Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பந்தன் – விக்கி சமரசம் பிரேரணை மீளப்பெறப்படும்?

Featured Replies

சம்பந்தன் – விக்கி சமரசம் பிரேரணை மீளப்பெறப்படும்?

 

 

wigneswaran-sampanthan.jpg

முதலமைச்சர் சி. வி. விக்கினேஸ்வரனுக்கு எதிராக  இலங்கை தமிழரசுக்கட்சியின்   உறுப்பினர்களினால்  கொண்டுவரப்பட்ட  நம்பிக்கையில்லாப் பிரேரணையை அடுத்து  ஏற்பட்டிருந்த கடும்  முறுகல் நிலைக்கு பேச்சுவார்த்தைமூலம்  சமரசத்  தீர்வு காண்பதற்கு நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது. 

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின்  தலைவரும் எதிர்க்கட்சித் தலைவ ருமான இரா.சம்பந்தன்  வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ் வரனுடன் நேற்று தொலைபேசியில் உரையாடியதையடுத்து  இந்த முறுகல்நிலைக்கு  சமரசத் தீர்வு  காணப்பட்டுள்ளது. தமிழ் தேசியக்  கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் 

 புௌாட் அமைப்பின் தலைவரும் யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான  தர்மலிங்கம் சித்தார்த்தன் இருவருக்குமிடை யில் மத்தியஸ்தராக செயற்பட்டு  இந்த  சமரச முயற்சியினை மேற்கொண்டுள்ளார். 

வடமாகாண சபை அமைச்சர்கள் நால்வ ருக்கும் எதிராக இலஞ்ச ஊழல் குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்பட்டதையடுத்து  அது தொடர்பாக விசாரணை நடத்த வட மாகாண முதலமைச்சர்  சி.வி.விக்கினேஸ் வரன்  விசார ணைக் குழுவை நியமித்திருந்தார். இந்த விசாரணைக்குழு  தனது விசாரணையினை மேற்கொண்டு  அறிக்கையினை கடந்த 3 ஆம் திகதி  முதலமைச்சர்  விக்கினேஸ்வ ரனிடம் சமர்ப்பித்திருந்தது. இந்த விசா ரணை அறிக்கையில் விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன்,  கல்வி அமைச்சர் த. குருகுலராஜா, ஆகியோர் மீதான குற்றச் சாட்டுக்கள்  நிரூபிக்கப்பட்டுள்ளமையி னால் அவர்கள் பதவி விலக வேண்டு மென்று பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இதே போன்று சுகாதார அமைச்சர் ப.சத்திய லிங்கம், போக்குவரத்து அமைச்சர் பா. டெனீஸ்வரன் ஆகியோர் மீதான குற்றச் சாட்டுக்கள் நிரூபிக்கப்படாமையினால் அவர்கள் விடுவிக்கப்படுவதாகவும்  அறிக் கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் கடந்த 7 ஆம் திகதி  மாகாண சபை அமர்வில் விசாரணைக் குழுவின் அறிக்கையினை சமர்ப்பித்திருந்த முதலமைச்சர் விக்கினேஸ்வரன்  குற்றச் சாட்டு நிரூபிக்கப்பட்ட அமைச்சர்கள் நேற்று முன்தினம்  புதன்கிழமை  தன்னிலை விளக்கம்  அளிப்பதற்கான  கால அவகாசத்தை வழங்கியிருந்தார்.  அமைச்சர்களின் தன்னிலை விளக்கத்தை அடுத்து  அறிவிப்பு வெளியிட்ட விக்கி னேஸ்வரன்  குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப் பட்ட அமைச்சர்களான  பொ. ஐங்கரநேசன், த. குருகுலராசா ஆகியோர்  தாமாகவே பதவி விலகவேண்டுமென்றும்  ஏனைய அமைச்சர்களான ப.சத்தியலிங்கம், பா. டெனீஸ்வரன்  ஆகியோர் மீதான  குற்றச் சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடை பெறும் என்றும்  அதுவரை  ஒருமாத காலம் விடுமுறையில் செல்லுமாறும்  கோரியிருந் தார்.  முதலமைச்சரின் இந்த அறிவிப்பை அடுத்து சபையிலிருந்து தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்திருந்தனர்.  இதனையடுத்து  தமிழரசுக்கட்சியின் தலை வர் மாவை சேனாதிராஜாவின் தலைமையில் யாழ்ப்பாணத்திலுள்ள கட்சி அலுவலகத்தில் கூடிய   தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்கள்   முதலமைச்சரின் செயற்பாடுகள் குறித்து  ஆராய்ந்ததுடன் அவருக்கு எதிராக நம் பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வந்து அவரை பதவி நீக்குவது என முடிவு செய்தனர். 

தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள்  உட்பட எதிரணி உறுப்பினர் ஒருசிலர் ஒன்றிணைந்து நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கைச்சாத் திட்டதுடன் அதனை நேற்று முன்தினம் இரவு வடமாகாண ஆளுநர்  ரெஜினோல் குரேயிடம்  சமர்ப்பித்திருந்தனர். இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில்  அமை ச்சர்களான த.குருகுலராசா, ப.சத்தியலி ங்கம்,  பா.டெனீஸ்வரன்,   அவைத் தலை வர் சி.வி.கே.சிவஞானம், பிரதி அவைத் தலைவர் வீ.கமலேஸ்வரன் ஆகியோர் உட்பட  உறுப்பினர்களான  அஸ்மின்,  இ. ஆர்னோல்ட், கே.சயந்தன், எஸ்.சுகிர்தன்,  சு.பசுபதிப்பிள்ளை, எஸ்.அரியரட்ணம், ரி. சிவயோகம், சிராய்வா, ஜவாகீர், அ. பரஞ் சோதி, ஜெயதிலக ஆகியோர்  கையொப்ப மிட்டிருந்தனர். 

நம்பிக்கையில்லாப் பிரேரணையை  அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் ஆளுநரிடம் கையளித்திருந்தார். அத்துடன் மேலும் ஐந்து உறுப்பினர்களின் ஆதரவு தமக்கு இருப்பதாகவும்  தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் ஆளுநரிடம் தெரிவித்தி ருந்தனர். இந்த நிலையில் முதலமைச்சருக்கு எதிராக  நம்பிக்கையில்லாப் பிரேரணையினை  தமி ழரசுக் கட்சியினர்  முன்வைத்து அவரை பதவி விலக்க முயன்றமை மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.  அரசியல்கட்சிகள்,  பொது அமைப்புக்கள் உட்பட  பல அமைப்புக்களும் கடும் கண்ட னங்ளை தெரிவித்திருந்தன. சமூக வலை யத்தளங்களில்  கடுமையான எதிர்ப்பு  தெரி விக்கப்பட்டது.  தொடர்ச்சியான போராட் டங்களுக்கும் அமைப்புக்கள் ஏற்பாடுகளை மேற்கொண்டன. 

இத்தகைய சூழ்நிலையிலேயே  முதலமை ச்சர் சி.வி.விக்கினேஸ்வரனுடன் கூட்டமை ப்பின் தலைவரும்  எதிர்க்கட்சித் தலைவரு மான இரா. சம்பந்தன் நேற்று முற்பகல் சமரச பேச்சுவார்த்தையினை நடத்தியுள்ளார்.  யாழ்ப்பாணத்திலுள்ள  முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்ற  புௌாட் அமைப்பின் தலைவரும் எம்.பி. யுமான தர்மலிங்கம் சித்தார்த்தன்  முதல மைச்சருடன்  பேச்சுவார்த்தை நடத்தியுள் ளார்.  இந்த பேச்சுவார்த்தையை அடுத்து சித்தார்த்தன் எம்.பி. எதிர்க்கட்சித் தலைவர்  சம்பந்தன் எம்.பி.க்கு தொலைபேசி அழை ப்பை எடுத்து அவருடன்  கலந்துரையாடிய பின்னர்   முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவரும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள னர். 

