Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பலவீனமான தலைமை

Featured Replies

வட மாகாண முதலமைச்சர் திரு விக்னேஸ்வரன் அவர்கள் தனது அமைச்சர்களில் இரண்டு அமைச்சர்களை இராஜினாமா செய்ய சொன்னதும் மற்றய இரண்டு அமைச்சர்களை கட்டாய விடுமுறையில் செல்லவேண்டுமென கேட்டுக்கொண்டதை தொடர்ந்து முதலமைச்சருக்கெதிராக அவரது கட்சியை சேர்ந்த மாகாண சபை உறுப்பினர்கள் சிலரால் நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து  முதலமைச்சர் தனக்கெதிராக சதி நடந்திருக்கின்றது எனவும் அதே நேரத்தில் முதலமைச்சர் தமிழரசு கட்சியை பழிவாங்குவதாகவும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டுவதை இன்று காணக்கூடியதாக இருக்கின்றது. இதை பார்த்து தமிழர்கள் ஆகிய நாங்கள் வெட்கப்படவேண்டியிருக்கின்றது. இந்த குழப்பங்களுக்கான அடிப்படை தவறு என்ன என்பது பற்றி ஆராய்வதே இப் பந்தியின் நோக்கமாகும்.

த தே கூ தலைவர் திரு சம்பந்தன் ஐயா அவர்கள் திரு விக்னேஸ்வரன் அவர்களை முதலமைச்சராக தேர்தலில் நிற்கும் படி கேட்டுக்கொண்டபொழுது அவர் திரு சம்பந்தனிடம் கேட்டுக்கொண்டது என்னவென்றால் த தே கூட்டமைப்பிலுள்ள எல்லா கட்சிகளும் ஏற்று வேண்டுகோள் விடுத்தால்  முதலமைச்சர் வேட்பாளராக நிற்பதற்கு தயார் என்பதுதான். இதன் மூலம் திரு விக்னேஸ்வரன் அவர்கள் த தே கூட்டமைப்பு முதலமைச்சர் வேட்பாளராகவே தெரிவு செய்யப்பட்டார் தமிழரசுக்கட்சி சார்பான வேட்பாளராக தெரிவுசெய்யப்படவில்லை. அதைத்தொடர்ந்து நடந்த மாகாணசபை தேர்தலிலே த தே கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்று 132,000 வாக்குகள் பெற்ற திரு விக்னேஸ்வரன் அவர்கள் வட மாகாணசபையின்  முதலமைச்சராகிறார். ஆரம்பத்தில் தமிழர் அரசியலை சரியாக புரிந்திருக்காவிட்டாலும் பின்னர் யாழ் மக்களுடன் பழகியதைத் தொடர்ந்து  அவரது பேட்டிகளும் வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு சொல்லும் கருத்துக்களும் அவர் தமிழ் தேசியத்தின் மீது எவளவு ஈடுபாடு கொண்டுள்ளார் என்பதை பறைசாற்றி நின்றது. இதன் மூலம் அவருக்கு புலம் பெயர் மக்களிடத்திலும் இலங்கை தமிழர்களிடத்திலும் ஆதரவு பெருகத்தொடங்கியது. இது தமிழரசுக்கட்சியிலுள்ள சில தலைவர்களுக்கு பயத்தை உண்டாக்கியிருக்க வேண்டும் ஏனென்றால் அக் காலகட்டத்திலிருந்து முதலமைச்சர் மாற்றப்படபோகின்றார் என பரவலாக பேசப்பட்டு வந்தது யாவரும் அறிந்திருப்பீர்கள். கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது த தே கூட்டமைப்புக்கு வாக்கு கேட்பதற்கு திரு விக்னேஸ்வரன் அவர்களை  கூட்டமைப்பு அனுகியபொழுது திரு விக்னேஸ்வரன் அவர்கள் அக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை அதற்கான காரணமாக  தான் மக்களின் பிரதிநிதியேயொழிய  த தே கூட்டமைப்பின் பிரதிநிதி அல்லவென்றும்  அதனால் பாராளுமன்ற தேர்தலிலே த தே கூட்டமைப்புக்கு வாக்கு கேட்க முடியாதென்றும் கூறியிருந்தார். அதன் பின்பும் அவர் பல முறை இதே போன்று கூறியிருக்கின்றார். இங்கேதான் த தே கூட்டமைப்பு தலைமையின் பலவீனமான ஆளுமைதன்மை தென்படதொடங்குகிறது.

