Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மஹிந்தவின் பாதுகாப்பிற்கு தொடர்ந்தும் 187 பொலிஸ் உத்தியோகத்தர்கள்

Featured Replies

மஹிந்தவின் பாதுகாப்பிற்கு தொடர்ந்தும் 187 பொலிஸ் உத்தியோகத்தர்கள்

BTI33208fmt-8cfe246bb05e91a806f0a5f6884d4a6cfab7adbd.jpg

 

மீளப்பெறப்பட்டமையில் அரசியல் நோக்கமில்லை; சபையில் அமைச்சர் சாகல ரட்நாயக்க விளக்கம்

(ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்)

முன்னாள் ஜனா­தி­ பதி மஹிந்த ராஜ­பக் ஷவின் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் 42பேர் குறைக்­கப்­பட்­டுள்ள நிலை­யிலும் அவ­ரு­டைய பாது­காப்­புக்கு 187 உத்­தி­யோ­கத்­தர்கள் தற்­போது ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­னர் என்று சட்டம் ஒழுங்கு மற்றும் தென்­மா­காண அபி­வி­ருத்தி அமைச்சர் அமைச்சர் சாகல ரட்­நா­யக்க சபையில் தெரிவித்தார்.  

அதி­முக்­கிய பிர­மு­கர்­க­ளுக்கு இருக்கக் கூடிய அச்­சு­றுத்­தல்கள் குறித்து ஆறு மாதங்­க­ளுக்கு ஒரு முறை மதிப்­பீடு செய்­யப்­பட்டே அவர்­க­ளுக்­கான பாது­காப்பு ஏற்­பா­டு­களில் மாற்­றங்கள் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தா­கவும் அமைச்சர் சுட்­டிக்­காட்­டினார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வெள்ளிக்­கி­ழமை ஒழுங்­கு­பி­ரச்­சி­னை­யொன்றை எழுப்­பிய ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் கூட்டு எதி­ரணி ஆத­ரவு பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான விமல் வீர­வன்ஸ,

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷவின் பாது­காப்பு குறைக்­கப்­பட்டுள்­ளமை தொடர்பில் கேள்வி எழுப்­பினார். அவர் தனது கேள்­வியில், மஹிந்த ராஜ­பக்ஷவுக்­கா­ன ­பா­து­காப்­பு­க­ட­மையில் ஈடு­ப­டுத்தப் பட்­டி­ருந்த 42 உத்­தி­யோ­கஸ்­தர்கள் திரும்ப அழைப்­பட்­டுள்­ளமை தொடர்பில் நேற்று (நேற்று முன்­தினம்) ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் கூட்டு எதிர்க்­கட்சி ஆத­ரவு எம்.பி.யான தினேஷ் குண­வர்­தன எழுப்­பிய கேள்விக்கு கிடைக்­பெற்ற பதி­ல்கள் என்ன என்றார்.

அதன்­போது சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரி­யவும் இந்த விடயம் தனது கவ­னத்­திற்கு கொண்டு வரப்­பட்­டது, பின்னர் அதனை அமைச்­சரின் கவ­னத்­திற்கு கொண்டு சென்­றுள்ளேன். ஆகவே அமைச்சர் அந்த விட­யங்கள் குறித்து பதி­ல­ளிப்பார். அவர் சபையில் உள்ளார் என்றார்.

அத­னை­ய­டுத்து சட்டம் ஒழுங்கு மற்றும் தென் மாகாண அபி­வி­ருத்தி அமைச்சர் சாகல ரட்­நா­யக்க தெரி­வித்­தா­வது,

கடந்த கால ஜனா­தி­ப­தி­க­ளுக்­கான பாது­காப்பு, அதி­முக்­கிய பிர­மு­கர்­க­ளுக்­கான பாது­காப்பு ஏற்­பா­டு­க­ளா­னது அச்­சு­றுத்­தல்கள் பற்­றி­ய­ ம­திப்­பீட்டு அறிக்­கையின் பிர­கா­ரமே மேற்­கொள்­ளப்­படும். முன்னாள் ஜனா­தி­ப­தி­க­ளுக்கு வழங்­கப்­பட்­டி­ருந்த பாது­காப்­பு­களை பொறுத்­த­வ­ரையில், 1988 ஆம் ஆண்டு ஜே.ஆர். ஜய­வர்­தன பத­வியில் இருந்து ஓய்­வு­பெறும் போது 65 உத்­தி­யோ­கஸ்த்­தர்கள் அவ­ரது பாது­காப்­புக்கு வழங்­கப்­பட்­டி­ருந்­த­துடன், 1996 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மர­ணிக்கும் போது அது 18 ஆக குறைந்­தி­ருந்­தது.

1994ஆம் ஆண்டு டி.பி. விஜே­துங்க ஜனா­தி­ப­தி­ப­த­வியில் இருந்­து ­ஓய்­வு­பெறும் போது­அ­வ­ருக்கு 78 பாது­காப்­பு­ உத்­தி­யோ­கஸ்­தர்கள் அமர்த்­தப்­பட்­டி­ருந்­த­துடன்,அவர்­ம­ர­ணிக்கும் போது­அது 12 ஆக குறை­வ­டைந்­தி­ருந்­தது.

அடுத்­த­தாக 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சந்­தி­ரிக்கா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க ஜனா­தி­ப­தி­ப­த­வியில் இருந்­து­ஓய்­வு­பெறும் போது அவ­ரது பாது­காப்­புக்கு 198 இரா­ணு­வ­ மற்றும் பொலிஸ் உத்­தி­யோ­கத்்­தர்கள் வழங்­கப்­பட்­டி­ருந்­தனர்.

