Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதலமைச்சர் விக்னேஸ்வரனின் பேட்டியிலிருந்து

Featured Replies

இன்றைய வலைத்தளத்தில் வடமாகான முதலமைச்சர் திரு விக்னேஸ்வரன் அவர்களின் பேட்டியை பார்த்தேன். அந்த பேட்டியில் முதலமைச்சர் என்ன கூறுகின்றார் என்று பார்ப்போம் முதலாவதாக வடக்கு கிழக்கு தமிழர்கள் தொடர்பாக இந்தியாவின் கொள்கையில் ஏதாவது மாற்றம் இருக்குமென தான் நினைக்கவில்லை என்கிறார் அத்துடன் இரண்டாவதாக பெரியண்ணனாக இந்தியா விளங்கவேண்டும் என தமிழர்கள் விரும்புகின்றனர் என கூறுகின்றார். அவர் கூறிய இரண்டு விடயங்கள் குறித்து உங்களுக்கு எழுதலாமென நிணைக்கிறேன்.

 முதலமைச்சரின் பேட்டிக்கு வருவோம் அவர் முதலில் என்ன கூறுகின்றார் தமிழர்கள் தொடர்பாக இந்தியாவின் கொள்கையில் ஏதாவது மாற்றம் இருக்குமென நினைக்கவில்லை என்கிறார். ஐயா முதலமைச்சரே தமிழர்கள் தொடர்பான இந்தியாவின் கொள்கை என்னவெண்று சற்று விளக்கிவீர்களா? இந்த கொள்கையைத்தான் நானும் பலகாலமாக பலரிடம் கேட்டுக்கொண்டிருக்கின்றேன் அனால் யாரும் இதுவரை கூறவில்லை. இந்தியாவிடம் கொள்கையிருந்தால்தான் ஐயா கொள்கை மாறுவதற்கு. ஐயா முதலமைச்சரே  இந்தியாவின் கொள்கை தமிழர்களைவைத்து தங்கள் வியாபாரத்தை பெருக்குவதுதான் அதைத்தவிர வேறொன்றுமில்லை.

இரண்டாவதாக இந்தியாவை பெரியண்ணா என்கிறார் அப்படியானால் சின்னண்ணா  யார் இலங்கை அரசாங்கமா?, முதலில்  தமிழர்கள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும் இந்தியா எங்களுடைய பெரியண்ணாவும் இல்லை தொப்புள்கொடியுறவும் இல்லை தமிழ்நாட்டு மக்களைத்தான் எங்கள் தொப்புள்கொடியுறவென்று கூறமுடியும். இந்தியா   பொருளாதாரத்தில் முன்னேறுகின்ற ஒரு பெரிய நாடு அவ்வளவுதான். இந்தியாவை கையால்வதில் தமிழர்தரப்பு தோல்வியடைந்து விட்டதென்றுதான் சொல்லவேண்டும், இந்தியா நிழழைப்போன்றது அதாவது நாங்கள் நிழழை நோக்கிசென்றால் நிழல் எங்களை விட்டு விலகிச்செல்லும் அதே நேரதில் நாங்கள் நிழழை விட்டு விலகிச்சென்றால் நிழல் எங்களை நோக்கிவரும் இப்படித்தான் இந்தியாவும். இதனடிப்படையில் தமிழர்தரப்பு இந்தியாவோடுமட்டும் உறவை பேனாமல் சீனாவோடும் உறவை பேனவேண்டும். இதன் மூலம் தமிழர்தரப்பு தங்களை விட்டு விலகுகின்றதோ என இந்தியாவை நினைக்கவைக்கமுடியும். இதனால் தமிழர்தரப்புக்கு நிறைய நன்மைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு என நான் திடமாக நம்புகின்றேன்.  அதைவிட்டுவிட்டு பெரியண்ணா முறை சொல்லி அழைப்பதும் இந்தியா இல்லாவிட்டால் பிரச்சினையை தீக்கமுடியாது என்று கூறுவதன் மூலம் நாங்கள் இந்தியாவின் அடிமைகளாக இருக்கிறோம் என்ற செய்தியை இந்தியாவுக்கு அனுப்புகின்றோம் இதன் மூலம் தமிழர்களின் பிரச்சினை இன்னும் 100 வருடங்கள் சென்றாலும் தீரப்போவதில்லை என்பதுதான் உண்மை,   

இந்தியா பக்கத்திலுள்ள பெரிய நாடு ஆனபடியால் இந்தியாவுடன் அனுசரித்து செல்ல வேண்டுமென்கிறார்கள். உங்களுக்கு 1971ம் ஆண்டை ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்  பங்களாதேஷ் பாகிஸ்தானிலிருந்து பிரிவதற்கு சுதந்திரபிரகடணம் செய்கின்றது அப்பொழுது பாகிஸ்தானை சீனா ஆதரிக்கின்றது இந்தியாவை ரஸ்சியா ஆதரிக்கின்றது இக்கட்டத்தில் சீனா பாகிஸ்தானுக்கு சார்பாக தலையிடலாம் என்ற நிலை வந்த பொழுது ரஸ்சியா தனது துருப்புக்களை சீனா எல்லைக்கு  நகர்த்தியதன் மூலம் சீனாவை அமைதிகாக்கவைத்தது. அத்துடன் இன்னொரு உதாரணம் முன்னையகாலத்தில் குதிரை, யாணை, ஈட்டி, அம்பு கொண்டு போராடியபொழுது உதவிக்கு பக்கத்தில் உள்ள நாடுகளை நம்பியிருந்தார்கள் ஆனால் இன்று தொழில் நுட்பம் முன்னேறிய காலதில் நிலைமை வேறு உதாரணமாக தென் கொரியாவின் நண்பனான அமெரிக்கா எவ்வளவு தூரத்திலிருந்து வந்து தென் கொரியாவுக்கு பாதுகாப்பு கொடுக்கின்றார்கள். இதே போல் எத்தணையோ உதாரணங்களை கூறமுடியும்.

இதிலிருந்து என்ன தெரிவதென்றால் பெரிய நாடு சிறிய நாடு என்பதில் ஒன்றுமில்லை ஆனால் எப்படி நாங்கள் காய்களை நகர்த்துகின்றோமென்பதில்தான் வெற்றி தோல்வி நிச்சயிக்கப்படுகின்றது என்பதுதான் உண்மை.. அரசியல்வாதிகள் இந்தியாவை விட்டு வேறு நாடுகளுடன் தொடர்பை பேனுவதற்கு பின் நிற்பதன் காரணம் அவர்களின் சோபேறித்தனமும் ஊக்கமின்மையும்தான்.

முதலில் தமிழர்களாகிய நாம் ஒரு திடமான முடிவை எடுக்கவேண்டும். அதாவது சிங்களவர்கள் சொல்வதையெல்லாம்  கேட்டு அவர்களோடு சேர்ந்து வாழ்வதா அல்லது தமிழர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக பாடுபடுவதா என்பதுதான். இந்த இரண்டு தெரிவில் ஏதாவது ஒன்றை  தவிர இரண்டுக்கும் நடுவே நிற்கமுடியாது. ஆனால் அரசியல்வாதிகள் மூன்றாவதாக கூறிய வகையை சேர்ந்தவர்கள் அதாவது சிங்களவர்களுடன் சேர்ந்து வாழவும் விரும்பமாட்டார்கள் அத்துடன் தமிழர் உரிமைக்கு போராடவுமாட்டார்கள் ஏதோ சாக்குபோக்கு சொல்லி பதவியை தக்கவைத்துக்கொண்டு காலத்தை கடத்துவதுவார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.