Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அகதிகள் விடயத்தில் சவுதி அரேபியா அவுஸ்ரேலியா போன்ற நாடுகளின் கொள்கையை கடைப்பிடிக்கவேண்டும் ; பொதுபல சேனா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அகதிகள் என்ற தோரணையில் மியன்மார் மற்றும் இன்னும் சில நாடுகளில் உள்ள முஸ்லிம்களை இலங்கை கொண்டுவரும் மனித கடத்தல் வியாபாரம் ஒன்று இடம்பெறுவதாக பொதுபல சேனா அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. இதன் ஒரு அங்கமாகவே கடந்த வாரம் இந்திய கடற்பரப்பு ஊடாக இலங்கைக்குள் வந்துள்ள மியன்மார் நாட்டவர்கள் இலங்கைக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இது தொடர்பில் பொதுபல சேனா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது… ஆதரவற்றவர்களிக்கு ஆதரவு அளிக்குமாறு பௌத்த தர்மம் போதிக்கிறது.அது தொடர்பில் எமக்கு மாற்று கருத்து இல்லை.நாம் அந்த விடயத்தில் இன மத பேதம் பார்ப்பதில்லை.ஆனால் கடந்த வாரம் நாட்டுக்குள் வந்த மியன்மார் அகதிகள் என்ற தோரணையில் இலங்கைக்குள் தஞ்ஞம் புகுந்தவர்கள் தொடர்பில் பல கேள்விகள் எழுந்துள்ளன.

*கிழக்கு மாகாணத்தில் பௌத்தர்களின் நிஜ பூமியில் பெளத்தர்களுக்கு விகாரை அமைக்க முட்டுக்கட்டை போடும் கிழக்கு முதலமைச்சர் குறித்த அடைக்கலம் கோரும் முஸ்லிம்களுக்கு எதுவித சந்தேகக்ங்களுக்கு  இடமின்றி அடைக்கலம் வழங்க கோருவது இனவாதமில்லையா ? *இலங்கையில் முஸ்லிம்களுக்கு பொதுபல பல சேனா அமைப்பினால் இடையூரு உள்ளதாகவும் பொதுபல சேனாவினால் முஸ்லிம்கள் நிம்மதி இழந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் மற்றும் இலங்கை முஸ்லிம் அரசியல் தலைவர்களும் சர்வதேசங்களுக்கு அறிவித்துள்ள நிலையில் மியன்மார் அகதிகள் என  முஸ்லிம்கள் இங்கு அடைக்கலம் கோருவது தங்கள் அமைப்பைப்பற்றி கூறும் கதைகளை பொய்ப்பிப்பதாக அமைகிறது. *குறித்த அகதிகள் மியன்மாரில் இருந்து அண்மையில் வெளியேறியவர்கள் அல்ல  நான்கு வருடங்களுக்கு முன்னர் அங்கிருந்து வங்கதேசத்துக்கு வந்து இந்தியாவில் தங்கியிருந்துள்ளனர்.

இலங்கையில் மன்னார் வில்பத்து போன்ற பகுதிகளில் குடியேற அல்லது அவுஸ்ரேலியா செல்வதற்காகவே இவர்கள் கடல்வழியாக வந்திருக்கலாம் என்ற தலவலும் கிடைத்துள்ளது. *இதேபோல் அவர்களில் இன்னும்  14000 பேர் இந்தியாவில் தங்கியிருக்கின்றனர். இவர்கள் உலக இஸ்லாமியமாக்கள் பல நாடுகளுக்கு கடத்தப்படுபர்களாக இருக்கலாம். *அவர்கள் இலங்கைக்குள் வந்துள்ளது பாதுகாப்பு பிரிவினர் அறிந்துகொண்டதால் அவர்களை கைது செய்துள்ளனர் இல்லாவிட்டால் அவர்கள் மன்னார் அல்லது கிழக்கில் கொலனி அமைத்து குடியேறி இலங்கை பிரஜைகளாக தங்களை பதிவு செய்துகொண்டிருப்பார்கள். *கடந்த காலங்களில் இதுபோன்றவர்கள் இங்கு குடியேற்றப்பட்டிருக்கலாம் என நாம் சந்தேகிக்கிறோம்.

*முஸ்லிம் நாடான சவுதி அரேயாவே இது போன்ற அகதி அந்தஸ்து கோருபவர்களை புறக்கணிக்கும் போது எமது நாட்டில் அடைக்களம் கோருமாறு இங்குள்ளவர்கள் போலியாக கண்ணீர் வடிப்பது வேடிக்கையானது. *எந்த ஒரு தகவலும் அறியாமல் கிழக்கு முதல்வர் அவர்களுக்கு ஆதரவாக கதைப்பது அவருக்கும் இந்த மனித கடத்தல் வியாபாரத்தில் பங்கு உள்ளதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.இது தி தொடர்பில் புலனாய்வு பிரிவினர் விசானை நடத்த வேண்டும். *இவர்கள் போன்றவர்களை எவ்வாறு சவுதி அரேபியா அவுஸ்ரேலியா போன்ற நாடுகள் திருப்பி அனுப்பபது போல எமது அரசும் நடந்து கொள்ளவேண்டும்.இல்லாவிட்டால் ஒஸ்ரேலியாவை போல ஒரு பாதுகாப்பான தீவில் தங்க வைக்கப்படவேண்டும். *இதுபோன்றவர்கள் மேலும் இந்த நாட்டில் குடியேறியுள்ளர்களா என்பது தொடர்பில் பாதுகாப்பு படையினர் தேடுதல் நடத்த வேண்டும். குறிப்பாக வில்பத்தை அண்டிய பகுதியில் தேடுதல் நடத்த வேண்டும் எனவும் கரையேர பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் எனவும் பொதுபல செனா கோரியுள்ளது.

AkuranaToday.com | Read more http://www.akuranatoday.com/news/?p=135891 .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.