Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத்துறை அமைச்சரின் கருத்துக்கு பதிலடி கொடுத்த லசித் மலிங்க

Featured Replies

விளையாட்டுத்துறை அமைச்சரின் கருத்துக்கு பதிலடி கொடுத்த லசித் மலிங்க
Lasith Malinga

விளையாட்டுத்துறை அமைச்சரின் கருத்துக்கு பதிலடி கொடுத்த லசித் மலிங்க

 
 
icc-clips-728-90-newest.jpg

கடந்த ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ண குழு மட்ட போட்டிகளில் அரை இறுதிப் போட்டிக்குத் தெரிவாகும் தீர்மானமிக்க போட்டியில் இலங்கை அணி மிகவும் மோசமான முறையில் தோல்வியடைந்து சம்பியன்ஸ் கிண்ண தொடரிலிருந்து வெளியேறியிருந்தமை குறித்து விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ தயாசிறி ஜயசேகற அவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இலங்கை கிரிக்கெட் அணி பலவீனமான அணி என்றும், அணியின் வீரர்களை வலுவான வீரர்களாக உருவாக்குவதற்கு இராணுவ முகாமொன்றுக்கு பயிற்சிகளுக்காக அனுப்ப வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

அதற்கு பதிலளிக்கும் முகமாக வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க, ”இப்பொழுது யுத்தம் நிறைவுற்றுள்ளது. இனிமேலும் எவரும் இராணுவ பயிற்சிகளில் ஈடுபட வேண்டிய தேவையுள்ளதாக நான் நினைக்கவில்லை என்று ஹிரு கொசிப் (Hiru Gossip) செய்திகளுக்காக தெரிவித்திருந்தார். மேலும் தெரிவிக்கையில், ”இந்திய அணியுடனான போட்டியில் வெற்றி பெற்ற போது எம்மை எல்லோரும் புகழ்ந்தார்கள். எனினும், அடுத்த போட்டியில் தோல்வியுற்ற போது நாம் பலவீனமான அணி என்று குறை கூறுகின்றார்கள் என்று சுட்டிக்காட்டினார்.

18 மாதங்களுக்குப் பின்னர், ஒருநாள் சர்வதேசப் கிரிக்கெட் போட்டிகளுக்காக சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் மீண்டும் இலங்கை அணியுடன் இணைந்து கொண்ட லசித் மலிங்க எதிர்வரும் 30ஆம் திகதி ஆரம்பமாக உள்ள ஜிம்பாப்வே அணியுடனான போட்டிகளுக்காக பயிற்சிகளில் ஈடுபட்டிருந்த வேளையிலேயே அமைச்சருக்கு பதிலடி வழங்கும் வகையில் இவ்வாறு தெரிவித்தார்.   

இப்போதுள்ள இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் தற்போதுள்ள நிலையுடன்  ஒப்பிடும் பொழுது, உரிய உடல் தகுதியுடன் இல்லை எனவும், 2016ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணி இராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டிருந்ததனாலேயே போட்டிகளில் வெற்றியீட்டியதாகவும் குறிப்பிட்டிருந்தார். அத்துடன், இலங்கை கிரிக்கெட் வீரர்களும் அது போலவே, இராணுவப் பயிற்சிகளை பெற்றுத் தம்மை பலப்படுத்திக்கொள்ளவும் யோசனை தெரிவித்திருந்தார்.

இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் மாத்திரமே பெருத்த வயிறுகளுடன் காணப்படுவதாகவும், அந்த வகையில், பிடியெடுப்புகளை தவறவிட்டதில், ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. பிடியெடுப்புகளை விடுங்கள், எவ்வளவு உதிரி ஓட்டங்களை களத்தில் பெற்றுக்கொடுத்தாரகள். பங்களாதேஷ் அணியைப் பாருங்கள். கடுமையான பயிற்சிகளின் மூலம் எவ்வாறு உடலமைப்பை பேணி வருகின்றார்கள். அதனால் அவர்களை 6 மாதங்களுக்கு இராணுவப் பயிற்சிகளுக்கு அனுப்ப வேண்டும் என்று தெரிவித்திருந்த கருத்துக்கு பதிலளிக்கும் முகமாகவே லசித் மலிங்க மேற்கண்டவாறு பதிலளித்திருந்தார்.

http://www.thepapare.com

  • தொடங்கியவர்

விளையாட்டு மந்திரியை ‘குரங்கு’ என்று அழைத்த மலிங்கா, விசாரணையை சந்திக்கிறார்

விளையாட்டு மந்திரியை ‘குரங்கு’ என்று அழைத்த இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா, விசாரணையை சந்திக்க இருக்கிறார்

விளையாட்டு மந்திரியை ‘குரங்கு’ என்று அழைத்த மலிங்கா, விசாரணையை சந்திக்கிறார்
 
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் ஜூன் 1-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் ‘பி’ பிரிவில் இடம்பிடித்திருந்த இலங்கை அணி இந்தியாவை வீழ்த்தியது. பாகிஸ்தானை வீழ்த்தினால் அரையிறுதிக்கு முன்னேற இயலும் என்ற நிலையில், பாகிஸ்தானிடம் தோல்வியடைந்து லீக் சுற்றோடு வெளியேறியது.

