Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மலிங்காவுக்கு இடைநிறுத்தி வைக்கப்பட்ட ஓராண்டு தடை; ஒப்பந்தத்தை மீறியதால் நடவடிக்கை

Featured Replies

மலிங்காவுக்கு இடைநிறுத்தி வைக்கப்பட்ட ஓராண்டு தடை; ஒப்பந்தத்தை மீறியதால் நடவடிக்கை

 
லசித் மலிங்காபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா, ஒப்பந்த விதிகளை மீறியதாக, ஓராண்டுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆனால், இந்த தண்டனை 6 மாதங்களுக்கு இடைநிறுத்தி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அடுத்த ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வருமானத்திலிருந்து 50 சதவீதத்தை அவர் அபராதமாகச் செலுத்த வேண்டும் என்றும் சிறப்பு விசாரணைக்குழு அறிவித்துள்ளது.

சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்குப் பிறகு, இரண்டு முறை லசித் மலிங்க, ஒப்பந்த விதிகளை மீறியுள்ளதாகவும், ஊடகங்களுக்கு அதிகாரிகளின் அனுமதியின்றி கருத்துத் தெரிவித்தமை போன்ற குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டிருந்தன.

மலிங்காபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

இதுதொடர்பாக, இலங்கை கிரிக்கெட்டின் கெளரவ செயலர் மோகன் டி சில்வா, தலைமை செயல் அதிகாரி அஷ்லே டி சில்வா, ஒழுங்கு நடவடிக்கைக் குழுத் தலைவர் அசெல ரெகாவா ஆகியோர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.

அந்தக் குழு செவ்வாய்க்கிழமை பிற்பகல் விசாரணை நடத்தியது. இலங்கை கிரிக்கெட்டின் தலைமையகத்தில் நடந்த விசாரணையின்போது, தன் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுக்களை ஒப்புக்கொண்ட லசித் மலிங்கா, முறைப்படி மன்னிப்புக் கோரியதாக இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

அந்த முடிவு, செவ்வாய்க்கிழமை மாலை கூடிய சிறப்பு செயலாக்கக் குழுவிடம் தெரிவிக்கப்பட்டது. அந்தக் குழு, மலிங்காவை, ஓராண்டு இடைநீக்கம் செய்து தண்டனை விதித்தது. ஆனால், அந்த தண்டனை, 6 மாதங்களுக்கு இடைநிறுத்தி வைக்கப்படும். அந்த 6 மாதங்களுக்குள் இதேபோன்ற தவறு மீண்டும் நடந்தால், தண்டனை செயல்பாட்டுக்கு வரும்.

உற்சாகம் குறைந்ததுபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

மேலும், மலிங்காவின் அடுத்த ஒரு நாள் போட்டிக்கான வருவாயிலிருந்து 50 சதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவை அடுத்து, இலங்கை வரும் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இம்மாத இறுதியில் தொடங்கும் தொடருக்கான, தேர்வுக்குழுவில் மலிங்காவின் பெயரும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஜூன் 30 மற்றும் ஜூலை 2 ஆகிய தேதிகளில் நடக்கும் முதல் இரண்டு ஆட்டங்களுக்கான அணியிலும் மலிங்கா ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

http://www.bbc.com/tamil/sport-40424339

  • தொடங்கியவர்

“குரங்கு” என்றதற்கு மலிங்கவுக்கு தடை

Published by Priyatharshan on 2017-06-28 09:49:35

 

விளை­யாட்டுத் துறை அமைச்­சரை குரங்கு என விமர்­சித்த இலங்கைக் கிரிக்கெட் அணியின் நட்­சத்­திர வேகப்­பந்து வீச்­சாளர் லசித் மலிங்­க­விற்கு 6 மாத காலம் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. 

lasith_malinga.jpg

ஆனாலும் எதிர்­வரும் 30ஆம் திகதி ஆரம்­ப­மா­க­வுள்ள சிம்­பாப்வே தொட ரில் லசித் மலிங்க விளை­யா­ட­மு­டியும். சிம்­பாப்­வேக்கு எதி­ரான ஒருநாள் தொடர் முடிந்­ததும் மலிங்­க­விற்­கான தடைக் காலம் ஆரம்­ப­மாகும். 

அதனால் எதிர்­வரும் ஜூலை மாத இறு­தியில் நடை­பெ­ற­வுள்ள இந்­தி­யா­வுக்கு எதி­ரான தொடரில் லசித் மலிங்க விளை­யாட மாட்டார். 

அத்­தோடு நடை­பெ­ற­வுள்ள சிம்­பாப்­வேக்கு எதி­ரான முதல் ஒருநாள் போட்­டியின் சம்­ப­ளத்­தி­லி­ருந்து 50 வீத அப­ராதமும் மலிங்­க­விற்கு விதிக்­கப்­பட்­டுள்­ளது.