இந்த சமரசப் பேச்சுவார்த்தையின் போது  குற்றம்சாட்டப்பட்ட இரண்டு  அமை ச்சர்களுக்கும் எதிராக முதலமைச்சர் எடுத்த நடவடிக்கையை  ஆமோதித்த  சம்பந் தன் எம்.பி.  குற்றச்சாட்டுக்கள் நிரூபிக் கப்படாத இரண்டு  அமைச்சர்கள் மீது  விசாரணைகளை தொடர்வதை தான் எதிர்க்க வில்லை என்றும் ஆனால் அவர்களை  உட னடியாகவே  விடுமுறையில் அனுப்பும்  விடயத்தை  முதலமைச்சர் மீள் பரிசீலனை செய்யவேண்டும் என்று கேட்டுக் கொண் டதாக  தெரிகின்றது. 

சம்பந்தன் எம்.பி.யின் கோரிக்கையை முதலமைச்சர் ஏற்றுக்கொண்டதுடன் அந்த இரு அமைச்சர்கள் மீதான விசாரணை   தொடரும் என்று  தெரிவித்ததாக   நம்பகர மாக  தெரியவருகிறது.  இதனையடுத்து  முதலமைச்சர் மீதான  நம்பிக்கையில்லாப் பிரேரணையினை  தமிழரசுக் கட்சி வாபஸ் பெறும் என்று எதிர்க்கட்சித்  தலைவர் சம்பந்தன் முதலமைச்சரிடம்  தெரிவித்தி ருக்கின்றார்.  இந்த இணக்கப்பாட்டின் அடி ப்படையிலேயே இருவருக்குமிடையில் சமரசம்  ஏற்பட்டுள்ளது. 

இந்த சமரசத்திற்கிணங்க  குற்றம் நிரூபிக் கப்படாத இரண்டு அமைச்சர்களை  விடு முறையில் அனுப்பும் செயற்பாட்டை முதல மைச்சர் கைவிடுவார் என்றும்   இதற்குப் பதிலாக  நம்பிக்கையில்லாப் பிரேரணை யினை தமிழரசுக்கட்சியினர் மீளப்பெறு வார்கள்  என்றும்  தெரியவருகின்றது.  இன்று  பிரேரணை  மீளப்பெறப்படலாம் என  தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதேவேளை சம்பந்தனுடனான பேச்சு வார்த்தை தொடர்பில் முதலமைச்சர் விக்கி னேஸ்வரனிடம் கேட்டபோது, 

கூட்டமைப்பின் தலைவர் என்னுடன் பேசினார். குறிப்பாக நான்கு அமைச்சர்கள் மீதான எனது முடிவு தொடர்பில் அதாவது இரண்டு அமைச்சர்கள் ஒரு மாதகால விடுமுறையில் அமைச்சுக்கு செல்லாது இருப்பது தொடர்பான விடயத்தை கூட்ட மைப்புத் தலைவர் ஏற்றுக் கொள்ளவில்லை. அந்த இரண்டு அமைச்சர்களும் தகுந்த உத்தரவாதம் தந்தால் அந்த கடப்பாட்டை நீக்கமுடியும் என்று தெரிவித்துள்ளேன். இதுதொடர்பில் சித்தித்து அவர்கள்தான் பதில் கூற வேண்டும் என்றார்.

நம்பிக்கையில்லா தீர்மானத்தை மீள பெறுவது தொடர்பில் ஏதாவது முடிவு அறிவிக்கப்பட்டதா என கேள்வி கேட்ட போது, அவ்விடயம் தொடர்பில் இதுவரை எதுவித தகவலும் கிடைக்க வில்லை எனத் தெரிவித்தார். 