உண்மையில் தலைவர் சம்பந்தனின் தலைமை பலமாகவும் ஆளுமையுள்ளதாக இருந்திருந்தால் அவர் என்ன செய்திருக்க வேண்டுமென்றால் த தே கூட்டமைப்பு கூட்டத்தை கூட்டி திரு விக்னேஸ்வரன் அவர்களிடம் விளக்கம் கேட்டிருக்கவேண்டும். திரு விக்னேஸ்வரன் அவர்களின் நிலைப்பாடு முற்றிலும் தவறு. அவர் த தே கூட்டமைப்பு சார்பிலே த தே கூ தேர்தல் விஞ்ஞாபணத்தின் அடிப்படையிலேயே வாக்கு கேட்டார் அவர் சொல்வது போல் மக்கள் பிரதிநிதியென்றால் அவர் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்றிருக்கவேண்டும். திரு விக்னேஸ்வரன் த தே கூட்டமைபுடன் ஒத்துழக்கவில்லையென்றால்  அவர்களை முதலமைச்சர்  பதவியிலிருந்து  நீக்கியிருக்கவேண்டும். 1965ம் ஆண்டளவில் தமிழரசுக்கட்சின் மூளை என வர்ணிக்கப்பட்ட ஊர்காவற்துறை பாராளுமன்ற உறுப்பினர் திரு நவரத்தினம் அவர்கள் கொள்கைரீதியாக தமிழரசுக்கட்சியுடன் முரன்பட்ட பொழுது அவரை உடனடியாகவே கட்சியிலிருந்து நீக்கியது தமிழரசுக்கட்சி. இப்படியான ஒரு முடிவை எடுப்பதற்கு திரு சம்பந்தன் அவர்களுக்கு துணிவும் இல்லை ஆளுமையும் இல்லை. இதன் மூலம் திரு சம்பந்தன் அவர்கள் முதலமைச்சருக்கு மக்களிடத்தில் இருந்த ஆதரவைக் கண்டு பயப்படத்தொடங்கிவிட்டார் என்பதை காணக்கூடியதாக இருந்தது.

தமிழ் அரசியல் வரலாற்றில் திரு சம்பந்தன் போன்று  பலவீனமான தலைவர் வேறு எவராகவும் இருக்கமுடியாது. ஒரு திடமான முடிவெடுப்பதில்லை எல்லா பிரச்சினைகளையும் பின்போட்டுக்கொண்டே செல்வது, மற்றய உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்பதுமில்லை அத்துடன் செவிடடுப்பதுமில்லை. அவர் ஒரு சிறிய வட்டத்துக்குள்ளே அடைபட்டுள்ளார். இப்பொழுது மாகாணசபையிலே நடைபெறுகின்ற நிகழ்ச்சியை பார்ப்போமானால்  விசாரணை, அறிக்கை, தீர்ப்பு என்பன ஒன்று இரண்டு நாட்களில் நடந்து முடிந்த நிகழ்ச்சிகள் அல்ல  பல மாதங்கள் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி. திரு  சம்பந்தன் ஒரு பலமான தலைவராக இருந்திருந்தால் இக் காலப்பகுதியில்  திரு விக்னேஸ்வரன் அவர்களுடன் பேசி ஒரு முடிவெடுத்திருக்கலாம் அல்லது த தே கூட்டமைப்பு தலைவர்களை கூட்டி ஒரு முடிவை எடுத்திருக்கலாம். மாறாக  திரு சம்பந்தன் என்ன சொல்கின்றார் என்றால் வட மாகாணசபை விடயத்தில் தன்னால் தலையிட முடியாதென்றும் வட மாகாணசபையே அதை பார்த்துக்கொள்ளும் என்கிறார். இது அவரின் கையாலாகதனத்தை காட்டுகின்றது. அவர் தலைமை தாங்கும் த தே கூட்டமைப்பு ஆட்சி செய்யும் மாகாணசபையிலே உறுப்பினர்களுக்கிடையில் நடக்கும் பிரச்சினையை திரு சம்பந்தன் அவர்கள் தலையிட்டு தீர்க்காமல் சண்டையிட்டுக்கொள்ளும் உறுப்பினர்களிடம் ஒப்படைத்தது அவரது பலவீனத்தை காட்டுகின்றது.