பின்னர் பாது­காப்­பு­த­ரப்­பி­னரின் குழு­வொன்று ஆராய்ந்து எடுக்­கப்­பட்ட முடி­வுக்கு அமைய அவ­ரது பாது­காப்புக்கு 12 இரா­ணு­வ­ மற்றும் 69 பொலிஸ் உத்­தி­யோ­கஸ்­தர்கள் போதும் என்­று­ப­ரிந்­து­ரை­செய்­யப்­பட்­டது. தற்­போது சந்­தி­ரிக்கா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்­கவின் பாது­காப்­புக்கு 59 பேர் இருக்­கின்­றனர் .

விசே­ட­மாக வழங்­கப்­பட்ட பாது­காப்பு

அதே­நேரம் கலா­நிதி ஜயம்­பதி விக்­கி­ரட்ன எம்.பிக்கும் விசேட பாது­காப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது. அவ­ரு­டைய வீட்­டிற்கு பொலிஸ் காவ­ல­ர­ணு­ன­டான ஆறு உத்­தி­யோ­கத்­தர்­க­ள­டங்­கிய பாது­காப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது. அதே­போன்று சுமந்­திரன் எம்.பி.க்கு பாது­காப்பு பிரச்­சினை இருப்­ப­தாக கூறப்­பட்­டது. இதை­ய­டுத்து அதற்­க­மை­வான ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. அதிலும் யாழ்ப்­பாணம் செல்லும் போது அவ­ருக்­கான பாது­காப்பு அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

மஹிந்­த­வுக்­கான பாது­காப்பு விபரம்

மஹிந்த ராஜபக்ஷ 2015 ஆம் ஆண்டு ஜனா­தி­ப­தி­ப­த­வியில் இருந்து ஓய்­வு­பெறும் போது அவ­ரது கோரிக்­கைக்கு அமைய 102 இரா­ணு­வத்­தி­னரும் 103 பொலிஸ் உத்­தி­யோ­கஸ்­தர்­களும் அவ­ரது பாது­காப்­புக்­கென வழங்­கப்­பட்­டி­ருந்­தனர். எனினும், அதி­முக்­கிய பிர­மு­கர்­க­ளுக்கு பொலிஸ் பாது­காப்பு மட்­டுமே வழங்­கு­வது என்ற கொள்கைத் தீர்­மா­ன­மொன்றை எமது அர­சாங்கம் எடுத்­தது.

அதற்­க­மைய, மஹிந்த ராஜ­பக்ஷவி­ட­மி­ருந்து 100 இரா­ணு­வத்­தினர் திரும்­ப­பெ­றப்­பட்டு அவர்­க­ளுக்கு பதி­லாக அமைச்­சர்கள் பாது­காப்­பு­பி­ரிவைச் சேர்ந்த 100 பொலிஸ் உத்­தி­யோ­கஸ்­தர்கள் வழங்­கப்­பட்­டனர். அதற்­கு­மே­ல­தி­க­மாக 26 விசேட அதி­ர­டிப்­ப­டை­யி­னரும் அவ­ரது பாதுகாப்­புக்­கென வழங்­கப்­பட்­டுள்­ளனர். ஒட்டு மொத்­த­மாக மகிந்த ராஜ­பக்ஷவின் பாது­காப்­புக்­கு­மொத்­த­மாக 229 உத்­தி­யோ­கஸ்­தர்கள் வழங்­கப்­பட்­டி­ருந்­தனர்.

தற்­போது அதி­லி­ருந்து 42 பொலிஸ் உத்­தி­யோ­கஸ்­தர்கள் மீள­அ­ழைக்­கப்­பட்­டுள்­ளனர். அவ்­வாறு திரும்ப அழைக்­கப்­பட்­ட­வர்­களில் விசேட அதி­ர­டிப்­ப­டை­யினர் உள்­ள­டங்­க­வில்லை. எப்­ப­டி­யி­ருப்­பினும், 26 விசேட அதி­ர­டிப்­ப­டை­யினர் உட்­பட 187 உத்­தி­யோ­கஸ்­தர்கள் தற்­போது மஹிந்த ராஜ­பக்ஷ­வுக்­கான பாது­காப்பு கட­மையில் இருக்­கின்­றனர்.

ஆறு மாதத்­துக்கு ஒரு­த­டவை மதிப்­பீடு 

ஜனா­தி­பதி, பிரதமர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷ போன்ற அதிமுக்கிய பிரமுகர்களுக்கு இருக்கக் கூடியஅச்சுறுத்தல்கள் குறித்து ஆறு மாதங்களுக்கு ஒரு முறைமதிப்பீடு செய்யப்பட்டே அவர்களுக்கான பாதுகாப்புஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அந்த அறிக்கையின் பிரகாரமே தேவைக்கேற்ப பாதுகாப்பு உத்தியோகத்தர் களின் எண்ணிக்கையை கூட்டியும் குறைத்தும் உரிய பாதுகாப்புக்களை வழங்குவது பொலிஸ் மா அதிபரின் பொறுப்பாகும்.

மேதினக் கூட்டம் போன்ற விசேடநிலைமைகளின் போது தேவையான மேலதிகபாதுகாப்புகள் வழங்கப்படும். அதைவிடுத்து பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மீளப்பெறப்பட்டமையில் அரசியல் நோக்கம் எதுவும் கிடையாது என்றார்.  

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-05-06#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.