இங்­கி­லாந்தில் நடை ­பெற்ற சம்­பியன்ஸ் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி லீக் சுற் ­றோடு வெளி­யே­றி­யது. பாகிஸ்­தா­னுக்கு எதி­ரான போட்­டியில் இலங்­கையின் களத்­த­டுப்பு மோச­மாக இருந்­தது. முக்­கிய பிடி­யெ­டுப்­பு­களைத் தவ­ற­விட்­ட தன் கார­ண­மாக தோல்­வியைத் தழு­விக்­கொண்­டது. 

இதனால் இலங்கை அணி வீரர்கள் உடல் தகுதி குறித்து விசா­ரணை நடத்­தப்­படும் என்று விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் தயா­சிறி ஜய­சே­கர தெரி­வித்­தி­ருந்தார். 

இந்­நி­லையில் அமைச்­சரின் இந்தக் கருத்­துக்கு பதி­ல­ளிக்கும் வித­மாக பேசிய லசித் மலிங்க,  

நாற்­கா­லியை அலங்­க­ரிகப்­ப­வர்­களின் விமர்­ச­னத்தை நான் பொருட்­ப­டுத்­த­வில்லை. இது கிளியின் கூடு­பற்றி குரங்கு பேசு­வது போல் இருக்­கி­றது. கிளிக் கூடு பற்றி குரங்­குக்கு என்ன தெரியும் என்று கூறி இருந்தார். லசித் மலிங்­கவின் இந்த கருத்து பெரும் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

இதை­ய­டுத்து மலிங்­க­விடம் விசா­ரணை நடத்த இலங்கைக் கிரிக்கெட் நிறு­வனம் உத்­த­ர­விட்­டது. விசா­ரணை நடத்த இலங்கை கிரிக்கெட் நிறு­வ­னத்தின் நிறை­வேற்று அதி­காரி ஆஷ்­லிடி சில்வா தலை­மையில் 3 பேர் கொண்ட குழு அமைக்­கப்­பட்­டது. 

இக்­குழு மலிங்­க­விடம் நேற்று விசாரணை நடத்­தி­யது. அதன்­போது தன் மீது சுமத்­தப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்டை லசித் மலிங்க ஏற்­றுக்­கொண்­டுள்ளார். அதன்­பி­றகு விசா­ரணை அறிக்­கை இலங்கை கிரிக்கெட் நிறு­வ­னத்­திடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது. 

இந்த அறிக்­கையின் படி லசித் மலிங்க மீது கிரிக்கெட் நிறுவனத்தின் ஒப்­பந்த விதியை மீறிய குற்­றத்­திற்­காக ஆறு மாதம் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.  அத்­தோடு முத­லா­வது ஒருநாள் போட்டி சம்­ப­ளத்தின் 50 வீதம் அப­ரா­தமும் விதிக்­கப்­பட்­டுள்­ளது. 

அதன்படி நடை பெறவுள்ள சிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் விளையாட முடியும். ஆனால் அதன்பிறகு நடை பெறவுள்ள இந்தியாவுக்கு எதிரான தொடரில் அவருக்கு விளையாட முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/21286

  • தொடங்கியவர்
மலிங்கவுக்கு மஹேல ஆதரவு
-

image_a3df5d7291.jpg

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கவுக்கு, இலங்கை கிரிக்கெட் சபையால் விதிக்கப்பட்டுள்ள தடையை, இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன கண்டித்துள்ளார்.  

இலங்கை அணியின் வீரர்களின் உடற்றகுதி தொடர்பாக, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர முன்வைத்த விமர்சனத்துக்கு, மறைமுகமாகப் பதிலளித்திருந்த லசித் மலிங்க, கிளியின் கூடு பற்றி, குரங்குக்கு என்ன தெரியும் எனக் கேள்வியெழுப்பியிருந்தார்.  

சம்பியன்ஸ் கிண்ணத் தொடரிலிருந்து நாடு திரும்பிய பின்னர், தனது ஒப்பந்தத்துக்கு முரணாக, மலிங்க நடந்துகொண்ட 2ஆவது தடவை இதுவெனத் தெரிவித்த இலங்கை கிரிக்கெட் சபை, அது தொடர்பாக விசாரிக்க, விசாரணைக் குழுவை அமைத்தது.  

விசாரணைக் குழு முன் ஆஜராகிய மலிங்க, தன் மீதான குற்றச்சாட்டுகளை ஏற்றுக் கொண்டதோடு, உத்தியோகபூர்வமான மன்னிப்பைச் சமர்ப்பித்தார். அதைத் தொடர்ந்து, 6 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட, ஒரு வருடத் தடை, அவருக்கு விதிக்கப்பட்டது. அத்தோடு, அவரது அடுத்த ஒருநாள் சர்வதேசப் போட்டி ஊதியத்தின் 50 சதவீதம், அபராதமாக விதிக்கப்பட்டது.  

