அத்­துடன் 2014 ஆம் ஆண்டு சர்­வ­தேச வெசாக் தினத்­திற்­காக பிரான்ஸ் சென்ற முன்னாள் ஜனா­தி­ப­தியின் பாரியார் சிரந்தி ராஜ­பக்ஷ ,பிரித்­தா­னிய எலி­சபெத் மகா­ராணி கூட விலை அதிகம் என்­ப­தனால் தங்­காத ஜோர்ஜ் ஸ்டேன் ஹோட்­டலில் 250 இலட்சம் ரூபா செல­விட்டு தங்­கி­யுள்ளார். இந்த விஜ­யத்தில் 'தேசி' பாட்­டி­யையும் கூட்டி கொண்டு சென்­றுள்ளார் .

 இதற்­கான அனைத்து சாட்­சி­களும் எம்­மிடம் உள்­ளன. வெளி­வி­வ­கார அமைச்சே குறித்த தொகையை செலுத்­தி­யுள்­ளது. ஒரு அறைக்கு மாத்திரம் 4 மில்லியன் ரூபா செலுத்தப்பட்டுள்ளது.

இது போன்றுதான் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது 5000 ரூபா நோட்டுகளை அச்சிட்டு செலவிட்டனர். அந்த பணங்களையே தற்போது மே தின கூட்டங்களுக்கு செலவிடுகின்றனர் என்றார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-05-06#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.