Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதலமைச்சர் விக்னேஷ்வரனுக்கு தற்போதுள்ள ஆதரவு தொடர்பான ஆராய்வு

Featured Replies

முதலமைச்சர் விக்னேஷ்வரனுக்கு தற்போதுள்ள ஆதரவு தொடர்பான ஆராய்வு

 


முதலமைச்சர் விக்னேஷ்வரனுக்கு தற்போதுள்ள ஆதரவு தொடர்பான ஆராய்வு
 

வடமாகாண சபையில் முதலமைச்சர் விக்னேஷ்வரனுக்கு தற்போதுள்ள ஆதரவு தொடர்பில் இன்று நாம் ஆராய்கின்றோம்.

38 உறுப்பினர்களை கொண்ட வடமாகாண சபையில் 30 உறுப்பினர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களாவர்.

மாகாண சபையின் அமைச்சர்கள் தொடர்பில் முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் மேற்கொண்ட சில தீர்மானங்கள் காரணமாக மாகாண சபையில் உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு இடையே வெளிப்படையாக பிளவு ஏற்பட்டுள்ளது.

கடந்த 14 ஆம் திகதி முதலமைச்சர் விக்னேஷ்வரனுக்கு எதிராக தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த 15 உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா பிரேரணையொன்றில் கைச்சாத்திட்டு வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரேயிடம் கையளித்தனர்.

இந்த பிரேரணையில் வட மாகாண சபையின் 18 உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளதாகவும், மேலும் மூன்று பேர் அதற்கு ஒப்புதளித்துள்ளதாகவும், வட மாகாண அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் நியூஸ்பெஸ்ட்டுக்கு தெரிவித்தார்.

வட மாகாண அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தலைமையில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த 17 பேர் கடந்த புதன் கிழமை இரவு ஆளுனர் அலுவலகத்திற்கு சென்றிருந்தனர்.

வட மாகாண ஆளுங்கட்சி உறுப்பினர்களான அவைத் தலைவர் சி.வி.கே சிவஞானம், பிரதி அவைத் தலைவர் வ.கமலேஸ்வரன், அமைச்சர்களான த.குருகுலராஜா, ப. டெனிஸ்வரன், ப. சத்தியலிங்கம், ஆகியோரும்,உறுப்பினர்களான வே.சிவயோகன், கே. சயந்தன், சு.பசுபதிப்பிள்ளை,ச.சுகிர்தன், அ.பரஞ்சோதி, இ.ஆனோல்ட், ப. அரியரட்ணம்,அயூப் அஸ்மின், அ. சிரய்வா ஆகியோரும்,எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களான அ. ஜயதிலக, அஹமட் லெப்பை ஜவாகிர் ஆகியோரை ஆளுநர் அலுவலக வளாகத்தில் காணமுடிந்தாக எமது செய்தியாளர் கூறினார்.

இதேவேளை, கடந்த 15 ஆம் திகதி முதலமைச்சர் விக்னேஷ்வரனுக்கு ஆதரவாக மேலும் 15 உறுப்பினர்கள் கையெழுத்திட்டு வடமாகாண ஆளுநரிடம் பிரேரணையொன்றை கையளித்தனர்.

வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் உறுப்பினர் க.சர்வேஸ்வரன், விந்தன் கனகரத்தினம் ஆகியோரால் ஆளுநரிடம் இந்த கடிதம் கையளிக்கப்பட்டிருந்தது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி,தமிழீழ விடுதலை இயக்கம்,தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் ஆகிய கட்சிகளின் 15 உறுப்பினர்கள் இந்த கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.

வட மாகண சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், எம். தியாகராசா, ஜி.குணசீலன், ஆர்.இந்திரராஜா, ரீ.ரவிகரன், கே.சிவனேசன், அனந்தி சசிதரன், கே.சர்வேஸ்வரன், பீ. ஐங்கரநேசன், விந்தன் கனகரத்தினம், ஏ.புவனேஸ்வரன், எஸ்.மயூரன், ஜி.ரி.லிங்கநாதன், பீ.கஜதீபன் மற்றும் முதலமைச்சர் சி.வி.விக்கினேஷ்வரன் ஆகியோர் குறித்த கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.

இதற்கமைய வடமாகாண சபையில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளைச் சேர்ந்த 8 உறுப்பினர்களின் நிலைப்பாட்டிலேயே முதலமைச்சருக்கு எதிரான பிரேரணையின் அடுத்தக் கட்ட நகர்வு தீர்மானமாகின்றது.

இந்த நிலையில் அடுத்த ஏழு உறுப்பினர்களின் நிலைப்பாடு என்ன?

இன்று நாம் அவர்களிடம் இது குறித்து வினவினோம்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினராக சி.அகிலதாஸ் தான் இன்னும் தீர்மானிக்கவில்லை என்று கூறினார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினராக ஏ.ஜயதிலக்கவுடன் தொடர்புகொள்ள முடியவில்லை.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினரான ஏ.டி.செனவிரத்னவிடம் வினவிய போது தான் நடுநிலமையாக செயற்படுவதாகவும் அது குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் கூறினார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் வி.தவநாதன் முதல்வருக்கு ஆதரவு தெரிவிக்கவுள்ளார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஏ.எல்.வை. ஜவாஹிர் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிக்கவுள்ளதாக நியூஸ் பெஸ்டுக்கு கூறினார்.

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாகாண சபை உறுப்பினரான எச்.எம்.ராயிஸிடம் நாம் வினவிய போது தான் இன்னமும் தீர்மானிக்கவில்லை என்று கூறினார்.

 

இதேவேளை வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஷ்வரனுக்கு தாம் ஆதரவு தெரிவிப்பதாக புனர்வாளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி தெரிவித்துள்ளது.

சி.வி விக்னேஷ்வரன் தொடர்ந்து வடக்கு மாகாண சபையின் முதலமைச்சராக இருக்க வேண்டும் எனவும் இலங்கை தமிழரசுக் கட்சி கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை வாபஸ் பெற வேண்டும் எனவும் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண சபையின் தைரியமான செயற்பாடுகளுக்கு சி.வி விக்னேஷ்வரன் முன்நின்று செயற்பட்டுள்ளதாகவும் அந்தக் கட்சி குறிப்பிட்டுள்ளது.

எனவே ஊழலில் ஈடுபட்ட நான்கு அமைச்சர்களுக்கும் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி மேலும் தெரிவித்துள்ளது.

 

http://newsfirst.lk/tamil/2017/06/முதலமைச்சர்-விக்னேஷ்வரன/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.