இதனால் இலங்கை நாட்டின் விளையாட்டுத்துறை மந்திரி தயாஸ்ரீ ஜெயசேகரா, வீரர்களின் உடற்தகுதி குறித்து விமர்சன்ம் செய்திருந்தார்.

இதுகுறித்து இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா கூறுகையில் ‘‘சொகுசாக இருந்து கொண்டு விமர்சனம் கூறுபவர்கள் பற்றி நான் கவலைப்படவில்லை. கிளியின் கூண்டு பற்றி குரங்கிற்கு என்னத்தெரியும்?. இதுபோன்ற குரங்குகள் கிளிக் கூண்டிற்குள் சென்று இதுபோன்று பேசிக் கொண்டிருக்கிறது’’ என்றார்.

201706221749212246_Dayasiri-Jayasekera-s

இதனால் விளையாட்டுத்துறை மந்திரி தயாஸ்ரீ ஜெயசேகரா கடுங்கோபம் அடைந்துள்ளார். மலிங்கா கூறிய கருத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

மேலும், தான் கூறிய கருத்து குறித்து தயாஸ்ரீ ஜெயசேகரா கூறுகையில் ‘‘இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் மீடியாக்களின் விதிமுறை மீறி பேசியதாக, அவர் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. வீரர்களுடைய உடற்தகுதி குறித்துதான் நான் விமர்சன் செய்தேன். மலிங்காவின் பெயரை நான் குறிப்பிடவில்லை. ஆனால், அவரைத்தான் நான் கூறுவதாக நினைத்து என்னை பொது இடத்தில் தாக்கி பேசியுள்ளார்’’ என்றார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/06/22174915/1092351/Malinga-Calls-Lankan-Sports-Minister-Monkey-Faces.vpf

  • தொடங்கியவர்

மந்திரியை குரங்கு என விமர்சனம்: இலங்கை வீரர் மலிங்காவுக்கு தடை?

இலங்கை விளையாட்டு துறை மந்திரியை குரங்கு என்று விமர்சித்த அந்நாட்டு வேகப்பந்து வீச்சாளர் மலிங்காவுக்கு, குற்றம் நிரூபிக்கப்பட்டால் சில போட்டியில் பங்கேற்க தடை விதிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

 
 
மந்திரியை குரங்கு என விமர்சனம்: இலங்கை வீரர் மலிங்காவுக்கு தடை?
 
கொழும்பு:

இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி லீக் சுற்றோடு வெளியேறியது. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கையின் பீல்டிங் மோசமாக இருந்தது. முக்கிய கேட்சுக்களை தவற விட்டனர்.

இதனால் இலங்கை அணி வீரர்கள் உடல் தகுதி குறித்து விசாரணை நடத்தப்படும் என்று இலங்கை விளையாட்டு மந்திரி தயாசீறி ஜெயசேகரா கூறினார்.

அதுபற்றி கருத்து தெரிவித்த இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா, நாற்காலியை அலங்கரிக்கப்பவர்களின் விமர்சனத்தை நான் பொருட்படுத்தவில்லை. இது கிளியின் கூடுபற்றி குரங்கு பேசுவது போல் இருக்கிறது. கிளி கூடு பற்றி குரங்குக்கு என்ன தெரியும் என்று கூறி இருந்தார். அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

201706271058503734_ma._L_styvpf.gif

இதையடுத்து மலிங்காவிடம் விசாரணை நடத்த மந்திரி தயாசீறி ஜெயசேகரா உத்தரவிட்டார். விசாரணை நடத்த இலங்கை வாரிய நிர்வாகி ஆஸ்லேடி சில்வா தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இக்குழு மலிங்காவிடம் இன்று விசாரணை நடத்துகிறது. அதன்பின் அறிக்கையை இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் கொடுக்கும்.

மலிங்கா மீது கிரிக்கெட் வாரிய ஒப்பந்த விதியை மீறி விட்டதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு உள்ளது. விசாரணை முடிவில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு சில போட்டியில் பங்கேற்க தடை விதிக்க வாய்ப்பு இருக்கிறது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/06/27105847/1093147/Malinga-to-face-disciplinary-inquiry.vpf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.