இந்நிலையில், டுவிட்டர் இணையத் தளத்தில், மஹேலவிடம் கருத்தொன்றை முன்வைத்த இரசிகரொருவர், “வீரர்களைக் கேலியாகப் பேசுவதற்கு விளையாட்டுத்துறை அமைச்சருக்கு அனுமதியுண்டு. ஆனால், வீரர் கருத்துத் தெரிவித்தால், அவருக்கு 6 மாதத் தடை (குறிப்பு: இரசிகரின் கருத்தில், தண்டனை பற்றித் தவறாகக் குறிப்பிடப்பட்டது) விதிக்கப்படுமா? இலங்கை கிரிக்கெட் சபை, அதன் மோசமான நிலையில்” என்று கூறியிருந்தார். அவரது கருத்தை ஆமோதித்த மஹேல, “இதனோடு முழுவதுமாக ஒத்துப் போகிறேன்” என்று குறிப்பிட்டார்.  
அத்தோடு, விளையாட்டுத்துறை அமைச்சரின் நடத்தையை விமர்சித்து, எமது சகோதரப் பத்திரிகையான டெய்லிமிரரின் வெளியான கேலிச் சித்திரத்தையும், மஹேல மீளப் பகிர்ந்திருந்தார்.  

தான் விளையாடும் காலத்திலேயே, இலங்கை கிரிக்கெட் சபையுடன் முரண்பாடுகளைக் கொண்டிருந்த மஹேல, ஓய்வுபெற்ற பின்னரும், அந்த விமர்சனங்களைத் தொடர்கிறார்.

இந்தியன் பிறீமியர் லீக்கின் மும்பை இந்தியன்ஸ் அணியில் லசித மலிங்க விளையாடியிருந்த நிலையில், அவ்வணியின் பயிற்றுநராக, மஹேல ஜெயவர்தன செயற்பட்டிருந்தார்.

http://www.tamilmirror.lk/பிரதான-விளையாட்டு/மலிங்கவுக்கு-மஹேல-ஆதரவு/44-199579

  • தொடங்கியவர்

ஒரு சில ஊடகங்களே எனக்கும் மலிங்கவுக்குமிடையில் முரண்பாட்டை தோற்றுவித்தன

ஒரு சில ஊடகங்களே எனக்கும்  மலிங்கவுக்குமிடையில் முரண்பாட்டை தோற்றுவித்தன என்று விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். 

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த  அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்   செய்தியாளர் மாநாட்டில்  கலந்து கொண்ட அமைச்சர் தயாசிறி ஜயசேகர ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு விடையளித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நான் எந்தவொரு  இடத்திலும் கிரிக்கெட் வீரர்  லசித் மாலிங்கவை பெயர் குறிப்பிட்டு விமர்சிக்கவில்லை.அதுபோலவே அணித்தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் மீதும் நான் குறை கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக  விளையாட்டு வீரர்களுக்கு உடற்தகுதி அவசியம் என்று வலியுறுத்தி கூறினேன். அதைவிடத்து யாரையும் குறிப்பிட்டு எதுவும் நான் தெரிவிக்கவில்லை. ஏதாவது ஒரு திட்டத்தை முன்னெடுக்கும்  போது சில ஊடகங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கையினால் குறித்த நடவடிக்கையினை மேற்கொள்ள முடியாமல் போகின்றது. 

எமது நாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கு திறமை உள்ளது.  ஆனால் உடற்தகுதியைப் பேணாமல் திறமையை வைத்துக்கொண்டிருப்பதில்  அர்த்தமில்லை.  எவ்வாறெனினும்  எனது கருத்து தொடர்பில்  லசித் மலிங்க ஒரு ஊடகத்திற்கு  தெரிவித்த    விடயங்கள் சர்ச்சையை ஏற்படுத்தின.  அதுதொடர்பில் நான் கவலையடைகின்றேன். ஒரு வீரருக்கு அவ்வாறு உரையாற்ற முடியாது.  

வீரர்களுக்கு    கிரிக்கெட் நிறுவனத்துடன் உடன்படிக்கைகள் உள்ளன. அதன்படியே நடந்துகொள்ளவேண்டும். அதன்படி   அவரின் கூற்றுக்குறித்து  விசாரிக்க குழு அமைத்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த குழுவானது தற்போது தீர்ப்பை அறிவித்திருக்கிறது. 

இதில் அவருக்கு போட்டி தடை வருவதற்கான சாத்தியம் இருந்ததாக அறியமுடிகின்றது. ஆனால்  அதற்கு நான் இடமளிக்கமாட்டேன்.  காரணம் மாலிங்க போன்ற ஒரு வீரர் எமது அணிக்கு கட்டாயம் தேவை. அவர்  நிச்சயம் அணியில் விளையாடவேண்டும்.  அவர்  அணியில் இடம்பெறாவிடின்  இறுதியில் அனைவரும் என்னை  திட்டுவார்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.  இந்த உடற்தகுதி என்பது கிரிக்கெட்டுக்கு மட்டுமல்ல அனைத்து விளையாட்டுக்களுக்கும் பொருந்தும். 

http://www.virakesari.lk/article/21316

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.