அடுத்ததாக முதலமைச்சர் தனது முடிவை சபையிலே அறிவித்தவுடன் தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் பலர் எதிர் கட்சி அங்கத்தவர்களுடன் சேர்ந்து முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையிலா தீர்மானத்தை கவர்னரிடம் சமப்பிக்கின்றார்கள். இங்கே வேடிக்கை என்னவென்றால் ஆளும்கட்சிக்குள்லேயே ஒரு பகுதியினர் தங்களது கட்சியை சேர்ந்த முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையிலா தீர்மானம் கொண்டுவருவது உலகத்திலேயே இதுதான் முதல் முறை என்று நிணைக்கின்றேன். நம்பிக்கையிலா தீர்மானம் கொண்டுவந்த உறுப்பினர்கள் த தே கூ தலைமைக்கு நிலைமையை முறையிட்டுயிருக்கவேண்டும் அதன் பின் தலைவர் சம்பந்தன் அவர்கள் த தே கூ மாகாணசபை உறுப்பினர்கள்  எல்லோரையும் அழைத்து நிலைமையை விளக்கி முதலமைச்சரை மாற்றுவதா இல்லையா என்பதை முடிவு செய்திருக்கவேண்டும். இந்த நடைமுறையை பின்பற்றாமல் நேரடியாகவே கவர்னரிடம் தீர்மானத்தை சமர்ப்பித்த உறுப்பினர்களிடம் த தே கூ தலைமை விளக்கம் கேட்டிருக்கவேண்டும் ஆனால் இதை செய்வதற்கு திரு சம்பந்தனுக்கு திராணியில்லை இங்கேதான் த தே கூ தலைமையின் பலவீனம் தென்படுகின்றது. அத்துடன் முதலமைச்சர் கூறுவது போல் இது ஒரு சதி என்பது நிரூபனமாகின்றது காரணம் முன்னமே அவர்கள் கூடி பேசி தீர்மானம் எடுத்துதான் சபைக்கு வந்திருக்கிறார்கள் அதனால்தான் உறுப்பினர்களுக்கு நேராக கவர்னரிடம் செல்ல கூடியதாக இருந்தது.