இதேவேளை இலங்கைத்  தமிழரசுக்கட் சியின் தலைவர் மாவை சேனாதிராஜா எம்.பி. இவ்விடயம் குறித்து தெரிவிக்கையில்

விக்கினேஸ்வரனும் சம்பந்தனும் தொலை பேசியில் என்ன உரையாடினார்கள் என்பது குறித்து என்னால் கருத்துக்கூறமுடியாது. அதே நேரம் எமது உறுப்பினர்கள் ஆளுநரிடம் கையளித்த தீர்மானம் தொடர்பாக என்னைச் சந்திப்பதற்கு ஆளுநர் அழைப்பு விடுத்திருந்தார். அதனையேற்று அவரை சந்தித்த நான் எமது கட்சி உறுப்பினர்களின் தீர்மானத்தை குறிப்பிட்டேன். அதன்போது அவர் அடுத்த முதலமைச்சர் அமைச்சர்கள் தொடர்பாக கேள்வியெழுப்பினார். இச்சமயத்தில்  எமது கட்சியின் செயலாளர் இன்றைய தினம் (நேற்று) காலை வருகைதந்து உறுப்பினர்களுடன்  கலந்துரையாடுகின்றார். அதன் பின்னரே அவ்விடயம் குறித்து தீர்மானிக்க முடியும் என குறிப்பிட்டேன். எவ்வாறாயினும் எமது உறுப்பினர்கள் சமர்ப்பித்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் ஆளுநர் நடவடிக்கைகளை எடுப்பார் என எதிர்பார்த்துநிற்கின்றோம் என்றார்.

http://www.virakesari.lk/article/20927

  • தொடங்கியவர்

இணக்க முயற்சி சறுக்கல்

 
இணக்க முயற்சி சறுக்கல்
 

வடக்கு மாகாண சபை முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்வரனை பதவி நீக்­கு­வ­தற்­கான முயற்­சி­களை அடுத்து அவ­ருக்­கும் தமிழ் அர­சுக் கட்­சிக்­கும் இடை­யில் இணக்­கம் ஒன்றை ஏற்­ப­டுத்த நேற்று எடுக்­கப்­பட்ட முயற்­சி­கள் வெற்­றி­பெ­ற­வில்லை. தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­த­னுக்­கும் விக்­னேஸ்­வ­ர­னுக்­கும் இடை­யில் நடந்த பேச்­சுக்­கள் இணக்­கம் ஒன்­றுக்­கான வாய்ப்பை ஏற்­ப­டுத்­தும் என்ற பிம்பத்தை நேற்­றுப் பக­லில் ஏற்­ப­டுத்­தி­னா­லும் கூட நேற்று இரவு வரை­யில் முத­ல­மைச்­ச­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாப் பிரே­ரணை நகர்­வு­களை தமிழ் அர­சுக் கட்சி கைவி­ட­வில்லை.

சம்­பந்­த­னுக்­கும் விக்­னேஸ்­வ­ர­னுக்­கும் இடை­யில் நேற்­றுப் பகல் தொலை­பேசி வழி­யாக நடந்த பேச்­சை­ய­டுத்து இந்த முரண்­பாட்­டுக்கு ஓர் இணக்கம் ஏற்­ப­டும் போல் தென்­பட்­டது. அமைச்­சர்­கள் இரு­வர் விடு­மு­றை­யில் செல்ல வேண்­டும் என்ற தனது நிலைப்­பாட்­டில் இருந்து இறங்­கி­வர தான் தயார் என சம்­பந்­த­ரி­டம் விக்­னேஸ்­வ­ரன் தெரி­வித்­தி­ருந்­தார்.

ஆனால் தமிழ் அர­சுக் கட்­சி­யின் மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளும் தலை­மை­யும் அந்த இணக்­கப்­பாட்டை ஏற்­றுக்­கொள்­ளத் தயா­ரில்லை என்று தெரி­ய­வ­ரு­கி­றது.

தமது அமைச்சுப் பதவிகளை பாதுகாப்பதற்காக இத்தகைய ஓர் இணக்கப்பாட்டுக்கு கட்சி தயாரில்லை. இதனை தமிழ் அரசுக் கட்சி சார்பிலான மாகாண அமைச்சர்களும் உறுப்பினர்களும் நேற்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டனர்.

இதையடுத்து முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முன்கொண்டுசெல்லும் நடவடிக்கைகளில் கட்சி தொடர்ந்தும் ஈடுபட்டு வருகிறது.

 

http://uthayandaily.com/story/6922.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.