Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கறுப்புக் கொடிகளை ஏந்துவோமென்றனர் நள்ளிரவில் இந்திய பிரதமரை சந்தித்தனர்

Featured Replies

கறுப்புக் கொடி­களை ஏந்­து­வோ­மென்­றனர் நள்­ளி­ரவில் இந்­திய பிர­த­மரை சந்­தித்­தனர்

my2-4f166d7fe886b3685decfb50417a624d01817169.jpg

 

ஆட்சியை கைப்பற்ற நினைப்பது வேடிக்கை என்கிறார் ஜனாதிபதி
இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி இலங்­கைக்கு வரும் போது கறுப்புக் கொடி­களை ஏந்­து­வோ­மென தெரி­வித்த சிலர் நள்­ளி­ரவில் சென்று அவரை சந்­தித்­தனர் என தெரி­வித்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன , அர­சாங்கம் பல­வீ­ன­மாக காணப்­ப­டு­கின்­ற­தெனக் கூறி ஆட்­சியை

 கைப்­பற்ற நினைத்தால் அது வேடி­க­கை­யாகும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

அர­ல­கங்­வில வில­யாய மகா வித்­தி­யா­ல­யத்தில் நேற்று திங்­கட்­கி­ழமை நடை­பெற்ற ஒரு இலட்சம் மகா­வலி காணி உறு­திகள் வழங்­குதல் மற்றும் வாழ்­வா­தார அபி­வி­ருத்தி செயற்­திட்ட நிகழ்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே ஜனா­தி­பதி மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

ஜனா­தி­பதி அங்கு தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் ,

நாட்டின் நீர்ப்­பா­சன மற்றும் விவ­சா­யத்­து­றையின் அபி­வி­ருத்­தியின் பொருட்டு பாரிய செயற்­திட்­டங்­கள்­அ­ர­சினால் தற்­போது மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றது. மற்­று­மொரு பாரிய நீர்ப்­பா­சனத் திட்­ட­மான மாதுறு ஓயாவின் வலது கரைப்­ப­கு­தியின் அபி­வி­ருத்தி செயற்­பாடு இவ்­வ­ரு­டத்தில் ஆரம்­பிக்­கப்­படும்.

அத்­துடன் அநு­ரா­த­புரம், பொலன்­ன­றுவை, குரு­நாகல் மற்றும் திருக்­கோ­ண­மலை ஆகிய மாவட்­டங்­களில் காணப்­படும் 600 குளங்­களை புன­ர­மைக்கும் செயற்­திட்டம் ஆசிய அபி­வி­ருத்தி வங்­கியின் உத­வி­யுடன் இவ்­வ­ரு­டத்தில் செயற்­ப­டுத்­தப்­படும்.

ரஜ­ரட்ட மக்­களின் நீண்­ட­கால வேண்­டு­கோ­ளான மொர­க­ஹ­கந்த செயற்­திட்­டத்தின் ஊடாக அவர்­க­ளது நீர் பிரச்­சி­னைக்கு தற்­போது தீர்வு வழங்­கப்­பட்­டுள்­ளது. எதிர்­வரும் பெரும்­போ­கத்­தின்­போது நீர்த்­தேக்கம் புர­ண­மாக நீரினால் நிரப்­பப்­பட்­டதன் பின்னர் மீண்டும் ரஜ­ரட்ட மக்கள் நீர் பிரச்­சி­னையை எதிர்­நோக்க வேண்­டிய நிலை ஏற்­ப­டாது.

மேலும் கடந்த அர­சாங்­கத்தில் அபி­வி­ருத்­தி­க­ளாக காட்­சிப்­ப­டுத்­தப்­பட்ட பாரிய திட்­டங்கள் நாட்­டிற்கு கடன் சுமை­யையே வழங்­கி­யுள்­ளன. அதுவே தற்­போது எமக்கு நாட்டை முன்­னோக்கி கொண்டு செல்­வ­தற்கும் பெரும் சுமை­யாக அமைந்­துள்­ளது.