காலம் சென்ற இந்திய பிரதமர் திரு நரசிம்மராவ் தலைமையில் எப்படி காங்கிரஸ் கட்சி பலவீனமடைந்ததோ அதேபோன்றுதான் திரு சம்பந்தனின் தலைமையில் த தே கூட்டமைப்பு பலவீனமடைந்து செல்கின்றது என்பதை யாரும் மறுக்க முடியாது. இப்பொழுது த தே கூட்டமைப்பு ஒரு துக்களக் நிர்வாகத்தை நடாத்துகின்றது. யார் வேண்டுமென்றாலும் எதுவும் பேசலாம், எடுக்கும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதில்லை, இவர்களை நம்பாமல் மக்கள் தாங்களகவே தலைமையேற்று பல இடங்களிலே போராட்டங்களை நடாத்துகின்றார்கள். சுமந்திரனும் சம்பந்தனும் மனித உரிமை பேரவைக்கு ஒன்றை சொன்னால் இவற்றுக்கு எதிமறையாக மற்றய உறுப்பினர்கள் கடிதம் அனுப்புகின்றார்கள். அதற்கு மேலாக இவர்களுக்கு என்ன தெரிந்து கையெழுத்திடார்கள் என திரு சுமந்திரன் கேள்வி கேட்கிறார். இவற்றையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறார் தலைவர் திரு சம்பந்தன். த தே கூட்டமைப்பு கூட்டங்களிலே இதைப்பற்றி பேசினால் உடனே தலைவர் சம்பந்தன் பள்ளிக்கூட ஆசிரியாகிவிடுவார் உடனே பிள்ளைகளுக்கு இப்படி பேசக்கூடாது நல்ல பிள்ளைகளாக இருக்கவேண்டும் என்பார். இப்படியான பலவீனமான தலைமையின் முதுகிலே 2009 க்கு பின் அரசியலுக்கு வந்தவர்கள் குதிரை சவாரி செய்கின்றார்கள். இவர்கள் வந்தபிந்தான் த தே கூட்டமைப்புக்குள் குழுக்கள் தோன்றியுள்ளது. தமிழ் அரசியலில் 2009க்கு முன் இப்படியான குழுக்கள் இருந்ததில்லை. தெனாலி படத்திலே கமலஹசன் கூறுவது போல் திரு சம்பந்தனுக்கு எல்லோர்மீதும் பயம் பயம் பயம். திரு சம்பந்தன் மற்றும் திரு மாவை சேனாதிராசா போன்றோர் 50 ஆண்டுகளுக்கு மேல் தமிழ் தேசியத்துடன் ஈடுபாடுகொண்டவர்கள். ஆனால் இன்று இவர்கள் இருவரையும் யாரோ கட்டுப்படுத்துவது போல் என்னதோன்றுகிறது. திரு சம்பந்தனின் முதுமை காரணமாகவும் உடல் நிலை காரணமாகவும் அவரால் கூட்டமைப்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்க முடியாது, அவருக்கு தமிழினம் மீது உண்மையிலேயே அக்கறையிருக்குமானால் தனது தலைமை பதவியை இளையதலைமுறைக்கு விட்டுகொடுக்கவேண்டும், தனது நீண்ட கால அனுபவத்தை ஆலோசகராக இருந்து த தே கூட்டமைப்புக்கு ஒத்துழைப்பு கொடுக்கலாம். இன்றய நிலையில் திரு சம்பந்தன் இதை செய்ய தவறின் த தே கூட்டமைப்பு சின்னாபின்னமாவதை யாராலும் தடுக்கமுடியாது. வட மாகாணசபையில் நடந்தது ஆரம்பம் மட்டுமே.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Suguthar said:

தமிழ் அரசியல் வரலாற்றில் திரு சம்பந்தன் போன்று  பலவீனமான தலைவர் வேறு எவராகவும் இருக்கமுடியாது.

இவ்வளவு காலம் போனபின் தான் தெரிந்து இருக்கு .

 

2 hours ago, Suguthar said:

ஆளும்கட்சிக்குள்லேயே ஒரு பகுதியினர் தங்களது கட்சியை சேர்ந்த முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையிலா தீர்மானம் கொண்டுவருவது உலகத்திலேயே இதுதான் முதல் முறை என்று நிணைக்கின்றேன்

அவ்வளவுக்கு குரோதம் 

 

2 hours ago, Suguthar said:

சுமந்திரனும் சம்பந்தனும் மனித உரிமை பேரவைக்கு ஒன்றை சொன்னால் இவற்றுக்கு எதிமறையாக மற்றய உறுப்பினர்கள் கடிதம் அனுப்புகின்றார்கள். அதற்கு மேலாக இவர்களுக்கு என்ன தெரிந்து கையெழுத்திடார்கள் என திரு சுமந்திரன் கேள்வி கேட்கிறார்.

சுமத்திரன் நிலை 23 புலிகேசியை விட மோசம் 

 

2 hours ago, Suguthar said:

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.