நாட்டை வௌிநாட்டுக் கடன்­க­ளி­லி­ருந்து மீட்டு அபி­வி­ருத்­தியை நோக்கி கொண்டு செல்­வ­தற்கு அர­சாங்கம் விரி­வான அபி­வி­ருத்தி செயற்­திட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­கின்­றது. எத்­த­கைய சவால்கள் காணப்­பட்­டாலும் அபி­வி­ருத்தி செயற்­பா­டு­களை வலு­வா­கவும் துரி­த­மா­கவும் முன்­னோக்கி கொண்டு சென்று மக்­க­ளுக்கு தேவை­யான பொரு­ளா­தார அபி­வி­ருத்­தியை ஏற்­ப­டுத்தி தருப்­படும்.

அர­சாங்கம் பல­வீ­ன­மாக காணப்­ப­டு­கின்­ற­தெனக் கூறிக்­கொண்டு ஆட்­சி­ய­மைக்க சிலர் கனவு காண்­கின்­றனர். அண்­மையில் காலி முகத்­தி­டலில் நடை­பெற்ற மே தினக் கூட்­டத்தின் பின்னர் ஆட்­சியை அமைக்க கனவு கண்­டாலும் மைதா­னத்­திற்கு பஸ்­களில் கொண்­டு­வ­ரப்­பட்ட மக்கள் கூட்­டத்தை வைத்து அர­சாங்­கத்தை அமைக்­கலாம் எனக் கனவு காண்­பார்­க­ளாயின் அது வேடிக்­கைக்­கு­ரிய விட­ய­மாகும்.

இந்­திய பிர­தமர் நாட்­டிற்கு வரு­கை­தரும் வேளையில் கறுப்புக் கொடி­களை ஏந்­து­வோ­மென தெரி­வித்த சிலர் நள்­ளி­ரவில் சென்று அவரை சந்­தித்­தனர் என்ற விட­யமும் தனக்கு அறியக் கிடைத்­தது என குறிப்­பிட்டார்.

மகா­வெலி பிர­தே­ச­வா­சி­களின் உரி­மையை உறு­திப்­ப­டுத்தி ஒரு இலட்சம் காணி உறு­திகள் வழங்கும் செயற்­திட்­டத்தின் கீழ் மகா­வலி பீ மற்றும் சீ வல­யங்­களை சேர்ந்த மக்­க­ளுக்கு பத்­தா­யிரம் காணி உறு­திகள் இன்று ஜனா­தி­பதி அவர்­களின் தலை­மையில் வழங்­கப்­பட்­டன.

2017 வாழ்­வா­தார அபி­வி­ருத்தி செயற்­திட்­டத்தின் கீழ் பொலன்­ன­றுவை மாவட்­டத்தின் பிர­தேச செய­லக பிரி­வுகள் சில­வற்றை உள்­ள­டங்­கிய வாழ்­வா­தார அபி­வி­ருத்தி செயற்­திட்­டங்­க­ளுக்­கான உப­க­ர­ணங்­களும் இதன்­போது வழங்­கப்­பட்­டன.

மகா சங்­கத்­தினர் உள்­ளிட்ட மதத் தலை­வர்கள் ஊவா மாகாண ஆளுநர் எம்.பீ. ஜயசிங்க, அமைச்சர் தயா கமகே, வட மத்திய மாகாண முதலமைச்சர் பேசல ஜயரத்ன, பிரதி அமைச்சர் சுதர்ஷனி பெர்ணாந்து புள்ளே, முன்னாள் அமைச்சர் பீ. தயாரத்ன, வட மத்திய மாகாண சபையின் உறுப்பினர் சம்பத் ஸ்ரீ நிஷங்க உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும், மகாவலி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பொலன்னறுவை மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-05-16#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.